கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 26 டிசம்பர், 2011

முதுமொழிக் காஞ்சி-4

4. அருமை உடையதன் பெருமை பழியார்.

அருமை உடையதன் - அடைதற்கருமையான பொருளின்
பெருமை - உண்மைப் பெருமையை

அருமையான பொருளின் பெருமையை யாரும் பழிக்கமாட்டார்கள்.

5. நிறையச் செய்யாக் குறை வினை பழியார்.

நிறையச் செய்யா - முழுவதும் செய்யப்படாத
குறைவினை - குறைவான வேலையை

ஒரு வேலை முடியாதபோது அதனைக் குறித்துப் பழிக்கமாட்டார்கள்.

6. முறை இல் அரசர் நாட்டு இருந்து பழியார்.

முறை இல் - முறையில்லாத
நாட்டு இருந்து - நாட்டிலிருந்து கொண்டு

தர்மம் இல்லாத அரசனிடத்து இருக்கும் அறிஞர்கள் அவனது நாட்டைப் பழிக்கமாட்டார்கள்.

7. செயத்தக்க நற் கேளிர் செய்யாமை பழியார்.

செயத்தக்க - உதவி செய்யவல்ல
நற் கேளிர் - நல்ல இயல்புடைய சுற்றத்தாரை

உதவி செய்யவல்ல நல் இயல்புடைய சுற்றத்தார் அதனைச் செய்யவில்லை என்றால் பழிக்க மாட்டார்கள்.

8. அறியாத தேசத்து, ஆசாரம் பழியார்.

அறியா தேசத்து - தான் முன் அறியாத நாட்டினது
ஆசாரம் - வேறுபட்ட பழக்க ஒழுக்கங்களை

தெரியாத தேசத்திற்குச் செல்லும்போது அங்குள்ள ஒழுக்கத்தைப் பழிக்கமாட்டார்கள்.

9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.

வறியோன் - பொருளில்லாதவன்
வள்ளியன் - ஈகையுடையன்

வறுமையுடையவனின் ஈயாமையை யாரும் பழிக்கமாட்டார்கள்.

10. சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.

சிறியார் ஒழுக்கம் - கீழ்மக்களின் ஒழுக்கத்தை
சிறந்தோரும் - ஒழுக்கத்தின் மிக்காரும்

சிறுமைக் குணம் உடையவரின் ஒழுக்கத்தை யாரும் பழிக்கமாட்டார்கள்.

4. துவ்வாப் பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

1. பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது.


பழியோர் செல்வம் - பழியுடையோர் செல்வம்
துவ்வாது - நீங்கியொழியாது

பழியுடையாருக்குச் செல்வம் இருந்தாலும் இல்லாததைப் போன்றதாகும்.

2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.

கழி - அளவின் மிக்க
தறுகண்மை - வீரம்

அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் இருத்தல் பேடித்தன்மையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;