வாகுவலியின்   தவநிலைமை
| கழலணிந்  திலங்கு   பாதங்   கலந்தன   கருங்கட்    புற்றத் தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம் பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன் குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம் | 549 | 
| அருமுடி  யரசர்  தாழ்ந்த   வடிமிசை   யரவ   மூரக் கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத் திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ | 550 | 
| வெண்டவாங்   குவளைக்   கண்ணி   மன்னர்தம்   மகுட  கோடி விண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக் கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய் | 551 | 
| அடுக்கிய   வனிச்சப்  பூவி  னளிமே  லரத்தச்  செவ்வாய் வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில் தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர் கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன் | 552 | 
| புல்லிய   பொலங்கொம்   பொப்பார்   புலவியுட்   கலவி   சென்று மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான் | 553 | 
  வாகுவலி   தேவரினும்   உயர்நிலை   யடைதல்
| ஓவலில்   குணங்க   ளென்னு   மொளிர்மணிக்   கலங்க  டாங்கித் தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக் கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான் | 554 | 
  வாகுவலியின்   வழித்தோன்றலே  பயாபதி   மன்னன்   என்றல்
| எங்கள்கோ   னிவன்க   ணின்று   மிக்குயர்   குலத்து   வேந்தர் தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார் அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் | 555 | 
  மருசி  மேலுங்  கூறத்தொடங்குதல்
| குடித்தொட   ரிரண்டுங்   கேட்டே   குறுமயி   ரெறிந்து   கண்ணுள் பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர் அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங் கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான் | 556 | 
  வாகுவலி   கச்சனுக்கு   மருமகன்   என்று   கூறுதல்
| இப்படித்   தாயிற்   பண்டை   யிசைந்தது   சுற்ற   மென்னை அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென் றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான் | 557 | 
| மன்னவன்   மனத்தி  னாற்ற  மிறைவனை   வணங்கி    வாழ்த்திப் பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய் முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட் டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் | 558 | 
 அரசாட்சிப்   பொறிக்கு   வாய்  தூதுவர்   என்றல்
| மந்திரக்   கிழவர்   கண்ணா   மக்கடன்   றாள்க    ளாகச் சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார் | 559 | 
சிறந்த   தூதுவன்   சிறப்பு
| ஆதிநூ   லமைச்சர்க்   கோது   மாண்பொலா   மமைந்து   நின்றான் தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா மேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற் கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான் | 560 | 
பயாபதி   மரிசியைப்   பாராட்டல்
| மற்றிம்மாண்   புடைய   நின்னை   யுடையவம்   மன்னர்   மன்னன் எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச் சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப் பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான் | 561 | 
பயாபதி   மன்னன்   மருசியை  நோக்கிச்   சில   கூறுதல்
| இன்றியா   னின்னை   முன்வைத்   தினிச்சில   வுரைக்கல்   வேண்டா ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ | 562 | 
| கொற்றவன்   குறிப்பி   தாயிற்   கூவித்த   னடியன்   மாரை உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான் மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான் | 563 | 
மருசிக்குச்   சிறப்புச்   செய்தல்
| தூதன்மற்   றதனைக்  கேட்டே   தொழுதடி   வணங்கிச்   செங்கோல் ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப் போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச் சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான் | 564 | 
மருசிக்கு   நாடகங்   காட்டி  மறுநாள்   அனுப்புதல்
| அற்றைநா  ளங்குத்   தாழ்ப்பித்  தகனகர்ச்    செல்வந்   தன்னோ டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப் பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான் | 565 | 
மருசி   தனது   நகரத்தை   அடைதல்
| உலனல   னடுதிண்டோ    ளூழிவே   லோடை   யானைச் சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன் குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே | 566 | 
7.சீயவதைச்  சருக்கம்
  மரீசி  சடி மன்னனைக்  காண்டல்
| மற்ற  மாநகர்   மருசி   புக்கபின் கொற்ற வேலவன் கோயின் மாநெதி முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன் சுற்று வார்கழ றெழுது துன்னினான் | 567 | 
| விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக் கலந்து மாமணிக் கடக மின்செய அலங்கல் வேலினா னங்கை யாலவற் கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான் | 568 | 
  சடிமன்னன்   மரீசியின்   கருத்தைக்  குறிப்பாலுணர்தல்
| தொகுத்த  மாண்புடைத்   தூதன்   மன்னவன் வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத் தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன் முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான் | 569 | 
  இதுவுமது
| தூத   னின்முகப்   பொலிவி   னாற்சுடர்க் காது வேலினான் கரும முற்றுற ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது கோதில் கேள்வியான் றொழுது கூறினான் | 570 | 
  இதுமுதல்   உஅ   செய்யுள்கள்   மரீசியின்    கூற்று
| வெல்க   வாழிநின்    வென்றிவார்கழல் செல்க தீயன சிறக்க நின்புகழ் மல்க நின்பணி முடித்து வந்தனன் பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய் | 571 | 
| இங்கு  நின்றுபோ   யிழிந்த    சூழலும் அங்கு வேந்தனை யணைந்த வாயிலும் பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந் தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா | 572 | 
| அள்ளி  லைச்செழும்   பலவி   னார்சுளை முள்ளு டைக்கனி முறுகி விண்டெனக் கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும் | 573 | 
| முள்ள   ரைப்பசு  முளரி   யந்தடத் துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம் கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப் புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும் | 574 | 
| நித்தி   லம்மணி   நிரந்து   வெள்ளிவேய் பத்தி சித்திரப் பலகை வேதிகை சித்தி ரங்களிற் செறிந்து காமனார் அத்தி ரம்மென அசோகங் கண்டதும் | 575 | 
| தன்ணி   ழற்சுடர்த்   தமனி   யத்தினான் மன்ணி ழற்கொள மருங்கு சுற்றிய வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங் கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும் | 576 | 
| சுரிந்த   குஞ்சியன்    சுடரு   மேனியன் எரிந்த பூணின னிலங்கு தாரினன் வரிந்த கச்சைய னொருவன் வந்துவண் டிரிந்து பாயவிங் கேறு கென்றதும் | 577 | 
| மற்ற   வன்றனக்    குரைத்த   மாற்றமுங் கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர் உற்ற மங்கலக் கலங்க ளோடுடன் முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும் | 578 | 
| பங்கய   யத்தலர்ச்    செங்கண்   மாமுடித் திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப் பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும் அங்கு வந்தது மவர்கள் சொற்றதும் | 579 | 
| நற்பு   றத்தன   நாற்ப   தாம்வய திப்பு ரத்தன விளங்க ருங்கைம்மா மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ டப்பு றத்தர சவைய டைந்ததும் | 580 | 
| மன்ன   வன்கழல்   வணங்கி   நின்றதும் பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும் பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந் துன்னி வாசகந் தொழுது கொண்டதும் | 581 | 
| ஓட்டி   றானையா   னோலை  வாசகங் கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் மீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனா யீட்டு மோனியா யிருந்த பெற்றியும் | 582 | 
| இருந்த   மன்னன்மே   லெடுத்த   மாற்றமும் வருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும் புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு மருந் தகைத் தொடர் பமைந்த வாக்கமும் | 583 | 
| பின்னை   மன்னவன்   பேணி   நன்மொழி சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும் பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள வின்ன கைச்சிறப் பருளி யீந்ததும் | 584 | 
| அருங்கல   லக்குழாத்   தரசன்   றேவிமார் பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது மொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ் சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான் | 585 | 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.