| அரத்தம் | குருதி ; சிவப்பு ; செம்பஞ்சு ; அரக்கு ; செங்குவளை ; செம்பரத்தை ; நீலோற்பலம் ; தாமரை ; நெற்றித்திலகம் ; பவளம் ; பொன் ; கடுக்காய் ; ஒத்த காதல் . | 
| அரத்தன் | செவ்வாய்க் கோள் . | 
| அரத்தை | ஒரு மருந்துச் செடிவகை ; முடக்கொற்றான் ; குறிஞ்சியாழிசை . | 
| அரத்தோற்பலம் | செங்குவளைக் கொடி ; காண்க : செவ்வாம்பல் . | 
| அரசச்சின்னம் | அரசாங்க அடையாளம் . | 
| அரசண்மை | பகையரசன் அணித்தாக இருக்கை . | 
| அரசநீதி | அரசியல் கூறும் நூல் ; அரசியல் கோட்பாடு . | 
| அரசப்பிரதட்சிணம் | அரசமரத்தை வலம்வருகை . | 
| அரசம் | சுவையில்லாதது ; மூலநோய் . | 
| அரசமரம் | மரவகையுள் ஒன்று . | 
| அரசமுல்லை | அரசன் தன்மை கூறும் புறத்துறை . | 
| அரசர் அறுகுணம் | அரசனின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆறு தன்மைகள் ; அவை : நட்பு , பகை , செலவு , இருக்கை , கூடினரைப் பிரித்தல் , கூட்டல் . | 
| அரசர் அறுதொழில் | அரசர்க்குரிய ஆறு தொழில்கள் ; அவை : ஓதல் , வேட்டல் , ஈதல் , படைக்கலம் பயிறல் , பல்லுயிரோம்பல் , பகைத்திறம் தெறுதல் . | 
| அரசர்பா | காண்க : ஆசிரியப்பா . | 
| அரசவாகை | அரசன் இயல்பு கூறும் புறத்துறை . | 
| அரசவாரியன் | குதிரை நடத்துவோரில் சிறந்தவன் . | 
| அரசவிலை முருகு | காதணிவகை . | 
| அரசளித்தல் | காண்க : அரசாளுதல் . | 
| அரசன் | நாடாள்வோன் ; துருசு ; வன்னியன் ; வியாழன் ; பூவரசு ; கோவைக்கொடி . | 
| அரசன்விருத்தம் | நூல்வகை . | 
| அரசன்விரோதி | கோவைக்கொடி ; பூவரசமரம் . | 
| அரசாங்கம் | அரச உறுப்பு ; அரசியல் துறைகள் ; அரசாட்சி . | 
| அரசாட்சி | அரசு நிருவாகம் . | 
| அரசாணி | அரசங்கொம்பு ; மணப்பந்தலில் அரசங்கால் நடும் மேடை ; அரசி ; அம்மி . | 
| அரசாணிக்கால் | அரசங்கொம்பு . | 
| அரசாணிமேடை | அரசங்கால் நட்ட திருமணமேடை . | 
| அரசாளுதல் | அரசு செய்தல் . | 
| அரசானம் | அரசமரம் ; அரத்தைப் பூண்டு . | 
| அரசி | அரசன் மனைவி ; அரசாளுபவள் . | 
| அரசிகன் | சுவையறியாதவன் . | 
| அரசியல் | அரசாளும் முறை ; காண்க : அரசங்கம் . | 
| அரசிருக்கை | அரசன் வீற்றிருக்கும் அவை ; அரியணை . | 
| அரசிலை | அரசமரத்தின் இலை ; விலங்குகளுக்கு இடும் அரசிலைக்குறி ; அரைமூடி . | 
| அரசிறை | அரசாங்க வரி ; அரசர்க்கு அரசன் . | 
| அரசு | அரசன் ; இராச்சியம் ; அரசியல் , அரசாட்சி ; அரசமரம் ; திருநாவுக்கரச நாயனார் . | 
| அரசுகட்டில் | அரியணை . | 
| அரசுவா | பட்டத்து யானை . | 
| அரசோனம் | காண்க : வெள்ளைப்பூண்டு . | 
| அரட்சி | மனக்குழப்பம் . | 
| அரட்டடக்கி | செருக்குள்ளவர்களை அடக்குபவன் . | 
| அரட்டம் | பாலைநிலம் ; பொழுதுவிடிகை . | 
| அரட்டமுக்கி | காண்க : அரட்டடக்கி ; குறும்பர்களை ஒடுக்குபவன் ; திருமங்கையாழ்வார் . | 
| அரட்டல்புரட்டல் | நோய் முற்றலால் நிகழும் நோவு . | 
| அரட்டன் | குறும்பன் ; சிற்றரசன் ; மிடுக்கன் ; கொள்ளையடிப்பவன் ; வீண்பேச்சுப் பேசுவோன் . | 
| அரட்டி | அச்சம் . | 
| அரட்டு | ஆணவம் ; மிடுக்கு ; குறும்பர் ; குறும்பு ; அச்சம் . | 
| அரட்டுதல் | அச்சுறுத்தல் . | 
| அரட்டையடித்தல் | வீண்பேச்சுப் பேசுதல் . | 
| அரண் | பாதுகாப்பு , காவல் ; கோட்டை ; சுற்றுமதில் ; காவற்காடு ; கவசம் ; வேலாயுதம் ; செருப்பு ; அழகு ; அச்சம் . | 
| அரண்மணை | மதிலால் காவல் செய்யபட்ட மாளிகை ; அரசன் இருப்பிடம் . | 
| அரணம் | அரண் , கொத்தளம் ; பாதுகாப்பு , காவல் ; கவசம் ; செருப்பு ; கருஞ்சீரகம் ; மஞ்சம் தொடுதோல் . | 
| அரணம்வீசுதல் | கவசம் அணிதல் . | 
| அரணி | முன்னைமரம் ; தீக்கடைகோல் ; நெருப்பு ; சூரியன் ; கவசம் ; கோட்டைமதில் ; வேலி ; காடு . | 
| அரணித்தல் | காவல் செய்தல் ; அலங்கரித்தல் ; கடினப்படுதல் . | 
| அரணியம் | காடு . | 
| அரணியன் | காட்டிலிருப்பவன் ; அடைக்கலமானவன் . | 
| அரணியா | காட்டுக் கருணைக்கிழங்கு . | 
| அரணை | பல்லி போன்ற ஓர் உயிர்வகை , பாம்பரணை . | 
| அரத்தகம் | செம்பஞ்சு . | 
| அரங்க | முழுதும் . | 
| அரங்கநாதன் | அவைத்தலைவன் ; திருவரங்கத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர் . | 
| அரங்கபூசை | இடவழிபாடு ; போர் , பந்தயம் , நாடகம் ஆகியன தொடங்கும்போது செய்யும் பூசை . | 
| அரங்கபூமி | போர்க்களம் ; திரையரங்கம் , நாடக மேடை . | 
| அரங்கம் | நாடகமேடை ; போர்க்களம் ; சூதாடும் இடம் ; படைக்கலக் கொட்டில் ; அவை : ஆற்றிடைக்குறை ; திருவரங்கம் ; தரா . | 
| அரங்கமேடை | நாடக மேடை ; சொற்பொழிவு மேடை . | 
| அரங்கன் | காண்க : அரங்கநாதன் . | 
| அரங்கி | வஞ்சகம் உடையவள் ; நடிகை . | 
| அரங்கு | அரங்கம் ; கருப்பம் ; உள்வீடு . | 
| அரங்குதல் | தைத்தல் ; அழிதல் ; அழுந்துதல் ; வருத்துதல் ; உருகுதல் . | 
| அரங்கவீடு | உள்ளறை . | 
| அரங்கேசன் | காண்க : அரங்கநாதன் . | 
| அரங்கேற்றம் | புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்குக் காட்டும் செய்கை . | 
| அரங்கேற்று | புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்குக் காட்டும் செய்கை . | 
| அரங்கேற்றுதல் | புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச் செய்தல் . | 
| அரசங்கம் | அரசனுக்குத் துணைசெய்யும் அமைப்பு . | 
| அரளி | அலரி ; பீநாறிமரம் . | 
| அரளுதல் | பிரமித்தல் , திகைத்தல் ; மிக அஞ்சுதல் . | 
| அரற்றல் | அரற்றுதல் ; யாழ்நரம்போசை . | 
| அரற்று | புலம்பல் ; குறிஞ்சி யாழ்த்திறவகை . | 
| அரன் | பதினோர் உருத்திரருள் ஒருவரின் பெயர் ; எப்பொருட்கும் இறை ; அழிப்போன் ; அரசன் ; நெருப்பு ; மஞ்சள் . | 
| அரன்தோழன் | சிவனின் தோழனான குபேரன் . | 
| அரன்நாள் | சிவனுக்குரிய நாள் , திருவாதிரை . | 
| அரன்மகன் | முருகக் கடவுள் ; விநாயகன் ; வீரபத்திரன் . | 
| அரன்வெற்பு | சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயமலை . | 
| அரனிடத்தவள் | சிவபெருமானின் இடப்பக்கத்திலிருக்கும் உமை | 
| அரனெறி | திருவாரூரில் உள்ள ஒரு சிவாலயம் . | 
| அரா | பாம்பு ; ஆயிலியநாள் ; நாகமல்லி . | 
| அராக்கோள் | இராகு கேதுக்கள் . | 
| அராகம் | கலிப்பாவின் ஓர் உறுப்பு ; தக்கராகம் ; பாலையாழ்த்திற வகை ; ஆசை ; சிவப்பு ; பொன் . | 
| அராகித்தல் | இடையறாது கடுகிச் செல்லுதல் . | 
| அராசகம் | நாட்டில் அரசியல் இல்லாக் காலத்தில் நிகழும் குழப்பம் . | 
| அராட்டுப்பிராட்டு | போதியதும் போதாததுமானது . | 
| அராத்துதல் | அராவுதல் , மிண்டுதல் . | 
| அராதி | பகைவன் . | 
| அராந்தானம் | சமணப்பள்ளி . | 
| அராநட்பு | வேண்டாவெறுப்பு . | 
| அராபதம் | வண்டு . | 
| அராமி | கொடியன்(ள்) . | 
| அராமுனிவர் | பதஞ்சலிமுனிவர் . | 
| அராவாரம் | காண்க : கொடிமுந்திரி . | 
| அரதனம் | இரத்தினம் ; மிருதபாடாணம் . | 
| அரதனாகரம் | கடல் ; தனுக்கோடிக்குக் கிழக்கேயுள்ள கடல் . | 
| அரதி | வேண்டாமை ; துன்பம் . | 
| அரதேசி | உள்நாட்டுப் பிச்சைக்காரன் . | 
| அரந்தை | துன்பம் , வருத்தம் ; குறிஞ்சிப்பண் ; நீர்நிலை . | 
| அரப்பிரியை | சிவனுக்கு விருப்பமான உமை . | 
| அரப்பு | எண்ணெய்க் குளியலுக்குத் தேய்த்துக் கொள்ளும் சிகைக்காய் முதலியன . | 
| அரப்பொடி | இரும்புத்தூள் . | 
| அரபி | காண்க : கடுக்காய் ; ஒரு நாடு ; ஒரு மொழி . | 
| அரபுத்தமிழ் | அரபுச் சொற்களைத் தமிழில் எழுதிய குரான் ; அரபுச் சொற்கள் கலந்து வழங்கும் தமிழ் . | 
| அரம் | இரும்பைத் தேய்க்கப் பயன்படும் கருவி ; விரைவு ; வண்டி ; பாதலம் ; தோல் . | 
| அரம்பன் | குறும்பு செய்வோன் . | 
| அரம்பு | குறும்பு ; விரும்பியதை நிறைவேற்றும் ஆற்றல் . | 
| அரம்பை | காண்க : ஓமம் ; வாழைமரம் ; தேவருலகத்துள்ள நாடகமகளிருள் ஒருத்தி | 
| அரம்பையர் | தெய்வமகளிர் . | 
| அரமகள் | தெய்வப்பெண் . | 
| அரமனை | காண்க : அரண்மனை . | 
| அரமாதர் | தெய்வப்பெண்டிர் . | 
| அரமாரவம் | காண்க : நாயுருவி . | 
| அரமி | கடுக்காய் . | 
| அரமியம் | அரண்மனை ; நிலாமுற்றம் ; பிரமிப்பூண்டு ; நாயுருவி . | 
| அரயன் | அரசன் . | 
| அரரி | கதவு . | 
| அரலை | கழலைக்கட்டி ; கடல் ; மரற்செடி ; கற்றாழை ; விதை ; கொடுமுறுக்கு ; பொடிக்கல் ; கனி ; குற்றம் ; கோழை . | 
| அரவக்கிரி | வேங்கடமலை . | 
| அரவக்கொடியோன் | துரியோதனன் . | 
| அரவங்கலக்கம் | சாகுங் காலத்துண்டாகும் அறிவுத் தெளிவு ; முகப்பொலிவு . | 
| அரவணிந்தோன் | பாம்புகளை அணிந்திருக்கும் சிவன் . | 
| அரவணை | பாம்புப் படுக்கை ; திருமால் கோயில்களில் இரவில் படைக்கும் சருக்கரைப் பொங்கல் . | 
| அரவணைச்செல்வன் | பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமால் . | 
| அரவணைத்தல் | தழுவுதல் ; ஆதரித்தல் . | 
| அரவணையான் | காண்க : அரவணைச் செல்வன் . | 
| அரவதண்டம் | யமதண்டனை . | 
| அரவப்பகை | பாம்புக்குப் பகையான கருடன் . | 
| அரவம் | பாம்பு ; ஆயிலிய நாள் ; இராகுகேதுக்கள் ; ஆரவாரம் ; பரலுள்ள சிலம்பு ; படையெழுச்சி ; பதஞ்சலிமுனிவர் ; குங்குமம் ; அதிமதுரம் ; மரமஞ்சள் ; வில்லின் நாண் . | 
| அரவன் | பாம்புகளை அணிந்துள்ள சிவன் . | 
| அரவாட்டிப்பச்சை | தொழுகண்ணிச்செடி . | 
| அரவாபரணன் | காண்க : அரவன் . | 
| அரவாய்க் கடிப்பகை | அரம் போன்ற விளிம்புடைய வேப்பிலை . | 
| அரவித்தல் | ஒலியெழுப்பல் . | 
| அரவிந்தப்பாவை | தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் . | 
| அரவிந்தம் | தாமரை ; இரசம் . | 
| அரவிந்தராகம் | பதுமராகம் . | 
| அரவிந்தலோசனன் | தாமரைக் கண்ணன் , திருமால் . | 
| அரவிந்தன் | தாமரையிலிருந்து தோன்றிய பிரமன் | 
| அரவிந்தை | காண்க : அரவிந்தப்பாவை . | 
| அரவு | பாம்பு ; ஒலி ; உடைப்பு அடைக்கும் வைக்கோல் பழுதை ; நாகமரம் ; ஆயிலியம் ; தொழிற்பெயர் விகுதி . | 
| அரவுயர்த்தோன் | காண்க : அரவக்கொடியோன் . | 
| அரவுரி | பாம்புத்தோல் ; பாம்புச் சட்டை . | 
| அரவுருட்டுதல் | வைக்கோற் புரியை உடைப்பிற் செலுத்துதல் | 
| அரிசம் | அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள் ; மகிழ்ச்சி ; மிளகு . | 
| அரிசயம் | சரக்கொன்றை ; எலுமிச்சை . | 
| அரிசலம் | சரக்கொன்றை ; எலுமிச்சை . | 
| அரிசனம் | காண்க : மஞ்சள் ; தாழ்த்தப்பட்டோர் . | 
| அரிசா | பெருங்குமிழமரம் . | 
| அரிசி | உமி நீக்கப்பட்ட தானியவகை ; தானியமணி ; மூங்கிலரிசி முதலியன ; மஞ்சள் ; கடுக்காய் . | 
| அரிசிக்கம்பு | கம்புப் பயிர்வகை . | 
| அரிசிக்காடி | புளித்த கஞ்சி . | 
| அரிசிப்பல் | சிறுபல் | 
| அரிசிப்புல் | செஞ்சாமை ; காண்க : மந்தங்காய்ப்புல் . | 
| அரிசு | மிளகு ; வேம்பு . | 
| அரிட்டம் | கேடு ; பிள்ளை பெறும் இடம் ; நன்மை ; சாக்குறி ; மிளகு ; வெள்ளுள்ளிப் பூண்டு ; கடுகுரோகிணிப் பூண்டு ; வேப்பமரம் ; மோர் ; கள் ; முட்டை ; காகம் . | 
| அரிட்டித்தல் | கொல்லல் . | 
| அரிட்டை | தீங்கு ; கடுகுரோகிணிப் பூண்டு . | 
| அரிடம் | காண்க : அரிட்டம் . | 
| அரிணம் | மான் ; யானை ; பொன் ; சந்தனம் ; வெண்மை ; சிவப்பு . | 
| அரிணி | அழகிய பெண் ; பெண்மான் ; அப்சரசுகளுள் ஒரு சாரார் ; பச்சை நிறத்தினள் ; வஞ்சிக்கொடி . | 
| அரிணை | கள் . | 
| அரித்தல் | தினவெடுத்தல் ; மேய்தல் ; கொழித்தெடுத்தல் ; தூசு போக்கல் ; கூட்டுதல் ; நீர் அறுத்துச் செல்லுதல் ; நீரில் கழுவிப் பிரித்தல் ; பூச்சி தின்னுதல் ; வருத்துதல் ; இடைவிடுதல் ; சிறிது சிறிதாகக் கவர்தல் . | 
| அரித்திரம் | மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் . | 
| அரித்திராபம் | மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் . | 
| அரித்து | பசுமை ; பசும்புல் ; பசும்புரவி ; சிங்கம் ; சூரியன் . | 
| அரித்தை | நடுக்கம் ; துன்பம் . | 
| அரித்தை | (வி) அரித்தாய் எனப் பொருள்படும் ஒரு முன்னிலை வினைமுற்று . | 
| அரிதகி | காண்க : கடுக்காய் . | 
| அரிதட்டு | சல்லடை . | 
| அரிதம் | பசும்புரவி ; மஞ்சள் ; பூமி . | 
| அரிதல் | அறுத்தல் . | 
| அரிதாட்புள்ளி | கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்கும் தானிய மதிப்பு . | 
| அரிதாரம் | தாளகபாடாணம் ; கத்தூரி ; மஞ்சள் ; திருமகள் . | 
| அரிதாலம் | பொன்னரிதாரம் ; மஞ்சள் நிறமான ஒருவகைப் புறா . | 
| அரிதாள் | கதிரறுத்த தாள் ; திருமால் திருவடி . | 
| அரிதாளம் | நவதாளத்துள் ஒன்று ; பொன்னரி தாரம் . | 
| அரிதினம் | ஏகாதசி . | 
| அரிது | அருமை ; பசுமை . | 
| அரிதொடர் | தொட்டால் கையை அரியும் சங்கிலிப் பொறி . | 
| அரிந்தமன் | பகைவரையடக்குவோன் ; திருமால் . | 
| அரிநூற்பொறி | தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி . | 
| அரிப்பரித்தல் | கொழித்து எடுத்தல் . | 
| அரிப்பறை | செவிப்பறையைத் தாக்கும் ஒலியையுடைய பறை . | 
| அரிப்பன் | காண்க : அரிப்புக்காரன் . | 
| அரிப்பனி | இடைவிட்ட துளி . | 
| அரிப்பிரியம் | கடம்பு ; கடுகுரோகிணி ; சங்கு . | 
| அரிப்பிரியை | திருமாலால் விரும்பப்பட்டவள் , திருமகள் . | 
| அரிப்பு | பிரித்தெடுக்கை ; குற்றம் ; சினம் ; தினவு . | 
| அரிப்புக்காரன் | அரித்துப் பொருள் தேடுவோன் . | 
| அரிப்புக்கூடை | சல்லடை . | 
| அரிப்புழுக்கல் | அரிசிச்சோறு . | 
| அரிப்பெட்டி | சல்லடை . | 
| அரிபாலுகம் | தக்கோலச்செடி . | 
| அரிமஞ்சரி | குப்பைமேனிப் பூண்டு . | 
| அராவுதல் | அரத்தால் தேய்த்தல் ; உராய்தல் ; மாறுபடுதல் . | 
| அராவைரி | கருடன் ; மயில் ; கீரி . | 
| அராளகடகாமுகம் | நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று . | 
| அராளம் | காண்க : இருவாட்சி ; குங்கிலியம் ; இணையா வினைக்கை வகை . | 
| அரி | வண்டு ; மென்மை ; கண்வரி ; கண் ; சிலம்பினுட்பரல் ; சிலம்பு ; உள்துளை ; மூங்கில் ; சோலை ; தேர் ; மக்கள் துயிலிடம் ; கட்டில் ; கடல் ; தகட்டு வடிவு ; கூர்மை ; வலிமை ; மரவயிரம் ; அரியப்பட்ட கைப்பிடிக் கதிர் ; அரிசி ; கள் ; குற்றம் ; நீர்த்திவலை ; ஆயுதம் ; பகை ; நிறம் ; அழகு ; பொன்னிறம் ; திருமால் ; சிவன் ; இந்திரன் ; யமன் ; காற்று ; ஒளி ; சூரியன் ; சந்திரன் ; சிங்கம் ; குதிரை ; குரங்கு ; பாம்பு ; தவளை ; கிளி ; திருவோணம் ; துளசி ; நெல் ; நெற்கதிர் . | 
| அரிக்கஞ்சட்டி | அரிசி களையும் சட்டி . | 
| அரிக்கண்சட்டி | அரிசி களையும் சட்டி . | 
| அரிக்காரன் | தூதன் ; கட்டியங் கூறுவோன் . | 
| அரிகண்டம் | கழுத்தில் மாட்டப்படும் ஓர் இரும்பு வட்டம் ; ஒருவித வேடம் ; தொல்லை . | 
| அரிகண்டம் பாடுதல் | கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு எதிரி கொடுக்கும் குறிப்புக்கு ஏற்பப் பாடுதல் . | 
| அரிகயிறு | தொட்ட கையை அரியும் நூற்பொறி . | 
| அரிகரகுமரன் | ஐயனார் | 
| அரிகரபுத்திரன் | ஐயனார் | 
| அரிகரன் | திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி . | 
| அரிகல் | மேருமலை . | 
| அரிகால் | காண்க : அரிதாள் . | 
| அரிகிணை | மருதநில வாத்தியம் . | 
| அரிகுரல் | கரகரத்த குரல் . | 
| அரிகூடம் | கோபுரவாயில் மண்டபம் . | 
| அரிகேசரி | பாண்டிய மன்னரின் பட்டப்பெயர் . | 
| அரிச்சாவி | காண்க : அரிசா . | 
| அரிச்சிகன் | சந்திரன் . | 
| அரிச்சுவடி | அகரச் சுவடி என்பதன் மரூஉ ; பிள்ளைகளின் தொடக்க நூல் ; எழுத்துக் கற்பிக்கும் புத்தகம் ; அரிவரியேடு ; நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம் . | 
| அரிசந்தனம் | தேவருலக ஐந்து மரங்களுள் ஒன்று ; செஞ்சந்தனம் ; தாமரைப் பூந்தாது ; மஞ்சள் ; நிலவு . | 
| அருகுதல் | குறைதல் ; அருமையாதல் ; கிட்டல் ; பெருகுதல் ; அறிதல் ; குறிப்பித்தல் ; நோவுண்டாதல் ; அஞ்சுதல் . | 
| அருங்கதி | வீடுபேறு . | 
| அருங்கலச்செப்பு | அணிகலப்பேழை ; ஒரு சமணநூல் . | 
| அருங்கலம் | அணிகலன் ; அழகு செய்யும் பொருள் ; நற்காட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம் என்னும் மும்மணிகள் . | 
| அருங்கலைவிநோதன் | நூலாராய்ச்சியையே பொழுதுபோக்காக உடையவன் . | 
| அருங்கிடை | கடும்பட்டினி ; நோய்வாய்ப்பட்டிருக்கை . | 
| அருங்கு | அருமை . | 
| அருங்கோடை | கடுவெயிற்காலம் ; முதுவேனில் ; வறட்சிக்காலம் . | 
| அருச்சகன் | கோயில்பூசை செய்வோன் , பூசாரி . | 
| அருச்சனை | காண்க : அர்ச்சனை . | 
| அருச்சி | பூசி ; ஒளி ; தீக்கொழுந்து ; கதிர் . | 
| அரிமுகவம்பி | சிங்கமுக ஓடம் . | 
| அரிய | அருமையான . | 
| அரியகம் | காற்சரியென்னும் அணி ; கொன்றை மரம் . | 
| அரியசம் | காண்க : சரக்கொன்றை . | 
| அரியசாரணை | மாவிலிங்கமரம் . | 
| அரியணை | சிங்காதனம் . | 
| அரியணைச்செல்வன் | அருகன் . | 
| அரியம் | வாத்தியம் . | 
| அரியமா | பன்னிரு ஆதித்தருள் ஒருவர் ; சூரியன் . | 
| அரியமான் | பிதிரர் தலைவன் . | 
| அரியல் | அரிதல் ; கள் . | 
| அரியாசம் | ஒரு மணப்பொருள் . | 
| அரியாசனம் | காண்க : அரியணை . | 
| அரியாயோகம் | அரைப்பட்டிகை ; மருந்து . | 
| அரியுண்மூலம் | கோரைக்கிழங்கு . | 
| அரியெடுப்பு | ஊர்த் தொழிலாளருக்குக் களத்தில் கொடுக்கும் இருகை அளவுத் தானியம் . | 
| அரியேறி | சிங்கத்தை ஊர்தியாகவுடைய கொற்றவை . | 
| அரியேறு | ஆண்சிங்கம் . | 
| அரில் | பிணக்கம் ; பின்னல் ; குற்றம் ; குரல் ; கூந்தல் ; சிறுகாடு ; மூங்கில் ; பாயல் ; பலா ; பரல் . | 
| அரிவரி | காண்க : நெடுங்கணக்கு . | 
| அரிவருடம் | ஒன்பது கண்டங்களுள் ஒன்று . | 
| அரிவாள் | வெட்டறுவாள் ; நெல் முதலியன அரியும் கருக்கறுவாள் . | 
| அரிவாள்மணை | காய்கறிகளை அரியும் கருவி . | 
| அரிவாள்முனைப்பூண்டு | ஒருவகைப் பூண்டு . | 
| அரிவிமயிர் | வீரர் வேல்நுனியில் அணியும் பறவை மயிர் . | 
| அரிவை | இருபது முதல் இருபத்தைந்து ஆண்டு வரை உள்ள பெண் . | 
| அரீடம் | கடுகுரோகிணிப் பூண்டு . | 
| அரு | உருவமற்றது ; கடவுள் ; மாயை ; சித்தபதவி ; அட்டை ; புண் . | 
| அருக்கம் | எருக்கஞ்செடி ; நீர்க்காக்கை ; சுக்கு ; செம்பு ; பளிங்கு ; சூரியன் ; சுருக்கம் . | 
| அருக்களித்தல் | அஞ்சுதல் ; அருவருத்தல் . | 
| அருக்களிப்பு | அருவருப்பு . | 
| அருக்கன் | சூரியன் ; இந்திரன் ; தமையன் ; எருக்கு ; சுக்கு | 
| அருக்காணி | அருமை ; அழுத்தம் . | 
| அருக்கு | காண்க : அருமை ; எருக்கு ; அருக்காணி ; அஞ்சுகை . | 
| அருக்கு | (வி) அருக்கு என் ஏவல் . | 
| அருக்குதல் | சுருக்குதல் ; காய்ச்சுதல் ; விலக்குதல் ; அருமை பாராட்டுதல் ; அழித்தல் . | 
| அருகசரணம் | அருகனைச் சரண்புகுதல் . | 
| அருகசனி | பேரேலப்பூண்டு . | 
| அருகனி | பிரண்டைக்கொடி . | 
| அருகணை | நுழைவாயிலின் பக்கம் . | 
| அருகந்தர் | அருக சமயத்தார் . | 
| அருகந்தாவத்தை | முத்திநிலை . | 
| அருகம் | சமணசமயம் ; தகுதி ; பக்குவம் ; அகில் ; அண்மை ; சீந்தில் . | 
| அருகர் | அருகசமயத்தவர் ; பக்குவ நிலையிலுள்ளவர் ; நிலையாமை ; அண்மை . | 
| அருகல் | அருகு ; அருமை ; குறைதல் ; சாதல் ; அணைதல் . | 
| அருகன் | அருகக் கடவுள் ; சமணசமயத்தான் ; தக்கவன் ; தோழன் ; பக்குவி . | 
| அருகன் எண்குணம் | கடையிலா அறிவு , கடையிலாக் காட்சி , கடையிலா ஆற்றல் , கடையிலா இன்பம் , பெயர் இன்மை , குலம் இன்மை , ஆயுவின்மை , அழியாவியல்பு . | 
| அருகன் எண்சிறப்பு | அருகதேவனுக்குரிய எட்டு மங்கலப் பொருள்கள் ; அவை : தூபதீபக் காட்சி , தேவதுந்துபி , தெய்வத்துவனி , சிங்காதனம் , பிண்டி , வெண்சாமரை , புட்பமாரி , மும்மைக்குடை . | 
| அருகனைத்தரித்தாள் | தருமதேவதை . | 
| அருகாழி | கால்விரல் மோதிரம் . | 
| அருகி | கள் . | 
| அருகி | (வி) சிறிது சிறிதாகி , குறைந்து . | 
| அருகியரத்தம் | பூனைக்காலிப் பூண்டு . | 
| அருகியல் | சாதிப் பெரும்பண்வகை . | 
| அருகியவழக்கு | குறைந்த வழக்கு , மிகுதியாய்ப் பயன்படுத்தப்படாதது . | 
| அருகு | அண்மை ; பக்கம் ; ஓரம் ; இடம் ; தீவட்டி . | 
| அருகு | (வி) அருகு என் ஏவல் ; குறை . | 
| அருகுகால் | கதவு நிலை . | 
| அரிமணல் | நுண்மணல் . | 
| அரிமணி | மரகதம் . | 
| அரிமந்திரம் | சிங்கம்வாழ் குகை . | 
| அரிமருகன் | கணபதி ; முருகக்கடவுள் . | 
| அரிமா | சிங்கம் . | 
| அரிமாநோக்கம் | சிங்கத்தின் பார்வை ; முன்னும் பின்னும் பார்த்தல் ; சூத்திர நிலையுள் ஒன்று . | 
| அருந்ததி | வசிட்டரின் மனைவி ; ஒரு நட்சத்திரம் . | 
| அருந்தல் | அருமை ; பருகுதல் . | 
| அருந்திறல் | அரிய திறமை உடையவன் ; அரிய திறமை . | 
| அருந்துதல் | உண்ணுதல் ; குடித்தல் ; விழுங்குதல் ; அனுபவித்தல் . | 
| அருந்துதன் | வேதனை செய்வோன் . | 
| அருந்துதி | காண்க : அருந்ததி . | 
| அருநிலை | கடந்து செல்லற்கரிய நிலை ; ஆழமான நீர்நிலை . | 
| அருநெல்லி | சிறுநெல்லிமரம் . | 
| அருநெறி | செல்லுதற்கரிய வழி ; மனைவாயில் ; நரகம் ; பாலைவனம் . | 
| அருப்பம் | அருமை ; அற்பம் ; துயரம் ; ஒரு நோய் ; திண்மை ; வழுக்குநிலம் ; மருதநிலத்தூர் ; மலைஅரண் ; காட்டரண் ; சோலை ; நெற்கதிரின் கரு ; தொடரிச் செடி ; கள் ; மோர் ; மா ; முதலில் முளைக்கும் மீசை ; பனி . | 
| அருப்பலம் | அனிச்சமரம் . | 
| அரும்பதம் | சிறந்த உணவு ; அரிய செவ்வி ; விளங்கற்கு அரிய சொல் . | 
| அரும்பதவுரை | கடின சொல்லுக்குத் தரப்படும் உரை . | 
| அரும்பர் | காண்க : அரும்பு . | 
| அரும்பல் | முளைத்தல் . | 
| அரும்பாடு | கடினமான உழைப்பு . | 
| அரும்பாலை | பாலைப்பண் வகை . | 
| அரும்பாவி | மிகக் கொடியவன் . | 
| அரும்பிஞ்சு | மிக இளங்காய் . | 
| அரும்பித்தல் | தோன்றுதல் . | 
| அரும்பு | மொட்டு ; அணிகளின் அரும்பு வேலை ; முகத்தில் தோன்றும் இளமயிர் ; அரிசி . | 
| அரும்புதல் | சிறிதாகத் தோன்றுதல் ; முகிழ்த்தல் . | 
| அரும்புவளையம் | உருத்திராக்கம் முதலியவற்றின் இடையிலே கோக்கப்படும் வளையம் . | 
| அரும்பூட்டு | வருந்திப் பூட்டுவது ; இயல்பிலாத் தொடர்ச்சி . | 
| அரும்பெறல் | பெறுதற்கு அரியது . | 
| அரும்பொருள் | முயன்று உணரும் இயல்புடைய சொற்பொருள் ; பெறுதற்கு அரிய பொருள் . | 
| அருமணவன் | ஒரு தீவு ; அருமணத் தீவின் யானை ; அகில்வகை . | 
| அருமதாளம் | ஒன்பது தாளத்துள் ஒன்று . | 
| அருமந்த | அருமையான . | 
| அருமந்தன்ன | அருமையான . | 
| அருமருந்து | பெறுவதற்கு அரிய மருந்து ; அமிழ்தம் . | 
| அருமவதி | பண்வகை . | 
| அருமிதம் | அளவின்மை . | 
| அருச்சிக்கை | காண்க : அருச்சித்தல் . | 
| அருச்சிகன் | சந்திரன் . | 
| அருச்சித்தல் | பூசித்தல் ; கடவுளின் திருப்பெயர் சொல்லி மலர் முதலியன இடுதல் . | 
| அருச்சுனம் | எருக்கஞ்செடி ; மருதமரம் ; புல் ; பொன் ; பந்து ; வெள்ளையரிசியோடு அறுகையும் சேர்த்து இடுகை ; வெண்மை ; மயில் . | 
| அருச்சுனன் | ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ; நெல் வகை ; பஞ்சபாண்டவருள் ஒருவன் ; கார்த்த வீரியன் . | 
| அருச்சுனி | பசு ; உஷாதேவி ; ஓர் ஆறு ; அடிமைப் பெண் . | 
| அருச்சை | பூசை . | 
| அருசி | சுவையின்மை ; விருப்பின்மை . | 
| அருஞ்சிறை | கடுங்காவல் ; நரகம் . | 
| அருஞ்சுரம் | நிழலற்ற ; நீளிடம் . | 
| அருஞ்சோதி | ஒருவகை நெல் . | 
| அருட்குடையோன் | அருள் தன்மையைக் குடையாக உடையவன் ; அருகன் ; கடவுள் . | 
| அருட்குறி | சிவலிங்கம் . | 
| அருட்சித்தி | பாதரசம் . | 
| அருட்செல்வம் | கருணையாகிய செல்வம் ; இரக்க உணர்வு ; கடவுளின் அருள் . | 
| அருட்சோதி | கடவுள் ; கௌரிபாடாணம் . | 
| அருட்டம் | கடுகுரோகிணி ; வேம்பு ; மிளகு . | 
| அருட்டி | அச்சம் ; நடுக்கம் . | 
| அருட்டுதல் | எழுப்புதல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் . | 
| அருட்பா | கடவுளின் அருள்பெற்றோர் பாடிய பாடல்கள் ; இராமலிங்க அடிகள் அருளிய பாடல்களின் தொகுதி . | 
| அருட்புரி | குறிஞ்சியாழ்த் திறவகை . | 
| அருணகிரி | திருவண்ணாமலை ; அருணகிரிநாதர் . | 
| அருணம் | சிவப்பு ; பொன் ; செவ்வானம் ; சிந்தூரம் ; ஒரு மொழி ; ஒரு நாடு ; எலுமிச்சை ; முதிராத மாதுளை ; செம்மறி ஆடு ; யானை ; மான் ; நீர் ; செங்குட்டநோய் ; வெண்மை . | 
| அருணமணி | மாணிக்கம் . | 
| அருணவம் | கடல் . | 
| அருணவூரி | இந்திரகோபப் பூச்சி . | 
| அருணன் | சூரியன் ; சூரியனின் தேர்ப்பாகன் ; புதன் . | 
| அருணாசலம் | திருவண்ணாமலை . | 
| அருணி | மான்சாதிப் பெண் . | 
| அருணினம் | நன்னாரி ; திருநாமப்பாலைக் கொடி . | 
| அருணை | காண்க : அருணாசலம் . | 
| அருணோதயம் | சூரியனின் தோற்றம் ; விடியற்காலம் . | 
| அருத்தபாகம் | பாதிப் பங்கு . | 
| அருத்தபாகை | வேத நூற்பொருள் வகை . | 
| அருத்தம் | சொற்பொருள் ; கருத்து ; சாத்திரம் ; செல்வப் பொருள் ; பொன் ; விவகாரம் ; காரணம் ; முறை ; நீக்கல் ; பயன் ; பாதி ; குங்கிலியம் . | 
| அருத்தயாமம் | காண்க : அர்(ரு)த்தசாமம் ; நடு இரவு . | 
| அருத்தலக்கணை | காண்க : விட்டும் விடாத இலக்கணை . | 
| அருத்தி | ஆசை ; விருப்பப் பொருள் ; செல்வன் ; இரவலன் ; பணியாளன் ; உண்பி ; கள் ; கூத்து . | 
| அருத்தித்தல் | இரத்தல் ; வேண்டுதல் ; பாதியாக்கல் . | 
| அருத்தியன் | விருப்பம் உடையவன் . | 
| அருத்து | சொற்பொருள் . | 
| அருத்துதல் | உண்பித்தல் ; நுகரச் செய்தல் . | 
| அருளரசி | வெட்பாலை மரம் ; குடசப்பாலை . | 
| அருளல் | பெருங்கொடை ; காத்தல் ; கொடுத்தல் ; படைத்தல் ; இரங்குதல் . | 
| அருளவம் | அழிஞ்சில்மரம் ; பெருமரம் . | 
| அருளறம் | அருளாகிய அறம் . | 
| அருளாழி | அறச்சக்கரம் . | 
| அருளாழிவேந்தன் | அருகன் ; கடவுள் . | 
| அருளாளன் | அருளை உடையவன் . | 
| அருளிச்செய்தல் | சொல்லுதல் . | 
| அருளிச்செயல் | கட்டளை ; அடியார் பாடல் . | 
| அருளிப்பாடு | அருளப்பட்ட ஆணை ; ஆணை ; கட்டளை . | 
| அருளுறுதி | வேம்பு . | 
| அருளொடுநீங்கல் | உலகின் துயரைக் கண்டு பற்று நீங்கும் புறத்துறை . | 
| அரூபம் | உருவம் இன்மை ; அருவம் . | 
| அரூபமாதல் | பாழடைதல் . | 
| அரூபி | உரு இல்லாதது ; கடவுள் ; சிவன் ; அசரீரி ; கருப்பூரம் . | 
| அரேசகண்டு | கருணைக்கிழங்கு . | 
| அரேசிகம் | வாழைமரம் . | 
| அரேணு | குலப்பெண் ; வால்மிளகு ; கடலை . | 
| அரேணுகம் | காண்க : வால்மிளகு ; காட்டுமிளகு ; கடுமரவேர் . | 
| அரை | பாதி ; இடம் ; இடை ; தொடையின் மேற்பாகம் ; வயிறு ; அல்குல் ; ஒரு மரம் ; மரத்தின் அடிப்பக்கம் ; தண்டு ; அரசியல் . | 
| அரைக்கச்சு | இடையில் அணியும் சிறப்பு உடை . | 
| அரைக்காசுத்தொண்டன் | மிகவும் எளியவன் . | 
| அரைக்காணி | ஓர் அளவை ; நூற்றறுபதில் ஒரு பங்கு . | 
| அரைக்கால் | ஓர் அளவை ; எட்டில் ஒரு பங்கு . | 
| அரைகல் | அம்மி . | 
| அரைகுலையத் தலைகுலைய | மிக விரைவாய் . | 
| அரைகுறை | முற்றுப்பெறாமை . | 
| அரைச்சதங்கை | குழந்தைகளின் இடைஅணி . | 
| அரைசிலை | அம்மி . | 
| அரைசெலவு | கறிக்கூட்டுப் பொருள் . | 
| அரைஞாண் | இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை . | 
| அரைநாண் | இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை . | 
| அரைத்தல் | மாவாக்கல் ; தேய்த்தல் ; கொட்டை நீக்குதல் ; அழித்தல் . | 
| அரைதல் | தேய்த்தல் ; அரைபடல் . | 
| அரைநாள் | பாதிநாள் ; நடுநாள் ; நள்ளிரவு . | 
| அரைப்பட்டிகை | மாதர் இடையில் கட்டும் அணிவகை . | 
| அரைப்படிப்பு | நிரம்பாக் கல்வி . | 
| அரைப்பணம் | அல்குல் ; பாதிக்காசு . | 
| அரைப்பை | இடுப்பில் கட்டும் நீண்ட பணப்பை ; அல்குல் . | 
| அரைமதியிரும்பு | பாதித் திங்களைப் போன்ற ஒருவகை அங்குசம் . | 
| அரைமனிதன் | பெருமை குறைந்தவன் . | 
| அரைமூடி | பெண்குழந்தைகளின் அரையில் கட்டும் அரசிலை வடிவ அணி . | 
| அரையர் | திருமால் திருக்கோயில்களில் திவ்வியப் பிரபந்தம் பாடித் தொண்டு செய்பவர் . | 
| அரையன் | அரசன் ; ஒரு பழைய பட்டம் . | 
| அரையாப்பு | தொடையிடுக்கில் உண்டாகும் கட்டி . | 
| அரையிருள் | நள்ளிரவு . | 
| அரைவட்டம் | வட்டத்தில் பாதி ; காண்க : அரைமூடி . | 
| அரைவடம் | காண்க : அரைஞாண் . | 
| அரைவாசி | பாதி . | 
| அரைவாய் | குறைபட்ட வாய் . | 
| அரைவைரக்கண் | தட்டார் கருவியுள் ஒன்று . | 
| அரோ | ஓர் அசைச்சொல் . | 
| அரோகதிடகாத்திரம் | சுகமும் வலிமையுமுள்ள உடல் . | 
| அருமை | அரிய தன்மை ; பெருமை ; கடினம் ; எளிதிற் கிட்டாமை ; சிறுமை ; இன்மை . | 
| அருமைசெய்தல் | பேராண்மை காட்டுதல் ; அருமை பாராட்டுதல் . | 
| அருவம் | உருவமின்மை ; அருமை . | 
| அருவர் | தமிழர் . | 
| அருவருத்தல் | மிக வெறுத்தல் . | 
| அருவருப்பு | மிகுவெறுப்பு . | 
| அருவல் | துன்பம் ; ஒருவகை நோய் | 
| அருவா | அருவாநாடு ; கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று . | 
| அருவாட்டி | அருவாநாட்டுப் பெண் . | 
| அருவாணம் | செப்புத் தட்டு ; கோயில் பிரசாதம் . | 
| அருவாவசு | கதிரவன் கதிர்களுள் ஒன்று . | 
| அருவாளர் | ஒரு சாதியார் . | 
| அருவி | மலைவீழ் நீர் ; நீரூற்று ; கழிமுகம் ; நீர் ; ஒழுங்கு ; உருவமில்லாதது ; பயிரின் தாள் ; தினைத் தாள் ; அறுத்த ஒருபிடிக் கதிர் ; ஆறு ; மலை . | 
| அருவுடம்பு | நுண்ணுடல் , சூக்குமவுடல் . | 
| அருவுதல் | அறுத்தொழுகுதல் ; மெல்லெனச் செல்லுதல் ; கிட்டுதல் ; துன்பப்படுத்துதல் . | 
| அருவுருவம் | அரு என்றும் உறு என்றும் சொல்லத்தகாதது . | 
| அருள் | சிவசக்தி ; கருணை ; பொலிவு ; முதிர்ந்த மாதுளை மரம் ; நல்வினை ; ஏவல் . | 
| அருள்வாக்கு | இறைவன் அருள் பெற்றவரின் வாக்கு . | 
| அருள்தல் | காண்க : அருளல் ; கருணை காட்டுதல் ; கொடுத்தல் ; பணித்தல் ; மகிழ்தல் ; அச்சமுறுதல் . | 
| அருளுதல் | காண்க : அருளல் ; கருணை காட்டுதல் ; கொடுத்தல் ; பணித்தல் ; மகிழ்தல் ; அச்சமுறுதல் . | 
| அருளகம் | வெள்ளெருக்கஞ்செடி . | 
| அருளம் | பொன் . | 
| அல்வழிப் புணர்ச்சி | வேற்றுமை அல்லாத நிலையில் சொற்கள் சேரும் நிலை ; அவை 14 : வினைத்தொகை , பண்புத்தொகை , உவமைத்தொகை , உம்மைத்தொகை , அன்மொழித்தொகை , எழுவாய்த்தொடர் , விளித்தொடர் , தெரிநிலை வினைமுற்றுத் தொடர் , குறிப்பு வினைமுற்றுத் தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் , இடைச் சொற்றொடர் , உரிச் சொற்றொடர் , அடுக்குத்தொடர் . | 
| அல்வான் | வண்ணத்துணி . | 
| அலக்கண் | துன்பம் . | 
| அலக்கலக்காய் | தனித்தனியாய் . | 
| அலக்கழித்தல் | அலைத்து வருத்துதல் ; கெடுத்தல் ; அழகு காட்டுதல் . | 
| அலக்கழிதல் | வருந்துதல் . | 
| அலக்கு | வரிச்சு ; துறட்டுக்கோல் ; தனிமை ; எலும்பு ; கிளை ; கோட்டை . | 
| அலக்குத்தடி | வேலி அடைக்கும் மரக்கிளை ; துறட்டுக்கோல் . | 
| அலக்குதல் | அசைத்தல் ; துணி முதலியன வெளுத்தல் . | 
| அல் | இரவு ; இருள் ; மாலை ; சூரியன் ; வெயில் ; மதில் ; சுக்கு ; மெய்யெழுத்து ; மயக்கம் ; எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி ; வியங்கோள் விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; ஒரு சாரியை ; ஆண்பால் பெயர் விகுதி ; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி ; எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி ; எதிர்மறை வினை இடைநிலை . | 
| அல்கந்தி | அந்திப்பொழுது . | 
| அல்கல் | தங்குகை ; குறைதல் ; வருமை ; இரவு ; நாள் . | 
| அல்கா | இழிவான ; குதிரைச் சேணத்தில் கழுத்து வளையத்துக்குக் கீழிடும் மெத்தை . | 
| அல்கு | இரவு ; பிற்பகல் ; தங்குகை . | 
| அல்குகழி | உப்பங்கழி ; சிற்றாறு . | 
| அல்குதல் | அல்கல் ; தங்குதல் ; நிலைத்து நிற்றல் ; சேருதல் ; அழிதல் ; சேமித்து வைத்தல் . | 
| அல்குல் | பக்கம் ; அரை ; பெண்குறி ; நிதம்பம் . | 
| அல்பொருள் | பாவம் ; உவமானம் . | 
| அல்லகண்டம் | துன்பம் . | 
| அல்லகம் | உற்பலம் ; செந்தாமரை ; கோவணம் . | 
| அல்லகுறி | தலைமகனால் அன்றிப் பிறிதொன்றினால் நிகழும் குறி ; | 
| அல்லகுறிப்படுதல் | இரவுக் குறியிடத்துக் குறியல்லாத குறியில் மயங்குதல் . | 
| அல்லங்காடி | மாலைக்கடை . | 
| அல்லது | தீவினை ; தவிர . | 
| அல்லதூஉம் | அல்லாமலும் . | 
| அல்லதேல் | அல்லாமற்போனால் . | 
| அல்லதை | அல்லாமல் . | 
| அல்லம் | காண்க : இஞ்சி . | 
| அல்லல் | துன்பம் . | 
| அல்லவை | தீயவை ; பயனின்மை . | 
| அல்லறைசில்லறை | மிச்சத்தொகை ; சிறு துன்பங்கள் . | 
| அல்லா | வருத்தம் ; மகமதியர் வழிபடும் கடவுளின் பெயர் . | 
| அல்லாட்டம் | அலைச்சல் . | 
| அல்லாடுதல் | அலைதல் ; தொல்லைப்படுதல் . | 
| அல்லாத்தல் | துன்பம் அடைதல் ; மகிழ்தல் . | 
| அல்லாத | மாறான ; மாறானவை . | 
| அல்லாதார் | ஒழிந்த பிறர் ; தீயார் . | 
| அல்லாப்பண்டிகை | இசுலாமியரின் விழாக்களுள் ஒன்றான மொகரம் . | 
| அல்லாப்பு | வருத்தம் . | 
| அல்லாமல் | தவிர . | 
| அல்லாமலும் | மேலும் . | 
| அல்லாமை | தீக்குணம் . | 
| அல்லாரி | வெள்ளாம்பல் ; சுவரின் ஆரல் தாங்கும் முளை ; அடர்த்தியின்மை . | 
| அல்லால் | அல்லாமல் . | 
| அல்லி | ஆம்பல் ; வெள்ளாம்பல் ; தாமரை ; காயாம்பூ ; அகவிதழ் ; பூந்தாது ; அல்லியரிசி ; இளவேர் ; இரவு ; அலி . | 
| அல்லிகம் | பேய்க்கொம்மட்டிக் கொடி . | 
| அல்லித்தாமரை | செங்கழுநீர்க் கொடி . | 
| அல்லித்தாள் | அகவிதழ் உறுப்புவகை . | 
| அல்லிப்பாவை | அல்லியக்கூத்தில் ஆட்டும் பொம்மை . | 
| அல்லிப்பிஞ்சு | இளம்பிஞ்சு . | 
| அல்லிமாதர் | திருமகள் . | 
| அல்லிமூக்கு | சில்லிமூக்கு ; இரத்தம் ஒழுகும் மூக்கு . | 
| அல்லியம் | மாயோன் ஆடலுள் ஒன்று ; இடையர் ஊர் ; கலப்பை ; அழகின்மை . | 
| அல்லியரிசி | அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறு விதை . | 
| அல்லியன் | தன் குழுவைப் பிரிந்த யானை . | 
| அல்லியாமரம் | படகு வலிக்கும் தண்டு . | 
| அல்லியான் | பிரமன் . | 
| அல்லிருள் | இரவில் இருளின் செறிவு ; இரவின் செறிந்த இருள் . | 
| அல்லுச்சில்லுப்படுதல் | சிறிது சிறிதாகக் கெடுதல் . | 
| அல்லுதல் | முடைதல் ; பின்னிக்கொள்ளுதல் . | 
| அல்லும்பகலும் | இரவும் பகலும் , எப்பொழுதும் . | 
| அல்லுழி | அல்லாத இடத்து . | 
| அல்லூரம் | வில்வமரம் . | 
| அல்லை | அல்லிக்கொடி ; தாய் . | 
| அல்லைதொல்லை | மிக்க துன்பம் . | 
| அல்லோலகல்லோலம் | பேராரவாரம் . | 
| அல்லோன் | சந்திரன் ; ஒழிந்தோன் . | 
| அல்வழக்கு | தகாத ஒழுக்கம் . | 
| அல்வழி | நெறி அல்லாத நெறி ; தகாத வழி ; அல்வழிப் புணர்ச்சி . | 
| அரோகம் | நோயின்மை . | 
| அரோகி | நோய் இல்லாதவன் ; சகமுடையவன் . | 
| அரோசகம் | பசியின்மை ; அருவருப்பு . | 
| அரோசிகம் | பசியின்மை ; அருவருப்பு . | 
| அரோசனம் | அருவருப்பு . | 
| அரோசித்தல் | அருவருத்தல் . | 
| அலங்காரப்பேச்சு | சிங்காரப்பேச்சு ; புனைவுரை . | 
| அலங்காரபஞ்சகம் | வெண்பா , கலித்துறை , அகவல் , விருத்தம் , சந்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாக வரப் பாடப்படும் நூல் . | 
| அலங்காரம் | சிங்காரம் ; அழகு ; அணிகலன் ; செய்யுள் அணி ; சங்கீத உறுப்புவகை ; பெருமாள் கோயில்களில் படைக்கப்படும் சோறு , குழம்பு முதலிய உணவு ; வெடிகாரம் . | 
| அலங்காரி | அழகு செய்யப்பெற்றவள் . | 
| அலங்கிருதம் | சிங்காரம் . | 
| அலங்கிருதி | சிங்காரம் . | 
| அலங்குதல் | அசைதல் ; மனம் தத்தளித்தல் ; இரங்குதல் ; ஒளிசெய்தல் . | 
| அலங்கை | துளசி . | 
| அலங்கோலம் | சீர்கேடு . | 
| அலசடி | துன்பம் . | 
| அலசம் | ஒரு மரம் ; சோம்பு ; மந்தம் ; கால்விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப்புண் . | 
| அலசல் | இழை விலகியிருக்கை ; இழை நெருக்கமில்லாத ஆடை ; சிதறுண்ட பொருள் ; பயனற்ற வேலை ; சோம்பல் . | 
| அலசி | நத்தைவகை . | 
| அலசுதல் | அலைதல் ; சோர்தல் ; வெட்கும்படி பலபடப் பேசுதல் ; வருந்துதல் ; நீரில் கழுவுதல் . | 
| அலஞ்சரம் | மட்குடுவை . | 
| அலட்சியம் | கவனமின்மை ; மதிப்பின்மை . | 
| அலட்டு | வீண் சொற்களை மேன்மேலும் கூறுகை ; தொந்தரை ; பிதற்றுகை . | 
| அலட்டுச்சன்னி | பிதற்றுங் குணமுடைய சன்னிநோய் . | 
| அலட்டுதல் | பிதற்றுதல் ; அங்கலாய்த்தல் ; தொந்தரை செய்தல் . | 
| அலத்தகம் | செம்பஞ்சுக்குழம்பு ; செம்பருத்தி . | 
| அலத்தம் | செம்பருத்தி ; சூரியகாந்தி . | 
| அலத்தல் | அலைதல் ; ஆசைப்படுதல் ; துன்பப்படுதல் . | 
| அலத்தி | மின்மினி ; நுளம்பு . | 
| அலதரன் | கலப்பையைக் கொண்டவன் ; உழவன் ; பலராமன் . | 
| அலதிகுலதி | அலங்கோலம் . | 
| அலந்தம் | மெய்யீறு . | 
| அலந்தல் | மயிலடிக் குருந்து ; செங்கத்தாரிப்பூண்டு . | 
| அலந்தலை | துன்பம் ; கலக்கம் . | 
| அலந்தை | துன்பம் ; நீர்நிலை . | 
| அலந்தோன் | துன்பமுற்றோன் . | 
| அலப்படை | கலப்பை ஆயுதம் . | 
| அலப்பல் | உளறுதல் ; பிதற்றல் ; கலப்புக்கட்டோசை . | 
| அலப்பன் | வீண்பேச்சுக்காரன் . | 
| அலப்பாட்டுதல் | மனம் சுழலுதல் . | 
| அலப்பு | மனக்கலக்கம் . | 
| அலப்புதல் | வீண்பேச்சுப்பேசுதல் ; உளறுதல் ; அலைத்தல் . | 
| அலபதுமம் | நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று . | 
| அலம் | துன்பம் ; தேள் ; விருச்சிகராசி ; அமைவு ; போதும் ; திருப்தி ; கலப்பை ; நீர் . | 
| அலக்குப்போர் | சேவகர் ஈட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை . | 
| அலக்கைச்சுரம் | கீழ்க்காய்நெல்லி . | 
| அலக்கொடுத்தல் | ஊறு செய்தல் . | 
| அலக்கொடுப்பு | ஊறு . | 
| அலகம் | காண்க : ஆனைத்திப்பிலி ; வேப்பலகு . | 
| அலகம்பு | அம்புவகை . | 
| அலகரி | பெரிய அலை . | 
| அலகிடல் | அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் . | 
| அலகிடுதல் | அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் . | 
| அலகின்மாறு | துடைப்பம் ; விளக்குமாறு . | 
| அலகு | எண் ; அளவு ; அளவுகருவி ; பலகறை ; மகிழம் விதை ; நென்மணி ; பயிர்க்கதிர் ; ஆயுதம் ; ஆயுதத்தினலகு ; கூர்மை ; பறவைமூக்கு ; தாடை ; உயிர்களின் கொடிறு ; கைம்மரம் ; நூற்பாவின் அலகு ; துடைப்பம் ; பொன்னாங்காணி ; அறுகு ; நுளம்பு ; இலட்சம் பாக்கு ; ஆண்பனை ; அகலம் ; குற்றம் . | 
| அலகுகட்டுதல் | மந்திரத்தால் வாயைக்கட்டுதல் ; வாளின் வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல் ; கணக்குத் தீர்த்தல் . | 
| அலகுகட்டை | வண்டிச்சக்கர வட்டை . | 
| அலகுகழித்தல் | கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகை குறைத்தல் . | 
| அலகுகிட்டுதல் | சன்னியால் பல்லுக் கிட்டுதல் . | 
| அலகுசோலி | காண்க : அறுகு . | 
| அலகுஞ்சம் | மின்மினி ; நுளம்பு . | 
| அலகுநிறுத்தல் | திரௌபதியின் விழாவிற்குமுன் வாள் நாட்டும் சடங்கு . | 
| அலகுபருப்பு | பட்டாணிக்கடலை . | 
| அலகுபனை | ஒருவகை மடற்பனை . | 
| அலகுபூட்டு | வேண்டுதலுக்கென்று இடப்படும் வாய்ப்பூட்டு . | 
| அலகுபோடுதல் | வேண்டுதலுக்காக நா முதலிய உறுப்புகளில் வேற்கம்பிகளைக் குத்திக் கொள்ளுதல் . | 
| அலகை | பேய் ; பேய்க்கொம்மட்டிக் கொடி ; காட்டுக் கற்றாழை ; அளவு . | 
| அலகைக்கொடியாள் | பேய் உருவம் பொறித்த கொடியையுடைய காளி . | 
| அலகைத்தேர் | பேய்த்தேர் . | 
| அலகைமுலையுண்டோன் | பேயின் முலைப்பாலுடன் அவளுயிரை மாய்த்த கண்ணபிரான் . | 
| அலங்கடை | அல்லாதவிடத்து . | 
| அலங்கம் | அரண் ; கொத்தளம் ; ஆற்றிடைக்குறை . | 
| அலங்கமலங்க | பொறிகலங்க . | 
| அலங்கரணம் | ஒப்பனை . | 
| அலங்கரித்தல் | அழகுபடுத்துதல் . | 
| அலங்காரித்தல் | அழகுபடுத்துதல் . | 
| அலங்கல் | பூமாலை ; மயிர்ச்சூட்டு மாலை ; தளிர் ; அசையுங்கதிர் ; துளசி ; ஒழுங்கு ; ஒளி ; அசைதல் ; மனங்கலங்கல் . | 
| அலங்கனாரி | முத்துச்சிப்பி | 
| அலங்காரசாத்திரம் | அணியிலக்கண நூல் . | 
| அலங்காரப்படுத்தல் | ஒப்பனை செய்தல் . | 
| அலங்காரப்பிரியன் | திருமால் . | 
| அலருதல் | மலர்தல் ; பரத்தல் ; பெருத்தல் ; விளங்குதல் ; சுரத்தல் . | 
| அலர்மகள் | திருமகள் . | 
| அலர்மேல்மங்கை | திருமகள் . | 
| அலரவன் | பிரமன் . | 
| அலரி | பூ ; ஒரு பூச்செடி ; நீர்வாவி ; கண்வரி ; அழகு ; சூரியன் ; தீ ; தேனீ ; கோதுமை ; கோமாரி ; ஆற்றுப்பாலை . | 
| அலரோன் | காண்க : அலரவன் . | 
| அலவர் | உழுதொழிலாளர் ; உழவர் . | 
| அலவல் | இழை விலக்கமாய் நெய்யப்பட்டது ; அலமரல் ; கந்தைச்சீலை ; விபச்சாரம் . | 
| அலவலை | ஆராயாது செய்வது ; விடாது பேசுவோன் ; மனச் சஞ்சலம் . | 
| அலவன் | நண்டு ; ஆண்நண்டு ; பூனை ; கற்கடகராசி ; நிலா . | 
| அலவாங்கு | கடப்பாரை . | 
| அலவாட்டு | வழக்கம் | 
| அலவான் | பல்லாங்குழியாட்டத்தில் கூடும் காய்கள் . | 
| அலவு | மனத்தடுமாற்றம் . | 
| அலவுதல் | வருந்துதல் ; சிந்துதல் . | 
| அலவை | அல்லவை ; விடாது பிதற்றுபவள் ; விபச்சாரம் . | 
| அலற்றுதல் | இடைவிடாமலும் முறையில்லாமலும் பேசுதல் . | 
| அலறல் | புலம்புதல் , கதறுதல் . | 
| அலறுதல் | அலறல் ; மிக்கொலித்தல் ; மாடு , ஆந்தை முதலியன கதறுதல் ; உரத்தழுதல் ; வருந்துதல் ; விரிதல் ; காய்தல் . | 
| அலன் | கலப்பைப் படையையுடைய பலராமன் . | 
| அலன்றல் | சாவு . | 
| அலாதம் | கடைக்கொள்ளி ; மரம்சுட்ட கரி . | 
| அலாதி | தனியானது . | 
| அலாது | தனியானது . | 
| அலாபத்திரம் | இணையா வினைக்கை வகை . | 
| அலாபம் | இலாபமின்மை ; தீது . | 
| அலாயுதன் | காண்க : அலன் . | 
| அலாரிதா | அலரிச்செடி . | 
| அலாரிப்பு | நாட்டிய ஆரம்பத்தில் பாடும் சொற்கட்டு . | 
| அலாவு | சுரைக்கொடி . | 
| அலி | ஆண்பெண் அல்லாதது ; பலராமன் ; யமன் ; உழவன் ; காகம் ; குயில் ; தேன் ; விருச்சிகராசி ; நறுவிலிமரம் ; வயிரம் இல்லாமரம் ; தீ ; சோறு . | 
| அலிக்கிரகம் | சனி , புதன் என்னுங் கோள்கள் , | 
| அலிக்கை | அலிச்செயல் காட்டும் அபிநயக்கை . | 
| அலிகம் | நெற்றி . | 
| அலிப்பேடு | அல்லியம் என்னும் கூத்து . | 
| அலிபகம் | கருவண்டு ; தேள் ; நாய் . | 
| அலிமரம் | வயிரமில்லாத மரம் ; பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம் . | 
| அலியன் | கடுக்காய்மரம் . | 
| அலியெழுத்து | ஆய்தவெழுத்து . | 
| அல¦கன் | தலை . | 
| அலுக்குத்து | முகமதியப் பெண்கள் காதணி . | 
| அலுக்குதல் | சிறிது அசைத்தல் ; பிலுக்குப்பண்ணல் ; பகட்டித் திரிதல் ; ஆடம்பரங்காட்டி மயக்குதல் . | 
| அலுசிலும்பல் | குழப்பம் . | 
| அலுப்தசத்தி | பேரருளுடைமை . | 
| அலுத்தசத்தி | பேரருளுடைமை . | 
| அலுத்தல் | சோர்தல் ; தளர்தல் ; களைத்தல் . | 
| அலுத்தன் | பற்றற்றவன் . | 
| அலுப்பு | தளர்வு ; சோர்வு ; களைப்பு . | 
| அலுவல் | தொழில் . | 
| அலுவீகம் | வில்வமரம் . | 
| அலேகம் | எழுதப்படாத வெள்ளேடு ; உலோகமணல் . | 
| அலை | நீர்த்திரை ; கடல் ; திரையடித்தொதுக்கிய கருமணல் ; நிலம் ; மது ; கண்டனம் ; வருத்துகை ; மிகுதி ; கொலை . | 
| அலைக்கழித்தல் | அலைத்து வருத்துதல் . | 
| அலைக்கழிதல் | அலைந்து வருந்துதல் . | 
| அலைக்கழிவு | உலைவு ; அலைந்து வருந்தும் வருத்தம் . | 
| அலைகாற்று | பெருங்காற்று . | 
| அலைகுலையாக்குதல் | நிலைகுலையச் செய்தல் . | 
| அலைச்சல் | திரிகை ; தொந்தரவு . | 
| அலம்பல் | ஆரவாரம் ; எதிர்பாரா விளம்பரம் ; இடையூறு ; கொள்ளைநோய் ; அலக்குத்தடி ; வளார் . | 
| அலம்பு | பத்து நாடிகளுள் ஒன்று . | 
| அலம்புடை | பத்து நாடிகளுள் ஒன்று . | 
| அலம்புதல் | ஒலித்தல் ; ததும்புதல் ; தவறுதல் ; அலைதல் ; கழுவுதல் ; அலைத்தல் ; கலத்தல் . | 
| அலம்வருதல் | அமைவுண்டாதல் ; மனம் சுழலுதல் . | 
| அலமரல் | சுழற்சி ; மனச்சுழற்சி ; வருத்தம் ; அச்சம் . | 
| அலமருதல் | சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் . | 
| அளமருதல் | சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் . | 
| அலமலத்தல் | அங்கலாய்த்தல் ; கலங்குதல் . | 
| அலமலத்துதல் | கலக்கமுறச் செய்தல் . | 
| அலமாப்பு | துன்பம் . | 
| அலமாரி | பேராசையுள்ளவன் ; சுவர் அடுக்குமாடம் ; நிலைப்பேழை . | 
| அலமுகம் | கலப்பை நுனி ; கொழுமுனை . | 
| அலமுகவிரும்பு | கலப்பைக்கொழு . | 
| அலர் | பழிச்சொல் ; மலர்ந்த பூ ; மகிழ்ச்சி ; நீர் ; மஞ்சள் ; மிளகுகொடி . | 
| அலர்த்துதல் | மலரச்செய்தல் . | 
| அலர்தல் | மலர்தல் ; பரத்தல் ; பெருத்தல் ; விளங்குதல் ; சுரத்தல் | 
| அவசானம் | எல்லை ; முடிவு ; இறப்பு . | 
| அவசித்தாந்தம் | தவறான முடிவு . | 
| அவசியம் | இன்றியமையாமை ; கட்டாயம் ; உறுதி . | 
| அவடி | இடுதிரை . | 
| அவிடி | இடுதிரை . | 
| அவடு | பிடர் ; குழி ; கிணறு . | 
| அவண் | அவ்விடம் ; அவ்விதம் . | 
| அலைத்தல் | அசைத்தல் ; அலையச் செய்தல் ; நீரைக் கலக்குதல் ; வருத்துதல் ; அடித்தல் ; நிலைகெடுத்தல் ; உருட்டுதல் ; அலைமோதுதல் . | 
| அலைத்திடல் | காண்க : அலைத்தல் . | 
| அலைதரல் | அலைதல் ; அலையச் செய்தல் . | 
| அலைதல் | திரிதல் ; வருந்துதல் ; சோம்புதல் ; ஆடுதல் . | 
| அலைதாங்கி | அலையைத் தடுக்கும் செய்கரை . | 
| அலைதாடி | ஆடுமாடுகளின் கழுத்தில் புடைத்துத் தொங்கும் தசை . | 
| அலைநீர் | கடல் . | 
| அலைப்படுதல் | வருந்துதல் . | 
| அலைப்பு | அசைக்கை ; வருத்தம் . | 
| அலைமகள் | திருமகள் . | 
| அலையல் | திரிகை ; சோர்வு ; சோம்பல் | 
| அலைவாய் | கடல் ; திருச்செந்தூர் . | 
| அலைவு | அசைகை ; கலக்கம் . | 
| அலோகம் | காணப்படாத உலகம் . | 
| அலௌகிகம் | உலகநடைக்கு மாறானது . | 
| அவ் | சுட்டுச்சொல் ; அவை . | 
| அவ்வது | அவ்வாறு . | 
| அவ்வாய் | அழகிய இடம் . | 
| அவ்வாறு | அப்படி ; தனித்தனி ஆறு . | 
| அவ்விடம் | அங்கு . | 
| அவ்வித்தல் | பொறுமை இழத்தல் ; மனம் கோணச்செய்தல் . | 
| அவ்விதழ் | அழகிய பூவிதழ் . | 
| அவ்வியக்தம் | அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா . | 
| அவ்வியத்தம் | அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா . | 
| அவ்வியத்தன் | கடவுள் ; அறிவிலி . | 
| அவ்வியம் | மனக்கோட்டம் ; பொறாமை , வஞ்சகம் ; தேவர்க்கிடும் பலி ; காண்க : அவ்வியயம் . | 
| அவ்வியயம் | அழியாதது ; இடைச்சொல் . | 
| அவ்வியயன் | அழிவில்லாதவன் ; கடவுள் . | 
| அவ்வை | தாய் ; கிழவி ; தவப்பெண் ; காண்க : ஔவை . | 
| அவ்வோன் | அவன் . | 
| அவ | கீழ் முதலிய பொருள்களைக் குறித்து வரும் ஒரு வடமொழி முன்னொட்டு ; எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க வரும் ஒரு வடமொழி முன்னொட்டு . | 
| அவக்கவக்கெனல் | விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு . | 
| அவக்கிரகம் | தடை ; மழையின்மை ; யானை நெற்றி . | 
| அவக்கிரசம் | காடி . | 
| அவக்குறி | கேடு காட்டும் குறி . | 
| அவக்கொடை | தகுதியற்றவர்க்குத் தரும் பொருள் ; பயனற்ற அறம் . | 
| அவகடம் | வஞ்சகம் ; தீச்செயல் ; தீவினை . | 
| அவகதவாய் | கீழக்காய்நெல்லிப் பூண்டு . | 
| அவகதி | தாழ்ந்தநிலை . | 
| அவகாசம் | சமயம் ; இடம் ; திராணி ; உரிமை . | 
| அவகாசமுறி | பாகபத்திரம் . | 
| அவகாயம் | வானம் . | 
| அவகாரம் | முதலை ; போர் முதலியவற்றில் இளைப்பாறுகை ; சூது ; களவு ; கொள்ளை ; பொருள் ; அழைப்பு . | 
| அவகிருத்தியம் | கெட்ட செய்கை . | 
| அவகீதம் | பலர் பழித்தது ; அபவாதம் ; வசைப்பாட்டு . | 
| அவகீர்த்தி | புகழ்க்கேடு . | 
| அவகுண்டனம் | மூடுகை ; முகத்தை மறைக்கும் துணி . | 
| அவகுணம் | தீக்குணம் . | 
| அவகேசி | பூத்தும் காயாத மரம் . | 
| அவகேடு | பெருந்தீங்கு . | 
| அவச்சாவு | காண்க : அகாலமிருத்து . | 
| அவச்சின்னம் | குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது . | 
| அவச்சுழி | தீவினை . | 
| அவச்சேதகம் | வேறுபடுத்தும் தன்மை . | 
| அவச்சொல் | பழிச்சொல் . | 
| அவசகுனம் | தீநிமித்தம் . | 
| அவசங்கை | அவமரியாதை . | 
| அவசத்தம் | அமங்கல ஒலி ; பிழைச் சொல் . | 
| அவசம் | தன்வசப்படாமை . | 
| அவசர்ப்பிணி | வாழ்நாள் ; போகம் முதலியவை சுருங்கும் காலம் . | 
| அவசரக்குடுக்கை | பதற்றக்காரன் . | 
| அவசரம் | சமயம் ; விரைவு ; இன்றியமையாமை ; கோலம் ; மழை ; ஆண்டு ; அரசாங்கப் பதவிகளுள் ஒன்று . | 
| அவசன் | தன்வசம் இழந்தவன் . | 
| அலைசடி | சோர்வு . | 
| அலைசடை | சோர்வு . | 
| அலைசல் | அலைகை ; துன்பம் ; சோம்பல் . | 
| அலைசுதல் | ஆடை முதலியவற்றை நீரில் அலைத்துக் கழுவுதல் ; குலுக்குதல் ; கலக்குதல் ; சோம்புதல் . | 
| அலைசோலி | அலைச்சல் ; தொந்தரவு . | 
| அவபிருதம் | வேள்வி முடிவில் நீராடுகை . | 
| அவபுத்தி | கெடுமதி . | 
| அவம் | வீண் ; பயனின்மை ; கேடு ; ஆணை ; அழைப்பு ; வேள்வி ; ஆகாயத்தாமரை . | 
| அவமதி | அவமானம் ; நிந்தனை ; இகழ்ச்சி . | 
| அவமதிச்சிரிப்பு | இகழ்ச்சி நகை . | 
| அவமதித்தல் | இகழ்தல் . | 
| அவமதிப்பு | இகழ்ச்சி . | 
| அவமரணம் | காண்க : அகாலமிருத்து . | 
| அவமரியாதை | மரியாதைக் குறைவு . | 
| அவமழை | கேடு விளைக்கும் மழை . | 
| அவமாக்குதல் | வீணாக்குதல் . | 
| அவமானம் | காண்க : அவமதிப்பு . | 
| அவமானித்தல் | இகழுதல் . | 
| அவமிருத்து | காண்க : அகாலமிருத்து . | 
| அவயங்காத்தல் | காண்க : அடைகாத்தல் . | 
| அவயம் | அடைக்கலம் புகுவோன் ; புகலிடம் ; அடைகாக்கை ; வெட்டிவேர் ; இரைச்சல் . | 
| அவயவம் | உடலின் உறுப்பு ; அங்கம் ; இலாமிச்சைச் செடி . | 
| அவயவி | உறுப்புள்ளது ; உடல் ; அவை உறுப்பினன் . | 
| அவயோகம் | தீய நிகழ்ச்சி . | 
| அவர் | அவன் , அவள் என்பதன் பன்மைச் சொல் ; ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல் . | 
| அவர்கள் | காண்க : அவர் ; ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச் சொல் . | 
| அவர்ணியம் | உவமானம் . | 
| அவர்வயின்விதும்பல் | பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்ல விரைதல் . | 
| அவரகாத்திரம் | கால் . | 
| அவணம் | இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு . | 
| அவணன் | திண்ணியன் ; செல்வாக்குடையவன் . | 
| அவணி | நன்மை . | 
| அவத்தம் | காண்க : அபத்தம் ; பயனற்றது ; கேடு ; நாய்வேளைப் பூண்டு . | 
| அவத்தன் | பயனற்றவன் . | 
| அவத்தியம் | குற்றம் . | 
| அவத்திரியம் | ஆபத்து , கேடு . | 
| அவத்துறை | தீயவழி . | 
| அவத்தை | நிலை ; வேதனை ; மனநிலை ; ஆன்மாவுக்குண்டாகும் சாக்கிர முதலியநிலை ; பாலிய முதலிய மானிடப் பருவங்கள் . | 
| அவத்தைப்பிரயோகம் | அறுபத்து நான்கு கலையுள் சூனியம் வைத்துக் கொல்லும் வித்தை . | 
| அவதஞ்சம் | செவிமலர்ப்பூ ; தலைமாலை . | 
| அவதந்திரம் | சூழ்ச்சி ; சதியோசனை . | 
| அவதரம் | சமயம் . | 
| அவதரித்தல் | பிறத்தல் ; தங்குதல் . | 
| அவதாதம் | தூய்மை ; பொன்மை ; வெண்மை அழகு . | 
| அவதாரணம் | அவதாரம் ; தேற்றம் ; உறுதி ; முகவுரை . | 
| அவதாரம் | இறங்குகை ; உயர்பிறப்பு ; பிரிக்கை ; தீர்த்தத்துறை . | 
| அவதாரிகை | முகவுரை ; முன்னுரை . | 
| அவதானம் | மேன்மைச் செயல் ; கவனம் ; நினைவாற்றல் ; சாதுரியம் ; பிரிவு ; ஒரே சமயத்தில் பல பொருள்களைக் கவனிக்கை ; வரம்பு மீறுகை ; மனஒருமைப்பாடு ; முடிவு . | 
| அவதானி | கருத்துள்ளவன் ; வேதங்களில் தேர்ச்சியுள்ளவன் ; அவதானம் செய்வோன் . | 
| அவதி | துன்பம் ; எல்லை ; தவணை ; அளவு ; கணக்கு ; ஐந்தாம் ; வேற்றுமை ; எல்லைப்பொருள் ; அவதிஞானம் ; பரிச்சேதம் ; காலம் ; குழி ; விடுமுறை . | 
| அவதிகத்தம் | கடல்நுரை . | 
| அவதிகாரகம் | நீக்கப் பொருளைக் காட்டும் உருபுடைப் பெயர் . | 
| அவதிஞானம் | முற்பிறப்பை அறியும் அறிவு : சேய்மையில் உள்ளவற்றைப் பொறி உதவியின்றி உணரும் உணர்ச்சி ; முக்காலத்தையும் அறியும் அறிவு . | 
| அவதும்பரம் | அத்திப்பழம் . | 
| அவதூதம் | நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று முழுத் துறவு அம்மணம் . | 
| அவதூதன் | முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி . | 
| அவதூதி | முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி . | 
| அவதூறு | பழிச்சொல் . | 
| அவந்தரை | சீர்கேடு பயனின்மை ; அநாத நிலை . | 
| அவந்தன் | பயனற்றவன் . | 
| அவந்தி | முக்திநகர் ஏழனுள் ஒன்றாகிய உச்சயினி ; காடி ; கிளி ; பிள்ளை பெற்றவள் ; காய்க்கும் மரம் ; ஈற்றுப்பசு கோவைக்கொடி . | 
| அவந்திக்கண்ணி | வெருகஞ்செடி . | 
| அவந்திகை | உச்சயினி ; கிளி . | 
| அவந்திசோமம் | காடி ; புளித்த கஞ்சி . | 
| அவந்தன் | தலைகுனிந்து வணங்குவோன் . | 
| அவநாசி | கலைமகள் . | 
| அவநியாயம் | அநியாயம் , நீதியின்மை . | 
| அவநீதன் | நீதியற்றவன் . | 
| அவநுதி | ஒன்றன் தன்மையை மறுத்துவேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி புகழ்தல் . | 
| அவநெறி | தீயவழி , பாவவழி . | 
| அவப்படுதல் | பயனின்றாதல் . | 
| அவப்பலம் | தீப்பயன் . | 
| அவப்பிரசவம் | ஆறு மாதத்துக்குமேல் நிகழும் கரு அழிவு . | 
| அவப்பிரஞ்சம் | ஒருவகைப் பிராகிருத மொழி ; இழிசினர் பேசும் வடமொழி . | 
| அவப்பிரஞ்சனம் | ஒருவகைப் பிராகிருத மொழி ; இழிசினர் பேசும் வடமொழி . | 
| அவப்பேர் | இகழ்மொழி . | 
| அவப்பொழுது | வீண்காலம் . | 
| அவபத்தி | பத்தி இன்மை ; மூடபத்தி . | 
| அவபத்தியம் | பத்தியக்கேடு . | 
| அவபிரதம் | வேள்வி முடிவில் நீராடுகை . | 
| அவா | எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம் ; பெருவிருப்பம் ; இறங்குகை . | 
| அவாச்சியம் | சொல்ல முடியாதது . | 
| அவாச்சியன் | குறிப்பிடத்தகாதவன் . | 
| அவாசி | தென்திசை . | 
| அவாசீனம் | தென்திசை . | 
| அவாதிதம் | கண்டிக்கப்படாதது . | 
| அவாந்தரப்பிரளயம் | இடையில் உண்டாகும் உலக அழிவு . | 
| அவாந்தரம் | இடையில் உள்ளது ; வெறுவெளி ; உதவியின்மை ; அழிவு . | 
| அவாந்தரபேதம் | உட்பிரிவு . | 
| அவாந்தரவெளி | வெட்டவெளி . | 
| அவாய்நிலை | ஒன்றை வேண்டிநிற்கும் நிலை , ஒரு சொல் தன்னோடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை . | 
| அவாயம் | காண்க : அபாயம் . | 
| அவாரபாரம் | கடல் . | 
| அவாரி | சிறுநீர் ; தடையின்மை . | 
| அவாவல் | காண்க : அவாவுதல் . | 
| அவாவறுத்தல் | ஆசையை ஒழித்தல் . | 
| அவாவன் | ஆசை உடையவன் . | 
| அவாவுதல் | விரும்புதல் , பற்றுச்செய்தல் ; ஒன்றை வேண்டி நிற்றல் . | 
| அவி | வேள்வித்தீயில் இடும் கடவுளர்க்குரிய உணவு ; உணவு ; சோறு ; நெய் ; நீர் ; ஆடு ; கதிர் ; கதிரவன் ; காற்று ; மேகம் ; மலை ; மதில் ; பூப்பினள் . | 
| அவி | (வி) தணி ; அழி . | 
| அவிக்கனம் | இடையூறு இன்மை . | 
| அவிக்கை | அவித்தல் . | 
| அவிகம் | வைரம் . | 
| அவிகாரம் | விகாரம் அற்றது , மாறாதது ; கடவுள் . | 
| அவிகாரன் | கடவுள் ; ஆட்டுக்காரன் . | 
| அவிகாரி | விகாரம் அற்றது ; மாறாதவன் ; கடவுள் . | 
| அவிச்சன் | தந்தை . | 
| அவிச்சின்னம் | இடைவிடாமை ; பிரிக்கப்படாமை . | 
| அவிச்சை | காண்க : அவித்தை . | 
| அவிசல் | அவிந்துபோனது . | 
| அவரசன் | தம்பி . | 
| அவரசை | தங்கை . | 
| அவரம் | பிந்தியது ; யானையின் பின்னங்காற் புறம் . | 
| அவராகம் | இச்சையின்மை . | 
| அவராத்திரி | வீணான இரவு . | 
| அவரூபம் | உருவக்கேடு , விகாரவடிவம் . | 
| அவரை | அவரைக்கொடி . | 
| அவரைப்பிராயம் | குழந்தைப்பருவம் . | 
| அவரோகணம் | இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை . | 
| அவரோகம் | இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை . | 
| அவரோகி | ஆலமரம் . | 
| அவரோதம் | அந்தப்புரம் ; அரண்மனை ; மறைவு ; வேலி ; முற்றுகை . | 
| அவரோதனம் | அந்தப்புரம் ; அரண்மனை ; மறைவு ; வேலி ; முற்றுகை . | 
| அவரோபணம் | இறக்குதல் ; வேரோடு பிடுங்கல் . | 
| அவல் | நெல் இடியல் ; விளைநிலம் ; பள்ளம் ; குளம் . | 
| அவலச்சுவை | ஒன்பான் சுவைகளுள் ஒன்று , துன்பச்சுவை . | 
| அவலச்சுழி | தீவினை . | 
| அவலட்சணம் | அழகின்மை . | 
| அவலம் | துன்பம் ; வறுமை ; பலவீனம் ; கவலை ; கேடு ; குற்றம் ; நோய் ; அழுகை ; அவலச்சுவை ; மாயை ; பயன்படாது ஒழிதல் ; இடப்பக்கம் . | 
| அவலம்பம் | சார்பு ; பற்றுக்கோடு . | 
| அவலம்பித்தல் | சார்ந்து நிற்றல் ; பற்றுதல் . | 
| அவலன் | குற்றமுள்ளவன் ; பயனற்றவன் . | 
| அவலி | பூனைக்காலிச் செடி . | 
| அவலிடி | வரிக்கூத்துவகை . | 
| அவலித்தல் | வருந்துதல் ; அழுதல் ; பதறுதல் . | 
| அவலுப்பு | அவுரியினின்று எடுக்கும் உப்பு . | 
| அவலேசம் | அற்பம் ; அவமானம் . | 
| அவலை | கடுப்பு ; காடு . | 
| அவலோகம் | பார்வை . | 
| அவலோகனம் | பார்வை . | 
| அவலோகித்தல் | நோக்குதல் . | 
| அவவாதம் | காண்க : அபவாதம் ; ஆணை ; நம்பிக்கை . | 
| அவவு | காண்க : அவா . | 
| அவள் | பெண்பால் சுட்டுப் பெயர் . | 
| அவளம் | தீமை . | 
| அவளைதுவளை | கதம்ப உணவு . | 
| அவற்கம் | கஞ்சி . | 
| அவன் | ஆண்பால் சுட்டுப் பெயர் . | 
| அவனி | உலகம் , பூமி . | 
| அவனிகேள்வன் | நிலமகளின் கணவனான திருமால் . | 
| அவனிகை | இடுதிரை . | 
| அவனிபன் | அரசன் . | 
| அவனிபாரகன் | அரசன் . | 
| அவனிபாலகன் | அரசன் . | 
| அவனிபாலன் | அரசன் . | 
| அவிர் | ஒளி . | 
| அவிர்தல் | ஒளிர்தல் ; பீறுதல் . | 
| அவிர்ப்பாகம் | காண்க : அவிப்பாகம் . | 
| அவிரதம் | என்றும் , எப்பொழுதும் . | 
| அவிருகம் | அதிவிடயப் பூண்டு . | 
| அவிருத்தம் | பகையில்லாதது . | 
| அவிரோதம் | மாறு இன்மை ; நட்பு . | 
| அவிவாதம் | மாறுபாடு இல்லாமை ; இசைவு . | 
| அவிவு | ஒழிவு . | 
| அவிவேகம் | பகுத்தறிவு இன்மை . | 
| அவிவேகி | பகுத்தறிவு இல்லாதவன் . | 
| அவிழ் | பருக்கை , சோறு . | 
| அவிழ்த்தல் | கட்டு நீக்குதல் ; மலரச்செய்தல் ; விடுகதைப் பொருளை விடுத்தல் . | 
| அவிழ்த்துக் கொடுத்தல் | சொந்தப் பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல் . | 
| அவிழ்தம் | மருந்து , ஔடதம் . | 
| அவிழ்தல் | நெகிழ்தல் ; மலர்தல் ; உதிர்தல் ; சொட்டுதல் ; இளகுதல் ; பிரிதல் . | 
| அவிழிகம் | மலர்ந்த பூ . | 
| அவின் | காண்க : அபின் . | 
| அவினயம் | அடக்கம் இல்லாமை . | 
| அவினாபாவம் | விட்டு நீங்காத உடன் நிகழும் தன்மை . | 
| அவினாபாவி | பிரிக்க முடியாதது . | 
| அவினாபூதம் | நீக்கமீன்றி இருப்பது . | 
| அவீசி | தூமகேதுவகை ; திரை இல்லாதது . | 
| அவீரை | பிள்ளை இல்லாக் கைம்பெண் . | 
| அவுக்கவுக்கெனல் | காண்க : அவக்கவக்கெனல் . | 
| அவுசனம் | காண்க : ஔசனம் ; உசனம் . | 
| அவுசு | ஒழுங்கு . | 
| அவுசுக்காரன் | ஆடையில் விருப்பமுள்ளவன் . | 
| அவுண் | அசுரசாதி . | 
| அவுணன் | அசுரன் . | 
| அவுத்திரி | காண்க : ஔத்திரி . | 
| அவுதா | அம்பாரி . | 
| அவுரி | நீலச்செடி ; மீன்வகை . | 
| அவுரிச்சால் | வாயகன்ற பெரிய சால் . | 
| அவுரிப்பச்சை | பச்சைக் கருப்பூரம் . | 
| அவுல்தார் | சிறுபடைக்குத் தலைவன் . | 
| அவுனியா | வவ்வால் மீன் . | 
| அவுனுதம் | பித்தநோய்வகை ; கிரந்திநோய்வகை . | 
| அவேத்தியன் | அறியப்படாதவன் . | 
| அவை | மாந்தர் கூட்டம் ; அறிஞர் கூட்டம் ; சபா மண்டபம் ; புலவர் ; நாடக அரங்கு ; பன்மைச்சுட்டு ; அப்பொருள்கள் . | 
| அவைக்களம் | சபை கூடும் இடம் . | 
| அவைத்தல் | நெல் முதலியவற்றைக் குற்றுதல் ; கையால் குத்துதல் ; அவித்தல் ; நெரித்தல் . | 
| அவைப்பரிசாரம் | சபை வணக்கம் . | 
| அவைப்பு | குற்றப்பட்ட அரிசி . | 
| அவையடக்கம் | சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை . | 
| அவையடக்கு | சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை . | 
| அவையம் | அறிஞர் கூட்டம் ; நியாயம் உரைக்கும் சபையோர் ; அவைக்களம் ; இலாமிச்சை . | 
| அவையம்போடுதல் | சத்தமிடுதல் . | 
| அவிசல்நாற்றம் | அழுகிய காய் முதலியவற்றின் தீநாற்றம் . | 
| அவிசற்பல் | சொத்தைப்பல் . | 
| அவிசாரம் | ஆராய்ச்சியில்லாமை ; கவலை இல்லாமை ; காண்க : அபிசாரம் . | 
| அவிசாரி | விபசாரி ; கவலையற்றவன் (ள்) . | 
| அவிசு | வேள்வித்தீயில் தேவர்க்கும் கொடுக்கும் உணவு ; நெய் ; கஞ்சிவடியாது சமைத்த சோறு . | 
| அவிசுவாசம் | நம்பிக்கையின்மை ; நன்றி இன்மை . | 
| அவிஞ்சன் | அறியாமை உடையோன் , போதிக்கப்படாதவன் . | 
| அவிஞ்சை | காண்க : அவித்தை . | 
| அவிட்டம் | இருபத்துமூன்றாம் நட்சத்திரம் . | 
| அவித்தல் | வேகச்செய்தல் ; அணைத்துவிடுதல் ; அடக்குதல் ; கெடுத்தல் ; துடைத்தல் ; நீக்குதல் . | 
| அவித்துருமம் | இருப்பை மரம் . | 
| அவித்துவையல் | பச்சடி . | 
| அவித்தை | அறியாமை ; மாயை ; ஆணவம் ; ஜவகைத் துன்பங்களுள் ஒன்று ; மோகம் . | 
| அவிதல் | பாகமாதல் ; இறுக்கத்தால் புழுங்குதல் ; ஒடுங்குதல் ; ஓய்தல் ; அணைந்துபோதல் ; குறைதல் ; பணிதல் ; அழிதல் ; காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல் ; சாதல் . | 
| அவிதா | ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் . | 
| அவிநயக்கூத்து | பாடற்பொருளைக் கையால் காட்டி ஆடும் கூத்து . | 
| அவிநயம் | காண்க : அபிநயம் ; ஓர் யாப்பிலக்கணம் . | 
| அவிநயர் | கூத்தர் ; அவிநய யாப்பிலக்கண நூலின் ஆசிரியர் . | 
| அவிநாசவாதி | பொருள் அழியாதது என்னும் கொள்கையை உடையவன் . | 
| அவிநாசி | கடவுள் . | 
| அவிப்பலி | தேவர்க்குக் கொடுக்கும் உணவு ; வீரன் சூளுரைத்துத் தன்னைத் தீக்குப் பலி கொடுக்கை . | 
| அவிப்பாகம் | தேவர் உணவின் பங்கு . | 
| அவிப்பிணம் | உவர்மண்ணை எடுத்துக் காய்ச்சும் உப்பு . | 
| அவிபக்த குடும்பம் | பிரிக்கப்படாத சொத்துள்ள குடும்பம் . | 
| அவிபாகம் | பிரிக்கப்படாதது . | 
| அவிமுத்தம் | காசி நகரம் . | 
| அவியல் | பாகஞ் செய்கை ; உணவு ; கறிவகை ; வெப்பம் ; புழுக்கம் ; வாய்ப்புண் . | 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.