சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆரணி | மாகாளி ; பார்வதி ; சிவசத்திபேதம் ; ஓர் ஊர் . |
| ஆரணியகன் | காட்டில் வாழ்வோன் . |
| ஆரணியசஷ்டி | மகப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாத வளர்பிறையில் நோற்கும் ஒரு நோன்பு . |
| ஆரத்தி | ஆலத்தி ; தீபாராதனை . |
| ஆரதக்கறி | மரக்கறி . |
| ஆரதம் | சைவ உணவு . |
| ஆரதி | காண்க : ஆரத்தி ; ஆலத்திப்பாட்டு . |
| ஆரதிகர்ப்பூரம் | கருப்பூரவகை . |
| ஆரநாளம் | காடி . |
| ஆரபடி | பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடக விருத்தி . |
| ஆரபி | ஒரு பண் . |
| ஆரம் | சந்தனமரம் ; ஒருவகை மணப்பொருள் ; சந்தனக்குழம்பு ; காண்க : கடம்பு ; தோட்டம் ; அஞ்சன பாடாணம் ; காண்க : காட்டாத்தி , ஆரக்கால் ; பித்தளை ; மணிவடம் ; பூமாலை ; முத்து ; பதக்கம் ; அணிகலன் ; பறவைக்கழுத்துவரி ; ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை ; காளிதம் ; கோணம் ; சனி ; செவ்வாய் . |
| ஆரம்பக்கொசு | சமுத்திராப்பழம் . |
| ஆரம்பசூரன் | தொடக்கத்தில் சுறுசுறுப்புக் காட்டுவோன் . |
| ஆரம்பம் | தொடக்கம் ; முயற்சி ; பாயிரம் ; பெருமிதம் ; பதற்றம் ; கொலை . |
| ஆரம்பவாதம் | முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றுமென்னும் கொள்கை . |
| ஆரம்பித்தல் | தொடங்குதல் ; ஒலித்தல் . |
| ஆரல் | நெருப்பு ; கார்த்திகைமீன் ; ஆரால்மீன் ; மதில் ; சுவர்மேல் மறைக்கப்படும் மறைப்பு ; செவ்வாய் . |
| ஆரவடம் | முத்துவடம் . |
| ஆரவம் | ஒலி ; பகை . |
| ஆரவமர | காண்க : ஆறவமர . |
| ஆரவலர் | காட்டாத்திப்பூ . |
| ஆரவாரம் | பேரொலி ; பகட்டு ; துன்பம் . |
| ஆரவாரித்தல் | மிக்கொலித்தல் . |
| ஆரவை | கொந்தளிப்பு . |
| ஆரற்சுவர் | மேலே மறைப்புடைய சுவர் . |
| ஆராக்கியம் | அரசமரம் . |
| ஆராகரியம் | அரசமரம் . |
| ஆராவரியம் | அரசமரம் . |
| ஆராட்சி | பழைய வரிவகை ; ஆள் நடமாட்டம் . |
| ஆராட்டுதல் | தாலாட்டுதல் . |
| ஆராத்தியர் | வீரசைவப் பார்ப்பனர் . |
| ஆராத்திரியர் | வீரசைவப் பார்ப்பனர் . |
| ஆராத்தொட்டி | மினிக்கி என்னும் மரம் . |
| ஆராதகர் | அருச்சகர் . |
| ஆராதனம் | பூசை ; சித்திக்கை ; உவப்பிக்கை ; சமைக்கை ; பெறுகை ; ஆவேசம் . |
| ஆராதனை | பூசனை ; இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு ; கிறித்தவர் கோயில் வழிபாடு . |
| ஆராதித்தல் | பூசை செய்தல் ; உபசரித்தல் . |
| ஆராதூரி | ஊதாரி ; அழிப்புக்காரன் . |
| ஆராப்பத்தியம் | கடும்பத்தியம் ; அற்பம் . |
| ஆராமம் | உபவனம் ; மலைச்சோலை ; தான்றி . |
| ஆராமை | நிரம்பாமை ; பேரன்பு . |
| ஆராமைசோராமை | தள்ளாமை . |
| ஆராய்ச்சி | ஆய்வு ; பரிசீலனம் ; சோதனை ; தலையாரி . |
| ஆர்பதம் | வண்டு ; உணவு ; நிழல் ; அரத்தை . |
| ஆர்பதன் | உணவு . |
| ஆர்மதி | கற்கடக ராசி ; நண்டு . |
| ஆர்மை | கூர்மை ; மதில் . |
| ஆர்வம் | அன்பு ; விருப்பு ; நெஞ்சு கருதின பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் ; பக்தி ; ஏழு நரகத்துள் ஒன்று . |
| ஆர்வமொழி | உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம் . |
| ஆர்வலன் | அன்புடையவன் ; கணவன் ; பரிசிலன் . |
| ஆர்வலித்தல் | அன்புகூர்தல் . |
| ஆர்வு | நிறைவு ; உண்ணுகை ; ஆசை . |
| ஆர்வை | கோரைப்பாய் . |
| ஆர | ஓர் உவமச்சொல் ; மிக . |
| ஆரக்கம் | செஞ்சந்தனம் ; அகில் . |
| ஆரக்கழுத்தி | கழுத்தில் தீயரேகையுள்ள பெண் . |
| ஆரக்கால் | சக்கரத்தின் ஆரம் . |
| ஆரக்குவதம் | சரக்கொன்றை . |
| ஆரகந்தி | திப்பிலி . |
| ஆரகம் | வகுக்குமெண் ; குருதி . |
| ஆரகன் | அழிப்போன் ; கள்வன் ; கபடன் . |
| ஆரகுடம் | பித்தளை . |
| ஆரகூடம் | பித்தளை . |
| ஆரகோதம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆரசகம் | அகில்மரம் . |
| ஆரங்கம்பாக்கு | பாக்குவகை . |
| ஆரஞ்சு | கிச்சிலி . |
| ஆரண்ணியகம் | வேதத்தின் ஒரு பகுதி . |
| ஆரணங்கு | தெய்வப்பெண் ; பேரழகி . |
| ஆரணத்தான் | வேதங்களை அருளிய பிரமன் . |
| ஆரணம் | காண்க : ஆரண்ணியகம் ; வேதம் . |
| ஆரணவாணன் | அந்தணன் . |
| ஆரணவுருவன் | சிவபெருமான் . |
| ஆரணன் | பிரமன் ; சிவன் ; திருமால் ; பார்ப்பான் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆரோபித்தல் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ஆரோபிதம் | ஏற்றப்பட்டது ; கற்பிக்கப்பட்ட குற்றம் |
| ஆல் | அகற்சட்டி ; மரவகை ; நீர் ; வெள்ளம் ; கார்த்திகை ; நஞ்சு ; ஆமெனல் ; வியப்பு ; இரக்கம் ; தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல் ; ஓர் அசைநிலை ; மூன்றாம் வேற்றுமையுருபு ; தொழிற்பெயர் விகுதி ; எதிர்மறை வியங்கோள் விகுதி ; எதிர்கால வினையெச்ச விகுதி . |
| ஆல்வாட்டுதல் | சிறிது காயச்செய்தல் . |
| ஆலவாட்டுதல் | சிறிது காயச்செய்தல் . |
| ஆல்வு | அகன்றது . |
| ஆலக்கச்சி | அரிதாரம் . |
| ஆலக்கட்டி | துரிசு . |
| ஆலக்கரண்டி | அகன்ற கரண்டி . |
| ஆரிடம் | வழுக்குநிலம் ; முனிவர் சம்பந்தமானது ; ஆவையும் காளையையும் அலங்கரித்து அவற்றிடையே மணமக்களை நிறுத்தி நீர்வார்த்துக் கொடுக்கும் மணம் ; ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம் ; முனிவர் அருளிய நூல் ; ஆகமம் . |
| ஆரிடர் | முனிவர் . |
| ஆரிடலிங்கம் | முனிவர்களால் அமைக்கப்பெற்ற சிவலிங்கம் . |
| ஆரிடை | அரியவழி . |
| ஆரிப்படுகர் | அரிதாய் ஏறி இறங்கும் வழி . |
| ஆரிய | சிறிய ; மேலோரை விளிக்கும் சொல் . |
| ஆரியக்கூத்து | கழைக்கூத்து . |
| ஆரியகுச்சரி | மருத யாழ்த்திறவகை . |
| ஆரியச்சி | ஆரியப்பெண் . |
| ஆரியசத்தை | பௌத்தருக்குரிய மேலான உண்மைகள் . |
| ஆரியத்திரிவு | காண்க : தற்பவம் . |
| ஆரியப்பாவை | பாவைக்கூத்துவகை . |
| ஆரியப் பூமாலை | அடங்காப் பெண் ; காத்தவராயன் மனைவி . |
| ஆரியபூமி | காண்க : ஆரியாவர்த்தம் . |
| ஆரியம் | கேழ்வரகு ; ஆரியாவர்த்தம் ; சமஸ்கிருதம் . |
| ஆரியமொழி | வடமொழி . |
| ஆரியவராடி | ஒரு பண் ; வராடிவகை . |
| ஆரியவாசியம் | காண்க : ஓமம் . |
| ஆரியவேளர் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று . |
| ஆரியவேளார் கொல்லி | செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று . |
| ஆரியன் | ஆரிய வகுப்பினன் ; ஆரியாவர்த்தவாசி ; பெரியோன் ; ஆசாரியன் ; அறிவுடையோன் ; ஆசிரியன் ; ஐயனார் ; மிலேச்சன் ; ஆதித்தன் . |
| ஆரியாங்கனை | இல்லறத்தினின்று துறவுபூண்ட சமணத் தவப்பெண் . |
| ஆரியாவர்த்தம் | இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையே ஆரியர் குடியேறிய இடம் . |
| ஆரியை | பார்வதி ; துர்க்கை ; உயர்ந்தோள் ; ஆசாள் ; வடமொழி யாப்புவகை . |
| ஆரீதம் | பச்சைப் புறா ; கரிக்குருவி ; ஆரீதரால் செய்யப்பட்ட ஸ்மிருதி . |
| ஆருகதம் | சமணமதம் ; நாவல்மரம் . |
| ஆருகதன் | சமணன் . |
| ஆருத்திரை | திருவாதிரை . |
| ஆருப்பியம் | வங்கமணல் . |
| ஆருபதம் | பித்தளை . |
| ஆருயிர் மருந்து | உணவு . |
| ஆருவம் | நீர் . |
| ஆருழலைப்படுதல் | வெப்பத்தால் தகிக்கப்படுதல் ; நீர்வேட்கையால் வருந்துதல் . |
| ஆரூடம் | ஏறியது ; கேட்பானது இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறும் சோதிடம் . |
| ஆரூடன் | ஊர்தி முதலியவற்றில் ஏறினவன் ; சீவன்முத்தன் . |
| ஆரூபம் | ஒவ்வாமை ; நீங்காமை . |
| ஆரூர் | திருவாரூர் . |
| ஆரூர்க்கால் | கருப்பூரவகை . |
| ஆரூரன் | சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ஆரேவதம் | காண்க : சரக்கொன்றை . |
| ஆரை | நீராரை ; காண்க : ஆத்தி ; கோட்டை மதில் ; புற்பாய் ; அச்சுமரம் ; தோல் வெட்டும் உளி ; ஆரக்கால் . |
| ஆரைக்காலி | கோரைவகை . |
| ஆரைக்கீரை | நீராரைக் கீரை . |
| ஆரைபற்றி | உடும்பு . |
| ஆரொட்டி | கூவைக்கிழங்கு . |
| ஆரோக்கியசாலை | மருத்துவவிடுதி ; மருத்துவமனை . |
| ஆரோக்கியம் | நோயின்மை ; நலம் . |
| ஆரோகணம் | ஏறுகை ; கமகம் பத்தனுள் ஒன்று ; கற்படி ; தாழ்வாரம் ; வெளிப்போகை ; முன்வாயில் ; ஏணி . |
| ஆரோகணித்தல் | எழும்புதல் ; ஏறுதல் . |
| ஆரோகம் | வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; ஏறுகை ; உயர்ச்சி ; நீட்சி ; நிதம்பம் ; முளை . |
| ஆரோகி | இசையின் வர்ணபேதங்களுள் ஒன்று . |
| ஆரோசை | ஏற்றிப் பாடும் இசை . |
| ஆரோணம் | மீக்கோள் . |
| ஆரோதமடித்தல் | அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல் |
| ஆரோபணம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ஆரோபம் | ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் . |
| ஆராய்ச்சிமணி | முறை வேண்டுவோர் அசைக்கும்படி அரண்மனை வாயிலில் கட்டப்படும் மணி . |
| ஆராய்ச்சியார் | கணக்குத் தணிக்கையாளர் ; கொலைத்தண்டனை நிறைவேற்றுவோர் ; நீதிமன்றத்தில் நாசர் உத்தியோகம் வகிப்பவர் . |
| ஆராய்ச்சியாளன் | ஏதேனும் ஒரு பொருளைக் கூர்ந்து ஆராய்ப்பவன் . |
| ஆராய்தல் | சோதித்தல் ; சூழ்தல் ; தேடுதல் ; சுருதி சேர்த்தல் . |
| ஆரார் | பகைவர் . |
| ஆரால் | மீன்வகை ; சேற்றாரால் . |
| ஆராவம் | பேரொலி சத்தம் . |
| ஆராவமுதம் | தெவிட்டாத அமிர்தம் . |
| ஆராவமுது | காண்க : ஆராவமுதம் . |
| ஆரி | அருமை ; மேன்மை ; அழகு ; சோழன் ; கதவு ; துர்க்கை ; பார்வதி ; பார்ப்பனி ; தோல்வி . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆலிகை | அகலிகை . |
| ஆலிங்கணம் | தழுவுகை . |
| ஆலிடம் | தெருச்சிறகு . |
| ஆலித்தல் | ஒலித்தல் . |
| ஆலிநாடன் | திருமங்கையாழ்வார் . |
| ஆலிப்பு | ஆரவாரம் . |
| ஆலிம் | அறிந்தவன் . |
| ஆலியதம் | காண்க : சிறுகுறிஞ்சா . |
| ஆல¦டம் | இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை . |
| ஆல¦னகம் | துத்தநாகம் . |
| ஆலுதல் | ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் . |
| ஆலூகம் | காண்க : வில்வம் . |
| ஆலேகனம் | எழுதுதல் ; சித்திரித்தல் . |
| ஆலேகனி | எழுதுகோல் ; எழுத்தாணி . |
| ஆலேபனம் | பூசுகை . |
| ஆலேபூலேயெனல் | பொருளின்றிப் பேசுதற்குறிப்பு . |
| ஆலை | கரும்பாலை ; கரும்பு ; கள் ; கூடம் ; யானைக்கூடம் ; நீராரை ; கருப்பஞ்சாறு ; ஒருவகைக் கிட்டித் தண்டனை . |
| ஆலைக்குழி | கரும்பாலையில் சாறேற்கும் அடிக்கலம் . |
| ஆலைத்தொட்டி | கருப்பஞ்சாறு காய்ச்சும் சால் . |
| ஆலைபாய்தல் | ஆலையாட்டுதல் ; அலைவுறுதல் ; மனஞ் சுழலுதல் . |
| ஆலைமாலை | தொந்தரை ; மயக்கம் . |
| ஆலோகம் | பார்வை ; ஒளி . |
| ஆலக்கொடிச்சி | காண்க : ஆலக்கச்சி . |
| ஆலகண்டன் | கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் . |
| ஆலகம் | காண்க : ஆமலகம் . |
| ஆலகாலம் | பாற்கடலில் தோன்றிய நஞ்சு ; நிலவாகை . |
| ஆலகாலி | காளி . |
| ஆலகிரீடை | காண்க : அலரி . |
| ஆலங்கட்டி | கல்மழை . |
| ஆலாங்கட்டி | கல்மழை . |
| ஆலங்காட்டாண்டி | வரிக்கூத்துவகை . |
| ஆலச்சுவர் | சார்புசுவர் ; ஆள்மட்டச் சுவர் . |
| ஆலசம் | சோம்பு . |
| ஆலசியம் | சோம்பு ; தாமதம் ; கவனக்குறைவு . |
| ஆலத்தி | காண்க : ஆரத்தி . |
| ஆலத்தியெடுத்தல் | ஆலத்தி சுற்றுதல் . |
| ஆலத்திவழித்தல் | ஆலத்தி சுற்றுதல் . |
| ஆலதரன் | நஞ்சைக் கழுத்தில் தாங்கியிருபப்வனான சிவன் . |
| ஆலந்தை | ஒரு சிறுமரம் . |
| ஆலம் | நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு |
| ஆலம்பம் | பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை . |
| ஆலம்பனம் | பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை . |
| ஆலம்பலிகிதம் | எழுத்துக்கூட்டிலக்கணம் . |
| ஆலம்பி | அரிதாரம் . |
| ஆலமர்கடவுள் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் . |
| ஆலமர்செல்வன் | கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் . |
| ஆலமரம் | மரவகை . |
| ஆலமுடையோன் | துரிசு . |
| ஆலமுண்டோன் | பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டவனாகிய சிவன் . |
| ஆலயம் | தேவாலயம் ; தங்குமிடம் ; நகரம் ; யானைக்கூடம் . |
| ஆலயவிஞ்ஞானம் | சாகும்வரை நிற்கும் உணர்ச்சி . |
| ஆவல் | ஒலி ; மயிற்குரல் . |
| ஆலலம் | திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை . |
| ஆலவட்டம் | பெருவிசிறி ; விசிறி . |
| ஆலவன் | ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் . |
| ஆலவாய் | பாம்பு ; மதுரை . |
| ஆலவாலம் | மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் . |
| ஆலவிருட்சம் | ஆலமரம் ; ஆதொண்டை . |
| ஆலா | கடற்கரைப் பறவைவகை . |
| ஆலாகலம் | காண்க : ஆலகாலம் . |
| ஆலாசியம் | மதுரை ; ஆண்முதலை . |
| ஆலாட்டு | சிறிது உலரவைத்தல் . |
| ஆலாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் . |
| ஆலவாட்டுதல் | தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் . |
| ஆலாத்தி | காண்க : ஆலத்தி . |
| ஆலாத்து | கப்பலின் பெருங்கயிறு . |
| ஆலாதாடை | அவுரி . |
| ஆலாப்பறத்தல் | திண்டாடுதல் . |
| ஆலாபம் | உரையாடல் . |
| ஆலாபனம் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை . |
| ஆலாபித்தல் | இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை . |
| ஆலாபினி | சுரபேதம் . |
| ஆலாலம் | துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு . |
| ஆலாவர்த்தம் | காண்க : ஆலவட்டம் . |
| ஆலி | மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆவரணம் | மறைப்பு ; ஆடை ; சட்டை ; கோட்டை ; தடை ; பிராகாரம் ; அணி ; ஆணவமலம் ; கேடகம் ; ஈட்டி |
| ஆவரணமூர்த்தி | கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள் , உட்சுற்று மாளிகைத் தேவதைகள் . |
| ஆவரணி | பார்வதி . |
| ஆவரணீயம் | மறைப்பது . |
| ஆவரி | அம்பு . |
| ஆவரித்தல் | மறைத்தல் . |
| ஆவல் | ஆசை ; வளைவு . |
| ஆவல்லி | சீந்திற்கொடி . |
| ஆவலங்கொட்டுதல் | ஆர்த்து வாய்க்கொட்டுதல் . |
| ஆவலம் | வாயினாலிடும் ஒலி ; கொல்லை ; கூறை ; படைமரம் என்னும் நெசவுக்கருவி . |
| ஆவலர் | உற்றார் ; கணவர் ; காதலர் . |
| ஆவலாதி | குறைகூறுகை ; அவதூறு . |
| ஆவலாதிக்காரன் | போக்கிரி ; குறைகூறுவோன் ; முறையிடுவோன் . |
| ஆவலி | காண்க : ஆவளி . |
| ஆவலித்தல் | அழுதல் ; கொட்டாவிவிடுதல் ; செருக்குதல் . |
| ஆவலிப்பு | செருக்கு . |
| ஆவளி | வரிசை ; மரபுவழி ; உறுதியின்மை ; இரேகை ; வளி என்னும் சிறு காலஅளவு . |
| ஆவளிச்சேவகம் | உறுதியற்ற வேலை . |
| ஆவளித்தல் | ஒழுங்குபடுத்துதல் . |
| ஆவற்காலம் | ஆபத்துண்டாங் காலம் ; இறுதிநாள் . |
| ஆவறியாவறியெனல் | பேராசைக் குறிப்பு . |
| ஆவா | இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு . |
| ஆவாகனம் | அக்கினிக்குப் பலிகொடுத்தல் ; அழைத்தல் ; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை . |
| ஆவாகனமுத்திரை | முத்திரை வகை ; வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு . |
| ஆவாகித்தல் | எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் . |
| ஆவாகை | காண்க : நிலவாகை . |
| ஆவாசம் | நகரம் ; மருதநிலத்தூர் . |
| ஆவாதம் | காண்க : ஆகதம் ; கமகம் பத்தனுள் ஒன்று . |
| ஆவாபம் | விதைப்பு ; பாத்தி ; பானவகை ; பாண்டசுத்தி ; வளையல் . |
| ஆவாபனம் | நூல்சுற்றும் பரிவட்டம் ; நெய்பவர் தறி . |
| ஆவாய்கத்துதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் . |
| ஆவாரம் | மறைப்பு . |
| ஆவாரகம் | மறைப்பு . |
| ஆவாரம்பூச்சம்பா | சம்பாநெல்வகை . |
| ஆவாரைப் பஞ்சகம் | ஆவாரஞ் செடியின் இலை , பூ , வித்து , பட்டை , வேர் என்பன . |
| ஆவாலம் | மரத்தினடியிற் கோலிய பாத்தி ; வௌவால் . |
| ஆவாலை | பாட்டுவகை . |
| ஆவாளஞ்சீவாளம் | காண்க : ஆவச்சீவாளம் . |
| ஆலோகனம் | பார்க்கை . |
| ஆலோசனை | ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ; |
| ஆலோசித்தல் | சிந்தித்தல் ; ஆராய்தல் . |
| ஆலோபம் | வருத்தம் . |
| ஆலோலம் | நீரொலி ; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு ; தடுமாற்றம் . |
| ஆலோலிதமுகம் | ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை . |
| ஆலோன் | சந்திரன் . |
| ஆவ | இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு . |
| ஆவகம் | எழுவகைக் காற்றுகளுள் ஒன்று . |
| ஆவச்சீவாளம் | முழு நிலைமை . |
| ஆவசியகம் | இன்றியமையாதது . |
| ஆவசியம் | இன்றியமையாதது . |
| ஆவஞ்சி | இடக்கை என்னும் தோற்கருவி . |
| ஆவட்டங்கொட்டுதல் | இல்லையென்று சொல்லித் திரிதல் . |
| ஆவட்டைசோவட்டை | சோர்வு . |
| ஆவடதர் | தேவசாதியார்வகை . |
| ஆவணக்களம் | பத்திரப் பதிவுச்சாலை . |
| ஆவணக்களரி | பத்திரப் பதிவுச்சாலை . |
| ஆவணம் | கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் . |
| ஆபணம் | கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் . |
| ஆவணமாக்கள் | உறுதிமொழி வாங்குவோர் . |
| ஆவணி | ஐந்தாம் மாதம் ; காண்க : அவிட்டம் . |
| ஆவணி அவிட்டம் | ஆவணித்திங்கள் அவிட்டவோரையில் பார்ப்பனர் வேதவிதிப்படி பூணூல் அணியும் சடங்கு ; மதுரையில் முற்காலத்து நடந்த ஒரு திருவிழா . |
| ஆவணிமுழக்கம் | ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் . |
| ஆவது | ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் . |
| ஆவதை | திரும்பக் கூறுகை . |
| ஆவநாழி | காண்க : அம்பறாத்தூணி . |
| ஆவநாழிகை | காண்க : அம்பறாத்தூணி . |
| ஆவம் | அம்பறாத்தூணி ; வில்நாண் ; குங்கும மரம் ; சாப்பிரா மரம் ; கபிலப்பொடி . |
| ஆவயின் | அவ்விடத்தில் . |
| ஆவர் | யாவர் . |
| ஆவர்த்தம் | எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை . |
| ஆவர்த்தனம் | மறுமணம் ; காண்க : ஆவர்த்தம் . |
| ஆவர்த்தி | தடவை . |
| ஆவர்த்தித்தல் | முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் . |
| ஆவரணச்சுவர் | கோயில் திருமதில் . |
| ஆவரணசக்தி | மாயை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆவிருத்தியலங்காரம் | பின்வருநிலையணி . |
| ஆவிருதம் | மறைக்கப்பட்டது |
| ஆவிருதி | ஆணவமலம் . |
| ஆவிருந்து | நிகழ்காலம் காட்டும் ஓர் இடைநிலை . |
| ஆவிரை | செடிவகை . |
| ஆவிலம் | கலங்கல் நீர் . |
| ஆவிலியர் | வேளாளர் ; வேடர் . |
| ஆவிவாங்குதல் | உயிர் கவர்தல் ; வருத்துதல் . |
| ஆவிவிடுதல் | சாதல் ; உயிர்விடத் துணிதல் . |
| ஆவினன்குடி | முருகக் கடவுளின் படைவீடுகளுள் ஒன்றான பழனி . |
| ஆவு | காண்க : குன்றி . |
| ஆவுடையார் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் . |
| ஆவுடையாள் | சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் . |
| ஆவுதல் | விரும்புதல் . |
| ஆவுதி | ஆகுதி ; ஓமத்தில் இடப்படும் உணவு . |
| ஆவுரிஞ்சி | காண்க : ஆதீண்டுகுற்றி . |
| ஆவுரிஞ்சுதறி | காண்க : ஆதீண்டுகுற்றி . |
| ஆவெனல் | அழுகைக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு ; வாய்திறத்தற் குறிப்பு . |
| ஆவேகி | காண்க : ஆடுதின்னாப்பாளை . |
| ஆவேசசமவாதம் | காண்க : காபாலமதம் . |
| ஆவேசநீர் | வெறியூட்டும் கள் முதலியன . |
| ஆவேசம் | தெய்வமேறுகை ; பேய் ; கோபம் . |
| ஆவேசவாதி | காபாலிக மதத்தான் ; உணர்ச்சி வயப்பட்டு விவாதிப்பவன் . |
| ஆவேசனம் | உலோகவேலை செய்வோர் வீதி ; பணிக்கூடம் ; புகுகை ; ஆவேசிக்கை . |
| ஆவேசாவதாரம் | ஒரு நிமித்தம்பற்றித் தன் ஆற்றலை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வப் பிறப்பு . |
| ஆவேசி | காண்க : ஆவேகி . |
| ஆவேசித்தல் | உட்புகுதல் ; தெய்வமேறுதல் |
| ஆவேதனம் | அறிக்கை . |
| ஆவேலம் | தம்பலம் . |
| ஆவேலி | தொழுவம் . |
| ஆவேறு | காளை , இடபம் . |
| ஆவோ | வியப்பு இரக்கச் சொல் . |
| ஆழ்கடற்றுயின்றோன் | திருமால் . |
| ஆழ்த்துதல் | அமிழ்த்துதல் . |
| ஆழ்தல் | மூழ்குதல் ; அழுந்துதல் ; விழுதல் ; பதிதல் ; சோம்புதல் ; ஆழமாதல் ; வருந்துதல் ; அகழ்தல் . |
| ஆழ்வள்ளி | மரவள்ளி , கிழங்குவகை . |
| ஆழ்வார் | பகவத் குணங்களில் ஆழந்து ஈடுபடுவோர் ; திருமாலடியார் பன்னிருவர் ; சமண பௌத்தப் பெரியோர் ; சுவாமி . |
| ஆழ்வார்கன்மி | திருமால்கோயில் அருச்சகன் . |
| ஆழ்வார்திருநாள் | திருநாள் தொடக்கத்துக்கு முன் நடைபெறும் ஆழவார் திருவிழா . |
| ஆழ்வான் | சூரியன் . |
| ஆழ்வி | தலைவன் ; தலைவி . |
| ஆழ்வு | ஆழம் . |
| ஆழங்கால் | பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை ; அதிக ஆழமில்லாத நீர்நிலை . |
| ஆழங்காற்படுதல் | அழுந்துதல் ; ஈடுபடுதல் . |
| ஆழம் | ஆழந்திருக்கை ; ஆழந்த கருத்து . |
| ஆழம்பார்த்தல் | ஆழத்தை அளந்தறிதல் ; ஒருவன் அறிவு முதலியவற்றைச் சோதித்தல் . |
| ஆழமுடைத்தாதல் | நுண்பொருள் பொதிந்திருத்தல் ; நூலழகுகளுள் ஒன்று . |
| ஆழரம் | அத்தி . |
| ஆழல் | காண்க : கறையான் . |
| ஆழாக்கு | அரைக்காற்படி . |
| ஆழாங்கு | காண்க : ஆழங்கால் . |
| ஆழாடக்கிடங்கு | தண்ணீர்விட்டான் கிழங்கு . |
| ஆவி | உயிர்ப்பு ; நெட்டுயிர்ப்பு ; கொட்டாவி ; ஆன்மா ; மணம் ; வலிமை ; உயிரெழுத்து ; நீராவி ; பிட்டு ; புகை ; புகையிலை ; நறுமணம் ; பரிசுத்த ஆவி ; நீர்நிலை ; வேளிர் தலைவருள் ஒருவன் . |
| ஆவிகம் | ஆட்டுமயிர்க் கம்பளம் . |
| ஆவிகாட்டுதல் | நிவேதனஞ் செய்தல் . |
| ஆவிகை | பற்றுக்கோடு . |
| ஆவிடை | காண்க : ஆவுடையார் . |
| ஆவிடையார் | காண்க : ஆவுடையார் . |
| ஆவித்தல் | வாய்விடுதல் ; பெருமூச்சு விடுதல் ; கொட்டாவி விடுதல் ; வெளிவிடுதல் . |
| ஆவித்தைலம் | நீராவியால் வடிக்கும் தைலம் . |
| ஆவிதம் | காண்க : மரை ; திருகூசி . |
| ஆவிநீர் | நீராவி குளிர்தலால் உண்டாகும் நீர் . |
| ஆவிபத்தம் | பேராமுட்டிப் பூண்டு . |
| ஆவிபதம் | பேராமுட்டிப் பூண்டு . |
| ஆவிபத்திரம் | புகையிலை . |
| ஆவிபறிதல் | நீராவி எழும்புதல் ; மரித்தல் |
| ஆவிபிடித்தல் | நீராவியால் வேது கொள்ளுதல் . |
| ஆவிமா | மரவகை . |
| ஆவியர் | வேளாவியின் மரபினர் ; வேளாளர் ; வேடர் . |
| ஆவிர்தம் | சுழற்சி . |
| ஆவிர்ப்பவித்தல் | வெளிப்படுதல் . |
| ஆவிர்ப்பாவம் | வெளிப்படுகை . |
| ஆவிர்ப்பூதம் | தோன்றியது ; வெளிப்பட்டது . |
| ஆவிரம் | இடையரூர் ; நரகவகை . |
| ஆவிருத்தி | தடவை ; திரும்பத் திரும்ப ஓதுகை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆளொட்டி | காவற்கட்டு . |
| ஆளொதுங்கி | காவற்கட்டு . |
| ஆளோட்டி | வேலை வாங்குவோன் . |
| ஆளோடி | வீட்டின் முன்புறத்தில் கட்டப்பட்ட தளவரிசை இட்ட தரை ; தடாகத்தில் ஆள்கள் நடப்பதற்குக் கட்டிய வழி . |
| ஆழித்தொட்டான் | ஏனாதி மோதிரம் தரித்த படைத்தலைவன் . |
| ஆழிமால்வரை | சக்கரவாளகிரி . |
| ஆழிமுரசோன் | கடலை முரசாகவுடைய மன்மதன் . |
| ஆழிமூழையாய் | மிக விரைவாய் . |
| ஆழியான் | திருமால் ; அரசன் . |
| ஆழியிழைத்தல் | கூடலிழைத்தல் , வட்டமாக இடப்படும் விரற்குறி . |
| ஆழிவலியான்மணி | மிளகு . |
| ஆழிவித்து | முத்து . |
| ஆழிவிரல் | மோதிரவிரல் . |
| ஆழும்பாழுமாய் | சீர்கேடாய் ; வீணாக . |
| ஆள் | ஆண்மகன் ; திறமையுடையோன் ; வீரன் ; காலாள் ; கணவன் ; தொண்டன் ; ஆட்செய்கை ; வளர்ந்த ஆள் ; ஆள்மட்டம் ; அரசு ; தொட்டால் வாடி ; பெண்பாற் பெயர் விகுதி ; பெண்பால் வினைமுற்று விகுதி . |
| ஆள்காட்டிவேலை | ஏமாற்று வேலை . |
| ஆள்கை | ஆளுதல் . |
| ஆள்திட்டம் | ஓர் ஆளுக்குரிய அளவு ; ஓர் ஆளின் உடலடையாளம் . |
| ஆள்மட்டச்சுவர் | கைப்பிடிச் சுவர் ; மதிற்சுவர் . |
| ஆள்மட்டம் | ஒரு மனிதனின் உயரவளவு . |
| ஆள்மாகாணம் | ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம் ; மக்கட்கட்டு . |
| ஆள்மாறாட்டம் | வேற்றாளாகத் தன்னைக் காட்டி வஞ்சிக்கை . |
| ஆள்வணங்கி | அரசமரம் ; காண்க : தொட்டாற் சுருங்கி ; கல்லித்தி ; மாமரம் ; ஆத்தி . |
| ஆள்வரி | தலைவரி . |
| ஆள்வார் | சுவாமி . |
| ஆள்வாரம் | பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு . |
| ஆள்வாரி | காண்க : ஆளோடி ; குளத்து மதிலின் உட்புறமாகவுள்ள மக்கள் நடமாடும் வழி . |
| ஆள்வாரிநிலம் | கோட்டை உள்மதிற்புறமாக ஆள்கள் சுற்றிவருதற்குச் செய்த வழி . |
| ஆள்வாரில்லா மாடு | பட்டிமாடு . |
| ஆள்வாரிலி மாடு | பட்டிமாடு . |
| ஆள்விடுதல் | தூதனுப்புதல் . |
| ஆள்வினை | முயற்சி ; மகிழ்ச்சி . |
| ஆள்வினை வேள்வி | விருந்து புறந்தருகை . |
| ஆள்வீதம் | ஒவ்வோர் ஆளுக்குங் கொடுக்கும் அளவு ; ஆள் விழுக்காடு . |
| ஆளகம் | சுரைக்கொடி . |
| ஆளடிமை | அடியான்(ள்) . |
| ஆளத்தி | ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை . |
| ஆளம் | ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை . |
| ஆளமஞ்சி | கூலியின்றி வாங்கும் வேலை . |
| ஆளரவம் | மனித நடமாட்டத்தால் உண்டாகுஞ் சந்தடி . |
| ஆளரி | ஆண் சிங்கம் ; நரசிங்கமூர்த்தி . |
| ஆளல் | ஆளுதல் ; மீன்வகை . |
| ஆளறுதி | தனிமை . |
| ஆளன் | ஆளுபவன் ; கணவன் ; அடிமை ; ஊரில் பரம்பரையாகப் பாகவுரிமை உள்ளவன் . |
| ஆளாதல் | அடிமையாதல் ; பூப்படைதல் ; பெருமையடைதல் . |
| ஆளாபம் | காண்க : ஆலாபனம் . |
| ஆளாழம் | ஒரு முழு மனிதனின் அளவுள்ள ஆழம் . |
| ஆளானம் | யானை கட்டுந் தறி . |
| ஆளி | ஆள்வோன் ; செடிவகை ; கிளிஞ்சில் வகை ; யானையாளி ; சிங்கம் ; கீரைவகை ; சிறுமூட்டை ; வழுக்கல் ; வைப்பகம் ; தூய்மையான கருத்து ; பாங்கி ; பாலம் ; பயனின்மை ; ஒழுங்கு . |
| ஆளிட்டான் காசு | பழைய நாணயவகை . |
| ஆளிடுதல் | பதிலாளை அமர்த்துதல் . |
| ஆளியூர்தி | துர்க்கை . |
| ஆளிவிதை | சிறு சணல்வித்து . |
| ஆளிவிரை | சிறு சணல்வித்து . |
| ஆளுகை | ஆட்சி ; ஆளுதல் . |
| ஆளுங்கணத்தார் | ஊர்ச்சபை அதகாரிகள் . |
| ஆளுங்கணம் | ஊரையாளும் சபை . |
| ஆளுடையதேவர் | திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் . |
| ஆளுடைய நம்பி | சுந்தரமூர்த்தி நாயனார் . |
| ஆளுடைய பிள்ளையார் | திருஞானசம்பந்தர் . |
| ஆளுடையவரசு | திருநாவுக்கரசு நாயனார் . |
| ஆளுடையான் | அடிமை கொண்டவன் ; ஆளுதலையுடையான் ; சுவாமி . |
| ஆளெழுத்துச் சேலை | சித்திரம் எழுதிய சேலை வகை . |
| ஆளெனல் | நாயின் கதறல் குறிப்பு . |
| ஆளை | காண்க : அறுகு . |
| ஆளையடிச்சான் | புளியமரம் . |
| ஆழாத்தல் | ஈடுபடுதல் . |
| ஆழாரம் | பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி . |
| ஆழி | சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கட்டளை ; வட்டம் ; மோதிரம் ; சக்கரம் ; குயவன் திகிரி ; யானைக் கைந்நுனி ; கடல் ; கடற்கரை ; காண்க : ஆளி ; குன்றி ; கணவனைப் பிரிந்த மகளிர் இழைக்கும் கூடற்சுழி . |
| ஆழிக்கொடி | பவளம் . |
| ஆழிக்கடல்விழுது | கடலின் பேராழத்தை அறிய உதவும் கயிறு . |
| ஆழித்தல் | ஆழமாய்த் தோண்டுதல் . |
| ஆழித்தீ | வடவையனல் . |
| ஆழித்தேர் | சக்கரப்படை வடிவான திருவாரூர்த் தேர் . |
| ஆழிதிருத்துதல் | கூடலிழைத்தல் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆற்றுப்பித்தல் | ஆற்றோரம் . |
| ஆற்றுப்புரவு | ஆறறுநீரால் பயிரிடப்படும் நிலம் . |
| ஆற்றுப்பூத்தான் | காண்க : பூனைக்காலி . |
| ஆற்றுப்பூவரசு | மரவகை . |
| ஆற்றுப்பொடி | ஆற்றிலுள்ள சிறுமீன் . |
| ஆற்றுமரி | நீருமரிச்செடி ; காண்க : ஆற்றுக்கொடி . |
| ஆற்றுமல்லிகை | நீர்ப்பூடுவகை . |
| ஆற்றுமுள்ளங்கி | முள்ளங்கிவகை . |
| ஆற்றுமுள்ளி | காண்க : கண்டங்கத்தரி : கழுதை முள்ளி . |
| ஆற்றுமேலழகி | பூடுவகை . |
| ஆற்றுல்லம் | உல்ல மீன்வகை . |
| ஆற்றுவரி | ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடும் ஒருவகை வரிப்பாடல் . |
| ஆற்றுவாய்முகம் | ஆறு கடலொடு கலக்குமிடம் . |
| ஆற்றுவாளை | ஏரி வாளைமீன் . |
| ஆற்றுவைப்பு | ஆற்றின் ஒதுக்கத்தால் பயிரிடத்தகுதியாகும் நிலம் . |
| ஆற்றொழுக்கு | ஆற்றின் நீரோட்டம் ; இடையறவுபடாத நடை ; சூத்திர நிலையுள் ஒன்று . |
| ஆறக்கட்டுதல் | பேய்க்கோளை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தல் . |
| ஆறகோரம் | கொன்றை . |
| ஆறங்கம் | வேதாங்கம் ஆறு ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் என்பன ; அரசர்க்குரிய படை , குடி , கூழ் , அமைச்சு , நட்பு , அரண் என்னும் ஆறுறுப்பு . |
| ஆறத்தணிய | காண்க : ஆறவமர . |
| ஆறதீகம் | கல்நார் . |
| ஆறப்போடுதல் | காலந்தாழ்த்தல் . |
| ஆறல்பீறல் | பயனற்றது . |
| ஆறலை | வழிப்பறி . |
| ஆறலைத்தல் | வழிப்பறி செய்தல் . |
| ஆளோலை | அடிமைப்பத்திரம் . |
| ஆற்கந்திதம் | குதிரை நடைவகை . |
| ஆற்பணம் | விருப்பம் ; உரியதாகக் கொடுத்தல் . |
| ஆற்பதம் | பற்றுக்கோடு . |
| ஆற்பனேபதம் | வடமொழி வினைவகை . |
| ஆற்போடம் | காக்கணம் . |
| ஆற்போதம் | எருக்கு ; விஷ்ணுகிராந்தி ; காட்டு மல்லிகை . |
| ஆற்ற | மிக ; முற்ற . |
| ஆற்றங்கரைத்தேவை | வரிவகை . |
| ஆற்றங்கால் | காண்க : காட்டுப்பூவரசு . |
| ஆற்றடம்பு | அடம்புவகை . |
| ஆற்றமாட்டாமை | முடியாமை ; தாங்க முடியாமை . |
| ஆற்றரசு | காண்க : ஆற்றுப்பூவரசு . |
| ஆற்றல் | சக்தி ; முயற்சி ; மிகுதி ; கடைப்பிடி ; பொறை ; ஆண்மை ; வெற்றி ; வாய்மை ; அறிவு ; இன்னசொல் இன்னபொருள் உணர்த்தும் என்னும் நியதி ; சாகசம் . |
| ஆற்றலரி | காண்க : கோடைச்சவுக்கு ; பூடுவகை ; முதலைப் பூண்டு ; காண்க : சேங்கொட்டை மரம் . |
| ஆற்றறுத்தல் | இடையிற் கைவிடுதல் ; வலியழித்தல் . |
| ஆற்றாச்சண்டி | வறுமையால் விடாது பிச்சை கேட்பவன் . |
| ஆற்றாமை | தாங்கமுடியாமை ; தளர்ச்சி ; மாட்டாமை ; கவலை . |
| ஆற்றான் | வலிமையற்றவன் ; வறிஞன் . |
| ஆற்றிக்கொடுத்தல் | சூட்டைக் குறைத்துக் கொடுத்தல் ; துணையாக உதவுதல் . |
| ஆற்றிடைக்குறை | ஆற்றினிடையேயுள்ள திட்டு . |
| ஆற்றித்தேற்றுதல் | சமாதானப்படுத்துதல் . |
| ஆற்றிலுப்பை | மரவகை . |
| ஆற்றிறால் | இறால் மீன்வகை . |
| ஆற்றின்வித்து | கற்பூர சிலாசத்து . |
| ஆற்றுக்கால் | ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய் . |
| ஆற்றுக்காலாட்டியார் | மருதநிலப் பெண்டிர் . |
| ஆற்றுக்காலேரி | ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி . |
| ஆற்றுக்கால் பாய்ச்சல் | ஆற்றிலிருந்து வரும் நீர்ப்பாய்ச்சல் . |
| ஆற்றுக்குலை | ஆற்றின் கரை ; வரிவகை . |
| ஆற்றுக்கெண்டை | ஒருவகைச் சிறுமீன் . |
| ஆற்றுக்கொடி | பேய்க்கொம்மட்டி . |
| ஆற்றுச்சஞ்சலை | காண்க : மலைவட்டை . |
| ஆற்றுச்சவுக்கு | காண்க : கோடைச்சவுக்கு ; செடிவகை . |
| ஆற்றுச்செருப்படி | பூடுவகை . |
| ஆற்றுணா | கட்டுச்சோறு ; வழியுணவு . |
| ஆற்றுத்தும்மட்டி | காண்க : ஆற்றுக்கொடி . |
| ஆற்றுத்துவரை | செடிவகை . |
| ஆற்றுதல் | வலியடைதல் ; கூடியதாதல் ; போதியதாதல் ; உய்தல் ; உவமையாதல் ; செய்தல் ; தேடுதல் ; உதவுதல் ; நடத்துதல் ; கூட்டுதல் ; சுமத்தல் ; பசி முதலியன தணித்தல் ; துன்பம் முதலியன தணித்தல் ; சூடு தணித்தல் ; ஈரமுலர்த்துதல் ; நூல் முறுக்காற்றுதல் ; நீக்குதல் . |
| ஆற்றுநீர் | செயல்புரிபவர் ; உதவி செய்வார் ; வன்மையுடையார் . |
| ஆற்றுநெட்டி | காண்க : நீர்ச்சுண்டி . |
| ஆற்றுப்பச்சை | நாகப்பச்சைக்கல் . |
| ஆற்றுப்படுகை | ஆற்றினுள் கரைசார்ந்த நிலப்பகுதி ; ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம் . |
| ஆற்றுப்படுத்தல் | வழிச்செலுத்துதல் ; போக்குதல் . |
| ஆற்றுப்படை | பரிசில் பெற்றான் ஒருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடப்படும நூல்வகை . |
| ஆற்றுப்பாசி | நீர்ப்பூடுவகை . |
| ஆற்றுப்பாட்டம் | வரிவகை . |
| ஆற்றுப்பாய்ச்சல் | காண்க : ஆற்றுக்கால் பாய்ச்சல் . |
| ஆற்றுப்பாய்ச்சி | ஆற்றில் கப்பல் செலுத்துவோன் . |
| ஆற்றுப்பாலை | மரவகை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆன் | பெற்றம் , எருமை , மரை இவற்றின் பெண் ; காளை ; அவ்விடம் ; மூன்றனுருபு ; ஆண்பாற் பெயர் வினைகளின் விகுதி ஒரு சாரியை . |
| ஆன்காவலன் | வைசியன் . |
| ஆன்பொருந்தம் | ஆன்பொருநை ஆறு , தாமிரபரணியாறு . |
| ஆன்மசுத்தி | பத்துச் செயலுள் ஒன்று ; ஐந்து சுத்தியுள் ஒன்று ; தாந்திரிக பஞ்ச சுத்தியுள் ஒன்று . |
| ஆன்மஞானம் | ஆன்மாவைப் பற்றிய அறிவு : ஆன்மாவின் அறிவு . |
| ஆன்மதத்துவம் | காண்க : அசுத்ததத்துவம் . |
| ஆன்மதரிசனம் | தன்னையுணரும் அறிவு ; பத்துச் செயலுள் ஒன்று |
| ஆன்மபூ | மன்மதன் ; பிரமன் . |
| ஆன்மபோதம் | உயிருணர்வு . |
| ஆன்மமந்திரம் | காண்க : அசபா . |
| ஆன்மயோனி | காண்க : ஆன்மபூ . |
| ஆன்மரூபம் | பத்துச் செயலுள் ஒன்று . |
| ஆன்மலாபம் | ஆத்மாவின் பேறு . |
| ஆன்மவீரன் | விறலோன் : மைத்துனன் : புதல்வன் : கற்றோன் . |
| ஆன்மா | உயிர் ; முயற்சி ; ஊக்கம் ; மணம் ; அறிவு ; உடல் ; பரமான்மா ; வாயு ; இயல்பு ; சூரியன் : நெருப்பு . |
| ஆன்மாச்சிரயம் | தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம் . |
| ஆன்மாதீனன் | ஆன்மவீரன் : பிராணாதாரன் . |
| ஆன்மார்த்தபூசை | தன் மனமொன்றிய வழிபாடு . |
| ஆன்மார்த்தம் | தற்பொருட்டு . |
| ஆன்மெழுக்கு | பசுவின் சாணம் . |
| ஆன்வல்லவர் | முல்லைநில மாக்கள் . |
| ஆன்வல்லோர் | முல்லைநில மாக்கள் . |
| ஆன்ற | மாட்சிமைப்பட்ட ; பரந்த ; அடங்கிய ; இல்லாமற்போன . |
| ஆன்றமைதல் | அடங்கியமைதல் . |
| ஆன்றல் | அகலம் : நீங்கல் : மாட்சிமை : மிகுதி . |
| ஆன்றவர் | அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் . |
| ஆன்றார் | அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் . |
| ஆன்றோர் | அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் . |
| ஆன்று | நிறைந்து : விரிந்து ; நீங்கி . |
| ஆன்றோள் | மாண்புடையாள் . |
| ஆன்னிகம் | நாட்கடன் . |
| ஆன | அந்த ; ஆகிய . |
| ஆனகதுந்துபி | முரசுவகை ; வாசுதேவர் . |
| ஆனகம் | படகம் ; துந்துபி ; தேவதாரு ; சுரை ; கற்பகம் ; மேகமுழக்கம் . |
| ஆனஞ்சு | பஞ்சகவ்வியம் ; பசுவின் பால் ; தயிர் ; நெய் ; சிறுநீர் , சாணம் சேர்ந்த கலவை . |
| ஆனத்தவாயு | வாதநோய்வகை . |
| ஆனத்தேர் | விடத்தேர்ச்செடி . |
| ஆனதம் | சமணரது கற்பலோகங்களுள் ஒன்று . |
| ஆனது | எழுவாய்ச் சொல்லுருபு . |
| ஆனதும்பி | மீன்வகை . |
| ஆனந்த | அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தெட்டாம் ஆண்டு . |
| ஆனந்தக்கண்ணீர் | மகிழ்ச்சி மிகுதியால் வரும் கண்ணீர் . |
| ஆனந்தக்கரப்பான் | ஒருவகைப் கரப்பான் நோய் . |
| ஆனந்தகரந்தம் | மருக்கொழுந்து . |
| ஆனந்தகரம் | மகிழ்ச்சி தருவது . |
| ஆறவமர | அமைதியாய் , நிதானமாக . |
| ஆறவிடுதல் | காணக : ஆறப்போடுதல் |
| ஆறறிவுயிர் | ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள் . |
| ஆறன்மட்டம் | தாளவகை . |
| ஆறாட்டம் | நோயுற்றோர் படும் துயரம் . |
| ஆறாட்டு | தீர்த்தவாரித் திருவிழா . |
| ஆறாடி | நிலைகெட்டவன் . |
| ஆறாடுதல் | தீர்த்தவாரி மூழ்குதல் . |
| ஆறாதாரம் | உடம்பினுள் தத்துவவழி கூறும் ஆறிடம் ; மூலாதாரம் ; சுவாதித்திட்டானம் ; மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை . |
| ஆறாதூறு | காண்க : அவதூறு . |
| ஆறாமீன் | கார்த்திகை . |
| ஆறாமீனறவோட்டு | கார்த்திகையில் சூரியன் புகும் காலம் . |
| ஆறாயிரப்படி | ஆறாயிரம் கிரந்தம் கொண்ட உரைநூல் ; திருவாய்மொழி விரிவுரைகளுள் முந்தியது . |
| ஆறாரைச்சக்கரம் | மிறைக்கவியுள் ஒன்று . |
| ஆறியகற்பு | அறக்கற்பு . |
| ஆறிலொன்று | அரசனுக்குரிய ஆறிலொரு பாகம் . |
| ஆறு | நதி ; வழி ; பக்கம் ; சமயம் ; அறம் ; சூழச்சி ; விதம் ; இயல்பு ; ஓர் எண்ணிக்கை ; தலைக்கடை . |
| ஆறுகட்டி | ஆறு பற்களுக்குமேல் முளையாத மாடு ; சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம் . |
| ஆறுகட்டுதல் | ஆற்றில் அணை கட்டுதல் ; ஆற்றிற்குக் கரையிடுதல் . |
| ஆறுகாட்டி | வழிகாட்டி . |
| ஆறுசூடி | கங்கையைத் தலையில் அணிந்துள்ள சிவன் . |
| ஆறுதல் | தணிதல் ; சூடு தணிதல் ; அமைதியாதல் ; புண் காய்தல் ; அடங்குதல் ; மனவமைதி . |
| ஆறுபரியான் | இராகு ; கேது . |
| ஆறுமணிப்பூ | மாலையில் மலரும் மலைப்பூ வகை . |
| ஆறுமாசக் கடன்காரன் | ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் . |
| ஆறுமாசமூட்டைக்காரன் | ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் . |
| ஆறுமாதக்காடி | மிகப் புளிக்க வைத்த காடி மருந்து . |
| ஆறெழுத்து | ஆறெழுத்து மந்திரம் ; 'நமக்குமாராய' என்னும் முருகக் கடவுள் மந்திரம் . |
| ஆறெறிபறை | வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை . |
| ஆறை | ஆற்றூர் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆனந்தரியம் | இவை ஆராய்ந்தபின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு . |
| ஆனந்தவருவி | இன்பத்தால் வரும் கண்ணீர்ப் பெருக்கு . |
| ஆனந்தவல்லி | பார்வதி ; தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம் . |
| ஆனந்தவுவமை | மிகவும் இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம் . |
| ஆனந்தவோமம் | ஒருவர் இறந்த பத்தாம் நாளில் தீட்டுக் கழியச் செய்யும் சடங்கு . |
| ஆனந்தன் | சிவன் ; அருகன் . |
| ஆனந்தான்மவாதி | ஆன்மா ஆனந்தமடைவதே வீடுபேறென்று வாதிப்பவன் . |
| ஆனந்தி | பார்வதி ; தாமிரபரணியாறு ; மகிழ்ச்சியுடையவன் ; அரத்தை . |
| ஆனந்தித்தல் | மகிழ்வடைதல் . |
| ஆனந்தை | உமாதேவி ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; காண்க : கொட்டைக்கரந்தை . |
| ஆனம் | எழுத்துச்சாரியை ; கள் ; தெப்பம் ; மரக்கலம் . |
| ஆனமட்டும் | கூடியவரை . |
| ஆனயம் | கொண்டுவருகை ; பூணூல்சடங்கு . |
| ஆனயனம் | கொண்டுவருகை ; பூணூல்சடங்கு . |
| ஆனர்த்தகம் | போர் ; நாடகசாலை ; ஒரு நாடு . |
| ஆனவர் | இடையர் . |
| ஆனவன் | நண்பன் ; எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு . |
| ஆனவாள் | கோயிற் காரியங்களை நடத்தி வைக்கும் அரசாங்க அலுவலன் . |
| ஆனனம் | முகம் . |
| ஆனா | நீங்காத ; கெடாத ; அடங்காத ; அளவு கடந்த ; மஞ்சள்நாறி . |
| ஆனாகம் | நீட்சி ; வயிற்றுப்பொருமல் நோய் . |
| ஆனாங்குருவி | குருவிவகை . |
| ஆனாமை | நீங்காமை ; தணியாமை ; கெடாமை ; உத்தராடம் . |
| ஆனாயகலை | கண்ணறைத்தசை . |
| ஆனாயம் | வாயுக்கண்ணறை . |
| ஆனாயன் | மாட்டிடையன் . |
| ஆனால் | ஆயின் ; ஆகையால் . |
| ஆனாலும் | ஆயினும் . |
| ஆனி | மூன்றாம் மாதம் ; காண்க : மூலம் ; உத்தராடம் ; ஆன்பொருநை ; கேடு ; இந்துப்பு . |
| ஆனிக்கருந்தலை | ஆனிமாதக் கடைசி . |
| ஆனித்தூக்கம் | ஆனிமாதத்தில் கடலின் அமைதி . |
| ஆனியம் | நாள் ; நட்சத்திரம் ; பருவம் ; பொழுது ; நாட்படி ; கருஞ்சீரகம் . |
| ஆனிரை | பசுக்கூட்டம் . |
| ஆனிலன் | வாயு புதல்வனாகிய அனுமான் ; பீமன் . |
| ஆனிலை | பசுக்கொட்டில் ; கருவூர்ச் சிவாலயம் . |
| ஆனிலையுலகம் | காண்க : ஆனுலகு . |
| ஆனீர் | கோமூத்திரம் . |
| ஆனுகூலியம் | அனுகூலமுடைமை . |
| ஆனுதல் | நீங்குதல் . |
| ஆனும் | ஆயினும் ; ஆவது . |
| ஆனுலகு | கோலோகம் . |
| ஆனெய் | பசுவின் நெய் . |
| ஆனேறு | எருது . |
| ஆனை | யானை ; காண்க : அத்தி : ஆத்தி . |
| ஆனைக்கசடன் | நெல்வகை . |
| ஆனைக்கண் | அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி . |
| ஆனைக்கரடு | ஆனையறுகு படர்ந்த கரட்டு நிலம் . |
| ஆனைக்கள்ளிமுளையான் | பூடுவகை . |
| ஆனைக்கற்றலை | கடல்மீன்வகை . |
| ஆனைக்கற்றாழை | ஒருவகை நீண்ட கற்றாழை . |
| ஆனைக்காசு | நாணயவகை . |
| ஆனைக்காயம் | காண்க : ஆனைப்பெருங்காயம் . |
| ஆனைக்காரன் | யானைப்பாகன் . |
| ஆனைக்காரை | காண்க : ஒதிமரம் . |
| ஆனைக்கால் | பெருங்கால் ; பெரிய நீர்த்தூம்பு . |
| ஆனைக்குப்பு | சதுரங்க விளையாட்டு . |
| ஆனைக்குரு | மரவகை . |
| ஆனைக்குருகு | அன்றில் . |
| ஆனைக்குழி | யானை பிடிக்குமிடம் . |
| ஆனைக்குன்றிமணி | காண்க : மஞ்சாடிமரம் . |
| ஆனந்தக்களிப்பு | பெருமகிழச்சி ; மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாடல் . |
| ஆனந்தகானம் | காசி . |
| ஆனந்தகுறுவை | நெல்வகை . |
| ஆனந்ததாண்டவம் | நடராசர் புரியும் நடனம் . |
| ஆனந்ததீர்த்தர் | மத்துவாசாரியார் . |
| ஆனந்தநித்திரை | யோகநித்திரை . |
| ஆனந்தநிருத்தம் | காண்க : ஆனந்ததாண்டவம் . |
| ஆனந்தப்பையுள் | கணவன் இறப்ப மனைவி வருந்தும் புறத்துறை . |
| ஆனந்தபரவசம் | மகிழ்ச்சியால் தன்னை மறக்கை . |
| ஆனந்தபைரவம் | சிந்தூரவகை . |
| ஆனந்தபைரவி | ஒரு பண் . |
| ஆனந்தம் | பேரின்பம் ; சாக்காடு ; பாக் குற்றங்களுள் ஒருவகை ; அரத்தை . |
| ஆனந்தமயகோசம் | உயிருக்குள்ளே ஐந்து உறையுளுள் ஒன்று . |
| ஆனந்தமயம் | இன்பம் நிறைந்தது ; காண்க : ஆனந்தமயகோசம் . |
| ஆனந்தமூலி | கஞ்சா . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
| ஆனைச்சிலந்தி | புண்கட்டி வகை . |
| ஆனைச்சீரகம் | காண்க : பெருஞ்சீரகம் . |
| ஆனைச்சுண்டை | மலைச்சுண்டை என்னும் சுண்டைவகை . |
| ஆனைச்செவியடி | பூடுவகை . |
| ஆனைச்சேவகன் | யானை வீரன் ; யானைப் படைத் தலைவன் . |
| ஆனைச்சொறி | பெருஞ்சொறிசிரங்கு . |
| ஆனைசேனை | மிகுதி . |
| ஆனைத்தடிச்சல் | படர்கொடிவகை ; காண்க : புளிநறளை . |
| ஆனைத்தடிப்பு | ஒரு பூடு . |
| ஆனைத்தாள் | மதகு . |
| ஆனைத்திசை | வடதிசை . |
| ஆனைத்திப்பிலி | கொடிவகை . |
| ஆனைத்தீ | பெரும்பசியை விளைப்பதொரு நோய் . |
| ஆனைத்தீநோய் | பெரும்பசியை விளைப்பதொரு நோய் . |
| ஆனைத்தும்பிக்கை | துதிக்கை ; காண்க : ஆனைத்தூம்பு . |
| ஆனைத்தும்பை | பெருந்தும்பை . |
| ஆனைத்தூம்பு | யானை வடிவாயமைந்த நீர் விழுங் குழாய் . |
| ஆனைத்தெல்லு | படர்கொடி வகை ; |
| ஆனைத்தேர் | விடத்தேர் . |
| ஆனைத்தொழில் | பெருஞ்செயல் . |
| ஆனைத்தோட்டி | அங்குசம் . |
| ஆனைந்து | காண்க : ஆனஞ்சு . |
| ஆனைநார் | மரவகை . |
| ஆனைநெருஞ்சி | பெருநெருஞ்சி . |
| ஆனைப்படுவன் | வெப்புநோய்வகை . |
| ஆனைப்பார்வை | கீழ்நோக்கிய பார்வை . |
| ஆனைப்பிச்சான் | ஒரு பூடு . |
| ஆனைப்புல் | காண்க : ஆனைக்கோரை . |
| ஆனைப்புளி | பப்பரப்புளி . |
| ஆனைப்பெருங்காயம் | ஒருவகைப் பெருங்காயக் கலவை . |
| ஆனைப்பேன் | கத்தரிச் செடியில் உண்டாகும் ஒருவகைப் பூச்சி . |
| ஆனைமஞ்சள் | ஒரு பூடு . |
| ஆனைமயிர்க்காப்பு | யானையின் வால்மயிரால் செய்தணியும் காப்பு . |
| ஆனைமீக்குவம் | கருமருது . |
| ஆனைமீன் | பெருமீன்வகை . |
| ஆனைமுகன் | விநாயகன் ; ஓர் அசுரன் . |
| ஆனையச்சு | ஒருவகைப் பொற்காசு . |
| ஆனையடி | சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் கதி . |
| ஆனையடிச் செங்கல் | வட்டமான செங்கல் . |
| ஆனையடியப்பளம் | கலியாணத்தில் பயன்படுத்தப்படும் பெரிய அப்பளம் . |
| ஆனையர்க்குளா | கடல்மீன்வகை . |
| ஆனையரசாணி | மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய உருவங்கள் . |
| ஆனையறுகு | அறுகுவகை . |
| ஆனையறையும் புள் | காண்க : ஆனையிறாஞ்சிப்புள் . |
| ஆனையாடுதல் | குழந்தைகள் உடம்பை ஆட்டுதல் . |
| ஆனையாள் | யானைவீரன் . |
| ஆனையிலத்தி | யானையின் மலம் . |
| ஆனையிறாஞ்சிப்புள் | ஒரு பெரும்பறவை . |
| ஆனையுண்குருகு | ஒரு பெரும்பறவை . |
| ஆனையுண்ட விளங்கனி | விளாம்பழத்தில் தோன்றும் ஒரு நோய் . |
| ஆனையுரித்தோன் | சிவன் . |
| ஆனையூர்தி | இந்திரன் ; ஐயனார் . |
| ஆனையேற்றம் | ஆனைமேலேறி நடத்தும் தொழில் . |
| ஆனையோசை | உழைப்பண் . |
| ஆனைவசம்பு | அரத்தை . |
| ஆனைவணங்கி | காண்க : தேட்கொடுக்கி : பெருநெருஞ்சி . |
| ஆனைவாயன்கற்றலை | ஆனைக்கற்றலைமீன் ; பொருவாக்கற்றலைமீன் . |
| ஆனைவாழை | நீண்ட குலைகொண்ட ஒருவித வாழை ; குளங்கோவை நெல் . |
| ஆனைவேக்கட்டான் | நெல்வகை . |
| ஆனோன் | காண்க : ஆனவன் . |
| ஆனைக்கூடம் | யானை கட்டுமிடம் ; பழைய வரிவகை . |
| ஆனைக்கெளுத்தி | மீன்வகை . |
| ஆனைக்கொம்பன் | ஆறுமாதத்தில் விளையும் ஒருவகை நெல் ; வாழைவகை . |
| ஆனைக்கொம்பு | யானைத் தந்தம் . |
| ஆனைக்கோடன்சுரை | சுரைவகை . |
| ஆனைக்கோரை | கோரைவகை . |
| ஆனைச்சப்பரம் | அம்பாரி . |
| ஆனைச்சாத்தான் | காண்க : கரிக்குருவி . |
| ஆனைச்சிரங்கு | ஒருவகைப் பெரும்புண் . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.