| அழகியவாணன் | நெல்வகை . |
| அழகியன் | அழகுடையவன் . |
| அழகியான் | அழகுடையவன் . |
| அழகு | வனப்பு ; நூல் வனப்புள் ஒன்று ; சுகம் ; சிறப்பு ; நற்குணம் ; கண்டசருக்கரை . |
| அழகுகாட்டுதல் | உடை முதலியவற்றான் ஆயசிறப்பினைக் காண்பித்தல் ; கை கால்களால் பரிகசித்தல் . |
| அழகுகாமாலை | காமாலைவகை . |
| அழகுகுளிசம் | கழுத்தணிவகை . |
| அழகுசெண்டேறுதல் | விளையாட்டுக்காகச் சாரி வருதல் ; அழகைக் காடடுதல் . |
| அழகுதுரைப்பெண் | இந்திரபாடாணம் . |
| அழகுதேமல் | தேமல்வகை . |
| அழகோலக்கம் | தன் அழகு தோற்றக் கொலுவிருக்கை . |
| அழத்தியன் | காண்க : பெருங்காயம் . |
| அழல் | நெருப்பு ; தீக்கொழுந்து ; எரிவு ; வெப்பம் ; கோபம் ; நஞ்சு ; உறைப்பு ; கார்த்திகை மீன் ; கேட்டை ; செவ்வாய் ; கள்ளி ; எருக்கஞ் செடி ; கொடிவேலிச்செடி ; நரகம் . |
| அழல்சேர்குட்டம் | கார்த்திகை பரணி . |
| அழல்தல் | எரிதல் ஒளி வீசுதல் ; காந்துதல் ; உறைப்பாதல் ; கோபம் கொள்ளுதல் ; பொறாமை கொள்ளுதல் . |
| அழலுதல் | எரிதல் ஒளி வீசுதல் ; காந்துதல் ; உறைப்பாதல் ; கோபம் கொள்ளுதல் ; பொறாமை கொள்ளுதல் . |
| அழல்வண்ணன் | நெருப்பு வண்ணத்தனாகிய சிவன் . |
| அழல்விதை | நேர்வாளவித்து . |
| அழல்விரியன் | காண்க : எரிவிரியன் . |
| அழல்விழித்தல் | கோபத்தோடு நோக்குதல் . |
| அழலம்பூ | தீம்பூமரம் . |
| அழலவன் | அக்கினிதேவன் ; சூரியன் ; செவ்வாய் . |
| அழலாடி | கையில் நெருப்புடன் ஆடும் சிவன் . |
| அழலி | நெருப்பு . |
| அழலிக்கை | எரிச்சல் ; பொறாமை . |
| அழலூட்டுதல் | தீயுண்ணச் செய்தல் . |
| அழலேந்தி | கையில் நெருப்போடு இருக்கும் சிவன் . |
| அழலை | தொண்டைக் கரகரப்பு ; களைப்பு . |
| அழலோம்புதல் | அக்கினிகாரியம் செய்தல் . |
| அழலோன் | அக்கினிதேவன் . |
| அழவணம் | காண்க : மருதோன்றி . |
| அழற்கடவுள் | காண்க : அழலோன் . |
| அழற்கண்ணன் | நெற்றியில் தீக்கண்ணையுடைய சிவன் . |
| அழற்கண்வந்தோன் | சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவன் ; முருகன் ; வீரபத்திரன் . |
| அழற்கதிர் | சூரியன் . |
| அழற்கரத்தோன் | நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கும் சிவபிரான் . |
| அழற்காமாலை | காமாலை நோய்வகை . |
| அழற்காய் | காண்க : மிளகு . |
| அழற்குட்டம் | காண்க : கார்த்திகை . |
| அழற்சி | உறைப்புச் சுவை ; எரிவு ; சினம் ; அழுக்காறு ; கால்நடைகளுக்குச் சுரம் உண்டாக்கும் ஒரு நோய் . |
| அழற்பால் | எருக்கஞ்செடி . |
| அழற்பித்தம் | பித்தநோய்வகை . |
| அழற்பிரவை | நரகவகை . |
| அழற்புண் | சிவந்து இரத்தம் வடியும் புண் . |
| அழற்புற்று | வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய் . |
| அழற்றடம் | தீக்காய் கலம் . |
| அழற்றி | அழலச்செய்வது ; எரிவு ; அழுக்காறு ; சினம் . |
| அழற்றுதல் | வெம்மை செய்தல் . |
| அழறு | சேறு . |
| அழன் | பிணம் ; பேய் . |
| அழனம் | பிணம் ; வெம்மை ; தீ . |
| அழனாகம் | ஒருவகை நச்சுப் பாம்பு . |
| அழனிறக்கடவுள் | காண்க : அழல்வண்ணன் . |
| அழாஅல் | அழுகை . |
| அவையர் | சபையோர் . |
| அவையல் | குற்றலரிசி ; திரள் ; அவல் . |
| அவையல்கிளவி | சபையில் உரைக்கத் தகாத சொல் . |
| அவையலும் துவையலும் | நெல் முதலியன குற்றப் பட்டுக் கிடக்கும் நிலை ; செயல் முற்றுப் பெறாமை . |
| அவையறிதல் | சபையின் இயல்பை அறிதல் . |
| அவையாவரிசி | கொழியல் அரிசி . |
| அவையிற்றின் | அவற்றின் . |
| அழக்கு | காண்க : ஆழாக்கு . |
| அழக்குடம் | பிணக்குடம் . |
| அழக்கொடி | பேய்ப்பெண் . |
| அழகங்காட்டுதல் | காண்க : அழகுகாட்டுதல் . |
| அழகச்சு | நாணயவகை . |
| அழகப்பன்காளை | பெருமாள் மாடு . |
| அழகம் | பெண்டிர் கூந்தல் . |
| அழகர் | திருமாலிருஞ்சோலைத் திருமால் ; காண்க : வெள்ளெருக்கு . |
| அழகர்மலை | அழகர் கோயில்கொண்டுள்ள மலை , திருமாலிருஞ்சோலை . |
| அழகன் | திருமால் ; அழகுடையவன் ; சுந்தரன் . |
| அழகாரம் | அழகான பேச்சு ; வீண்புகழ்ச்சிப் பேச்சு . |
| அழகி | அழகுள்ளவள் . |
| அழகிதழகிது | மிக நன்று . |
| அழகியமணவாளன் | திருவரங்கத்திலிருக்கும் மணமகனாகிய அரங்கநாதன் . |
| அழிகன்று | விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு . |
| அழிகால் | முதிர்ச்சியால் அழிக்க வேண்டியதான வெற்றிலைத் தோட்டம் . |
| அழிகாலி | வீண்செலவு செய்வோன் . |
| அழிகிரந்தி | கிரந்திநோய்வகை . |
| அழிகுட்டி | காண்க : அழிகன்று . |
| அழிகுரன் | தோற்றவன் . |
| அழிகை | அழிவு ; சிதைவு . |
| அழிகொடிக்கால் | காண்க : அழிகால் . |
| அழிச்சாட்டம் | காண்க : அழிச்சாட்டியம் . |
| அழிச்சாட்டியக்காரன் | தீம்புள்ளவன் ; பொய் வழக்கை எழுப்புவோன் . |
| அழிச்சாட்டியம் | தீம்பு ; கேடு . |
| அழிசெய்தல் | கெடுத்தல் . |
| அழிசெலவு | தோட்டவிருத்தி முதலியவற்றிற்கு ஆகும் செலவு . |
| அழிஞ்சில் | ஒரு மரம் . |
| அழிஞ்சு | ஒரு மரம் . |
| அழிஞ்சுக்காடு | பாலைநிலம் . |
| அழித்தல் | செலவழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; குலைத்தல் ; உள்ளதை மாற்றுதல் ; மறப்பித்தல் ; தடவுதல் ; நீக்குதல் ; நிந்தித்தல் ; விடைகாணுதல் . |
| அழித்தழித்து | திரும்பத்திரும்ப . |
| அழித்து | மீட்டும் ; மாறுபாடாய் . |
| அழித்துச்சொல் | இழித்துக்கூறல் . |
| அழித்துரை | இழித்துரை . |
| அழிதகவு | துன்பம் . |
| அழிதகன் | தீநெறி நடப்போன் . |
| அழிதகை | தகுதிக்கேடு . |
| அழிதல் | நாசமாதல் ; சிதைவுறுதல் ; தவறுதல் ; நிலைகெடுதல் ; தோற்றல் ; மனம்உருகுதல் ; வருந்துதல் ; மனம் உடைதல் ; பெருகுதல் ; பரிவுகூர்தல் ; செலவாதல் . |
| அழிதலை | தலையோடு . |
| அழிதூஉ | அலி . |
| அழிந்தோரை நிறுத்தல் | நிலைதாழ்ந்தாரை மீண்டும் நிலைபெறச் செய்தல் ; வேளாண் மாந்தர் இயல்புகளுள் ஒன்று . |
| அழிநோய் | குட்டம் . |
| அழிப்படுத்தல் | கதிரைக் கடாவிட்டு உழக்குதல் . |
| அழிப்பன் | சங்கரிப்பவன் ; துன்புறுத்துபவன் . |
| அழிப்பாங்கதை | விடுகதை . |
| அழிப்பாளன் | தட்டான் . |
| அழிப்பாளி | வீண்செலவு செய்வோன் . |
| அழிப்பு | சங்காரம் ; குற்றம் . |
| அழிபசி | மிக்க பசி . |
| அழிபடர் | மிகுந்த துன்பம் . |
| அழிபடுதல் | சிதைதல் ; செலவாதல் . |
| அழிபயல் | தீநெறியில் நடக்கும் பையன் . |
| அழிபாடு | அழிவு . |
| அழிபு | கேடு ; தோல்வி . |
| அழிபுண் | அழுகு இரணம் . |
| அழிபெயல் | மிக்க மழை . |
| அழிம்பன் | தீம்பு செய்பவன் . |
| அழிம்பு | தீம்பு ; வெளிப்படையான பொய் ; அவதூறு ; நீதியற்ற வழக்கு . |
| அழிமதி | கெடுமதி ; அழிமானம் . |
| அழிமேய்ச்சல் | பயிர் முழுதும் அழியக் கால்நடைகளைத் தின்னும்படி விடுகை . |
| அழியமாறுதல் | தன்நிலையை அழித்துவேறாதல் . |
| அழியல் | மனக்கலக்கம் . |
| அழியாமுதல் | நிலையான மூலநிதி ; கடவுள் . |
| அழியாமை | அழிவின்மை ; மனம் கலங்காமை . |
| அழியாவியல்பு | அருகன் எண்குணத்துள் ஒன்று . |
| அழியாவிளக்கு | நந்தாவிளக்கு . |
| அழிவது | கெடுதி . |
| அழிவழக்கு | அக்கிரம விவகாரம் ; வீண்வாதம் ; இழிந்தோர் வழக்கு . |
| அழிவாய் | சங்கமுக மணல்மேடு . |
| அழிவி | கழிமுகம் . |
| அழிவு | கேடு ; தீமை ; செலவு ; வறுமை ; வருத்தம் ; மனவுறுதியின்மை ; தோல்வி ; கழிமுகம் . |
| அழிவுகாலம் | கெட்ட காலம் ; ஊழி . |
| அழிவுபாடு | அழிவு . |
| அழுக்ககற்றி | வண்ணான் காரநீர் . |
| அழுக்கடித்தல் | அழுக்குப் போக்குதல் . |
| அழுக்கணவன் | இலை தின்னும் புழு . |
| அழுக்கம் | கவலை . |
| அழுக்கறுத்தல் | பொறாமை கொள்ளுதல் . |
| அழுக்கறுதல் | மாசு போதல் ; பொறாமை நீங்குதல் . |
| அழுகறுப்பான் | பொறாமை கொள்பவன் . |
| அழுக்கன் | ஈயாதவன் , உலோபி . |
| அழாந்தை | அழானுக்குத் தந்தை . |
| அழி | கேடு ; வைக்கோல் ; வைக்கோலிடும் கிராதி ; கிராதி ; வண்டு ; மிகுதி ; வருத்தம் ; கழிமுகம் ; இரக்கம் . |
| அழிகட்டு | பொய்ச்சீட்டு ; வீண் போக்கு ; தடை ; மந்திரம் ; நஞ்சு முதலியவற்றிற்கு மாற்று . |
| அழிகடை | அறக்கெட்டது . |
| அழிகண்டி | இவறலன் , உலோபி . |
| அழிகரப்பான் | படர்தாமரை நோய் . |
| அழிகரு | கரு அழிவு . |
| அழைப்புத்தூரம் | கூப்பிடு அளவான 1000 கஜ தூரம் ( 914 மீ . ) . |
| அழைப்புப்பத்திரம் | அழைப்புக் கடிதம் ; கிறித்தவசபைக்குக் குருவாகும்படி அழைக்கும் பத்திரம் . |
| அழையுறுத்தல் | கூவுதல் . |
| அள் | அள்ளப்படுவது ; செறிவு ; வன்மை ; வண்டி வில்லைத் தாங்கும் கட்டை ; பற்றிரும்பு ; கூர்மை ; பூட்டு ; நீர்முள்ளி ; அள்ளுமாந்தம் ; காது ; பெண்பால் விகுதி . |
| அள் | (வி) அள்ளு ; நெருங்கு . |
| அள்வழுப்பு | காதுகுறும்பி . |
| அள்ளல் | நெருக்கம் ; சேறு ; இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று ; எழுநரகத்துள் ஒன்று ; அள்ளுதல் ; கொய்தல் ; சேர்த்தெடுத்தல் . |
| அள்ளாடித்தள்ளாடி | தளர்ந்த நடையாய் . |
| அள்ளாடுதல் | செறிதல் ; தளர்தல் . |
| அள்ளாத்தி | மீன்வகை . |
| அள்ளாயமானியம் | அள்ளு சுதந்தரம் . |
| அள்ளி | வெண்ணெய் . |
| அள்ளிக்குத்துதல் | செடி முதலியவற்றின்மேல் நீர் தெளித்தல் ; கஞ்சி முதலியவற்றைச் சிறுகக் கொடுத்தல் . |
| அள்ளிக்கொட்டுதல் | பரவுதல் ; மிகச் சம்பாதித்தல் ; மிகக் கொடுத்தல் . |
| அள்ளிக்கொண்டுபோதல் | வேகமாய் ஓடுதல் ; நோய் கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல் . |
| அள்ளித்துள்ளுதல் | மிகச் செருக்குதல் . |
| அள்ளியிறைத்தல் | அளவிற்குமேல் செலவிடுதல் . |
| அள்ளிருள் | கும்மிருட்டு ; செறிந்த இருட்டு . |
| அள்ளிவிடுதல் | மிகுதியாகக் கொடுத்தல் . |
| அள்ளு | காது ; கன்னம் ; கூர்மை ; பற்றிரும்பு ; நெருக்கம் ; ஒரு நோய் ; அளவு கூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம் ; விலா எலும்பு . |
| அள்ளுக்கட்டுதல் | பெட்டி முதலியவற்றை இறும்புத் தகட்டால் இறுக்குதல் ; பலப்படுத்துதல் . |
| அள்ளுக்காசு | கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம் . |
| அள்ளுகொண்டை | மகளிர் மயிர் முடிவகை . |
| அள்ளுகொள்ளை | பெருங்கொள்ளை . |
| அள்ளுச்சீடை | சிறு சீடைவகை . |
| அள்ளுதல் | செறிதல் ; கையால் முகத்தல் ; திரளாய் எடுத்தல் ; வாரிக்கொண்டு போதல் ; எற்றுதல் ; நுகர்தல் . |
| அழுக்காமை | காண்க : அழுங்காமை . |
| அழுக்காறாமை | பொறாமை கொள்ளாமை . |
| அழுக்காறு | பிறர் ஆக்கம் பொறாமை ; மனத்தழுக்கு . |
| அழுக்கு | மாசு ; மனமாசு ; பொறாமை ; ஆணவ முதலிய பாசம் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை ; மலசலாதிகள் ; பிள்ளைப்பேற்றின் பின் வடியும் ஊனீர் ; ஆமைவகை . |
| அழுக்குத்தேமல் | அழுக்கினால் உடலில் தோன்றும் புள்ளிகள் . |
| அழுக்குமூட்டை | பழைய வழக்க ஒழுக்கங்களைப் பின்பற்றுபவன் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடைகள் . |
| அழுக்கெடுத்தல் | பற்றிய மாசுகளைப் போக்குதல் ; அழுக்குத் துணிகளைப் பெற்றுச் செல்லுதல் . |
| அழுகண் | கண்ணோய் வகை . |
| அழுகண்ணி | பூண்டுவகை . |
| அழுகல் | பதனழிந்தது ; தூய்மையில்லாதது . |
| அழுகள்ளன் | பாசாங்கு செய்வோன் . |
| அழுகற்சரக்கு | அழுகின பண்டம் ; அழுகுதற்குரிய பண்டம் ; அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி . |
| அழுகற்சிரங்கு | நீர்கசியும் சிரங்கு . |
| அழுகற்புண் | அழுகின இரணம் . |
| அழுகற்றூற்றல் | விடாத சிறுமழை . |
| அழுகிச்சேதம் | வெள்ளத்தால் உண்டாகும் பயிர்ச் சேதத்திற்குச் செய்யும் வரிக்குறைப்பு . |
| அழுகுகால் | நீர்ப்பெருக்கால் அழுகிய நெற்பயிர் . |
| அழுகுசப்பாணி | காண்க : அழுகுசர்ப்பம் ; அழுகு சர்ப்பம் நக்குதலால் உண்டாகும் நோய் . |
| அழுகுசர்ப்பம் | ஒரு நச்சுயிரி . |
| அழுகுசிறை | அவிந்து சாகத்தக்க சிறை . |
| அழுகுணி | அழுகிற குணம் உள்ளவன் ; சொறி சிரங்கு வகை . |
| அழுகுதல் | பதனழிதல் . |
| அழுகுபுண்குட்டம் | குட்டநோய் வகை . |
| அழுகுமூலம் | மூலநோய் வகை . |
| அழுகை | காண்க : அவலம் . |
| அழுங்கல் | துன்பம் ; கேடு ; நோய் ; அச்சம் ; சோம்பல் ; இரக்கம் ; ஆரவாரம் ; யாழின் நரம்போசை . |
| அழுங்காமை | கடல் ஆமைவகை . |
| அழுங்கு | விலங்குவகை ; கற்றாழை ; பாலை யாழ்த்திறவகை . |
| அழுங்குதல் | வருந்துதல் ; துன்பப்படுதல் ; அஞ்சுதல் ; உரு அழிதல் ; கெடுதல் ; சோம்புதல் ; தவிர்த்தல் ; ஒலித்தல் ; அழுதல் . |
| அழுங்குப்பிடி | விடாப்பிடி . |
| அழுங்குவித்தல் | விலக்குதல் ; துன்புறுத்துதல் . |
| அழுத்தக்காரன் | பொருள் இறுக்கமுடையவன் ; அழுக்கன் . |
| அழுத்தம் | இறுக்கம் ; கடினம் ; உறுதி ; பிடிவாதம் ; உலோபம் ; ஆழ்ந்து அறியும் குணம் . |
| அழுத்து | அழுத்துகை ; பதிவு . |
| அழுத்துதல் | அழுந்தச் செய்தல் ; பதித்தல் ; அமிழ்த்துதல் ; எய்தல் ; வற்புறுத்துதல் ; உறுதியாக்குதல் . |
| அழுந்து | நீராழம் ; வெற்றிலை நடும் வரம்பு . |
| அழுந்துதல் | அழுக்குண்ணுதல் ; உறுதியாகப்பற்றுதல் ; உறுதியாதல் ; பதிதல் ; அமிழ்தல் ; அனுபவப்படுதல் ; வருந்துதல் . |
| அழுந்துபடுதல் | தொன்றுதொட்டு வருதல் . |
| அழுந்தை | அழுந்தூர் . |
| அழுப்பு | சோறு . |
| அழுப்புகம் | தேவலோகம் . |
| அழும்பு | தீம்பு . |
| அழும்புதல் | செறியக் கலத்தல் . |
| அழுவம் | பரப்பு ; நாடு ; துர்க்கம் ; காடு ; போர் ; முரசு ; குழி ; ஆழம் ; கடல் ; மிகுதி ; பெருமை ; நடு ; நடுக்கம் . |
| அழுவிளிப்பூசல் | ஒப்பாரி வைத்தழும் பேரொலி . |
| அழுவை | யானை . |
| அழைத்தல் | கூப்பிடுதல் ; பெயரிட்டுக் கூப்பிடுதல் ; வரச்செய்தல் ; கதறுதல் . |
| அழைப்பு | கூப்பிடுகை ; பொருள் புணரா ஓசை . |
| அழைப்புச்சுருள் | திருமணத்துக்கு அழைக்கும் போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாமபூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு . |
| அளத்தல் | அளவிடுதல் ; வரையறுத்தல் ; பிரமாணம் கொண்டு அறிதல் ; கொடுத்தல் ; கலத்தல் ; எட்டுதல் : கருதுதல் ; அளவளாவுதல் ; வீண்பேச்சுப் பேசுதல் . |
| அளத்தி | நெய்தல்நிலப் பெண் ; உப்பு அமைப்போனின் பெண் . |
| அளத்தியம் | சவர்க்காரம் ; நீலபாடாணம் . |
| அளத்துநிலம் | களர்நிலம் . |
| அளத்துப்பச்சை | கடற்கரையையடுத்துக் காணும் மருக்கொழுந்துச் சக்களத்தி என்னும் பூண்டு . |
| அளத்துப்புல் | காண்க : முயிற்றுப்புல் . |
| அளத்துப்பூளை | செடிவகை . |
| அளப்பம் | அளக்கை ; வழி ; ஊழ் ; அலப்பு . |
| அளப்பளத்தல் | அலப்புதல் ; முறுமுறுத்தல் . |
| அளப்பறிதல் | உட்கருத்தைத் தந்திரமாய் அறிதல் , ஒருவனுடைய எண்ணத்தை ஆராய்ந்து அறிதல் . |
| அளப்பன் | வீணாகப் பேசுவோன் . |
| அளப்பு | அளக்கை ; எல்லை ; ஆராய்ந்து அறிகை ; அலப்புகை ; முறுமுறுக்கை ; ஆலோசனை . |
| அளப்புக்கு | முடக்கொற்றான் கொடி . |
| அளபு | அளவு ; அளபெடை . |
| அளபெடுத்தல் | எழுத்து மாத்திரை மிக்கு ஒலித்தல் . |
| அளபெடை | பாட்டில் ஓசை மிகுந்து ஒலிக்கும் அளவு . |
| அளபெடைவண்ணம் | அளபெடை பயின்றுவரும் சந்தம் . |
| அளம் | உப்பளம் ; நெய்தனிலம் ; கடல் ; களர் நிலம் ; செறிவு . |
| அளம்படுதல் | வருந்துதல் . |
| அளம்பல் | வெடங்குறுணிமரம் . |
| அளம்பற்றுதல் | உப்புப்பூத்தல் . |
| அளமம் | பொன் . |
| அளர் | நீர் ; மஞ்சள் ; உவர் . |
| அளர்க்கம் | காண்க : தூதுவளை . |
| அளர்நிலம் | களர்நிலம் . |
| அளவநிலம் | களர்நிலம் . |
| அளர்ப்பூளை | காண்க : அளத்துப்பச்சை . |
| அளவடி | நாற்சீரான் வரும் அடி . |
| அளவடிவிருத்தம் | கலிவிருத்தம் . |
| அளவப்பொட்டல் | காண்க : அளர்நிலம் . |
| அளவம் | ஒருவனைப்போல் நடித்துப் பரிகசித்தல் . |
| அளவர் | உப்பமைப்போர் ; உழுது பயிரிடுவோர் வகையினர் ; மதிப்பிடுவோர் . |
| அளவழிச்சந்தம் | நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை . |
| அளவழித்தாண்டகம் | இருபத்தேழெழுத்து முதலாக வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை |
| அளவளப்பு | அளவளாவுகை . |
| அளவளாவு | மனக்கலப்பு . |
| அளவளாவுதல் | கலந்து பேசுதல் . |
| அளவறுத்தல் | அளந்தறிதல் ; வரையறுத்தல் . |
| அளவன் | தானியம் அளப்போன் ; உப்பமைப்போன் ; சோரபாடாணம் . |
| அளவாக்குதல் | மட்டமாக்குதல் . |
| அளவி | அளவு . |
| அளவிடுதல் | ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் . |
| அளவிடை | ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் . |
| அளவியல் | பாவின் அடிவரையறை . |
| அளவியற்சந்தம் | நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள்வகை . |
| அளவியற்றாண்டகம் | இருபத்தேழு எழுத்து முதலாக வரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வழக்கு . |
| அளவில் | மட்டில் . |
| அளவிறத்தல் | எண்ணிலவாதல் ; அளவு கடத்தல் . |
| அளவினார் | நேர்வாளம் ; சிறுமரவகை . |
| அளவு | பரிமாணம் ; தருக்க அளவை ; தாளத்தில் மூன்று மாத்திரைக் காலம் ; மாத்திரை ; நில அளவு ; சமயம் ; தன்மை ; ஞானம் ; மட்டும் ; தொடங்கி . |
| அளவுக்கல் | நீரேற்றம் காட்டும் கல் ; எல்லைக்கல் . |
| அளவுகருவி | பொருள்களை அளவிட்டு அறியப்பயன்படும் கருவி . |
| அள்ளுமாந்தம் | குழந்தைகளுக்கு உண்டாகும் ஒருவகை நோய் . |
| அள்ளூறுதல் | வாயூறுதல் . |
| அள்ளெடுக்கிறவன் | ஒவ்வோர் அளவிலும் ஒவ்வொரு பிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன் . |
| அள்ளெடுத்தல் | கையால் வாருதல் |
| அள்ளை | பேய் ; விலாப்புறம் . |
| அள்ளைப்புறம் | வீட்டின் ஒரு பகுதி . |
| அளக்கர் | கடல் ; நிலம் ; சேறு ; உப்பளம் ; நீள் வழி ; கார்த்திகை நாள் . |
| அளக்கல் | அளத்தல் . |
| அளக்காய் | காண்க : வெள்ளெருக்கு . |
| அளகத்தி | கூந்தலுடையவள் . |
| அளகபந்தி | கூந்தலின் ஒழுங்கு . |
| அளகபாரம் | கூந்தல் தொகுதி . |
| அளகம் | பெண்மயிர் ; மயிர்க்குழற்சி ; பன்றிமுள் ; மழைநீர் ; நீர் ; காண்க : வெள்ளெருக்கு . |
| அளகளப்பு | காண்க : அளவளப்பு ; சேர்க்கை . |
| அளகவல்லி | மயிர்மாட்டி . |
| அளகாதிபதி | அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் . |
| அளகாதிபன் | அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் . |
| அளகாபதி | அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் . |
| அளகாபுரி | குபேரனின் நகரம் ; தஞ்சாவூர் . |
| அளகு | கோட்டான் , கோழி , மயில் இவற்றின் பெண் ; சேவல் ; கார்த்திகை நாள் . |
| அளகேசன் | குபேரன் . |
| அளகை | அளகாபுரி ; தஞ்சை ; எட்டிற்கு மேலும் பத்திற்குக் கீழுமான வயதுடைய பெண் . |
| அளகையாளி | காண்க : அளகேசன் . |
| அற்பசங்கை | சிறுநீருக்குப் போகை . |
| அற்பசி | காண்க : ஐப்பசி ; அசுவினி . |
| அற்பத்தனம் | இழிகுணம் . |
| அற்பத்திரம் | துளசி ; திருநீற்றுப்பச்சை . |
| அற்பபத்திரம் | துளசி ; திருநீற்றுப்பச்சை . |
| அற்பதுமம் | செந்தாமரை . |
| அற்பபதுமம் | செந்தாமரை . |
| அற்பம் | சிறுமை ; இழிவு ; இலேசு ; நாய் ; பஞ்சு ; புகை . |
| அற்பமாரி | சிறுகீரை . |
| அற்பமாரிடம் | சிறுகீரை . |
| அற்பர் | கீழ்மக்கள் . |
| அளவுபடி | முத்திரைப் படி . |
| அளவுபடுத்தல் | வரையறை செய்தல் . |
| அளவுபடை | சிறுசேனை . |
| அளவுவர்க்கம் | ஒரு பழைய வரி . |
| அளவெடுத்தல் | ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை அளந்தறிதல் . |
| அளவெண் | நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை . |
| அளவை | அளவு ; அளவுகருவி ; தருக்க அளவை ; எல்லை ; சமயம் ; நாள் ; தன்மை ; அறிகுறி . |
| அளவைக்கால் | மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி . |
| அளவைநூல் | தருக்கநூல் . |
| அளவையாகுபெயர் | எண்ணல் , எடுத்தல் , முகத்தல் , நீட்டல் என்னும் அளவைப் பெயர் அவ்வவ் அளவுகொண்ட பொருளுக்கு ஆகிவருவது . |
| அளவை வடிவம் | உருவத்தைக் காட்டுதற்கு வரைந்த படம் . |
| அளவைவாதி | பிரமாண வாதம் செய்பவன் . |
| அளவொழுகு | ஊரின் நிலபுலங்களின் அளவுகளைப் பதிவு செய்த புத்தகம் . |
| அளறு | குழைசேறு ; குழம்பு ; காவிக்கல் ; நீர் ; நரகம் . |
| அளறுதல் | சிதறி வெடித்தல் ; நெரிதல் ; பிளத்தல் . |
| அளறுபடுதல் | சேறாதல் ; நிலைகலங்குதல் . |
| அளாய்குளாய் | பரபரப்பான செய்கை . |
| அளாவன் | கலப்பு . |
| அளாவுதல் | கையால் அளைதல் ; துழாவுதல் ; கலத்தல் ; சென்று பொறுந்துதல் ; கலந்து பேசுதல் . |
| அளி | அன்பு ; அருள் ; ஆசை ; வரவேற்பு ; எளிமை ; குளிர்ச்சி ; கொடை ; காய் ; வண்டு ; தேன் ; வண்டுகொல்லி ; கருந்தேனீ ; மாட்டுக்காடி ; தேள் ; கிராதி ; மரவுரிமரம் . |
| அளி | (வி) கொடு ; காப்பாற்று . |
| அளிகம் | நெற்றி ; பொய் ; நெல்லி ; வெறுப்பு . |
| அளீகம் | நெற்றி ; பொய் ; நெல்லி ; வெறுப்பு . |
| அளித்தல் | காத்தல் ; கொடுத்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; அருள்செய்தல் ; விருப்பம் உண்டாக்குதல் ; சோர்வை நீக்குதல் ; செறித்தல் ; சொல்லுதல் . |
| அளித்து | அளிசெய்யத்தக்கது . |
| அளிது | அளிசெய்யத்தக்கது . |
| அளிந்தம் | கோபுரவாயில் திண்ணை . |
| அளிந்தார் | அன்புடையோர் . |
| அளிப்பாய்ச்சுதல் | கிராதியிடுதல் . |
| அளிம்பகம் | குயில் ; தவளை ; இருப்பை ; தாமரைப் பூந்தாது . |
| அளியர் | காண்க : மைத்துனர் ; இரங்கத்தக்கவர் . |
| அளியன் | அன்புமிக்கவன் ; காக்கப்படத்தக்கவன் . |
| அளிலாமயம் | வாதநோய் . |
| அளுக்குதல் | குலைதல் ; அஞ்சுவித்தல் . |
| அளுங்கு | காண்க : அழுங்கு . |
| அளேசுவெப்பம் | அதிவிடய வேர் . |
| அளேசுவெப்பு | அதிவிடய வேர் . |
| அளேரியம் | வெங்காயம் . |
| அளேறுகம் | காண்க : தூதுவளை . |
| அளை | தயிர் ; மோர் ; வெண்ணெய் ; புற்று ; பொந்து ; குகை ; ஏழாம்வேற்றுமையுருபு . |
| அளை | (வி) துழாவு ; கல ; தழுவு . |
| அளைச்சல் | வயிற்றுளைச்சல் ; சீதபேதி . |
| அளைதல் | துழாவுதல் ; கலத்தல் ; சூடுதல் ; தழுவுதல் ; கூடியிருத்தல் ; அனுபவித்தல் ; வயிறு வலித்தல் . |
| அளைமறிபாப்பு | பாட்டின் ஈறறில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளப்படும் முறை . |
| அளையெடுத்தல் | வளை தோண்டுதல் ; புரை வைத்தல் . |
| அளைவு | சோறு முதலியன குழைகை ; கலப்பு . |
| அற்கத்தி | காண்க : திப்பிலி . |
| அற்கம் | அடக்கம் ; வெண்துளசி ; பொருள் விலை ; பூசைவிதி . |
| அற்களம் | கதவின் தாழ் ; பேரவை . |
| அற்கன் | அருக்கன் ; சூரியன் . |
| அற்காமை | நிலையாமை . |
| அற்கி | காண்க : ஓரிலைத்தாமரை . |
| அற்குதல் | நிலைபெறுதல் ; தங்குதல் . |
| அற்சிரம் | காண்க : அச்சிரம் . |
| அற்சிரை | காண்க : அச்சிரம் . |
| அற்பக்கியன் | சிற்றறிவுடையவன் . |
| அற்பகதன் | வாழை . |
| அற்பகந்தம் | காண்க : செந்தாமரை . |
| அற்பகேசி | காண்க : வசம்பு . |
| அளவுகாரன் | நெல் முதலியன அளப்பவன் . |
| அளவுகூடை | குறித்த அளவுள்ள தானியம் அளக்கும் கூடை . |
| அளவுகோல் | அளக்கும் தடி . |
| அளவுதல் | கலப்புறுதல் ; கலத்தல் ; உசாவுதல் . |
| அளவுநாழி | முத்திரைப் படி . |
| அறச்செட்டு | கடுஞ்செட்டு . |
| அறச்செல்வி | தருமதேவதை ; உமாதேவி . |
| அறச்சோலை | கோயினுட்சோலை . |
| அறசம் | கத்தரி . |
| அறசோகணக்கு | காட்டுக்கருணை ; கருணைக்கிழங்கு . |
| அறத்தவிசு | நீதிபதியின் இருக்கை . |
| அறத்தளி | அந்தப்புரம் . |
| அறத்தின்செல்வி | காண்க : அறச்செல்வி . |
| அறத்தின்சேய் | தருமன் . |
| அறத்தின்மூர்த்தி | தருமதேவதை ; பார்வதி ; திருமால் . |
| அறத்துணைவி | தருமபத்தினி . |
| அறத்துப்பால் | திருக்குறள் , நாலடியார் நூல்களின் முப்பால்களுள் முதலானதும் அறத்தைப் பற்றிக் கூறுவதுமான பகுதி . |
| அறத்துறுப்பு | அறத்தினது கூறு ; அவை : ஐயப்படாமை , விருப்பின்மை , வெறுப்பின்மை , மயக்கமின்மை , பழியை நீக்கல் , அழிந்தோரை நிறுத்தல் , அறம் விளக்கல் , பேரன்புடைமை . |
| அறத்துறை | அறவழி . |
| அறத்தைக்காப்போன் | ஐயனார் . |
| அறத்தொடுநிலை | களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை . |
| அறத்தொடுநிற்றல் | களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை . |
| அறதேயன் | அறங்களை நடத்துவோன் . |
| அறநிலை | பிரமமணம் ; அறங்களைப் பாதுகாத்தற்குரிய நிலையம் . |
| அறநிலைப்பொருள் | நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள் . |
| அற்பரம் | மக்கட் படுக்கை . |
| அற்பருத்தம் | வாழை . |
| அற்பாசனம் | மூத்திரம் பெய்கை . |
| அற்பாசமனம் | மூத்திரம் பெய்கை . |
| அற்பாயு | குறைந்த வாழ்நாள் . |
| அற்பாயுசு | குறைந்த வாழ்நாள் . |
| அற்பாயுள் | குறைந்த வாழ்நாள் . |
| அற்புத்தளை | அன்புப் பிணைப்பு . |
| அற்புதக்கண் | அபிநயக் கண்வகை . |
| அற்புதம் | ஒன்பான் சுவையுள் ஒன்று ; வியப்பு ; அறிவு ; அழகு ; சூனியம் ; ஆயிரங்கோடி ; சிதம்பரம் ; தசைக்கணு . |
| அற்புதமூர்த்தி | கடவுள் . |
| அற்புதவாதம் | இசிவுநோய்வகை . |
| அற்புதவாயு | இசிவுநோய்வகை . |
| அற்புதன் | கடவுள் ; கம்மாளன் ; புதியது புனைவோன் ; கண்ணாளன் . |
| அற்றகாரியம் | தீர்ந்த பொருள் ; முடிந்த வேலை . |
| அற்றகுற்றம் | இழப்பு . |
| அற்றப்படுதல் | கவனத்தின் இடையறவுபடுதல் ; இல்லாமையாதல் . |
| அற்றபேச்சு | முடிவான பேச்சு . |
| அற்றம் | அழிவு ; துன்பம் ; இறுதி ; சோர்வு ; வறுமை ; இடைவிடுகை ; அவகாசம் ; அவமானம் ; அறுதி ; விலகுகை ; சுற்று ; மறைக்கத்தக்கது ; நாய் ; பொய் ; உண்மை . |
| அற்றவன் | பற்றற்றவன் ; பொருளற்றவன் . |
| அற்றார் | பொருள் இல்லாதவர் ; முனிவர் . |
| அற்று | அத் தன்மையது ; அதுபோன்றது ; ஓர் உவம உருபு ; ஒரு சாரியை . |
| அற்றுப்போதல் | முழுதும் ஒழிதல் ; இடைமுறிதல் ; முழுதும் கைவருதல் . |
| அற்றூரம் | காண்க : மரமஞ்சள் . |
| அற்றேல் | அப்படியானால் . |
| அற்றை | அந்நாட்குரிய ; அன்றன்றைக்குரிய ; அற்பமான . |
| அற்றைக்கூலி | நாட்கூலி . |
| அற்றைக்கொத்து | நாள்தோறும் தானியமாகக் கொடுக்கும் கூலி . |
| அற்றைநாள் | அன்று ; அந்த நாள் . |
| அற்றைப்படி | நாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம் . |
| அற்றைப்பரிசம் | விலைமாதர் அன்றன்று பெறும் கூலி . |
| அற்றைப்பிழைப்பு | அன்றன்று செய்யும் சீவனம் ; அன்றாடங்காய்ச்சி . |
| அற | முழுவதும் ; மிகவும் ; தெளிவாக ; செவ்வையாக . |
| அறக்கட்டளை | நிலைபெற்ற அறச்செயல்கள் நடப்பதற்காக ஒதுக்கப்பெறும் மானியம் முதலியன . |
| அறக்கடவுள் | யமன் ; தருமதேவதை . |
| அறக்கடை | பாவம் . |
| அறக்கப்பறக்க | விழுந்து விழுந்து ; விரைவாக . |
| அறக்கப்பாலை | திருநாமப்பாலை . |
| அறக்கருணை | அனுக்கிரக ரூபமான அருள் . |
| அறக்கழிவு | அறநெறிக்கு மாறுபட்ட செயல் . |
| அறக்களவழி | வேளாண் தொழிலைக் கூறும் புறத்துறை . |
| அறக்களவேள்வி | வேள்விச்செயல் . |
| அறக்கற்பு | அமைதிநிலை பொருந்திய கற்பு . |
| அறக்காடு | சுடுகாடு . |
| அறக்குளாமீன் | சூரைமீன் . |
| அறக்கூர்மை | மிக்க கூர் . |
| அறக்கூழ்ச்சாலை | அன்னசத்திரம் ; கஞ்சிமடம் . |
| அறக்கொடி | பார்வதி ; உமை . |
| அறக்கொடிபாகன் | சிவன் . |
| அறங்கடை | பாவம் . |
| அறன்கடை | பாவம் . |
| அறங்காவல் | கோயில் சைத்தியம் முதலாயின காக்கும் தொழில் ; நற்பொறுப்பு . |
| அறங்கூறவையம் | நீதிமன்றம் . |
| அறச்சாலாபோகம் | அறச்சாலைகளுக்கு விட்ட மானியம் . |
| அறச்சாலை | தருமசாலை . |
| அறவுபதை | அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் சூழ்ச்சி நான்கனுள் ஒன்று ; தருமநெறியைக் கூறி ஆராய்தல் . |
| அறவுரை | நீதிநெறி உரைத்தல் ; நீதிமொழி . |
| அறவுளி | உடல் நலம்பெறச் செய்யும் மந்திரம் . |
| அறவூதுதல் | புடமிடுதல் . |
| அறவை | உதவியற்ற நிலை ; தீமை ; அறநெறி . |
| அறவைச்சிறை | கடுஞ்சிறை . |
| அறவைச்சோறு | உறவற்றவர்க்கு அளிக்கும் உணவு . |
| அறவைத்தல் | காண்க : அறவூதுதல் . |
| அறவைத்தூரியம் | உறவற்றவர்க்கு அளிக்கும் உடை . |
| அறவைப்பிணஞ்சுடுதல் | உறவற்ற பிணத்துக்கு ஈமக்கடன் செய்தல் . |
| அறவைப்பு | புடம்வைக்கை . |
| அறவோர்பள்ளி | சமண பௌத்த ஆலயம் . |
| அறவோலை | இனாம் சாசணம் . |
| அறவோன் | அறநெறியாளன் ; புத்தன் . |
| அறளை | நச்சுத் தொந்தரை ; ஒரு நோய் . |
| அறன் | வேள்வி முதல்வன் ; அறக்கடவுள் . |
| அறனில்பால் | தீவினை . |
| அறனிலாளன் | அறவுணர்வு அற்றவன் . |
| அறனையம் | காட்டுக்கருணை . |
| அறனோம்படை | தருமம் பாதுகாக்கை ; தருமம் பாதுகாக்கும் இடம் ; தருமம் போதிக்குமிடம் . |
| அறாக்கட்டை | மூடன் ; கஞ்சன் . |
| அறாட்டுப்பறாட்டு | காண்க : அராட்டுப்பிராட்டு ; போதியதும் போதாததுமானது . |
| அறாம்பை | காண்க : அறாமை . |
| அறாமி | கொடுமை இயல்பு உள்ளது ; இடக்குப் பண்ணுகிற குதிரை . |
| அறாமை | கவிழ்தும்பைப் பூண்டு . |
| அறாயிரம் | ஆறாயிரம் . |
| அறாவட்டி | அதிக வட்டி ; கடுவட்டி . |
| அறாவிலை | அளவுக்கு மேற்பட்ட விலை . |
| அறாவுதல் | அடித்தல் . |
| அறி | அறிவு . |
| அறிக்கை | அறிவிப்பு ; குற்றத்தை ஒப்புக்கொள்கை ; பயிற்றுகை . |
| அறிக்கைப்பத்திரம் | எழுத்து மூலமான விளம்பரம் ; வரலாறு குறிக்கும் பத்திரிகை . |
| அறிக்கைபண்ணுதல் | விளம்பரப்படுத்துதல் ; குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் . |
| அறிக்கையிடுதல் | விளம்பரப்படுத்துதல் ; குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் . |
| அறிக்கைவாசித்தல் | திருமண விளம்பரம் செய்தல் ; பள்ளி நிறுவனம் , சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கையைக் கூட்டத்தில் படித்தல் |
| அறிகண்ணி | எருக்கங்கிழங்கு . |
| அறிகரி | நேர்சாட்சி . |
| அறிகருவி | உணர்வுப்பொறி . |
| அறிகுறி | அடையாளம் . |
| அறிசலம் | நெஞ்சறிந்த குற்றம் . |
| அறிசா | ஒருவகை மீன் . |
| அறிஞன் | அறிவுடையோன் ; புலவன் , முனிவன் ; புத்தன் ; புதன் . |
| அறிதல் | உணர்தல் ; நினைத்தல் ; மதித்தல் ; பயிலுதல் ; அனுபவித்தல் ; உறுதிசெய்தல் ; புதிதாய்க் கண்டுபிடித்தல் . |
| அறிதுயில் | யோகநித்திரை ; தூங்காமல் தூங்கும் நிலை . |
| அறநிலையறம் | நால்வகைக் குலத்தாரும் தத்தம் நெறியில் பிழையாது அரசன் பாதுகாக்கை . |
| அறநிலையின்பம் | ஒத்த கன்னியை மணந்து இல்லறத்தினின்று நுகரும் இன்பம் . |
| அறநீர் | அருநீர் ; நீரின் அளவு குறைந்த நிலை ; தவணைப்படி பாசனத்துக்கு விடப்படும் நீர் . |
| அறநூல் | நீதி கூறும் நூல் . |
| அறநெறி | அறவழி . |
| அறப்பரிகாரம் | துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை . |
| அறப்பரிசாரம் | துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை . |
| அறப்பாடல் | கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு . |
| அறப்பாடுபடுதல் | பாடுபட்டு வேலை செய்தல் . |
| அறப்பார்த்தல் | தீர ஆராய்தல் ; அழிக்க வழி தேடுதல் . |
| அறப்புறங்காவல் | அறத்திற்கு விடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கை . |
| அறப்புறம் | பாவம் ; அறத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அறச்சாலை ; வேதம் ஓதும் பள்ளி . |
| அறப்போர் | அறவழியில் செய்யும் கிளர்ச்சி . |
| அறம் | தருமம் ; புண்ணியம் ; அறச்சாலை ; தரும தேவதை ; யமன் ; தகுதியானது ; சமயம் ; ஞானம் ; நோன்பு ; இதம் ; இன்பம் ; தீப்பயன் உண்டாக்கும் சொல் . |
| அறம்பகர்ந்தோன் | புத்தன் . |
| அறம்பாடுதல் | தீச்சொற்பட்டுத் தீப்பயன் உண்டாகப் பாடுதல் ; வசைக்கவி பாடுதல் . |
| அறல் | அறுகை ; அறுத்துச் செல்லும் நீர் ; அரித்தோடுகை ; நீர் ; சிறுதூறு ; நுண்மணல் ; கருமணல் ; நீர்த்திரை ; மயிர் நெறிப்பு ; கொற்றான் ; திருமணம் ; விழா . |
| அறவன் | தருமவான் ; கடவுள் ; புத்தன் ; முனிவன் ; அறத்தைக் கூறுவோன் ; பார்ப்பனன் . |
| அறவாணன் | கடவுள் . |
| அறவாய்போதல் | காண்க : அறுவாய்போதல் . |
| அறவாழி | தருமசக்கரம் ; அறக்கடல் . |
| அறவாளன் | தருமவான் ; |
| அறவி | அறம் ; புண்ணியத்தோடு கூடியது ; பெண்துறவி ; பொதுவிடம் . |
| அறவிடுதல் | முற்றும் நீக்குதல் ; விற்றல் . |
| அறவிய | அறத்தோடுகூடிய . |
| அறவியங்கிழவோன் | புத்தன் . |
| அறவியான் | அறத்தில் நிற்பவன் . |
| அறவிலை | முழுமையும் விலைப்படுதல் . |
| அறவிலை வாணிகன் | பொருளை விலையாகக் கொடுத்து அறம் கொள்வோன் . |
| அறவினை | நற்செயல் . |
| அறவு | ஒழிகை . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.