| அறுத்தல் | அரிதல் , ஊடறுத்தல் , செங்கல் அறுத்தல் , தாலியறுத்தல் , இடைவிடுதல் ; பங்கிட்டுக் கொடுத்தல் ; முடிவுசெய்தல் ; வளைதோண்டல் ; வருத்துதல் ; நீக்குதல் ; இல்லாமற் செய்தல் ; வெல்லுதல் ; செரித்தல் . |
| அறுத்தவள் | கைம்பெண் . |
| அறுத்திசைப்பு | வேற்றிசை கலந்து வரும் ஒருவகை யாப்புவழு . |
| அறிவர்சிறப்பு | இறைவர் பூசனை . |
| அறிவரன் | அறிவில் சிறந்தவன் ; அருகன் . |
| அறிவழி | கள் ; பேய் . |
| அறிவறிவாக | விளக்கமாக தெரிந்துகொள்ளும்படி . |
| அறிவறைபோதல் | அறிவு கீழற்றுப் போதல் . |
| அறிவன் | அறிவுடையவன் ; அருகன் ; புத்தன் ; கணி ; கம்மாளன் ; செவ்வாய் ; புதன் ; உத்தரட்டாதி . |
| அறிவனாள் | உத்தரட்டாதி . |
| அறிவாகரன் | அறிவிற்கு இருப்பிடமாக உள்ளவன் . |
| அறிவாளி | புத்திசாலி . |
| அறிவிக்கை | விளம்பரம் . |
| அறிவித்தல் | தெரிவித்தல் ; வெளிப்படுத்துதல் . |
| அறிவிப்பு | காண்க : அறிவிக்கை . |
| அறிவியல் | விஞ்ஞானம் . |
| அறிவிலி | மூடன் . |
| அறிவினா | அறிந்து கேட்கும் கேள்வி . |
| அறிவீனம் | மடமை . |
| அறிவீனன் | அறிவுக்குறையுடையோன் ; மூடன் . |
| அறிவு | ஞானம் ; புத்தி ; பொறியுணர்வு ; அறிய வேண்டியவை ; கல்வி ; ஆன்மா . |
| அறிவுகேடன் | ஞானமற்றவன் . |
| அறிவுகொளுத்துதல் | புத்தி புகட்டுதல் . |
| அறிவுடைமை | உண்மை அறிவுடையவனாதல் . |
| அறிவுநூல் | ஞான சாத்திரம் |
| அறிவுபிறத்தல் | ஞானம் உண்டாதல் ; மூர்ச்சை தெளிதல் . |
| அறிவுபுகட்டுதல் | அறிவூட்டுதல் . |
| அறவுமடம்படுதல் | அறிந்தும் அறியான்போன்று இருத்தல் . |
| அறிவுமயங்குதல் | நினைவு தவறுதல் ; திகைத்தல் . |
| அறிவுவரம்பிகந்தோன் | மிகுந்த அறிவினையுடையவன் , அருகன் . |
| அறிவுறால் | அறிவுறுத்துகை . |
| அறிவுறுத்துதல் | தெரிவித்தல் ; அறிவுபுகட்டுதல் . |
| அறிவுறுதல் | அறிதல் ; துயில் எழுதல் . |
| அறிவை | ஞானம் . |
| அறிவொப்புக்காண்டல் வினா | தான் அறிந்ததைப் பிறன் அறிவோடு ஒப்புநோக்கக் கேட்கும் கேள்வி . |
| அறுக்கணக்கு | சரக்கறைக் கணக்கு . |
| அறுக்கரிவாள் | கருக்கறுவாள் . |
| அறுக்கன் | தலைவன் ; நெருக்கமான நண்பன் . |
| அறுகடி | அறுகு பற்றிய நிலம் . |
| அறுகரிசி | அறுகம்புல்லோடு கூடிய மங்கல அரிசி , அட்சதை . |
| அறுகால் | வண்டு ; பாம்பு ; இல்லாதபோது . |
| அறுகாலன் | பாம்பு . |
| அறுகாழி | மோதிரவகை . |
| அறுகாற்பீடம் | ஆறு கால்கள் அமைந்த இருக்கை . |
| அறுகிடுதல் | திருமணத்தில் அறுகு இட்டு வாழ்த்துதல் . |
| அறுகிலிப்பூடு | பூண்டுவகை . |
| அறுகீரை | காண்க : அறைக்கீரை . |
| அறுகு | அறுகம்புல் ; சிங்கம் ; புலி ; யானையாளி ; யானை ; வெளித்திண்ணை ; தெருப்பந்தல் . |
| அறுகுணன் | ஆறு குணங்களோடு கூடியவன் ; பகவன் . |
| அறுகுதராசு | சிறு தராசு . |
| அறுகுவெட்டுத் தரிசுகூலி | தரிசு நிலத்திலுள்ள காடுகளை வெட்டிச் செம்மை செய்து உழவுக்குக் கொண்டுவந்தவர்க்கு அதுபற்றி அந்நிலத்தில் ஏற்பட்ட அனுபோக உரிமை . |
| அறுகுறை | கவந்தம் , முண்டம் . |
| அறுகெடுத்தல் | அறுகிட்டு வாழத்தல் ; பூசித்தல் . |
| அறுகெழுந்தபடுதரை | அறுகு முளைத்து உழவுக்குப் பயன்படாத தரிசுநிலம் . |
| அறுகை | அறுகம்புல் . |
| அறுகோணம் | ஆறு மூலைகொண்ட வடிவம் . |
| அறுசமயம் | ஆறு வகையான வைதிக மதங்கள் ; அவை : சைவம் , வைணவம் , சாக்தம் , சௌரம் , காணபத்தியம் , கௌமாரம் . |
| அறுசரம் | யாழ் . |
| அறுசுவை | கைப்பு , இனிப்பு , புளிப்பு , துவர்ப்பு , உவரப்பு , கார்ப்பு என்னும் ஆறு வகையான சுவைகள் . |
| அறுசூலை | ஆறு வகையான நோய் ; அவை : பித்தசூலை , வாதசூலை , சிலேட்டுமசூலை , வாதபித்த சூலை , சிலேட்டுமபித்த சூலை , ஐயகணச்சூலை . |
| அறிதுயிலமர்ந்தோன் | திருமால் . |
| அறிநன் | அறிபவன் . |
| அறிப்பலம் | காண்க : திப்பிலி . |
| அறிப்பு | உணர்கை |
| அறிபொருள்வினா | அறியப்பட்ட பொருளை ஒரு பயன்நோக்கிக் கேட்கும் கேள்வி . |
| அறிமடம் | அறிந்தும் அறியாது போன்று இருக்கை ; விளையாடும் பருவத்து நிகழும் அறியாமை ; நினைவின்மை ; அறிந்தபடி நடக்க இயலாமை . |
| அறிமுகம் | தெரிந்த முகம் ; பழக்கம் . |
| அறியக்கொடுத்தல் | தெரிவித்தல் ; குற்றமேற்றுதல் . |
| அறியல் | மூங்கில் . |
| அறியலுறவு | அறிதற்கண் விருப்பம் . |
| அறியாக்கரி | பொய்ச்சாட்சி . |
| அறியாமை | அறியாத்தன்மை ; மடமை . |
| அறியாவினா | தெரியாதது ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்கும் கேள்வி . |
| அறியான்வினா | தெரியாதது ஒன்றைத் தெரிந்து கொள்வதற்குக் கேட்கும் கேள்வி . |
| அறியுநன் | உணருகிறவன் . |
| அறுபகை | ஆறுவகை உட்பகை ; அவை : காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாற்சரியம் . |
| அறுபடுதல் | அறுக்கப்படுதல் . |
| அறுபத்துநாலுகலை | அறுபத்து நான்கு வகையான பயிற்சியுடைமை . |
| அறுபத்துமூவர் | பெரியபுராணத்தில் கூறப்பட்ட தனியடியார் . |
| அறுபத்தை | கையாந்தகரை . |
| அறுபதம் | வண்டு , கையாந்தகரைப் பூண்டு . |
| அறுபதாங்கலியாணம் | அறுபதாம் ஆண்டு நிறைவுவிழா , மணிவிழா . |
| அறுபதாங்கேழ்வரகு | அறுபது நாளில் விளையும் கேழ்வரகுவகை . |
| அறுபதாங்கொட்டை | பேராமணக்கு . |
| அறுபான் | அறுபது . |
| அறுபொருள் | பரம்பொருள் ; ஐயமற்ற பொருள் . |
| அறுபொழுது | ஒரு நாளில் ஆறு பகுப்பான காலம் ; அவை : மாலை , யாமம் , வைகறை , விடியல் , நண்பகல் , எற்பாடு . |
| அறும்பன் | தீம்பு செய்வோன் . |
| அறும்பு | பஞ்சம் ; குறும்புத்தனம் ; தீம்பு . |
| அறுமணை | அரிவாள்மணை , அழகற்றவள் , சீர்கேடி . |
| அறுமான் | புழுவகை . |
| அறுமீன் | ஆறுமீன் தொகுதியாகிய கார்த்திகை . |
| அறுமீன்காதலன் | முருகக்கடவுள் . |
| அறுமுகன் | ஆறுமுகங்களை உடையவன் ,முருகக் கடவுள் . |
| அறுமுறி | உடன்படிக்கைப் பத்திரம் . |
| அறுமுறைவாழ்த்து | முனிவர் , பார்ப்பார் , ஆனிரை , மழை , முடியுடைவேந்தர் , உலகு என்னும் ஆறனையும்பற்றிக் கூறும் வாழ்த்து . |
| அறுமை | நிலையின்மை ; ஆறு . |
| அறுவகைச் சக்கரவர்த்திகள் | அரிச்சந்திரன் , நளன் , முசுகுந்தன் , புரூரவன் , சகரன் , கார்த்தவீரியன் . |
| அறுவகைத் தானை | வேற்றானை , வாட்டானை , விற்றானை , தேர்த்தானை , பரித்தானை , களிற்றுத்தானை . |
| அறுவகைப் படை | மூலப்படை , கூலிப்படை , நாட்டுப்படை , காட்டுப்படை , துணைப்படை , பகைப்படை . |
| அறுவகைப் பருவம் | கார் , கூதிர் , முன்பனி , பின்பனி , இளவேனில் , முதுவேனில் இவை முறையே ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்களில் அமைவன . |
| அறுவகையரிசி | அருணாவரிசி , உலூவாவரிசி , ஏலவரிசி , கார்போகரிசி , விளவரிசி , வெட்பாலையரிசி . |
| அறுவகையுயிர் | மக்கள் , தேவர் , பிரமர் , நரகர் , விலங்கு , பேய் ; ஓரறிவுயிர் முதலாக உள்ள ஆறுவகை உயிர் . |
| அறுவடை | கதிரறுப்பு . |
| அறுவடைமேரை | கிராம ஊழிய சுதந்தரம் . |
| அறுவரி | தவணையில் செலுத்தும் வரி . |
| அறுவாக்குதல் | முடித்தல் ; சேகரித்தல் . |
| அறுவாதல் | செலவழிந்துபோதல் ; முடிதல் ; சேகரிக்கப்படுதல் . |
| அறுவாய் | வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம் ; குறைவிடம் ; கார்த்திகை நாள் . |
| அறுவாய்போதல் | முற்றுஞ் செலவாதல் . |
| அறுத்திடல் | அவாவறுக்கை . |
| அறுத்துக்கட்டுதல் | தாலி நீங்கியபின் மறுதாலி கட்டி மணத்தல் . |
| அறுத்துப்பேசுதல் | தீர்மானமாகப் பேசுதல் . |
| அறுத்துமுறி | மனைவியைத் தள்ளிவிடுகை . |
| அறுத்துரைத்தல் | வரையறுத்துச் சொல்லுதல் ; பிரித்துச் சொல்லுதல் . |
| அறுத்துவிட்டவள் | காண்க : அறுத்தவள் . |
| அறுத்தோடி | அரித்தோடும் நீரோட்டம் . |
| அறுதல் | கயிறு முதலியன இறுதல் ; இல்லாமற்போதல் ; தீர்தல் ; பாழாதல் ; செரித்தல் ; தங்குதல் ; நட்புச் செய்தல் ; கைம்பெண் . |
| அறுதலி | கைம்பெண் . |
| அறுதாலி | கைம்பெண் . |
| அறுதி | முடிவு ; வரையறை ; இல்லாமை ; அழிவு ; உரிமை ; அறுதிக் குத்தகை ; காண்க : அறுதிக்கிரயம் . |
| அறுதிக்கரை | நிலங்களைச் சமுதாயத்தில் வைக்காமல் தனித்தனியாய் உரிமையுள்ளவர்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் முறை . |
| அறுதிக்களநடை | ஆண்டிறுதி நெற்கணக்கு . |
| அறுதிக்கிரயம் | முடிவான விலை . |
| அறுதிச்சாசனம் | விலையாவணம் . |
| அறுதிச்சீட்டு | விலையாவணம் . |
| அறுதிப்பங்கு | சமுதாயத்தில் இல்லாத சொந்த நிலம் ; கடன் தீர்ப்பதில் கடைசித்தவணையாகக் கொடுக்கும் தொகை . |
| அறுதிப்பட்டு | கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு . |
| அறுதிப்பரியட்டம் | கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு . |
| அறுதிப்பரிவட்டம் | கோயில் மரியாதையாகத் தலையில் கட்டிக் கொடுத்துவிடும் பட்டு . |
| அறுதிப்பாடு | முடிவுபேறு . |
| அறுதிமுறி | தீர்ந்த கணக்குச் சீட்டு . |
| அறுதியிடுதல் | முடிவுக்குக் கொண்டு வருதல் ; காலங்குறித்தல் ; தீர்மானித்தல் . |
| அறுதியுறுதி | அறுதிச் சீட்டு . |
| அறுதொழில் | அந்தணர்க்குரிய ஓதல் , ஓதுவித்தல் , வேட்டல் , வேட்பித்தல் , ஈதல் ; ஏற்றல் . |
| அறுந்தருணம் | அவசர சமயம் . |
| அறுந்தறுவாய் | அவசர சமயம் . |
| அறுந்தொகை | மிச்சமின்றிப் பிரிக்கப்படும் எண் . |
| அறுநீர் | விரைவில் வற்றிப்போகும் நிலையிலுள்ள நீர் . |
| அறுப்படிகணக்கு | பேறு இழப்புகளை வகுத்துக் காட்டும் கணக்கு . |
| அறுப்பம்புல் | புல்வகை . |
| அறுப்பன்பூச்சி | தானியப் பூச்சிவகை . |
| அறுப்பின்பண்டிகை | விளைவு காலத்துக்குப்பின் காணிக்கை செலுத்தும் கிறித்தவர் சிறப்பு நாள் . |
| அறுப்பு | கதிரறுக்கை ; தாலியறுக்கை ; புண்ணை அறுத்த இடம் ; மரத்தின் அறுத்த பக்கம் ; கண்டனம் . |
| அறுப்புக்காலம் | கதிர் அறுக்கும் பருவம் . |
| அறுப்புக்கூலி | கதிர் அறுக்கும் கூலி ; மரம் முதலியன அறுக்கும் கூலி ; வாழ்க்கை உதவி ; கைம்பெண் பெறும் வாழ்க்கைப் பணம் . |
| அறுப்புக்கோடி | தாலி அறுத்தவளுக்குச் சுற்றத்தார் இடும் புதுத்துணி . |
| அறுப்புச்சீட்டு | கதிர் அறுக்கக் கொடுக்கும் ஆணை . |
| அறுப்புச்சுகம் | கைம்பெண்ணுக்குக் கொடுக்கும் வாழ்க்கை உதவி . |
| அறுப்புச்சொம்மு | பிள்ளையில்லாத கைம்பெண்ணுக்குப் புக்ககத்தார் வாழ்க்கைக்காக மொத்தமாய்க் கொடுக்கும் தொகை . |
| அன்றியுரைத்தல் | மாறுபட்டுச் சொல்லுதல் . |
| அன்றில் | கிரவுஞ்சப் பறவை ; மூல நட்சத்திரம் ; மயில் . |
| அன்றினார் | பகைவர் . |
| அன்று | அந்நாள் ; மாறுபாடு ; ஓர் அசைச்சொல் . |
| அன்றுதல் | சினத்தல் . |
| அன்றுமுதல் | அந்நாள் தொடங்கி . |
| அன்றை | அந்நாள் . |
| அன்றைக்கன்று | அன்றன்று ; ஒவ்வொரு நாளும் . |
| அன்றைக்கு | அந்த நாள் . |
| அறைகழித்தல் | மகப்பேற்றுக்குப் பின் அறையினின்று வெளிவருவதற்குரிய சடங்கு . |
| அறைகாரன் | கோயில் சரக்கறைக்கு உரியவன் . |
| அறைகுறை | அறுத்தலும் குறைத்தலுமாக உள்ள நிலை ; முற்றுப்பெறாமை ; தேவை ; துன்பம் . |
| அறைகுறைபார்த்தல் | செப்பனிடுதல் . |
| அறைகூவுதல் | போருக்கு அழைத்தல் ; வலிய அழைத்தல் . |
| அறைகூறுதல் | போருக்கு அழைத்தல் ; வலிய அழைத்தல் . |
| அறைதல் | அடித்தல் ; மோதுதல் ; சொல்லுதல் ; கடாவுதல் ; ஒலித்தல் ; பறை முதலியன கொட்டுதல் ; மண்ணெறிந்து கட்டுதல் . |
| அறைநன் | அறுப்பவன் ; அடிப்பவன் ; சொல்லுவோன் . |
| அறைப்பிள்ளை | காண்க : அறைக்குழந்தை . |
| அறைப்புரை | அறைவீடு . |
| அறைபோக்கு | அற்றுப்போதல் ; ஒதுங்குகை ; கெட்டழிகை . |
| அறைபோதல் | கீழறுக்கப்படுதல் ; கெட்டழிதல் . |
| அறைமுறையிடுதல் | குறைதெரிவித்தல் ; இல்லாமை சொல்லி முறையிடுதல் . |
| அறையல் | அறைதல் ; சொல்லல் . |
| அறையிடுதல் | அறைகூவுதல் . |
| அறையினாம் | கோயில் அறைகாரனுக்கு விட்ட மானியம் . |
| அறையுண்ணல் | அடிக்கப்படுதல் ; அறுக்கப்படுதல் . |
| அறையோ | முறையிடும் மொழி ; வெற்றிக் களிப்புப்பற்றி வரும் குறிப்புச் சொல் ; ஒரு வஞ்சினமொழி . |
| அறையோலை | வரையறை செய்யும் ஆவணம் . |
| அறைவகுத்தல் | புரையோடுதல் . |
| அறைவாசல் | கோயில் சரக்கறை ; அறையின் வாயில் . |
| அறைவாய் | கணவாய் . |
| அறைவீடு | மடைப்பள்ளி ; அறை ; உள்ளறை . |
| அன் | ஆண்பால் வினை விகுதி ; தன்மையொருமை விகுதி ; ஆண்பால் பெயர் விகுதி ; ஆண்பால் வினையாலணையும் பெயர் விகுதி ; சாரியை ; எதிர்மறை காட்டும் வடமொழி முனனொட்டுத் திரிபுசொல் . |
| அனபகம் | சமுத்திரப் பாலைக்கொடி ; அன்பு நிலையம் ; அன்பு மனம் . |
| அனபகர் | சமுத்திரப்பாலை . |
| அன்பன் | தோழன் ; கணவன் ; பக்தன் . |
| அன்பிலி | அன்பில்லாதவன் . |
| அன்பு | தொடர்புடையோர்மாட்டு உண்டாகும் பற்று ; நேயம் ; அருள் ; பக்தி . |
| அன்புகூர்தல் | பற்றுக்கொள்ளுதல் . |
| அன்புடைக் காமம் | ஐந்திணைபற்றி நிகழும் ஒத்த காமம் . |
| அன்புவைத்தல் | பற்றுக்கொள்ளுதல் ; அபிமானங் காட்டுதல் . |
| அன்புறல் | நேசத்தில் அழுந்தல் . |
| அன்மயம் | மாறு ; ஐயம் . |
| அன்மை | அல்லாமை ; தீமை . |
| அன்மொழி | ஐந்தொகை மொழிமேல் பிற தொக்குவரும்தொகை . |
| அன்மொழித்தொகை | ஐந்தொகை மொழிமேல் பிற தொக்குவரும்தொகை . |
| அன்யாபதேசம் | உள்ளுறை அல்லாத வெளிப்படைப் பொருள் ; சாக்கிட்டுச் சொல்லும் சொல் . |
| அன்வயத்தார் | சுற்றத்தார் . |
| அன்வயம் | காண்க : அன்னுவயம் ; தாதான்மிய குணம் ; இயைபு . |
| அன்வயித்தல் | செய்யுளிலும் உரைநடையிலும் ஒரு மொழியை மற்றொன்றோடு பொருட் பொருத்தமுறப் பொருத்துதல் ; ஒரு சொல் மற்றொன்றோடு இயைதல் . |
| அன்வாதேயம் | திருமணத்தின் பின்பு தாய்வழி தந்தைவழிச் சுற்றத்தார் கணவன் குலத்தினர் முதலியோரால் பெண்ணுக்குக் கொடுக்கப்படும் சீர்ப்பொருள் . |
| அன்றமை | காற்று . |
| அன்றன்று | நாள்தோறும் . |
| அன்றாடகம் | நாள்தோறும் . |
| அன்றாடம் | நாள்தோறும் . |
| அன்றாடங்காய்ச்சி | நாட்கூலி பெற்று வாழ்வோர் . |
| அன்றாடு | காண்க : அன்றன்று . |
| அன்றாடுகாசு | வழங்குகிற நாணயம் . |
| அன்றாள்கோ | அப்பொழுது ஆளும் அரசன் . |
| அன்றி | அல்லாமல் |
| அன்றிக்கே | அல்லாமல் |
| அன்றியனைத்தும் | அவையெல்லாம் . |
| அன்றியில் | அன்றி . |
| அன்றியும் | அல்லாமலும் . |
| அறுவிடுதல் | வசூலித்துவிடுதல் . |
| அறுவிதி | தீர்ப்பு . |
| அறுவு | முழுமை ; நீர்வற்றிய கால் ; கடைசிப்பகுதி . |
| அறுவை | ஆடை ; சித்திரை நாள் ; தோளிலிடும் உறி . |
| அறுவையர் | ஆடை நெய்வோர் . |
| அறை | அடி ; மோதுகை ; வெட்டுகை ; ஓசை ; சொல் ; விடை ; அலை ; உள்வீடு ; வீடு ; பெட்டியின் உட்பகுதி ; வகுத்த இடம் ; பிள்ளைபெறும் அறை ; சதுரங்கம் முதலியவற்றின் கட்டம் ; மலைக்குகை ; சுரங்கம் ; பாத்தி ; வஞ்சனை ; பாறை ; அம்மி ; சல்லி ; துண்டம் ; பாசறை ; அறுகை . |
| அறைக்கட்டளை | கோயிலில் நித்தியப் படித்தரப் பண்டங்கள் வைக்கும் இடம் ; சிலகாலம் அனுபவித்துப் பின் கோயிலுக்கு விடும்படி அளிக்கப்பட்ட இறையிலி நிலம் . |
| அறைக்கட்டு | வீட்டின் உட்பகுதி ; விழாப்பந்தல் . |
| அறைக்கீரை | பாத்திக் கீரைவகை . |
| அறைக்கீரைக்காய் | வெள்ளரிக்காய் . |
| அறைக்குழந்தை | ஈனில்லைவிட்டு நீங்காத குழந்தை |
| அன்னவூசல் | ஊஞ்சல்வகை . |
| அன்னவூர்தி | அன்னவாகனம் ; பிரமன் . |
| அன்னவூறல் | வடிகஞ்சி . |
| அன்னவட்டி | சோறு பரிமாறுவதற்குரிய கரண்டி . |
| அன்னன் | அப்படிப்பட்டவன் . |
| அன்னாசயம் | வயிறு . |
| அன்னாசி | பழச்செடிவகை . |
| அன்னாசு | பெருஞ்சீரகம் . |
| அன்னாதரம் | உணவில் விருப்பு . |
| அன்னாபிடேகம் | கடவுளுக்கு அன்னத்தால் செய்யும் திருமுழுக்கு . |
| அன்னாய் | ஓர் அசைநிலை . |
| அன்னார் | கல்நார் . |
| அன்னாலத்தி | ஆலத்திவகை ; தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள் , சோறு கலந்த ஆலத்தி ; சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி . |
| அன்னாலாத்தி | ஆலத்திவகை ; தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுழற்றும் மஞ்சள் , சோறு கலந்த ஆலத்தி ; சோற்றினால் அமைத்த விளக்கை ஏற்றித் தெய்வம் , மணமக்கள் இவர்களின் முன்பு சுற்றும் ஆலத்தி . |
| அன்னான் | அன்னவன் ; அவன் . |
| அன்னியக்குடி | புறக்குடி . |
| அன்னியகுணசகனம் | பிறர் குணத்தை அழுக்காறின்றிப் பொறுக்கையும் , பிறர் குற்றம் பொறுக்கையும் , |
| அன்னியதரம் | இரண்டிலொன்று . |
| அன்னியதா | வேறாக . |
| அன்னியதாக்கியாதி | புகழ் ஐந்தினுள் ஒன்று . |
| அன்னிதாஞானம் | மாறுபட்ட அறிவு ; விபரீத ஞானம் . |
| அன்றைத்தினம் | அந்த நாள் . |
| அன்றைநாள் | அந்த நாள் . |
| அன்ன | அத்தன்மையானவை ; ஓர் அஃறிணைப்பன்மைக் குறிப்பு வினைமுற்று ; ஓர் உவம உருபு . |
| அன்னக்களை | பசி அல்லது மிக்க உணவால் வரும் சோர்வு . |
| அன்னக்காவடி | அன்னப்பிச்சை ஏந்தும் காவடி ; வறியவன் ; அன்னப்பிச்சை எடுத்துப் பிச்சைக்காரருக்குப் பங்கிடுபவருக்கு ஏற்பட்ட இனாம் . |
| அன்னக்கொடி | அன்னம் இடுவதைக் குறிக்கக் கட்டும் கொடி . |
| அன்னக்கொடியோன் | பிரமன் . |
| அன்னக்கொண்டி | அன்ன வடிவாகச் செய்த பாத்திரம் . |
| அன்னக்கொப்பு | அன்னப் பறவையின் வடிவம் செதுக்கிய மகளிர் காதணிவகை . |
| அன்னங்கோருதல் | அன்னம் பிடித்தல் ; நென்மணி உருவாதல் . |
| அன்னசத்திரம் | அறக்கூழ்ச்சாலை . |
| அன்னசாரம் | கஞ்சி . |
| அன்னசிராத்தம் | பாகம் பண்ணிய உணவு கொண்டு செய்யும் சிராத்தம் . |
| அன்னசுத்தி | நெய் ; அன்னத்தின்மீது சுத்திக்காகச் சிறிது நெய் இடுகை . |
| அன்னணம் | அவ்விதம் . |
| அன்னத்துரோகம் | உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணுகை . |
| அன்னத்துவேடம் | உணவில் வெறுப்பு . |
| அன்னத்தூவி | அன்னப்புள்ளின் இறகு . |
| அன்னதாதா | உணவு கொடுத்து ஆதரிப்போன் . |
| அன்னதாழை | காண்க : அன்னாசி . |
| அன்னதானக்குறுவை | மூன்று திங்களில் விளையும் ஒருவகை நெல் . |
| அன்னதானச்சம்பா | சம்பா நெல்வகை . |
| அன்னதானம் | சோறு வழங்குகை ; காண்க : அன்னதானக்குறுவை . |
| அன்னதீபம் | அன்னவடிவான கோயில் விளக்கு வகை . |
| அன்னநீர் | நீருணவு . |
| அன்னப்பால் | அரிசி கொதிக்கும் பொழுது எடுக்கும் கஞ்சி ; நோயாளிக்காகக் காய்ச்சும் கஞ்சி . |
| அன்னப்பால்வைத்தல் | கஞ்சி காய்ச்சுதல் . |
| அன்னப்பிராசனம் | காண்க : சோறூட்டல் . |
| அன்னப்பூ | மகளிர் தலையிலணியும் அன்னம் போன்ற அணிவகை . |
| அன்னபக்கம் | அபிநயக் கைகளுள் ஒன்று . |
| அன்னபம் | ஆலமரம் . |
| அன்னபானம் | சோறும் நீரும் . |
| அன்னபிட்சை | அன்னமாக வாங்கும் பிச்சை . |
| அன்னபூரணி | துர்க்கையின் திருக்கோலங்களுள் ஒன்று . |
| அன்னபேதி | மருந்துச் சரக்குவகை . |
| அன்னவேதி | மருந்துச் சரக்குவகை . |
| அன்னபோதம் | பாதரசம் . |
| அன்னம் | சோறு ; புள்வகை ; கவரிமா ; நீர் ; உணவு அருந்திய இடம் ; பூமி ; ஒருவகை அணி ; தங்கம் ; மலம் . |
| அன்னம்பாறுதல் | புலம்புதல் . |
| அன்னம்பிடித்தல் | நென்மணி பால் பற்றுதல் . |
| அன்னமயகோசம் | பூதவுடலாகிய உறை ; ஐந்து உறையுள் ஒன்று . |
| அன்னமழகியரி | அரிசிவகை . |
| அன்னமழகியரிசி | அரிசிவகை . |
| அன்னமுயர்த்தோன் | காண்க : அன்னக்கொடியோன் . |
| அன்னயம் | ஆலமரம் . |
| அன்னரசம் | அன்னசத்து . |
| அன்னல் | காண்க : அனல் ; புகை . |
| அன்னவசம் | வயிறார உண்டதால் வரும் உறக்கம் . |
| அன்னவத்திரம் | உணவு உடைகள் . |
| அன்னவம் | கடல் . |
| அன்னவன் | அத்தன்மையன் ; ஒத்தவன் . |
| அன்னவாகி | தொண்டை அடியினின்று இரைப்பைக்குச் செல்லும் குழல் . |
| அன்னவாய்க்கை | அபிநயக் கைவகை . |
| அன்னவில்லை | தலையணிவகை . |
| அனத்தியயனம் | வேதம் முதலியன ஓதாது நிறுத்துகை ; வேதம் முதலியன ஓதத் தகாத காலம் . |
| அனதிகாரி | உரிமை பெறாதவன் . |
| அனந்தசத்தி | வரம்பிலா ஆற்றல் . |
| அனந்தசதுட்டயம் | ஆன்மாவின் முத்திக்குரிய நான்கு சாதனங்கள் ; அவை : அனந்த ஞானம் , அனந்த தரிசனம் , அனந்த வீரியம் , அனந்த சுகம் . |
| அனந்தசதுர்த்தசி | திருமாலைப் பூசித்தற்குரிய சாந்திர பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாள் . |
| அனந்தசயனம் | ஆதிசேடனாகிய திருமால் படுக்கை ; பாம்புப் படுக்கை ; திருவனந்தபுரம் . |
| அனந்தசயனன் | அனந்தன் என்னும் பாம்பின் மேல் பள்ளிகொண்டவன் . |
| அனந்தசாயி | அனந்தன் என்னும் பாம்பின் மேல் பள்ளிகொண்டவன் . |
| அனந்தபீதம் | மருக்கொழுந்து . |
| அனந்தம் | அளவின்மை ; அளவற்றது ; அழிவின்மை ; வானம் ; ஒரு பேரெண் ; பொன் ; மயிற்சிகை ; அறுகு ; குப்பைமேனி ; சிறுகாஞ்சொறி ; நன்னாரி ; வேலிப்பருத்தி ; கோளகபாடாணம் . |
| அனந்தமுடிச்சு | காதணிவகை . |
| அனந்தர் | உறக்கம் ; மயக்கம் ; பருத்தி ; அனந்தல் ; உணர்ச்சி ; மனத்தடுமாற்றம் ; தீர்த்தங்கரருள் ஒருவர் ; உருத்திரருள் ஒருவர் . |
| அனந்தரத்திலவன் | அடுத்த வழித்தோன்றல் . |
| அனந்தரம் | பின்பு ; வேலிப்பருத்தி ; சிலாவி என்னும் கட்டட உறுப்பு . |
| அனந்தரவன் | மருமக்கள்தாயக் குடும்பத்தில் காரணவனுக்கு இளையவன் . |
| அனந்தரவாரிசு | அடுத்த உரிமை உள்ளவன் . |
| அனந்தல் | தூக்கம் ; மயக்கம் ; மந்தவொலி . |
| அனந்தலோசனன் | கணக்கற்ற கண்களையுடைய புத்தன் . |
| அனந்தவாசி | ' பல ' என்னும் பொருளைக் குறிக்கும் சொல் . |
| அனந்தவிபவை | பார்வதி . |
| அனந்தவிரதம் | பாத்திரபதம் எனப்படும் புரட்டாசி மாத வளர்பிறை பதினான்காம் நாளில் திருமாலை வணங்கி நோற்கும் ஒரு நோன்பு . |
| அனந்தவீரியம் | கடையிலா ஆற்றல் . |
| அனந்தற்பத்தி | கொடிபடர்ந்த பந்தல் . |
| அனந்தன் | ஆதிசேடன் ; கடவுள் ; அருகன் ; சிவன் ; திருமால் ; பிரமன் ; வாசுகி என்னும் நாகம் ; பலராமன் ; வெடியுப்பு ; பதஞ்சலி ; சோரபாடாணம் . |
| அனந்தன்சம்பா | பொங்கற்சம்பா என்னும் நெல்வகை . |
| அனந்தாழ்வான் | ஆதிசேடன் ; இராமாநுசரின் சீடரான ஒரு வைணவ ஆசாரியர் ; ஒரு பழைய நாணயம் . |
| அனந்தை | பூமி ; திருவனந்தபுரம் ; சிவசக்திகளுள் ஒன்று ; பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் ; கொற்றான் ; கடுமரம் ; செங்காந்தள் ; சிறுகாஞ்சொறி ; நன்னாறி ; குப்பைமேனி ; சீந்தில் ; அறுகு . |
| அனயகம் | இருவாட்சி ; மல்லிகை . |
| அனயம் | தீவினை ; கேடு ; நன்மையின்மை ; துன்பம் . |
| அனர்த்தப்படுதல் | துன்பப்படுதல் ; குழப்பமாய் இருத்தல் . |
| அனர்த்தபரம்பரை | துன்பத்தொடரச்சி . |
| அனர்த்தம் | பொருளல்லாதது ; பயனற்றது ; துன்பம் ; கேடு . |
| அனர்வன் | காண்க : அனரவன் . |
| அனரசம் | பண்ணியவகை . |
| அனரவன் | காந்தள் . |
| அனல் | தீ ; வெப்பம் ; இடி ; கொடிவேலி . |
| அனல்காலி | காண்க : சூரியகாந்தக்கல் . |
| அனல்தல் | அழலுதல் . |
| அன்னியநாமகரணம் | இரவல் பேர் . |
| அன்னியபரம் | வேறொன்றைப் பற்றியது . |
| அன்னியபரன் | வேறோர் இடத்து மனம் பற்றியவன் . |
| அன்னியபாவம் | வேறாயிருக்கை . |
| அன்னியபிருதம் | குயில் . |
| அன்னியபுட்டம் | குயில் . |
| அன்னியம் | வேறாகை ; வேறானது ; அயல்நாட்டுள்ளது ; அயல் ; குயில் . |
| அன்னியமுட்டுதல் | சந்ததியற்றுப் போதல் , மரபற்றுப் போதல் . |
| அன்னியன் | புறம்பேயுள்ளவன் ; பிறன் ; அயலான் ; பிறநாட்டான் . |
| அன்னியாபதேசம் | வெளிப்படையான பொருள் . |
| அன்னியாயக்காரன் | வாதி , வழக்குத் தொடுப்போன் . |
| அன்னியாயம் | அநியாயம் ; பிராது . |
| அன்னியோன்னியபாவம் | ஒன்று மற்றொன்று ஆகாமை . |
| அன்னியோன்னியம் | ஒற்றுமை . |
| அன்னியோன்னியாச்சிரயம் | ஒன்றையொன்று பற்றுதல் என்னும் குற்றம் . |
| அன்னியோன்னியாலங்காரம் | ஒன்றற்கொன்று உதவியணி . |
| அன்னுவயம் | சம்பந்தம் ; காரணகாரியங்களின் நியதசம்பந்தம் ; சாதன சாத்தியங்களின் உடனிகழ்ச்சி ; கொண்டுகூட்டு ; குலம் . |
| அன்னுவயம்பண்ணுதல் | பொருத்தமுறச் சொற்களைக் கொண்டுகூட்டுதல் . |
| அன்னுவயித்தல் | பின்பற்றுதல் ; செய்யுளில் தொடரைப் பொருட் பொருத்தமுற ஒழுங்குபடுத்துதல் . |
| அன்னுழி | அப்பொழுது . |
| அன்னுழை | அவ்விடம் . |
| அன்னை | தாய் ; தமக்கை ; தோழி ; பார்வதி . |
| அன்னோ | ஓர் இரக்கக் குறிப்பு ; ஒரு வியப்புக் குறிப்பு . |
| அன்னோன் | அத்தன்மையன் . |
| அன்னோன்றி | வலியற்றவன் . |
| அனகம் | பாவமற்றது ; புண்ணியம் ; அழுக்கில்லாதது ; அழகு ; சாந்தம் ; புல்லுருவி . |
| அனகன் | பாவமில்லாதவன் ; குற்றமில்லாதவன் ; அழகுள்ளவன் ; கடவுள் . |
| அனகை | பாவமற்றவள் . |
| அனங்கத்தானம் | காமன்கோட்டம் . |
| அனங்கம் | உடலில்லாதது ; மல்லிகை ; இருவாட்சி ; வானம் ; உள்ளம் . |
| அனங்கன் | மன்மதன் . |
| அனங்கு | மன்மதன் . |
| அனங்காகமம் | காமநூல் . |
| அனசனம் | சமணரின் உண்ணாநோன்பு . |
| அனசனவிரதம் | சமணரின் உண்ணாநோன்பு . |
| அனசூயம் | பொறாமையின்மை . |
| அனத்தம் | பயன்றறது ; பொல்லாங்கு |
| அனலாடி | சிவன் . |
| அனலி | நெருப்பு ; சூரியன் . |
| அனலிமுகம் | சூரியபுடம் . |
| அனலேறு | இடி . |
| அனவத்தை | முடிவுபெறாமைக்குற்றம் . |
| அனவரததானன் | நெல் முதலியன அளக்கும் மரக்கால்வகை |
| அனவரதம் | எப்பொழுதும் . |
| அனற்கல் | சிக்கிமுக்கிக்கல் . |
| அனற்குவை | நெருப்பிடு கலம் . |
| அனற்சுக்கிரன் | கண்ணோய் வகை . |
| அனற்பொறி | தீப்பொறி . |
| அனற்றுதல் | எரித்தல் ; தகித்தல் ; சினத்தல் ; வீணே உதவுதல் ; வயிறுளைதல் ; முணங்குதல் . |
| அனன்னியம் | வேறன்மை ; பிரிப்பற்ற தன்மை . |
| அனன்னியன் | தான் கொண்ட புகலிடத்தைத் தவிர வேறு கதியைத் தேடாதவன் . |
| அனன்னுவயம் | சாதனை சாத்தியம் தம்மில் கூட்ட மாத்திரம் சொல்லாதே இரண்டன் உண்மையைக் காட்டும் திருட்டாந்த ஆபாசம் . |
| அனன்னுவயாலங்காரம் | இயைபின்மையணி . |
| அனனிலம் | அனல்நிலம் ; பாலைநிலம் . |
| அனனுபாடணம் | தோல்வித் தானங்களுள் ஒன்று . |
| அனாகதநாதம் | பராசக்தி . |
| அனாகதம் | காண்க : அனாகதவெடுப்பு ; ஆறு ஆதாரங்களுள் ஒன்று ; நிகழாத செய்தி ; எதிர்காலம் ; புதிய சீலை . |
| அனாகதவெடுப்பு | தாளம் முன்னும் பாட்டுப் பின்னுமாக வரும் எடுப்புவகை . |
| அனாகுலன் | கவலையற்றவன் . |
| அனாசக்தன் | பற்றில்லாதவன் . |
| அனாசக்தி | பறறின்மை . |
| அனாசாரம் | ஒழுக்கமின்மை . |
| அனாசி | அன்னாசி . |
| அனாசிரயம் | பற்றுக்கோடு அற்றது . |
| அனாசிருதன் | பிறரைச் சார்ந்திராதவன் ; சிவபேதம் . |
| அனாசிருதை | பதினாறு கலையுள் ஒன்றான யோகத்தானம் ; அனாசிருதனின் சக்தி . |
| அனாதரம் | புறக்கணிப்பு . |
| அனாதரவு | உதவியின்மை . |
| அனாதரித்தல் | புறக்கணித்தல் ; ஏற்றுக் கொள்ளாது தள்ளுதல் . |
| அனாதன் | திக்கற்றவன் . |
| அனாதி | தொடக்கமில்லாதது ; தொடக்கம் தெரியாதது ; கடவுள் ; சிவபிரான் ; பார்வதி ; அனாதித்திட்டு . |
| அனாதிக்கரம்பு | காண்க : அனாதித்தரிசு . |
| அனாதிகாரணம் | மூலகாரணம் . |
| அனாதிசித்தன் | அனாதியே சித்தனாயிருப்பவன் . |
| அனாதிசைவன் | சதாசிவமூர்த்தி . |
| அனாதித்தரிசு | நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம் . |
| அனாதித்திட்டு | நெடுங்காலம் பயிரிடப்படாத நிலம் . |
| அனாதிநித்தம் | என்றும் நித்தியமாயுள்ளது . |
| அனாதிப்பஞ்சர் | காண்க : அனாதித்தரிசு . |
| அனாதிபந்தம் | இயல்பாகவே உள்ள பாசக்கட்டு . |
| அனாதிபாழ் | நெடுங்காலம் பாழடைந்துள்ள இடம் . |
| அனாதிபீடு | காண்க : அனாதித்தரிசு . |
| அனாதிபெத்தசித்துரு | ஆன்மா . |
| அனாதிபெத்தன் | சீவான்மா . |
| அனாதிபோதம் | இயல்பாகவே பாசங்களினின்று நீங்குகை . |
| அனாதிமுத்தன் | கடவுள் . |
| அனாதேயம் | பிரகிருதி தத்துவவகை . |
| அனாமத்து | தனியான ; வேறுபட்ட . |
| அனாமத்துச்சிட்டா | காண்க : அமானத்துச்சிட்டா . |
| அனாமயம் | நோயின்மை . |
| அனாமயன் | நோயற்றவன் ; அருகன் . |
| அனாயம் | முறைகேடு ; வீண் . |
| அனாயாசம் | வருத்தமின்மை . |
| அனாரதம் | எப்போதும் . |
| அனாரியதித்தம் | காண்க : நிலவேம்பு . |
| அனாவசியகம் | தேவையல்லாதது . |
| அனாவசியம் | தேவையல்லாதது . |
| அனாவிதம் | வீணைவகை . |
| அனாவிருட்டி | மழையின்மை . |
| அனாவிலன் | சுக்கிரன் . |
| அனான்மவாதம் | ஆன்மா இல்லையென்று கூறும் வாதம் . |
| அனான்மா | ஆன்மாவின் வேறான அசித்து . |
| அனி | நெற்பொறி ; பெரிய பெட்டி . |
| அனலுதல் | அழலுதல் . |
| அனல்வீசுதல் | வெக்கையடித்தல் . |
| அனல்வென்றி | தங்கம் . |
| அனலகம் | பேய்க்கொம்மட்டி . |
| அனலடுப்பு | கூண்டடுப்பு . |
| அனலநட்சத்திரம் | செவ்வாய் நின்ற நாளுக்கு ஏழு , பதினான்கு , பதினாறு , இருபத்தைந்தாம் நாள்கள் . |
| அனலம் | நெருப்பு ; காண்க : அனலநட்சத்திரம் ; கொடிவேலி . |
| அனலன் | அக்கினிதேவன் ; எட்டு வசுக்களுள் ஒருவன் . |
| அனலாச்சியம் | நரகவகை . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.