கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 19 ஜனவரி, 2012

அகநானுறு-21


16. தலைவி கூற்று

     நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
     தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
     மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
     நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
5   யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
     தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
     கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
     காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
     பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
10  'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
     கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
     'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
     நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
     கரைய, வந்து விரைவனென் கவைஇ
15  களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
     நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
     பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
     அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
     மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?



பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது
மருதம்

சாகலாசனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;