தாய் சந்திரமதி நாய், பாம்பு, முதலை, ஆடு, கோழியாகப் பிறக்கிறாள்;
யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன்,
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
வீபொரு ளானை அகன்று பிறனும் ஓர் மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின் மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு மாவும் புரைப மலர் அன்ன கண்ணார். |
59 |
நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள் நன்குடை யானை நயந்தனர் கோடலின் வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர் கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப. |
60 |
முருக்குஅலர் போல்சிவந்து ஒள்ளிய ரேனும் பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார் அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப. |
61 |
மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல் தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப பைத்துஅரவு அல்குல் படிற்றுஉரை யாரொடு துய்த்துக் கழிப்பது தோற்றமொன்று இன்றே. |
62 |
நகைநனி தீது துனிநன்றி யார்க்கும் பகைநனி தீது பணிந்தீ யாரோடும் மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே வகைமிகு வானுலகு எய்திவாழ் பவரே. |
63 |
பெண்டிர் மதியார் பெருங்கிளை தான் அது கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப வெண்டறை நின்று வெறுக்கை இலராயின் மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார். |
64 |
சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர் நல்லவை யாரும் நன்மதிப் பார் அல்லர் கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ. |
65 |
சயந்தியின் எல்லைவிட்டுச் சாலவு மகதநாட்டுக்கு இயைந்துநன் கெழுந்துசென்றே இரவியின் உதய முற்றான் நயந்தனன் தேவிகாதனன் மனத்தழுங்கிப் பின்னும் வியந்து நல்லமைச்சர் தேற்றவெங்கடும் கானம் புக்கான். | 151 |
செத்தநற்தேவி தன்னைத் திருப்பவு மீட்கலாமென்று அத்திசை முன்னிநல்ல வருவழிப்பட்டுச் செல்ல அத்தியும் பிணையுமேக வாண்மயிலாடக் கண்டு வந்தவன் கவிழ்ந்துரைக்கு மனனமை மனையையோர்ந்தே. | 152 |
கோட்டுப்பூ நிறைந்திலங்குங் கொடிவகைப் பூவுங்கோலம் காட்டு நந்தேவியென்று கால்விசைநடவா மன்னன் காட்டினன் குன்றமேறிக் கானகங்கழிந்து போந்து சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறைமகதஞ் சேர்ந்தான். | 153 |
மருவிய திருவினானம் மகதவர்க் கிறைவனாமம் தருசகனென்னு மன்னன்றானை வேற்றலைவன் மாரன் இருந்தினி துறையுமிக்க விராசநற்கிரியந் தன்னிற் பொருந்திச் சென்ன கர்ப்புறத்திற் பொலிவுடனிருந் தானன்றே. | 154 |
காமநற்கோட்டஞ் சூழக் கனமதில் இலங்கும் வாயிற் சோமநற்றாபதர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில் நாமநல் வயந்த கன்னு நன்றறி காக துண்ட மாமறையாளற் கண்டு வஞ்சகஞ் செப்பினானே. | 155 |
திருநிறை மன்னன் தன்னைச் சீர் மறையாளன் கண்டே இருமதியெல்லை நீங்கியிப்பதியுருப்ப வென்றும் தருவநீயிழந்த தேவி தரணியிங்கூட வென்ன மருவியங்கிருக்குமோர் நாண் மகதவன் தங்கை தானும். | 156 |
பருவமிக்கிலங்குங் கோதைப் பதுமை தேரேறிவந்து பொருவில் காமனையே காணாப் புரவலற் கண்டுகந்து மருவும் வாசவதத்தை தான் வந்தனளென்றுரைப்பத் திருநகர் மாதுகண்டு திகைத்துளங் கவன்று நின்றாள். | 157 |
யாப்பியாயினியாளென்னும் அவளுடைத் தோழி சென்று நாப்புகழ் மன்னற்கண்டு நலம்பிறவுரைத்துக் கூட்டக் காப்புடைப் பதுமையோடுங் காவலன் கலந்து பொன்னின் சீப்பிடக்கண் சிவக்குஞ் சீர் மங்கை நலமுண்டானே. | 158 |
எழில்பெறு காமக்கோட்டத் தியற்கையிற் புணர்ந்துவந்து வழிபெறும மைச்சரோடு வத்தவனினிய கூறும் மொழியமிர் தந்நலாளை மோகத்திற் பிரியேனென்னத் தொழுதவர் பெறுக போகந் தோன்றனீயென்று சொன்னார். | 159 |
மாட்சிநற் சிவிகையேறி மடந்தை தன்னோடும் புக்குத் தாழ்ச்சியின் மாளிகைக்குட் டக்கவண் மனங்குளிர்ப்பக் காட்டினன் வீணை தன்னைக்காவலன் கரந்திருப்ப ஓட்டிய சினத்தனாய வுருமண்ணுவிதனைச் செய்யும். | 160 |
ஆகியதறிந்து செய்யு மருளுடை மனத்தனான யூகியங்குஞ்சை தன்னையுற்றருஞ் சிறை விடுக்கப் போக நற்றேவியோடும் போந்ததுபோல நாமும் போகுவமன்னன் மாதைப் புதுமணம் புணருவித்தே. | 161 |
உருமண்ணுவா வனுப்ப வுற்றமுந்நூறு பேர்கள் மருவியவிச்சை தன்னான் மன்னவன் கோயிறன்னுள் மருவினர் மறைந்துசென்றார் மன்னவன்றாதை வைத்த பெருநிதி காண்கிலாமற் பேர்க்குநர்த் தேடுகின்றான். | 162 |
யானரிந் துரைப்பனென்றே யரசனைக்கண்டு மிக்க மாநிதிகாட்டி நன்மை மகதவனோடுங் கூடி ஊனமில் விச்சை தன்னாலுருமண்ணுப் பிரிதலின்றிப் பானலங்கிளவி தன்னாற் பரிவுடனிருக்கு நாளில். | 163 |
அடவியாமரசன் மிக்கவயோத்தியர்க் கிறைவன் றானைப் படையுறு சாலியென்பான் பலமுறு சத்தியென்பான் முடிவிரிசிகையன் மல்லன் முகட்டெலிச் செவியனென்பான் உடன்வருமெழுவர் கூடியொளிர் மகதத்து வந்தார். | 164 |
தருசகற் கினிதினாங்கடரு திறையிடுவ தில்லென நெரியென வெகுண்டு வந்தேயினிய நாடழிக்கலுற்றார் தருசகராசன் கேட்டுத் தளரவப் புறத்தகற்ற உருமண்ணுவா மனத்திலு பாயத்திலுடைப்பனென்றான். | 165 |
கள்ள நல்லுருவினோடுங் கடியகத்துள்ளே யுற்ற வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவினோடு தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப்போந்து பள்ளிப்பாசறை புகுந்து பலமணி விற்றிருந்தார். | 166 |
மன்னன் வீர மகதத்திற்குக் கேளாத்தம் இன்னு ரைகளியல்பின் வரவரத் துன்னு நாற்படை வீடு தோன்றிரவிடை உன்னினர்கரந் துரைகள் பலவிதம் | 167 |
உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின் முரியும் சேனை முயன்றவ ரோடலிற் றெருளினர் கூடிச் சேரவந் தத்தினம் மருவி யையம் மனத்திடை நீங்கினார். | 168 |
இரவு பாசறை யிருந்தவர் போனதும் மருவிக் கூடியே வந்துடன் விட்டதும் விரவி யொற்றர்கள் வேந்தற் குரைத்தலின் அரசன் கேட்டுமிக் கார்செயலென்றனன். | 169 |
வார ணிக் கழல் வத்தவன் றன்செயல் ஓரணி மார்பனுருமண்ணு வாவுமிக் கேரணிய ரசருக் கியல் கூறலும் தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தனன். | 170 |
ஆரா வுவகையுள் ளாகி யரசனும் பேரா மினியயாழ்ப் பெருமகன் தன்னையே சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன் நேரா மாற்றரை நீக்குவனானென்றான். | 171 |
உலம்பொருத தோளுடை யுதயண குமரனும் நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப் புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன் நலம்பெறத் திறையுடனரபதியு மீண்டனன். | 172 |
வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத் தருசகன் எதிர்கொண்டு தன்மனை புகுந்துபின் மருவநற் பதுமையாமங்கை தங்கை தன்னையே திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே அளித்தனன். | 173 |
புதுமணக் கோலமிவர் புனைந்தன ரியற்றிப்பின் பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன் துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம் அதிர்மணி யாற்றுந்தோ ராயிரத் திருநூறே. | 174 |
அறுபதினொண் ணாயிர மானபடை வீரரும் நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும் பெறுகவென் றமைத்துடன் பேர் வருட நாரியும் உறுவடிவேற் சததியு முயர் தரும தத்தனும். | 175 |
சத்திய காயனுடன் சாலவு மமைச்சரை வெற்றிநாற் படைத்துணை வேந்தவன்பிற் செல்கென்று முற்றிழை யரிவைக்கு முகமலரச் சீதனம் பற்றியன்பினால் அளித்துப் பாங்குடன் விடுத்தனன். | 176 |
வெல்லுமண்ண லைமிக வேந்தனன்ன யஞ்சில சொல்லிநண்பினாலுறைத்துத் தோன்றலை மிகப்புல்லிச் செல்கென விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன் எல்லைதன்னா டெய்திப்பினினியர் தம்பி வந்தனர். |
ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள் மேவரும் வான்பொருள் தந்துநின் தோள்நம்பி யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய. |
51 |
வாரி பெருகப் பெருகிய காதலை வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி அறஅறும் வார்புனல் ஆற்றின் வகையும் புரைப. |
52 |
எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின் எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு அங்ஙனம் ஆகிய யாழும் புரைப. |
53 |
கரணம் பலசெய்து கையுற்று அவர்கட்கு அரணம் எனும் இலர் ஆற்றிற் கலந்து திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப. |
54 |
நாடொறும் நாடொறும் நந்திய காதலை நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின் நாடொறும் நாடொறும் நந்தி உயர்வுஎய்தி நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப. |
55 |
வனப்பிலர் ஆயினும் வளமையு ளோரை நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம் கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப் புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப. |
56 |
தம்கண் பிறந்த கழிஅன்பி னார்களை வன்கண்மை செய்து வலிய விடுதலின் இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப. |
57 |
ஒத்த பொருளால் உறுதிசெய் வார்களை எத்திறத் தானும் வழிபட்டு ஒழுகலின் பைத்தரவு அல்குல்பொன் பாவையின் நல்லவர் பத்தினிப் பெண்டிர் படியும் புரைப. |
58 |
இடபகற்குத் தன்னுரை இனிது வைத்துரைத்துப் பொன் முடியுடைய நம் அரசன் முயற்சியது என் என பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்த பின் அடியிடவிடம் பொறாமையானை மண்ணிற் சாய்ந்ததே. | 127 |
சவரர் தாம் வளைத்ததும் தாம் அவரை வென்றதும் உவமையில் வயந்தகன்றனூர் வந்து உடன்போந்ததும் தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும் குவிமுலை நற்கோதை அன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும். | 128 |
இழந்தபூமி எண்ணிலன் இனிய போகத்தழுந்தலும் குழைந்தவன் உரைப்ப யூகி கூரெயிறிலங்கறக்கு விழைந்தவேந்தன் தேவியை விரகினாற் பிரித்திடின் இழந்தமிக்கரசியல் கைகூடு மென எண்ணினான். | 129 |
சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன் ஆங்கவனறியக் கூறியான யூகி தன்னுயிர் நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும் பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன். | 130 |
படத்துருவி லொன்றினைப் பரந்தமேற் கண்ணாகவைத்து இடக்கண் நீக்கியிட்டு மிக்கியல்புடன் கொடுத்துடன் முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள் இடிக்குரனற் சீயமாம் இறைவனையே கண்டனள். | 131 |
வேந்தனுங்கண்டே விரும்பி வினயஞ்செய் திருக்கென பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லியபின் சேந்ததன் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன் போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள். | 132 |
அவனுரையறிந்திலன் அறிந்த நீ யுரைக்கெனத் தவிசிடை யிருந்தவடான் படத்தைக் காட்டினள் புவியரசன் கண்டுடன் புலம்பி மிகவாடிப்பின் தவமலி முனிவனைத் தான் வணங்கிக் கேட்டனன். | 133 |
முடிமுதல ரசினோடு முனிவறநின்று ணைவனை வடிவுடன் பெறுவையென்ன வன்மையினிற்றேறிமீக் கடிகமழ்ச்சாரலிற் கண்ட மாதவன் மகள் துடியிடை விரிசிகையைத் தோன்றன் மாலைசூட்டினான். | 134 |
கலந்தனனிருந்து பின் கானகத் தழைதர நலந்திகழ் மாதர்செப்ப நரபதியும் போயினன் கலந்திகழும் யூகியும் காவலன் தன் தேவியை சிலதினம் பிரிவிக்கச் சிந்தை கூரித் தோன்றினான். | 135 |
மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாதரைத் துன்னுநன் திருவரைத் தொக்குடன் இருக்கவென்று மன்னன் மனைதன் மனைக்கு மாநிலச் சுருங்கை செய் தன்னவண் மனை முழுதுமறைந்தவர் தீயிட்டனர். | 136 |
நிலந்திகழ் சுருங்கையினீதி மன்னன் றேவியை இலங்கு சாங்கியம் மகளெழில் பெறக் கொண்டுவந் தலங்கலணி வேலினானமைச்சன் மனை சேர்ந்தனன் துலங்கி வந்தடி பரவிச் சொல்லினிது கூறுவான். | 137 |
என்னுடைய நற்றாயே நீ எனக்கொரு வரங்கொடு நின் அரசன் நின்னைவிட்டு நீங்குஞ் சிலநாளன்றி நன்னில மடந்தை நமக்காகுவதும் இல்லையே என்னவுடன் பட்டனள் இயல்புடன் கரந்தனள். | 138 |
சவரர் வந்து தீயிட்டுத் தஞ்செயலினாக்கிமிக் கவகுறிகள் கண்டரசனன் பிற்றேவிக் கேதமென் றுவளகத் தழுங்கி வந்துற்ற கருமஞ் சொலக் கவற்சியுட் கதறியே கலங்கி மன்னன் வீழ்ந்தனன். | 139 |
பூண்டமார் பனன்னிலம் புரண்டு மிக்கெழுந்துபோய் மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவன் நான் என்றான் நீண்டதோள் அமைச்சரு நின்றரசற் பற்றியே வேண்டித் தானுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான். | 140 |
கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர் களென்றபின் எரிப்பொன்னணி காட்டென வெடுத்து முன்புவைத்தனர் நெப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென விருப்புடை நற்றேவிக்கு வேந்தன் மிக்கரற்றுவான். | 141 |
மண்விளக்கமாகி நீ வரத்தினெய்தி வந்தனை பெண்விளக்கமாகி நீ பெறற்கரியை யென்று தன் கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்குவான் புண் விளக்கிலங்குவேற் பொற்புடைய மன்னவன். | 142 |
மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும் தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும் வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை நான் இடர்ப்படுவது நன்மையோ நீவீந்ததும். | 143 |
நங்கை நறுங்கொங்கையே நல்லமைக் குழலியெம் கொங்குலவ கோதைபொன் குழையிலங்கு நன்முகம் சிங்கார முனதுரையுஞ் செல்வி சீதளம்மதி பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன். | 144 |
வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவி நீ நாணின் பாவைதானுநீ நலந்திகழ் மணியுநீ காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ தேரணி முகங்காட்டெனச் சொல்லியே புலம்புவான். | 145 |
துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா அன்புகிக்கு அரற்றுவதை அகல்வது பொருளென நன்புறும் அமைச்சர்சொல்ல நரபதியும் கேட்டனன் இன்புறும் மனைவி காதலியல்புடன் அகன்றனன். | 146 |
அண்ண றன்னிலை அறிந்த யூகியும் திண்ணி தின்னியல் செய்கை யென்றுரு மண்ணு வாவினை மன்னன் அண்டையில் எண்ணுங் காரிய மீண்டுஞ் செய்கென்றான். | 147 |
தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான் துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன் மன்னற் குறுதி மறித்தினிக் கூறும் பொன்னடி வணங்கிப் புரவலன் கேட்ப. | 148 |
வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில் இற்றவர்க் காட்டும் இயல்பினனூலுரை கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன் தத்துவ முனியுளனாமினிச் சார்வோம். | 149 |
வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் தன்னைநோக்கி அத்திசை போவோம் என்றே அகமகிழ்ந்து இனிய கூறி வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரிமேவ ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே. | 150 |
உய்த்து ஒன்றி ஏர்தந்துஉழஉழுது ஆற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும் மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு எய்த்து உழந்தேதான் இடர்ப்படு மாறே. |
43 |
செந்நெலங் கரும்பினொடு இகலும் தீஞ்சுவைக் கன்னல் அம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும் இன்னவை காண்கிலன் என்று பூகமும் முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே. |
44 |
குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும் அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும் நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ . |
45 |
கெட்டேம் இதுஎம் நிலைஎன்று சார்தற்கண் நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம் பெட்டது சொல்லிப் பெரிதுஇகழ்ந்து ஆற்றவும் எட்டவந்து ஓர்இடத்து ஏகிநிற்பவே. |
46 |
தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட எண்ணெய்கொண்டு ஈட்டற்கு இவறுதல் என்ஒக்கும் பெண்மனம் பேதித்து ஒருப்படுப்பென் என்னும் எண்ணில் ஒருவன் இயல்புஎண்ணும் ஆறே. |
47 |
நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின் பேணலும் அன்பும் பிறந்துஉழிப் போதுசெய்து ஆணைப்பெண் ஐய அணைக்குறு மாறே. |
48 |
அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல்ஒக்கும் முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும் நன்குஅறிவு இல்லான் அஃதுஅறி யாதவற்கு இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே. |
49 |
யாறொடு யாழ்ஞெலி கோல்நில வார்கொடிப் பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்குஇவை வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம். |
50 |
சால்கவென்று இறைவன் செப்பத் தன்னுடைக் கையினோச்சி கால்களின் விரலினெற்றி கனக்கநன் கூன்றி நின்று மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான். | 101 |
மருமகன் நீயே என்று மன்னவன் இனிமை கூறி வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்து உடன் இருந்த போழ்து திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பியென்னப் பெருவலியுரைப்பக் கேட்டுப் பெருமகன் உணர்த்தலானான். | 102 |
வேந்தன் தன் மக்கட்கெல்லாம் வேன்முதல் பயிற்றுவித்தும் பூந்துகில் செறிமருங்குற் பொருகயற்கண்ணி வேய்த்தோள் வாய்ந்த வாசவதத்தைக்கு வருவித்தும் வீணைதன்னைச் சேர்ந்த வணிகரிலின்பிற் செல்வனும் மகிழ்வுற்றானே. | 103 |
உரையினிலரியனாய உதயண குமரன் ஓர் நாள் அரசிளங்குமரர் வித்தை யண்ணனீ காண்கவென்ன வரைநிகர் யானையூர்ந்து மாவுடன் தேரிலேறி வரிசையிற்காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான். | 104 |
வாசவதத்தை வந்து மன்னனை இறைஞ்ச நல்யாழ் பேசவை தளரக் கேட்டுப் பெருமகன் இனியனாகி ஆசிலா வித்தையெல்லாம் ஆயிழை கொண்டாள் என்றே ஏசவன் சிறைசெய்குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றான். | 105 |
விசும்புயல் குமரர்தாமும் வியந்துடனிருப்பப் புள்ளும் பசும் பொனினிலத்தில் வீழப்பாவையர் மயக்கமுற்றார் வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாடலோடும் அசும்பறாக் கடாத்து வேழத்தரசனு மகிழ்ந்தானன்றே. | 106 |
வத்தவன் கையைப் பற்றி மன்னவன் இனிது கூறி வத்தவன் ஓலை தன்னுள் வளமையிற் புள்ளியிட்டும் வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன வத்தவ நாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார். | 107 |
ஓரிரண்டாயிரங்க ளோடை தாழ் மத்த யானை ஈரிரண்டாயிரங்களெழின் மணிப் பொன்னின்றேரும் போரியல் புரவி மானம் பொருவிலை யாயிரம்மும் வீரர்கள் இலக்கம் பேரும் வீறுநற்குமரற்கீந்தான். | 108 |
யூகியும் வஞ்சந்தன்னையுற்றுச் சூழ்வழாமை நோக்கி வாகுடன் குறத்திவேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம் நகரத்தினகரழிந்த நடுக்கங்கள் தீர வெண்ணிப் போக நன்னீரிலாடப் புரத்தினில் இனிதுரைத்தான். | 109 |
மன்னவன்றன்னோ டெண்ணி மாநகர் திரண்டுசென்று துன்னிய நீர்க்கயத்திற்றொல் புரப் புறத்திலாட நன்னெறி வத்தவன்றானன் பிடியேறி நிற்ப உன்னிய யூகிமிக்க ஊரில் தீயிடுவித்தானே. | 110 |
பயந்து தீக்கண்டுசேனை பார்த்திபன் தன்னோடுஏக வயந்தகன் வந்துரைப்ப வத்தவகுமரன் தானும் நயந்துகோன் மகளைமிக்க நன்பிடியேற்றத் தோழி கயந்தனை விட்டுவந்த காஞ்சனை ஏறினாளே. | 111 |
வயந்தகன் வீணைகொண்டு வன்பிடியேறிப் பின்னைச் செயந்தரக் கரிணிகாதிற்செல்வன் மந்திரத்தைச் செப்ப வியந்து பஞ்சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான். | 112 |
நலமிகு புகழார் மன்னநாலிரு நூற்றுவில்லு நிலமிகக் கடந்ததென்ன நீர்மையிற் றந்த தெய்வம் நலமிகத் தருமின்றென்ன பண்ணுகை நம்மாலென்னக் குலமிகு குமரன் செல்லக் குஞ்சரம் அசைந்ததன்றே. | 113 |
அசைந்த நற்பிடியைக் கண்டே யசலித மனத்தராகி இசைந்த வரிழிந்தபின்னை இருநில மீதில்வீழத் தசைந்த கையுதிரம் பாயச்சால மந்திரமங்காதில் இசைந்தவர் சொல்லக் கேட்டே இன்புறத் தேவாயிற்றே. | 114 |
உவளகத்திறங்கிச் சென்றேயூர் நிலத்தருகு செல்லப் பவளக் கொப்புளங்கள் பாவை பஞ்சிமெல்லடி யிற்றோன்றத் தவளைக்கிண் கிணிகண்மிக்க தரத்தினாற் பேசலின்றித் துவளிடையருகின் மேவுந்தோழி தோள்பற்றிச் செல்வாள். | 115 |
பாவைதன் வருத்தங்கண்டு பார்த்திபன் பாங்கினோங்கும் பூவை வண்டரற்றுங் காவுட்பூம்பொய்கை கண்டிருப்ப வாவு நாற்படையுங்கொண்டு வயந்தகன் வருவேனென்றான் போவதே பொருளூர்க்கென்று புரவலனுரைப்பப் போந்தான். | 116 |
சூரியன் குடற்பாற்சென்று குடவரை சொருகக்கண்டு நாரியைத் தோழிகூட நன்மையிற் றுயில்கவென்று வீரியனிரவு தன்னில் விழித்து உடன் இருந்தபோழ்து சூரியன் உதயம்செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார். | 117 |
வந்த வரம்புமாரி வள்ளன்மேற் றூவத்தானும் தந்தனு மேவிச்சாராத் தரத்தினால் விலக்கிப்பின்னும் வெந்திறல் வேடர்வின்னாண் வெந்நுனைப் பகழிவீழ நந்திய சிலைவளைத்து நன்பிறையம்பின் எய்தான். | 118 |
செய்வகையின்றி வேடர் தீவனங்கொளுத்த மன்னன் உய்வகையுங்களுக்கின்றுறு பொருளீவன் என்ன ஐவகை அடிசில் கொண்டே யான நாற்படையுஞ் சூழ மெய்வகை வயந்தகன் தான் வீறமைந்தினிதின் வந்தான். | 119 |
அன்புறும் அடிசில் உண்டே அற்றை நாள் அங்கிருந்தார் இன்புறு மற்றை நாளினெழிற் களிற்றரசனேற நன்புறச் சிவிகையேற நங்கை நாற்படையுஞ் சூழப் பண்புறு சயந்திபுக்குப் பார்த்திபன் இனிது இருந்தான். | 120 |
உஞ்சை நகர்விட்டகன்று உதயண குமாரனும் தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின் என் செய்தனன் என்றிடினியம்புதும் அறியவே கொஞ்ச பைங்கிளி மொழிதன்கூடலை விரும்பினான். | 121 |
இலங்கிழை நன்மாதரை யினிமை வேள்வித்தன்மையால் நலங்கொளப் புணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல் புலங்களின் மிகுந்தபோகம் பொற்புடன் நுகர்ந்தனன் அலங்கலணி வேலினான் அன்புமிகக் கூரினான். | 122 |
கைம்மிகு காமம்கரை காண்கிலன் அழுந்தலில் ஐம்மிகுங் கணைமதன் அம்புமீக் குளிப்பவும் பைம்மிகும் பொனல்குலாள் படாமுலை புணையென மைம்மிகும் களிற்றரசன் மாரன்கடல் நீந்துவான். | 123 |
இழந்த தன் நிலத்தையும் எளிமையும் நினைப்பிலன் கழிந்த அறமுமெய்ம்மறந்து கங்குலும் பகல்விடான் அழிந்தி அன்பிற்புல்லியே அரிவையுடைய நன்னலம் விழுந்தவண் மயக்கத்தில் வேந்தன் இனிச் செல்கின்றான். | 124 |
ஒழுகுங்காலை யூகியாம் உயிரினும் சிறந்தவன் எழில் பெருகும்சூழ்ச்சிக் கணினியதன் வரவதாற் பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன் எழின் மங்கை இளம்பிடி யேற்றிஏகக் கண்டனன். | 125 |
மிஞ்சி நெஞ்சிலன்புடன் மீண்டு வர எண்ணினன் உஞ்சைநகர்க்கு அரசன் கேட்டுள்ளகத் தழுங்கினன் விஞ்சுபடை மேலெழாமை விரகுடனறிந்தந்த உஞ்சை எல்லை விட்டுவந்து யூகிபுட்பகஞ் சென்றான். | 126 |
ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம் மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே. |
35 |
இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின் கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர் இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும் புல்லென்று காட்டும் புணர்வதும் அன்றே. |
36 |
வேல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக் கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம் நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே. |
37 |
இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றஅல்ல; வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக்கு என்றும்என்றும் விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். |
38 |
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகைஅவை உள்வழிப் பற்றா வினையாய்ப் பலபல யோனிகள் அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே. |
39 |
உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும் பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குஉறும் ஆறே. |
40 |
தானம் செய்திலம் தவமும் அன்னதே கானம் தோய்நில விற்கு அழிவு எய்தின நானம் தோய்குழல் நமக்குஉய்தல் உண்டோ மானம்தீர்ந்தவர் மாற்றம்பொய் அல்லவால். |
41 |
பருவந்து சாலப் பலர்கொல்என்று எண்ணி ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின் வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன் ஒருவன் உலகிற்கு உளன்என்னும் ஆறே. |
இந்திர லோகம் விட்டிந்திரன் வந்தனன் அந்தரத் திருந்தியான் அன்பினின் வந்தேன் இந்திரன் எனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத் தந்திரக் குமக்குத் தானிறை யாமென. | 78 |
புற்றினில் உறையும் பொறிவரி ஐந்தலைப் பற்றரு நாகம் பற்றி வந்தினிதா உற்ற இந்நகரத்துள் சிறை வைத்தார் அற்றதை எங்கும் அறியக் காட்டினர். | 79 |
மருளுந் தெருளும் வரம்பில பயிற்றித் திரளுறு செனங்கள் திறவதிற் சூழப் பெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே அருஞ் சிறைப்பள்ளி அருகினிற் சேர்ந்தான். | 80 |
கிளைத்தலை இருவர் கற்றகிளர் நரப்பிசையுங் கீதம் தளைச் சிறை மன்னன் கேட்பத்தான் மகிழ்குழலினூத உளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியாமென மகிழ்ந்து களைந்தனன் கவலையெல்லாம் காவலர்க்குணர்த்திப் போந்தான். | 81 |
பலகொடி வாயிற்செல்லப் பார்மன்னன் சேனைவந்து நலமுறுவடிவு நோக்க நகரத்தின் கோடுபாய்ந்த கலனணிமார் வடுவ்வைக் கஞ்சுகத்துகிலின் மூடத் தலைமுதல் அடியீராகத் தரத்தினாற் கண்டுபோந்தார். | 82 |
பித்தனற் பேயனென்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு வெற்றிநற் சேனைமற்றும் வெஞ்சிறை காக்கவென்றான் மற்றினி யூகிபோந்து மலிகுடிப் பாக்கஞ் சேர்ந்தே அன்றைநாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான். | 83 |
வாளொடு கைவிலேந்தி வயந்தகன் தன்னோடு எண்ணித் தோளன் தோழன் கூடத்தூபத்துக் கேற்ற வத்தும் வேளையீதென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித் தாளொத்த கொம்மை மீதிற்றரத்தினாலிழிந் தானன்றே. | 84 |
ஆனை தன்னிலை கண்டெய்தி அகிலிடும் புகையு மூட்டிச் சேனை மன்னகரழித்துச் சிறைவீடுன் கடனேயென்று மான நல்யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப யானை தன்மதக்கம் பத்திலருந்தனை யுதறித் தன்றே 85 |
நீங்கிட மிதுவென்றெண்ணி நிலைமதிலேறிப் போகத் தூங்கிருடன் னிலானை சுழன்றலைந் தோடப்பாகர் பாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன ஆங்கது பிடுங்கிக் கையால வரைக்கொன்றிட்ட தன்றே. | 86 |
வேழமும் மதங்கொண்டோ ட வேந்தன்கேட்டினிது எழுந்து வேழ நன் வேட்டங்காண வெம்முலை மாதரோடும் ஆழிநல் இறைவன் தானும் அணிமிகு மாடமேறிச் சூழநன் மாதர் நிற்பத்துளக்கின்றி நோக்கினானே. | 87 |
கூடமாளிகை களெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன் மாடமு மதிலுமற்று மறித்தஃ திடித்துச்செல்ல ஆடவர் கூடியோடு யயில்குந்தந் தண்டமேந்தி நாடிநற்கையால் தட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார். | 88 |
கூற்றுருவெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்களாடக் காற்றென முழக்கி வேழங்கண்ட மாத்தரைத்தன்கையால் நாற்பத்தெண் பேரைக்கொன்று நடுவுறப் பிளந்திட்டோடி மாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்ததன்றே. | 89 |
அற்நூற்றின் மீதிலைம்ப தானநற்சேரி தானும் உறு நூற்றிலேழை மாறவுள்ள நாற்பாடியோடும் நறுமலர் கந்தம்வீசு நன்குள காவுமற்றும் பெறுமத யானை கோட்டாற் பெருநகரழித்த தம்மா. | 90 |
பாடுநன் மகளிரெல்லாம் பாட்டொழிந் தரற்றியோட ஆடுநன் மாதர் தாமும் ஆடல் விட்டுலந்துசெல்லக் கூடுநன் மங்கைமைந்தர் குலைந்தவரேச் செம்பொன் மாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோடு ஆங்கே. | 91 |
மத்துறுகடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும் வெற்றிநல் வேந்தனோடு வினவினா ரமைச்சரெண்ணி இத்தின நகரம் பட்டவிடரது விலக்கனல்ல வத்தவன் கையதென்ன வகுத்துரை கேட்டமன்னன். | 92 |
போரினில் நிற்கலாற்றாம் பொய்யினிற்றந்த மைந்தன் சீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்ததன்றிப் பேரிடிக் கரிமுன்விட்டால் பெரும்பழி யாகுமென்று தாருடை வேந்தன் சொல்லத்தரத்தினால் அமைச்சர் சொல்வார். | 93 |
இந்திரனானை தானுமிவன் கையாழிசைக்கு மீறாது இந்திரன் வேழமுங் கேட்டேழடி செல்லுமற்றிக் கந்திறு கைம்மாவிக்கோன் கைவீணை கடவாதென்ன மந்திரித் தவர்சொற்கேட்டு மன்னன் அப்படிசெய்கின்றான். | 94 |
சீவகன் வத்தவற்குச் செவ்விதிற் செப்புகின்றான் தேவ இந்நகரின் இடுக்கண் தீர்க்கைநின் கடனதாகும் போவதுன்நேசத் தென்றல் புரவலன் கடனதாகும் பூவலன் உரைத்தான் என்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான். | 95 |
உருவுள சிவிகை ஏறி உயர்மன்னன் மனை புகுந்து திருமயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீருமாடி மருவிறன் பட்டுடுத்து மணிக்கலன் இனிது தாங்கித் தெருவிடைத் திகழப்புக்கான் திருநகர் மகிழவன்றே. | 96 |
பருந்து பின் தொடர யானை பறிவைகண் பற்றும்சூழப் பெருந்தெரு நடுவுட்டோ ன்றப் பீடுடைக்குமரன் தானும் திருவலித்தடக்கை வீணை சீருடன் பாடலோடும் மருவலிக்களிறுங் கேட்டு வந்தடி பணிந்ததம்மா. | 97 |
பிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம் பரிந்த நற்காதாலே பணிந்திடுமாறு போல இருந்துதற் பணிந்த யானை எழின் மருப்படிவைத்தேறிப் பெருந்தகையேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான். | 98 |
வைத்த நன் மணியும் யாழும் வரிக்கயிறதுவு நீட்ட வெற்றிநல்வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக்கொண்டே உற்றநல் வீதிதோறும் ஊர்ந்துநற் சாரிவட்டம் பற்றிதன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான். | 99 |
பிடிப்புப் பொன்விலை மட்டில்லாப் பெருவலியாரந் தன்னை முடிப்புவி அரசன் ஈய மொய்ம்பனுமணிந்து கொண்டு கொடிப்புலிமுகத்து வாயிற்கோட்டையுட் கொண்டு வந்தான் இடிக்குரற் சீயமொப்ப விலங்கிய குமரன்தானே. |