ஈண்டல் அரிதாய்க் கெடுதல் எளிதாகி நாண்டல் சிறிதாய் நடுக்கம் பலதரூஉம் மாண்பில் இயற்கை மருவில் அரும்பொருளை வேண்டாது ஒழிந்தார் விறலோ விழுமிதே. |
35 |
இல்லெனின் வாழ்க்கையும் இல்லைஉண் டாய்விடின் கொல்வர் கயவர் கொளப்பட்டும் வீடுவர் இல்லைஉண் டாய்விடின் இம்மை மறுமைக்கும் புல்லென்று காட்டும் புணர்வதும் அன்றே. |
36 |
வேல்கண் மடவார் விழைவுஒழிய யாம்விழையக் கோல்கண் நெறிகாட்டக் கொல்கூற்று உழையதாம் நாற்பது இகந்தாம் நரைத்தூதும் வந்தது இனி நீத்தல் துணிவாம் நிலையாது இளமையே. |
37 |
இளமையும் நிலையாவால்; இன்பமும் நின்றஅல்ல; வளமையும் அஃதேபோல் வைகலும் துன்பவெள்ளம் உளவென நினையாதே செல்கதிக்கு என்றும்என்றும் விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். |
38 |
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகைஅவை உள்வழிப் பற்றா வினையாய்ப் பலபல யோனிகள் அற்றாய் உழலும் அறுத்தற்கு அரிதே. |
39 |
உற்ற உதிரம் ஒழிப்பான் கலிங்கத்தை மற்றது தோய்த்துக் கழுவுதல் என்ஒக்கும் பற்றினால் ஆகிய பாவத்தை மீட்டும் பற்றொடு நின்று பறைக்குஉறும் ஆறே. |
40 |
தானம் செய்திலம் தவமும் அன்னதே கானம் தோய்நில விற்கு அழிவு எய்தின நானம் தோய்குழல் நமக்குஉய்தல் உண்டோ மானம்தீர்ந்தவர் மாற்றம்பொய் அல்லவால். |
41 |
பருவந்து சாலப் பலர்கொல்என்று எண்ணி ஒருவந்தம் உள்ளத்து உவத்தல் ஒழிமின் வெருவந்த துன்பம் விடுக்கும் திறலோன் ஒருவன் உலகிற்கு உளன்என்னும் ஆறே. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.