கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 31 அக்டோபர், 2013

திரிசொல் - 3

2. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்

பல பொருளைத் தரும் ஒரு திரிசொல்லும் தமிழில் உள்ளதுஅதுபல பொருள்குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.

(.காஆவி

இச்சொல்லுக்கு உயிர்பேய்மெல்லிய புகை முதலான பல பொருள்கள்உள்ளனஆவி என்பது பெயர்ச்சொல்எனவே இதைப் பலபொருள் குறித்த ஒருபெயர்த் திரிசொல் என்கிறோம்.

(.காவீசு

இச்சொல்லுக்கு எறிசிதறுபரவச்செய்ஆட்டு முதலான பல பொருள்கள்உள்ளனவீசு என்பது வினைச் சொல்எனவே இதைப் பல பொருள் குறித்தஒரு வினைத் திரிசொல் என்கிறோம்.

ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்
(நன்னூல் : 272)

ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களாகவும் பலபொருள்களைக் குறிக்கும்ஒருசொல் ஆகவும் கற்றோர் மட்டுமே பொருளை உணரும் வகையில் வருவனதிரிசொல் ஆகும் என்பது இதன் பொருள்.

புதன், 30 அக்டோபர், 2013

பகுபத உறுப்புகள்

பகுபத உறுப்புகள்

பகுதிவிகுதியாகப் பிரிக்கப்படும் சொல்லில் பல உறுப்புகள் இருக்கும்.அவற்றைப் பகுபத உறுப்புகள் என்று கூறுவர்.

(.காவந்தனன்

இது ஒரு பகுபதம்இந்தச் சொல்லை,
வா+த்(ந்)+த்+அன்+அன்

என்று பிரிக்கலாம்இந்தச் சொல்லில் ஐந்து பிரிவுகள் உள்ளனஇவைஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளனஇந்தப் பெயர்களைத் தான்பகுபத உறுப்புகள் என்று பொதுவாகக்கூறுகிறோம்.பகுதி,விகுதி,இடைநிலை,சாரியை,சந்தி,விகாரம்
என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.

· பகுதி
ஒரு பகுபதத்தின் முதலில் இருப்பது பகுதி எனப்படும்பகுபதத்தில் உள்ள பகுதிபொருள் உடையதாக இருக்கும்.

(.காவந்தனன்

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் வா என்பது பகுதி ஆகும்வா என்னும் பகுதிக்கு வா என்று அழைக்கும்பொருள் இருக்கிறதுஎனவே இது பகுதி ஆகும்.

· விகுதி

பகுபதத்தில் இறுதியில் இருக்கும் உறுப்பு விகுதி எனப்படும்விகுதி என்றால்இறுதி என்று பொருள்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இறுதியில் உள்ள அன் விகுதி ஆகும்.

· இடைநிலை

பகுபதத்தில் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இடையில் இருக்கும் உறுப்பாகிய த் இடைநிலை ஆகும்.

· சாரியை

பகுபதத்தில் இடைநிலைக்கும்விகுதிக்கும் இடையில் வருவது சாரியைஎனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் அன் என்பதுசாரியை ஆகும்.

· சந்தி

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது சந்தி எனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள த்(ந்சந்தி ஆகும்.

· விகாரம்

பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்கள் விகாரம் எனப்படும்விகாரம்என்றால் மாறுபாடு என்று பொருள்.
வா+த்(ந்)+த்+அன்+அன்



இதில் சந்தியாக இடம் பெற்றுள்ள த் என்னும் எழுத்து ந் ஆக மாறியுள்ளது.பகுதியாக இடம் பெற்றுள்ள வா என்னும் எழுத்து ‘’ என்று மாறியுள்ளது.இவ்வாறு மாறுபட்டு வருவது விகாரம் எனப்படும்.



திரிசொல் - 2

திரிசொல் வகைகள்

திரிசொல் இரண்டு வகைப்படும்.
அவை:
1) ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
2) பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பவை ஆகும்.

1. ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
ஒரே பொருளைத் தரும் பல திரிசொற்கள் தமிழில் உள்ளனஅவை ஒருபொருள் குறித்த பல திரிசொல் எனப்படும்.

(.காகமலம் கஞ்சம் முண்டகம் முளரி

இவை யாவும் தாமரை என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள்ஆகும்இவை யாவும் பெயர்ச்சொற்கள்எனவே ஒரு பொருள் குறித்த பலபெயர்த் திரிசொற்கள் ஆகும்.
செப்பினான்உரைத்தான்மொழிந்தான்இயம்பினான்
இவை யாவும் சொன்னான் என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பலதிரிசொற்கள் ஆகும்இவை யாவும் வினைச்சொற்கள்எனவே ஒரு பொருள்குறித்த பல வினைத் திரிசொற்கள் ஆகும்.


2. மெய் எழுத்துகள்

2.  மெய் எழுத்துகள் 

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், 
வ், ழ், ள், ற், ன். என்ற பதினெட்டு 
எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். 
இவை தமிழ் மொழிக்கு மெய் (உடல்) 
போன்ற எழுத்துகள் ஆகும். 

மெய் எழுத்துகளின் வகைகள் 

இதை இரண்டாக பிரிக்கலாம்

1.வல்லின மெல்லின இடையின 
    எழுத்துகள் 

2.குறில் நெடில் எழுத்துகள் 

1.
வல்லின மெல்லின இடையின 
    எழுத்துகள் 

க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ்
, ள், ற், ன். மெய் (உடல்) எழுத்துகளை 
மூன்றாகப் பிரிக்கலாம். 

அ.வல்லின எழுத்துகள் 
ஆ.மெல்லின எழுத்துகள் 
இ.இடையின எழுத்துகள் 


அ.
வல்லின எழுத்துகள் 

க், ச், ட், த், ப், ற் என்ற எழுத்துகளைச் 
சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்து
களைச் சொல்லும் பொழுது வயிற்றுள் 
இருந்து வலிமையாக காற்று மேலே 
வரும். எனவே இவை வல்லின 
எழுத்துகள் ஆகும். 

ஆ.
மெல்லின எழுத்துகள் 

ங், ஞ், ண், ந், ம், ன் என்ற எழுத்துகளைச் 
சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துக
ளைச் சொல்ல மென்மையான முயற்சி 
போதும். எனவே இந்த மென்மையான 
எழுத்துகள் மெல்லின எழுத்துகள் 
எனப்படுகின்றன. 

இ.
இடையின எழுத்துகள் 

ய், ர், ல், வ், ழ், ள் என்ற எழுத்துகளைச் 
சொல்லிப் பாருங்கள். இவ்வெழுத்துக
ளைச் சொல்ல மென்மையும், வன்மை
யும் இல்லாமல் இடைப்பட்ட முயற்சி 
தேவைப்படுகிறது. எனவே இவை 
இடையின எழுத்துகள் எனப்படுகின்றன. 


2.
குறில் நெடில் எழுத்துகள் 

குறுகிய ஓசை, நெடிய 
ஓசை என்பதை எதை 
வைத்து அளவு செய்வது? 

அ ஆ க கா கொ கோ குறில் நெடில் இந்த 
எழுத்துகளைச் சொல்லிப் பாருங்கள். 
ஒலி அளவில் நீங்கள் வேறுபாட்டை 
உணர முடியும். எழுத்துகள் ஒலிக்கும் 
அளவை மாத்திரை எனக் குறிப்பிடுவர் 

மாத்திரை 

இலக்கண ஆசிரியர்கள். இது ஒரு கை 
நொடி அளவு : (அதாவது கட்டை விரலை
யும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டும் 
அளவு) அல்லது கண்ணிமை அளவு - 
(அதாவது கண் இமைக்கும் அளவு) என்று 
கணக்கிடப்படுகிறது. 

மெய் எழுத்து ஒலிப்புநேரம் 1/2 மாத்திரை 
ஆகும் • 

எழுத்துகளின் ஒலி அளவு 

அ. குறில் 
ஆ. நெடில் 

அ. 
குறில் 

என உயிர் எழுத்துகளையும், உயிர்
மெய் எழுத்துகளையும் பிரிக்கி
றோம். மெய் எழுத்துகள் உயிர்க்
குறில் எழுத்துகளைவிடக் குறை
வான நேரத்தில் ஒலிக்கப்படு
கின்றனஎனவே, குறில் எழுத்துகள் 
- 1 மாத்திரை அளவின. (அ,க,ச,சி,து) 

ஆ. 
நெடில் 

நெடில் எழுத்துகள் - 2 மாத்திரை 
அளவின (ஆ, கா, சா, சீ, தூ) மெய் 
எழுத்துகள் - 1/2 மாத்திரை அளவின.
 (க், ங், ச், ஞ்.....ன்) என்பதை நினைவில்
 கொள்ளுங்கள். 

திரிசொல் -1

திரிசொல்




கற்றவர்கள் மட்டும் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளசொற்கள் திரிசொற்கள் எனப்படும்.

(.காதத்தைஆழிசெப்பினான்

மேலே காட்டப்பட்டுள்ள சொற்கள் எளிதில் பொருள் புரிந்து கொள்ள இயலாதவகையில் வந்துள்ளன.

தத்தை-கிளி
ஆழி-கடல்
செப்பினான்-உரைத்தான்

என்று கற்றவர்களால் பொருள் தெரிவிக்கப்பட்டால் மட்டுமே பொருள்விளங்கும் வகையில் உள்ளனஎனவே இவை திரிசொற்கள் என்றுஅழைக்கப்படுகின்றன.


செவ்வாய், 29 அக்டோபர், 2013

பகாப்பதம்

 பகாப்பதம் 

ஒரு சொல்லைப் பகுதிவிகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடியவில்லைஎன்றால் அது பகாப்பதம் எனப்படும்.

(.காமரம்தேன்தலைபோலசால


1. உயிர் எழுத்துகள்

1. உயிர் எழுத்துகள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள 
என்ற பன்னிரண்டு எழுத்துகளும் 
உயிர் எழுத்துகள் ஆகும். இவை தமிழ் 
மொழிக்கு உயிர் போன்ற எழுத்துகள் 
ஆகும். 


(1) 
உயிர் எழுத்துகளின் வகைகள்

 அ இ உ எ ஒ நெடில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஓள 
 5 + 7 = 12 பன்னிரண்டு உயிர் எழுத்துகளை 
இரு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.குறில் 
2.நெடில் 


                      குறில் 

அ, இ, உ, எ, ஒ என்ற எழுத்துகளைச்
 சொல்லக் குறைந்த முயற்சியும், 
குறைந்த நேரமும் ஆகிறது. எனவே 
இவை குறில் (குறுகிய) எழுத்துகள் 
எனப்படுகின்றன. குறில் எழுத்தின் 
ஒலிப்பு நேரம் ஒரு மாத்திரை.


         நெடில்

 ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்ற எழுத்து
களைச் சொல்ல நிறைந்த முயற்சியும், 
நிறைய நேரமும் தேவைப்படுகின்றன. 
எனவே இவை நெடில் (நீண்ட) எழுத்துகள் 
எனப்படுகின்றன. நெடில் எழுத்தின் 
ஒலிப்பு நேரம் இரு மாத்திரைகள். 

திங்கள், 28 அக்டோபர், 2013

பகுபத உறுப்புகள்

பகுபத உறுப்புகள்

பகுதிவிகுதியாகப் பிரிக்கப்படும் சொல்லில் பல உறுப்புகள் இருக்கும்.அவற்றைப் பகுபத உறுப்புகள் என்று கூறுவர்.

(.காவந்தனன்

இது ஒரு பகுபதம்இந்தச் சொல்லை,
வா+த்(ந்)+த்+அன்+அன்

என்று பிரிக்கலாம்இந்தச் சொல்லில் ஐந்து பிரிவுகள் உள்ளனஇவைஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளனஇந்தப் பெயர்களைத் தான்பகுபத உறுப்புகள் என்று பொதுவாகக்கூறுகிறோம்.பகுதி,விகுதி,இடைநிலை,சாரியை,சந்தி,விகாரம்
என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.

· பகுதி
ஒரு பகுபதத்தின் முதலில் இருப்பது பகுதி எனப்படும்பகுபதத்தில் உள்ள பகுதிபொருள் உடையதாக இருக்கும்.

(.காவந்தனன்

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் வா என்பது பகுதி ஆகும்வா என்னும் பகுதிக்கு வா என்று அழைக்கும்பொருள் இருக்கிறதுஎனவே இது பகுதி ஆகும்.

· விகுதி

பகுபதத்தில் இறுதியில் இருக்கும் உறுப்பு விகுதி எனப்படும்விகுதி என்றால்இறுதி என்று பொருள்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இறுதியில் உள்ள அன் விகுதி ஆகும்.

· இடைநிலை

பகுபதத்தில் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இடையில் இருக்கும் உறுப்பாகிய த் இடைநிலை ஆகும்.

· சாரியை

பகுபதத்தில் இடைநிலைக்கும்விகுதிக்கும் இடையில் வருவது சாரியைஎனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் அன் என்பதுசாரியை ஆகும்.

· சந்தி

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது சந்தி எனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள த்(ந்சந்தி ஆகும்.

· விகாரம்

பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்கள் விகாரம் எனப்படும்விகாரம்என்றால் மாறுபாடு என்று பொருள்.
வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் சந்தியாக இடம் பெற்றுள்ள த் என்னும் எழுத்து ந் ஆக மாறியுள்ளது.பகுதியாக இடம் பெற்றுள்ள வா என்னும் எழுத்து ‘’ என்று மாறியுள்ளது.இவ்வாறு மாறுபட்டு வருவது விகாரம் எனப்படும்.

முதல் எழுத்துகள்


முதல் எழுத்துகள் 

பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், 
பதினெட்டு உடல் (மெய்) எழுத்துகளும் 
சேர்ந்து மொத்தம் 30 எழுத்துகளும் தமிழ் 
மொழியின் முதல்எழுத்துகள் எனப்படு
கின்றன.


முதல் எழுத்துகளின் வகைகள் 

1. உயிர் எழுத்துகள்
2.  மெய் எழுத்துகள் 


திங்கள்கிழமை


ஞாயிறு, 27 அக்டோபர், 2013

பகுபதம்,பகாப்பதம்

பகுபதம்,பகாப்பதம்



1) பகுபதம்
2) பகாப்பதம் என்பவை ஆகும்.

பகுபதம்:

ஒரு சொல்லைப் பகுதிவிகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடிந்தால் அதுபகுபதம் எனப்படும்.

(.காஅறிஞன்செய்தாள்

பகாப்பதம்:

ஒரு சொல்லைப் பகுதிவிகுதி முதலிய உறுப்புகளாகப் பிரிக்க முடியவில்லைஎன்றால் அது பகாப்பதம் எனப்படும்.

(.காமரம்தேன்தலைபோலசால


மாத்திரை

மாத்திரை 

 ஓர் எழுத்தைச் சொல்வதற்கு அதாவது, 
ஒலிப்பதற்கு ஆகும் நேர அளவு மாத்திரை 
எனப்படுகிறது. 

புதன், 16 அக்டோபர், 2013

வினாவிடை 5

கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒருவரியில் விடை தரவும். .

1 உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?

 (விடை) உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து ஒலிப்பது உயிர்மெய் எழுத்து எனப்படும்.

2 உயிர்மெய் எத்தனை வகைப்படும்?

 (விடை) உயிர்மெய் எழுத்துகள் குறில், நெடில் என்று இருவகைப் பெறும்.

3 மெய் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

(விடை) மெய் எழுத்துகள் 18 ஆகும் அவை க்,ங்,ச்,ஞ்,ட்,ண்
த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்
4 குறில் என்றால் என்ன?

 (விடை) குறுகிய ஒலிகளுடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப் பெறும்.

 5 நெடில் எழுத்துகள் என்றால் என்ன?

 (விடை)
நீண்ட ஒலிகளையுடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்பெறும். 

 6 ஆய்த எழுத்து எவ்வாறு ஒலிக்கப் பெறுகிறது?

 (விடை)
ஆய்த எழுத்து அஃகு ஒலிக்கப் பெறுகிறது.

 7 ஆய்த எழுத்து தனித்து வருமா?

 (விடை)
ஆய்த எழுத்து தனித்து வராது.

 8 உயிர் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

 (விடை) உயிர் எழுத்துகள் 12 ஆகும். அவை அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள.

 9 குற்றியலுகர எழுத்துகள் யாவை?

 (விடை)
கு, சு, டு, து, பு, று ஆகியன குற்றியலுகர எழுத்துகள் ஆகும். 
 10 குற்றியலிகரம் என்றால் என்ன?

 (விடை)
தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் இகரம்
குற்றியலிகரம் ஆகும்.

சொல்

சொல் 

'ப' என்பது ஓர் எழுத்து.
'ழ' என்பது ஓர் எழுத்து.
'ம்' என்பது ஓர் எழுத்து.

 இந்த மூன்று எழுத்துகளை ஒன்று சேர்த்தால் 'பழம்' என்று ஒரு சொல் கிடைக்கும்.


'பழம்' என்பது கனிந்துள்ள பயனுடைய நல்ல பழம் என்ற ஒரு பொருளைக் குறிக்கும்.

'பழம்' என்ற சொல் ஒரு பொருளைத் தருவதால் அதனைச் சொல் என்று கூறலாம்.
 இந்த எழுத்துகளையே பின்வருமாறு எழுதிப் பார்ப்போம்.

1. 'ழம்ப'
2. 'ம்பழ'
3. 'ழபம்'
4. 'பம்ழ'

 மேலுள்ள நான்கையும் பாருங்கள்.
இவை எழுத்துகள் கூடிச் சொல் போல இருக்கின்றன. இருந்தாலும் இவை பொருள் தரவில்லை. எனவே, இவை சொற்கள் அல்ல. எழுத்துகள் சேர்ந்து நின்று, பொருள் தந்தால் அதையே சொல் என்று கூறுகிறோம்.


ஓரு எழுத்து - ஒரு சொல்

1. பை
2. கை


பை, கை இவை ஒற்றை எழுத்துகள். இருந்தாலும் இவை ஒரு பொருளைக்
குறிக்கின்றன. இவ்வாறு ஓர் எழுத்தே ஒரு பொருள் குறிப்பதாக இருந்தாலும்
அது சொல் என்று கொள்ளப்படும். இவற்றை ஓரெழுத்து ஒருமொழி எனக்
கூறுவார்கள்.

இரண்டு எழுத்து - ஒரு சொல்

1.உடை
2.இடை
3.கடை
4. நடை

மூன்று எழுத்து - ஒரு சொல்

1.அம்பு
2.அறம்
3.அணில்

நான்கு எழுத்து - ஒரு சொல்

1.கட்டில்
2. கழகம்
3.உலகம்


ஜந்து எழுத்து - ஒரு சொல்

1.ஆத்திசூடி
2. உலகநீதி
3.மணிமேகலை

செவ்வாய், 15 அக்டோபர், 2013

வினாவிடை 4

கீழ்க்காணும் வினாக்களுக்குச் சரியான விடையைத் தேர்ந்தெடுத்து
    எழுதவும். 
1
மாத்திரை என்றால் என்ன?
அ) மருந்து (Tablet)
ஆ) சொல் அளவு
இ) ஒலி அளவு
ஈ) தொடர் அளவு

இ) ஒலி அளவு

2
உயிர்க் குறில் எழுத்து (அ, இ, உ, எ, ஒ) எத்தனை மாத்திரை
அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

அ) 1

3
உயிர் நெடில் எழுத்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள) எத்தனை மாத்திரை
அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஆ) 2

4
உயிர்மெய்க் குறில் (க, சி, கு, கெ, கொ...) எத்தனை மாத்திரை
அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4
அ) 1

5
உயிர்மெய் நெடில் (கா, சீ, கூ, கை, கோ...) எத்தனை மாத்திரை
அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஆ) 2
6
மெய்யெழுத்து ஒலி (க், ங், ச், ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

இ) 1/2

7
குற்றியலுகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4


ஈ) 3/4

8
குற்றியலிகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஈ) 3/4

9
ஆய்தம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஈ) 3/4
(
10
கா என்ற எழுத்தின் மாத்திரை அளவு என்ன?
அ) 1
ஆ) 2
இ) 1/2
ஈ) 3/4

ஆ) 2

திங்கள், 14 அக்டோபர், 2013

வினாவிடை 3

எழுத்து

II. கீழ்க்காணும் கோடிட்ட இடங்களை நிரப்பச் சரியான சொற்களைக் கூறவும்.
    
1
அ, இ, உ, எ, ஒ என்பன ------------- எழுத்துகள்.

உயிர்க்குறில்

2
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள என்பன ---------- எழுத்துகள்.

உயிர் நெடில்

3
க், ங். ச், ஞ் முதலிய 18 எழுத்துகள் --------- எழுத்துகள்.

மெய்

4
க், ச், ட், த், ப், ற் ஆகிய எழுத்துகள்---------------.

வல்லினம் .

5
ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய எழுத்துகள்---------------.

மெல்லினம்.

6
ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய எழுத்துகள்---------------.

இடையினம் .

7
உயிர் எழுத்துகள் மொத்தம் ----------.

 பன்னிரண்டு .

8
மெய் எழுத்துகள் மொத்தம் -----------.

 பதினெட்டு.

9
ஆய்தம் என்பது ------------- எழுத்து.

சார்பு

10
உயிர்மெய் என்பது ---------- எழுத்து.

சார்பு


#160;