2. பல பொருள் குறித்த ஒரு திரிசொல்
பல பொருளைத் தரும் ஒரு திரிசொல்லும் தமிழில் உள்ளது. அது, பல பொருள்குறித்த ஒரு திரிசொல் எனப்படும்.
(எ.கா) ஆவி
இச்சொல்லுக்கு உயிர், பேய், மெல்லிய புகை முதலான பல பொருள்கள்உள்ளன. ஆவி என்பது பெயர்ச்சொல். எனவே இதைப் பலபொருள் குறித்த ஒருபெயர்த் திரிசொல் என்கிறோம்.
(எ.கா) வீசு
இச்சொல்லுக்கு எறி, சிதறு, பரவச்செய், ஆட்டு முதலான பல பொருள்கள்உள்ளன. வீசு என்பது வினைச் சொல். எனவே இதைப் பல பொருள் குறித்தஒரு வினைத் திரிசொல் என்கிறோம்.
ஒரு பொருள் குறித்த பல சொல் ஆகியும்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்
பல பொருள் குறித்த ஒரு சொல் ஆகியும்
அரிது உணர் பொருளன திரிசொல் ஆகும்
(நன்னூல் : 272)
ஒரு பொருளைக் குறிக்கும் பலசொற்களாகவும் பலபொருள்களைக் குறிக்கும்ஒருசொல் ஆகவும் கற்றோர் மட்டுமே பொருளை உணரும் வகையில் வருவனதிரிசொல் ஆகும் என்பது இதன் பொருள்.