கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 16 அக்டோபர், 2013

சொல்

சொல் 

'ப' என்பது ஓர் எழுத்து.
'ழ' என்பது ஓர் எழுத்து.
'ம்' என்பது ஓர் எழுத்து.

 இந்த மூன்று எழுத்துகளை ஒன்று சேர்த்தால் 'பழம்' என்று ஒரு சொல் கிடைக்கும்.


'பழம்' என்பது கனிந்துள்ள பயனுடைய நல்ல பழம் என்ற ஒரு பொருளைக் குறிக்கும்.

'பழம்' என்ற சொல் ஒரு பொருளைத் தருவதால் அதனைச் சொல் என்று கூறலாம்.
 இந்த எழுத்துகளையே பின்வருமாறு எழுதிப் பார்ப்போம்.

1. 'ழம்ப'
2. 'ம்பழ'
3. 'ழபம்'
4. 'பம்ழ'

 மேலுள்ள நான்கையும் பாருங்கள்.
இவை எழுத்துகள் கூடிச் சொல் போல இருக்கின்றன. இருந்தாலும் இவை பொருள் தரவில்லை. எனவே, இவை சொற்கள் அல்ல. எழுத்துகள் சேர்ந்து நின்று, பொருள் தந்தால் அதையே சொல் என்று கூறுகிறோம்.


ஓரு எழுத்து - ஒரு சொல்

1. பை
2. கை


பை, கை இவை ஒற்றை எழுத்துகள். இருந்தாலும் இவை ஒரு பொருளைக்
குறிக்கின்றன. இவ்வாறு ஓர் எழுத்தே ஒரு பொருள் குறிப்பதாக இருந்தாலும்
அது சொல் என்று கொள்ளப்படும். இவற்றை ஓரெழுத்து ஒருமொழி எனக்
கூறுவார்கள்.

இரண்டு எழுத்து - ஒரு சொல்

1.உடை
2.இடை
3.கடை
4. நடை

மூன்று எழுத்து - ஒரு சொல்

1.அம்பு
2.அறம்
3.அணில்

நான்கு எழுத்து - ஒரு சொல்

1.கட்டில்
2. கழகம்
3.உலகம்


ஜந்து எழுத்து - ஒரு சொல்

1.ஆத்திசூடி
2. உலகநீதி
3.மணிமேகலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;