ஞாயிறு, 28 ஏப்ரல், 2013
சனி, 27 ஏப்ரல், 2013
சனி, 20 ஏப்ரல், 2013
ஒரு பொருள் பல சொற்கள்-ச
(1)சந்திரன் - மதி
சந்திரன் - திங்கள்
சந்திரன் - அம்புலி
சந்திரன் - நிலா
(2)சரஸ்வதி - வாணி
சரஸ்வதி - நாமகள்
சரஸ்வதி - கலைமகள்
சந்திரன் - திங்கள்
சந்திரன் - அம்புலி
சந்திரன் - நிலா
(2)சரஸ்வதி - வாணி
சரஸ்வதி - நாமகள்
சரஸ்வதி - கலைமகள்
லேபிள்கள்:
ஒரு பொருள் பல சொற்கள்
வெள்ளி, 19 ஏப்ரல், 2013
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
சனி, 13 ஏப்ரல், 2013
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
அகராதி-ஆ,
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆத்திகம் | கடவுள் உண்டென்னும் கொள்கை ; யானைக்கூட்டம் . |
ஆத்திகன் | கடவுள் உண்டென்னும் கொள்கை உடையவன் . |
ஆத்திசூடி | ஆத்திமாலை சூடிய சிவபெருமான் ; ஔவையார் செய்த நீதிநூல்களுள் ஒன்று . |
ஆத்திசூலை | குதிரை நோய்வகை . |
ஆத்திட்டி | நீர்முள்ளி . |
ஆத்தியந்தம் | காண்க : ஆதியந்தம் . |
ஆத்தியந்திகபிரளயம் | பிரளயத்தால் உலகம் முடியும் காலம் . |
ஆத்தியாத்துமிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் . |
ஆத்தியான்மிகம் | தன்னைப்பற்றி வரும் துன்பம் . |
ஆத்தியை | துர்க்கை . |
ஆண்வழி | ஆண் சந்ததியிலிருந்து உண்டான பரம்பரை . |
ஆணகம் | சுரைக்கொடி . |
ஆணங்காய் | ஆண்பனையின் பாளை ; பனம்பூ . |
ஆணத்தி | கட்டளை . |
ஆணம் | நேயம் ; பற்றுக்கோடு ; கொள்கலம் ; குழம்பு ; குழம்பிலுள்ள காய் ; சிறுமை . |
ஆணர் | பாணர் ; பாடகர் . |
ஆணலி | ஆண்தோற்றம் மிக்க அலி . |
ஆணவம் | செருக்கு ; காண்க : ஆணவமலம் ; கோளகபாடாணம் . |
ஆணவமலம் | மும்மலங்களுள் ஒன்று ; மூலமலம் ; உடம்பை 'யான்' என்று இருக்கை . |
ஆணவமறைப்பு | ஆணவ மலத்தால் உயிருக்கு உண்டாகும் அறியாமை . |
ஆணழகன் | அழகு வாய்ந்தவன் . |
ஆணன் | ஆண்மையுடையவன் ; அன்புடையோன் . |
ஆணாடுதல் | விருப்பப்படி நடத்தல் ; |
ஆணாப்பிறந்தோன் | மனிதன் ; ஆவிரை . |
ஆணாள் | ஆண் நட்சத்திரங்கள் ; அவை : பரணி , கார்த்திகை , உரோகிணி , புனர்பூசம் , பூசம் , அத்தம் , அனுடம் , திருவோணம் , பூரட்டாதி , உத்திரட்டாதி . |
ஆணாறு | மேற்குநோக்கி ஓடும் ஆறு . |
ஆணி | இரும்பாணி ; அச்சாணி ; எழுத்தாணி ; மரவாணி ; உரையாணி ; புண்ணாணி ; மேன்மை ; ஆதாரம் ; ஆசை ; சயனம் ; பேரழகு ; எல்லை . |
ஆணிக்கல் | பொன் நிறுக்கும் கல் . |
ஆணிக்குருத்து | பனையின் அடிக்குருத்து . |
ஆணிக்கை | உறுதி . |
ஆணிக்கொள்ளுதல் | இருப்பிடத்தை நிலைபெறச் செய்து கொள்ளுதல் ; இறக்குங்காலத்தில் விழி அசையாது நிற்றல் . |
ஆணிக்கோவை | உரையாணி கோத்த மாலை . |
ஆணிச்சவ்வு | விழிப்படலம் . |
ஆணிச்சிதல் | சீப்பிடித்த புண்ணாணி . |
ஆணித்தரம் | முதல்தரம் ; உறுதி . |
ஆணிதைத்தல் | பொருத்த ஆணியடித்தல் ; கால் முதலியவற்றில் ஆணிபாய்தல் . |
ஆணிப்புண் | உள்ளாணியுள்ள சிலந்தி . |
ஆணிப்பூ | கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் . |
ஆணிப்பூடு | கண்ணில் விழும் வெள்ளை ; கண்நோய் . |
ஆணிப்பொன் | உயர் மாற்றுப் பொன் . |
ஆணிமலர் | ஆணியின் தலை . |
ஆணிமலர்திருப்பி | திருப்புளி . |
ஆணிமுத்து | உயர்தரமான முத்து . |
ஆணியச்சு | ஆணியுண்டாக்கும் அச்சு . |
ஆணியம் | நாட்படி . |
ஆணியிடுதல் | கண் நிலைக்குத்துதல் . |
ஆணிவேர் | மூலவேர் . |
ஆணு | நேயம் ; இனிமை ; நன்மை ; இரசம் . |
ஆணுடம்பு | ஆண்குறி . |
ஆணெழுத்து | உயிரெழுத்து . |
ஆணை | கட்டளை ; அதிகாரம் ; நீதிமன்றம் முதலிய விடங்களில் கூறும் உறுதிமொழி ; சூளுரை ; மெய் ; தடுக்கை ; இலாஞ்சனை ; வெற்றி ; ஆன்றோர் மரபு ; சிவபிரானது சிற்சத்தி . |
ஆணையிடுதல் | கட்டளையிடுதல் ; சூளுரைத்தல் . |
ஆணையோலை | கட்டளைத் திருமுகம் . |
ஆணைவழிநிற்றல் | அரசர் கட்டளைப்படி நடத்தல் ; வேளாண் மாந்தர் ஒழுக்கங்களுள் ஒன்று . |
ஆணைவிடுதல் | சூளுறவை நீக்குதல் . |
ஆணொழிமிகுசொல் | இருதிணையிலும் பெயர் அல்லது தொழிலினால் பெண்பாலாகப் பால் பிரியுஞ்சொல் . |
ஆத்தம் | விருப்பம் ; குருவுக்குச் செய்யும் பணிவிடை ; அன்பு . |
ஆத்தல் | யாத்தல் ; அமைத்தல் ; கட்டுதல் . |
ஆத்தவாக்கியம் | நட்பாளர் மொழி ; வேதசாத்திரங்கள் . |
ஆத்தன் | விருப்பமானவன் ; அருகன் ; நம்பத்தக்கோன் . |
ஆத்தாடி | வியப்புக் குறிப்பு ; இளைப்பாறற் குறிப்பு . |
ஆத்தாரமூத்தாள் | பூனைக்காலிக்கொடி . |
ஆத்தா | தாய் ; பார்வதி . |
ஆத்தாள் | தாய் ; பார்வதி . |
ஆத்தானம் | அரசவை ; கோபுரவாயில் . |
ஆத்தி | மரவகை ; திருவாத்தி ; செல்வம் ; அடைகை ; சம்பந்தம் ; இலாபம் ; பெண்பால் விகுதி ; அச்ச வியப்புக்குறிப்பு . |
ஆண்மகன் | ஆண் குழந்தை ; கணவன் ; ஆணிற்சிறந்தோன் . |
ஆண்மரம் | உள்வயிரமுள்ள மரம் ; காண்க : சேமரம் ; அழிஞ்சில் . |
ஆண்மாரி | அடங்காக் குணமுள்ளவள் . |
ஆண்மை | ஆளும்தன்மை ; ஆண்தன்மை ; வெற்றி ; வலிமை ; அகங்காரம் ; உடைமை ; வாய்மை . |
ஆண்மைத்தனம் | ஆண்மைத்தன்மை . |
ஆண்மைப் பொதுப்பெயர் | உயர்தினை ஆண்பாலையும் அஃறிணை ஆண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர் . |
ஆண்மையாளர் | வலிமையுற்றோர் ; திறம் படைத்தவர் ; வீரர் . |
ஆண்மையிலி | பெண்தன்மை உடையவன் ; ஆளும் தன்மை இல்லாதவன் . |
ஆண்வசம்பு | சிலும்பலுள்ள வசம்பு . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆதம் | அன்பு ; ஆதரவு ; கூந்தற்பனை . |
ஆதம்பேதி | செப்புநெருஞ்சில் பூண்டு . |
ஆதமிலி | ஆதரவற்றவன் , திக்கற்றவன் . |
ஆதர் | அறிவில்லாதவர் ; குருடர் . |
ஆதரணை | ஆதரவு . |
ஆதரம் | அன்பு ; ஆசை ; உபசாரம் ; ஓடக்கூலி ; சிலம்பு . |
ஆதரவு | அன்பு ; உதவி ; தோற்றுகை ; ஆதாரம் . |
ஆதரவுச்சீட்டு | பற்றுச்சீட்டு . |
ஆதரவுசொல்லுதல் | தேறுதல்சொல்லுதல் . |
ஆதராதிசயம் | அன்புமிகுதி . |
ஆதரிக்கை | அன்புசெய்தல் ; பேணுதல் . |
ஆதரிசம் | கண்ணாடி ; உரை ; மூல ஏடு . |
ஆதரிசனம் | கண்ணாடி ; உரை ; மூல ஏடு . |
ஆதரித்தல் | ஆசைகூர்தல் ; உபசரித்தல் ; பாதுகாத்தல் ; உதவிசெய்தல் ; தழுவிப் பேசுதல் . |
ஆதல் | ஆவது எனப் பொருள்படும் இடைச்சொல் ; நூல் ; கூத்து ; தரிசனம் ; நுணுக்கம் ; ஆசை ; உண்டாதல் ; நிகழ்தல் ; முடிதல் ; இணக்கமாதல் ; வளர்தல் ; அமைதல் ; ஒப்பாதல் . |
ஆதலால் | ஆகையால் . |
ஆதவம் | காண்க : ஆதபம் ; ஒளி ; கொன்றைப்பூ . |
ஆதவன் | காண்க : ஆதபன் ; வேதியன் ; சூரியகாந்தி . |
ஆதளை | காண்க : ஆமணக்கு ; காட்டாமணக்கு வகை ; மாதுளை ; பெருந்துன்பம் . |
ஆதளைமாதளை | மயக்கம் ; வருத்தம் . |
ஆதன் | ஆன்மா ; அறிவில்லாதவன் ; குருடன் ; பழைய காலத்து மக்கள் இயற்பெயர் வகை ; அருகன் ; ஆரியன் ; வாதனை . |
ஆதன்மை | பேதைமை . |
ஆதன்மையால் | ஆகையால் . |
ஆதனம் | காண்க : ஆசனம் ; யோகாசனம் ; பிருட்டம் ; பீடம் ; தரை ; சீலை ; சொத்து ; யானைக்கழுத்து . |
ஆதனமூர்த்தி | படிமம் ; இலிங்கம் . |
ஆதாபாதா | மகமதியர்களிடையே வரவேற்குங் காலத்தில் சொல்லும் உபசாரவார்த்தை . |
ஆதாயஞ்செலவு | வரவுசெலவு . |
ஆதாயப்பங்கு | இலாபப் பங்கு . |
ஆத்திரக்காரன் | அவசரப்படுபவன் . |
ஆத்திரகம் | இஞ்சி . |
ஆத்திரம் | பரபரப்பு ; சினம் . |
ஆத்திரேயன் | சந்திரன் ; அத்திரி குலத்தில் பிறந்தவன் . |
ஆத்திரேயி | பூப்புள்ளவள் ; ஓர் ஆறு . |
ஆத்திரை | காண்க : யாத்திரை ; சுற்றுலா . |
ஆத்திரையன் | அத்திரி குலத்தில் பிறந்தவன் . |
ஆத்திறைப்பாட்டம் | கால்நடை வரி . |
ஆத்தின்னி | பாணன் . |
ஆத்துமகத்தியை | தற்கொலை . |
ஆத்துமகுப்தா | காண்க : பூனைக்காலி . |
ஆத்துமசக்தி | ஆன்மாவுக்குரிய ஆற்றல் . |
ஆத்துமசன் | மகன் . |
ஆத்துமசிநேகிதன் | உயிர்த்தோழன் . |
ஆத்துமசுத்தி | ஆத்துமாவின் தூய்மை ; காண்க : ஆன்மசுத்தி . |
ஆத்துமஞானம் | தன்னையறியும் அறிவு . |
ஆத்துமஞானி | தன்னையறிந்தவன் . |
ஆத்துமதரிசனம் | ஆன்மாவின் நிலையை அறிகை ; காண்க : ஆன்மதரிசனம் . |
ஆத்துமநாசம் | தன்னைக் கெடுத்துக்கொள்ளுகை . |
ஆத்துமநிவேதனம் | உயிர்ப்பலி ; தன்னை அர்ப்பணஞ் செய்கை . |
ஆத்துமபந்து | ஆன்மாவின் உறுதிச் சுற்றம் ; அத்தை மகன் , அம்மான் மகன் முதலிய உறவுகள் . |
ஆத்துமபுத்தி | தன் அறிவு . |
ஆத்துமபோதம் | காண்க : ஆத்துமஞானம் . |
ஆத்துமம் | உயிர் ; உயிரி ; அரத்தை ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
ஆத்துமராமன் | ஆத்ம திருப்தியுடையவன் . |
ஆத்துமரூபம் | ஆன்மலாபம் ; காண்க : ஆன்மரூபம் . |
ஆத்துமலாபம் | உயிர் உய்கை ; சொந்த இலாபம் ; தன்னையறிகை . |
ஆத்துமவதம் | காண்க : ஆத்துமகத்தியை . |
ஆத்துமவதிகாசனம் | நல்லிருக்கை என்னும் யோகாசனம் . |
ஆத்துமவிசாரம் | ஆத்துமாவை அறியும் சிந்தனை . |
ஆத்துமவிரக்கங்காட்டுதல் | மனப்பூர்த்தியாக அன்பும் அருளும் காட்டுதல் . |
ஆத்துமா | உயிர் ; சீவான்மா ; உயிரி . |
ஆத்துமாபகாரம் | ஆத்துமாவின் இயல்பினை வேறாக நினைக்கை ; பரதந்திரனான சீவனைச் சுதந்திரனாக நினைக்கை . |
ஆத்துமார்த்தம் | ஆத்தும இலாபத்திற்குரியது ; தன்பொருட்டு ; மிக்க நட்பு . |
ஆத்துமானந்தம் | தனக்குள் மகிழ்கை ; தற்போதத்தால் நிகழும் மகிழ்ச்சி . |
ஆத்துமானுபவம் | தன்னைத் தான் அனுபவிக்கை . |
ஆத்துமிகம் | காண்க : ஆத்தியாத்துமிகம் ; ஆன்மா சம்பந்தமுடையது . |
ஆத்தை | தாய் ; வியப்பு அச்ச இரக்கங்களைக் குறிக்கும் சொல் . |
ஆத்மா | காண்க : ஆத்துமா . |
ஆதங்கம் | நோய் ; அச்சம் ; துன்பம் ; முரசின் ஓசை . |
ஆதண் | நோய் ; வருத்தம் . |
ஆதண்டை | காண்க : ஆதொண்டை . |
ஆததாயிகள் | கொடியோர் ; அவராவார் ; தீக்கொளுவுவார் , நஞ்சிடுவார் , கருவியிற் கொல்வார் , கள்வர் , ஆறலைப்பார் , சூறைகொள்வார் , பிறனில் விழைவார் . |
ஆதபத்திரம் | குடை ; வெண்குடை . |
ஆதபம் | வெயில் ; பிரகிருதிகளுள் ஒன்று . |
ஆதபயோகம் | வெயிற்கடுமை தாங்கும் யோகநிலை . |
ஆதபன் | சூரியன் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆதிச்சுவடி | காண்க : அரிச்சுவடி . |
ஆதிசத்தி | பஞ்ச சக்திகளுள் ஒன்று ; ஆதியாகிய சக்தி . |
ஆதிசேடன் | பூமியைத் தாங்கிக்கொண்டிருக்கிறது எனக் கூறும் 'அனந்தன்' என்கிற பாம்பு . |
ஆதிசைவம் | சைவ சமயப் பிரிவுகள் பதினாறனுள் ஒன்று . |
ஆதிசைவர் | சிவாலயங்களில் பூசை புரியும் அதிகாரிகளாகிய குருக்கள் . |
ஆதிட்டம் | கட்டளையிடப்பட்டது , சொல்லப்பட்டது ; உண்டுகழிந்த மிச்சில் . |
ஆதித்தநோக்கு | சூரியனுடைய பார்வை . |
ஆதித்தபுடம் | சூரிய நிலையைக் குறிக்கும் இராசிபாகை . |
ஆதித்தபுத்தி | சூரியனது நாட்கதி . |
ஆதித்தம் | காவிக்கல் ; துரிசு . |
ஆதித்தமண்டலம் | சூரிய வட்டம் ; இதயத்திலுள்ள ஒரு யோகத்தானம் ; சூரிய உலகம் . |
ஆதித்தர் | தேவர் ; பன்னிரு சூரியர் . |
ஆதிவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
ஆதித்தவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
ஆதித்தன் | சூரியன் ; உவர்மண் . |
ஆதித்தியம் | விருந்தோம்பல் ; ஒரு சோதிடநூல் . |
ஆதித்தியன் | சூரியன் ; விருந்தோம்புவோன் . |
ஆதிதாசர் | சிவபெருமானின் அணுக்கத் தொண்டர் , சண்டேசுவரர் . |
ஆதிதாளம் | தாளவகை . |
ஆதிதிராவிடர் | தமிழகப் பழங்குடி மக்கள் . |
ஆதிதேயம் | உண்டி , நீர் முதலியன அளித்து வழிபடல் . |
ஆதிதேயன் | விருந்தினரைப் போற்றுவோன் ; தேவன் . |
ஆதிதேவன் | கடவுள் . |
ஆதிதைவிகம் | தெய்வத்தால் வருந்துன்பம் . |
ஆதிநாடி | ஆதாரமாயுள்ள நாடி . |
ஆதிநாதர் | நவநாத சித்தருள் ஒருவர் ; முதல் தீர்த்தங்கரராகிய விருஷபதேவர் . |
ஆதிநாதன் | கடவுள் . |
ஆதிநாராயணன் | திருமால் ; வயிரக்கல் . |
ஆதிநாள் | வாரத்தின் முதல் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை . |
ஆதிநித்தியர் | படைக்கப்பட்டும் ஒரு நாளும் அழியாதவர் . |
ஆதிநூல் | முதனூல் ; வேதம் . |
ஆதிபகவன் | கடவுள் . |
ஆதிபத்தியம் | தலைமை ; இராசிச் சக்கரத்துள் குறிப்பிட்ட வீட்டுக்குடையவன் . |
ஆதிபரன் | கடவுள் . |
ஆதிபலம் | சாதிக்காய் . |
ஆதிபன் | இறைவன் . |
ஆதிபுங்கவன் | கடவுள் ; அருகன் . |
ஆதிபுரி | திருவொற்றியூர் . |
ஆதிபூதன் | பிரமன் , முன்பிறந்தவன் , முன்னுள்ளவன் . |
ஆதிபூமி | திருமண வேள்வி நடத்தும் இடம் . |
ஆதிபௌதிகம் | பஞ்ச பூதங்களாலும் தன்னை ஒழிந்த உயிரினங்களாலும் உண்டாகும் துன்பம் . |
ஆதிமகாகுரு | துரிசு . |
ஆதிமகாநாதம் | உலோகமணல் . |
ஆதாயம் | இலாபம் ; இலக்கினத்திற்குப் பதினோராம் இடம் . |
ஆதாரசக்தி | சிவசக்தி . |
ஆதாரசிலை | கற்சிலையைத் தாங்கும் அடிக்கல் . |
ஆதாரணை | ஆராதனை செய்யும்போது உண்டாகும் தெய்வ ஆவேசம் . |
ஆதாரதண்டம் | முதுகெலும்பு . |
ஆதாரநிலை | பற்றுக்கோடு . |
ஆதாரபீடம் | காண்க : ஆதாரசிலை . |
ஆதாரம் | பற்றுக்கோடு ; ஆதரவுச்சாதனம் ; பிரமாணம் ; உடல் ; மழை ; ஆறாதாரம் ; மூலம் ; அடகு ; ஏரி ; பாத்தி ; அதிகரணம் . |
ஆதாரலக்கணை | இடவாகுபெயர் . |
ஆதாளி | பேரொலி ; கலக்கடி ; வீம்புப் பேச்சு . |
ஆதாளிக்காரன் | வீம்பு பேசுகின்றவன் . |
ஆதாளித்தல் | ஆயாசப்படுதல் . |
ஆதாளிமன்னன் | கரடி . |
ஆதாளை | காண்க : ஆதளை . |
ஆதானம் | வைக்கை ; பற்றுகை ; குதிரையணி . |
ஆதானும் | எதுவாயினும் . |
ஆதி | தொடக்கம் ; தொடக்கமுள்ளது ; காரணம் ; பழைமை ; கடவுள் ; எப்பொருட்கும் இறைவன் ; சூரியன் ; சுக்கிரன் ; திரோதான சக்தி ; காண்க : ஆதிதாளம் ; அதிட்டானம் ; ஒற்றி ; காய்ச்சற்பாடாணம் ; மிருதபாடாணம் ; நாரை ; ஆடாதோடை ; குதிரையின் நேரோட்டம் ; மனநோய் . |
ஆதிக்கடுஞ்சாரி | நவச்சாரம் . |
ஆதிக்கப்பேறு | வரிவகை . |
ஆதிக்கம் | தலைமை ; அரசாளிடம் ; உரிமை ; மிகுதி . |
ஆதிக்கற்பேதம் | அன்னபேதி . |
ஆதிக்கன்னாதம் | அன்னபேதி . |
ஆதிக்கன் | சிறப்புடையோன் ; மரபோன் . |
ஆதிக்கியம் | தலைமை ; மேன்மை ; உரிமை ; காண்க : ஆதிக்கம் . |
ஆதிக்குடி | சவர்க்காரம் . |
ஆதிக்குரு | பூவழலை . |
ஆதிகம் | சிறுகுறிஞ்சாக்கொடி முதலியன . |
ஆதிகவி | முதற்புலவன் ; வான்மீகி முனிவர் . |
ஆதிகாரணம் | முதற்காரணம் . |
ஆதிகாலம் | பண்டைக்காலம் . |
ஆதிகாவியம் | முதலில் தோன்றிய காவியம் ; வால்மீகி இராமாயணம் . |
ஆதிச்சனி | காண்க : மகம் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆதிரம் | நெய் ; நெய்ச்சிட்டி . |
ஆதிரவிச்சிலை | செங்கழுநீர்க்கல் . |
ஆதிரன் | பெரியோன் . |
ஆதிரை | திருவாதிரை நாள் ; மணிமேகலைக் காப்பியத்தில் வரும் சாதுவன் மனைவி . |
ஆதிரை முதல்வன் | சிவன் . |
ஆதிரையான் | சிவன் . |
ஆதிவராகம் | பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் . |
ஆதிவராகன் | பன்றிப் பிறப்பு எடுத்த திருமால் . |
ஆதிவாகியம் | நுண்ணுடம்பு . |
ஆதிவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
ஆதிவிந்து | கார்முகில்பாடாணம் . |
ஆதிவிராகன் | சோரபாடாணம் . |
ஆதிவிராட்டியன் | சூதபாடாணம் ; சோரபாடாணம் . |
ஆதிவேதனிகம் | கணவன் இரண்டாந் தாரம் கொள்ளும்போது மூத்தாளுக்கு உரிமையாக்கும் பொருள் . |
ஆதீண்டுகுற்றி | ஆவுரிஞ்சுதறி , பசுக்கள் உராய்ந்து தினவு தீர்க்க நடப்படும் கல்தூண் . |
ஆதீனகர்த்தன் | நிலக்கிழார் . |
ஆதீனகர்த்தா | சைவ மடாதிபதி . |
ஆதீனத்தர் | காண்க : ஆதீனகர்த்தா . |
ஆதீனம் | சைவமடம் ; உரிமை ; வசம் . |
ஆது | பாகர் யானையைத் தட்டிக் கொடுக்கையில் கூறும் ஒரு குறிப்புச் சொல் ; ஆறாம் வேற்றுமையுருபு ; தெப்பம் . |
ஆதும் | ஒன்றும் , சிறிதும் . |
ஆதுமம் | அரத்தை . |
ஆதுரசாலை | அறச்சாலை . |
ஆதுரம் | பரபரப்பு ; அவா ; நோய் . |
ஆதுரன் | நோயுற்றோன் ; ஆசையுற்றோன் . |
ஆதுலசாலை | ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை . |
ஆதுலர்சாலை | ஆற்றலற்றோருக்கும் ஏழையருக்கும் உண்டியும் உறைவிடமும் அளிக்கும் சாலை |
ஆதுலன் | ஆற்றலற்றவன் ; வறியோன் . |
ஆதுவம் | கள் . |
ஆதுனிகன் | இக்காலத்தவன் . |
ஆதேசம் | கட்டளை ; திரிந்த எழுத்து ; காண்க : ஆதேயம் . |
ஆதேயம் | தாங்கப்படுவது . |
ஆதொண்டை | காற்றோட்டிக் கொடி ; காற்றோட்டிச் செடி . |
ஆதோரணன் | யானைப்பாகன் . |
ஆந்தரங்கம் | காண்க : அந்தரங்கம் . |
ஆந்தரம் | உள்ளேயிருப்பது ; மறைபொருள் . |
ஆந்தராளிகன் | நடுநிலையாளன் . |
ஆந்திரம் | குடல் ; தெலுங்கு நாடு ; தெலுங்கு மொழி . |
ஆந்தை | பறவைவகை ; பேராமுட்டி ; ஓர் இயற்பெயர் . |
ஆந்தைக்காதல் | ஆந்தை கூவுதல் ; ஆந்தை நூல் . |
ஆந்தோளம் | இசையில் இடம்பெறும் கமகம் பத்தனுள் ஒன்று . |
ஆந்தோளி | சிவிகை . |
ஆந்தோளிகம் | சிவிகை . |
ஆநிலை | பசுக்கொட்டில் . |
ஆநின்று | நிகழ்கால இடைநிலை . |
ஆப்தசேவை | குருவுக்குச் செய்யும் தொண்டு . |
ஆப்தம் | நட்பு . |
ஆப்தவாக்கியம் | பெரியோர்களின் வாக்கியங்கள் . |
ஆப்தன் | நம்பத்தக்கோன் ; உற்ற நண்பன் . |
ஆப்திகம் | தலைத்திவசம் . |
ஆப்பம் | அப்பம் ; ஒருவகைத் தின்பண்டம் ; கும்பராசி . |
ஆப்பி | பசுவின் சாணி . |
ஆப்பிடுதல் | அகப்படுதல் . |
ஆப்பியந்தரம் | உள்ளானது . |
ஆப்பியாயனம் | மனநிறைவு . |
ஆதிமடக்கு | அடியின் முதலில் சொல் மடங்கி வருவது . |
ஆதிமருந்து | திரிகடுகம் ; சுக்கு , மிளகு , திப்பிலி . |
ஆதிமலை | இமயமலை . |
ஆதிமீன் | காண்க : அசுவினி . |
ஆதிமுத்தன் | ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மா . |
ஆதிமூர்த்தி | முதற் கடவுள் . |
ஆதிமூலபுத்தகம் | அரிச்சுவடி . |
ஆதிமூலம் | முதற்காரணம் , மூலகாரணமானது . |
ஆதிமொழி | முதன்மொழி , தமிழ்மொழி ; வடமொழி . |
ஆதியங்கடவுள் | முதற்கடவுள் ; அருகன் . |
ஆதியந்தகாலநாடி | நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு . |
ஆதியந்தகாலம் | நாழிகை விநாடிகளில் சொல்லிய கிரகணத்தின் கால அளவு . |
ஆதியந்தணன் | பிரமதேவன் . |
ஆதியந்தம் | முதலும் முடிவும் , அடிமுடி . |
ஆதியரிவஞ்சம் | போகபூமிவகை . |
ஆதியாகமம் | பகுசுருதியாகமம் ; விவிலிய நூலில் முதற்பகுதி . |
ஆதியாமம் | சங்கஞ்செடி . |
ஆதியூழி | கிருதயுகம் . |
ஆதியெழுத்து | முதலெழுத்துகள் ; உயிர் 12 , மெய் 18 . |
ஆதிரசாலை | காண்க : ஆதுலர்சாலை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆமக்கழிச்சல் | சீதபேதி . |
ஆவத்து | விபத்து , கேடு . |
ஆபத்துசம்பத்து | தாழ்வு வாழ்வு . |
ஆபதம் | காண்க : ஆபத்து . |
ஆபதமறுத்தல் | கேடு நீக்குதல் . |
ஆபதுத்தாரணம் | கேட்டை நீக்கிக் காத்தல் . |
ஆபதுத்தாரணன் | துன்பத்தினின்றும் காப்போன் . |
ஆபந்தம் | அலங்காரம் ; கட்டு ; நுகக்கயிறு . |
ஆபம் | நீர் ; தீவினை . |
ஆபயன் | பால் . |
ஆபரணச்செப்பு | அணிகலப் பேழை . |
ஆபரணம் | அணிகலம் ; அலங்காரம் . |
ஆபற்காலம் | ஆபத்துச் சமயம் . |
ஆபற்சன்னியாசம் | காண்க : ஆபத்சன்னியாசம் . |
ஆபனம் | காண்க : மிளகு . |
ஆபாசம் | போலி ; எதுரொளி ; தூய்மையின்மை ; முறைத்தவறு ; அவதூறு . |
ஆபாசித்தல் | உண்மையான பொருளைப்போலத் தோன்றுதல் , எதிரொளித்தல் . |
ஆபாடம் | பாயிரம் . |
ஆபாத் | போர்வீரருக்குரிய தளவாடங்கள் சேகரிக்கக்கூடிய ஊர் . |
ஆபாத்செய்தல் | குடியேற்றி வளஞ்செய்தல் . |
ஆபாதகேசம் | உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை . |
ஆபாதசூடம் | அடிமுதல் முடிவரை . |
ஆபாதம் | நிகழ்காலம் ; விழுகை ; காண்க : ஆபாதகேசம் . |
ஆபாதமத்தம் | காண்க : ஆபாதகேசம் . |
ஆபாதமத்தகம் | காண்க : ஆபாதகேசம் . |
ஆபாதன் | தீயவன் . |
ஆபாலகோபம் | எல்லோரும் ; குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் . |
ஆபாலகோபாலம் | எல்லோரும் ; குழந்தைகள் பசுக்கள் உட்பட அனைவரும் . |
ஆபாலவிருத்தர் | சிறுவர் முதல் முதியோர்வரை உள்ளவர் . |
ஆபாலி | பேன் . |
ஆபானம் | மதுக்கடை . |
ஆபிசாரம் | காண்க : அபிசாரம் ; பகைவன் இறக்குமாறு செய்யும் ஒரு கொடுந்தொழில் . |
ஆபிமுக்கியம் | அனுகூலமாயிருக்கை . |
ஆபீரம் | ஆயர்வீதி . |
ஆபீரவல்லி | இடைச்சேரி . |
ஆபீரன் | இடையன் . |
ஆபீலம் | துன்பம் ; அச்சம் . |
ஆபீனம் | பசுவின் மடி . |
ஆபூபிகம் | அப்பவரிசை . |
ஆபூபிகன் | அப்பஞ்சுடுவோன் ; அப்பம் விற்போன் . |
ஆபை | அழகு ; ஒளி ; தோற்றம் ; நிறம் . |
ஆபோக்கிலிமம் | இலக்கினத்திற்கு மூன்று , ஆறு , ஒன்பது , பன்னிரண்டாம் இடங்கள் . |
ஆபோகம் | கீதவுறுப்புள் ஒன்று ; எத்தனம் ; நிறைவு ; வருணன் குடை . |
ஆபோசனம் | விழுங்குகை ; உண்ணுதலுக்கு முன்னும் பின்னும் மந்திரபூர்வமாக நீரை உட்கொள்ளுகை . |
ஆம் | நீர் ; ஈரம் ; வீடு ; மாமரம் ; அழகு ; சம்மதங் காட்டும் சொல் ; கேள்விப்பட்டதைக் குறிக்கும் சொல் ; இகழ்ச்சிக் குறிப்பு ; அனுமதி , தகுதி , ஊக்கம் குறிக்கும் சொல் ; ஆவது ; ஆகிய ; சாரியை ; அசைநிலை ; தன்மைப் பன்மை விகுதி ; உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி . |
ஆம்பரியம் | மின்சாரம் . |
ஆம்பல் | அல்லி ; காண்க : ஆம்பற்குழல் ; பண்வகை ; மூங்கில் ; ஊதுகொம்பு ; யானை ; கள் ; ஒரு பேரெண் ; துன்பம் ; அடைவு ; சந்திரன் ; நெல்லிமரம் ; புளியாரைப்பூண்டு ; பேரொலி . |
ஆம்பலரி | கதிரவன் ; முதலை . |
ஆம்பலா | புளியாரைப்பூண்டு . |
ஆம்பற்குழல் | குமுத வடிவாக அணைசு பண்ணிச் செறித்த ஓர் இசைக்கருவி . |
ஆம்பாறுதல் | செழிப்புக் குறைதல் . |
ஆம்பி | காளான் ; பன்றிப்பத்தர் ; ஒலி . |
ஆம்பிகேயன் | முருகக்கடவுள் ; திரிதராட்டிரன் . |
ஆம்பியம் | பாதரசம் . |
ஆம்பிரம் | காண்க : தேமா ; புளிமா ; கள் ; புளிப்பு . |
ஆம்பிலம் | புளிப்பு ; புளியமரம் ; கள் ; சூரை ; உப்பிலி . |
ஆம்பு | காண்க : காஞ்சொறி . |
ஆம்புகு | சூரை ; புளியமரம் . |
ஆம்புடை | உபாயம் . |
ஆம்புலம் | காண்க : சூரை . |
ஆம்பூறு | சூரைச்செடி . |
ஆம்மிரம் | ஒரு பலம் எடை . |
ஆமக்கட்டி | சுரக்கட்டி . |
ஆப்பு | முளை ; காண்க : எட்டி ; நோய் ; உணவு ; கட்டு ; உடல் . |
ஆப்புத்தள்ளி | அச்சுக்கூடக் கருவிகளிலொன்று . |
ஆப்புலுதம் | குதிரையின் நடைவகை . |
ஆப்புளண்டம் | காண்க : கரிசலாங்கண்ணி . |
ஆபகம் | ஆறு ; கங்கை . |
ஆபகை | ஆறு ; கங்கை . |
ஆபணியம் | அங்காடிச் சரக்கு ; அங்காடி வீதி . |
ஆபத்சகாயன் | துன்பத்தில் உதவுவோன் . |
ஆபத்சன்னியாசம் | இறக்குங்கால் பெறும் துறவு . |
ஆபத்தனம் | எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் . |
ஆவத்தனம் | எய்ப்பினில் வைப்பு , முடைப்பட்ட காலத்து உதவும் பொருள் . |
ஆபத்து | விபத்து , கேடு . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆய்ச்சி | தாய் ; பாட்டி ; பெண் ; இடைச்சி . |
ஆய்ஞன் | ஆராய்பவன் . |
ஆய்த்தி | காண்க : ஆய்ச்சி . |
ஆய்த்து | ஆயிற்று . |
ஆமக்கள் | கணவன் . |
ஆமக்கன் | கணவன் . |
ஆமகணம் | குழந்தைகட்குச் சீதவழும்பு விழும் நோய் . |
ஆமசன்னி | செரியாமையால் வரும் சன்னி . |
ஆமசிராத்தம் | சமைக்காத உணவுப்பொருளைக் கொண்டு செய்யுஞ் சிராத்தம் . |
ஆமசுரம் | செரியாமையால் குழந்தைகளுக்கு வரும் சுரம் . |
ஆமசூலை | செரியாமையால் வரும் வயிற்று வலி . |
ஆமடி | எட்டிமரவகை . |
ஆமண்டம் | விளக்கெண்ணெய் விதைதரும் செடி . |
ஆமணக்கு | விளக்கெண்ணெய் விதைதரும் செடி . |
ஆமணக்குநெய் | கொட்டைமுத்தெண்ணெய் , விளக்கெண்ணெய் . |
ஆமணக்குமுத்து | கொட்டைமுத்து . |
ஆமணக்கெண்ணெய் | காண்க : ஆமணக்குநெய் . |
ஆமணத்தி | கோரோசனை . |
ஆமதி | நண்டு . |
ஆமந்திரிகை | இடக்கை வாத்தியம் . |
ஆமநாயம் | வழக்கம் ; ஆகமம் ; குலன் . |
ஆமம் | பக்குவஞ் செய்யப்படாதது ; செரியாமை ; சீதபேதி , காளான் ; கடலை ; துவரை . |
ஆமயம் | பசுவின் சாணி ; நோய் . |
ஆமரகோளம் | கடுக்காய்ப்பூ . |
ஆமரம் | எட்டிமரம் . |
ஆமரி | சொல் . |
ஆமரிகம் | காண்க : ஆமலகம் . |
ஆமல் | காண்க : மூங்கில் ; விடமூங்கில் . |
ஆமலகம் | நெல்லி . |
ஆமலகமலம் | காண்க : கொட்டைப்பாசி . |
ஆமலகி | நெல்லி . |
ஆமவாதரோகம் | வாதநோய் வகை . |
ஆமளம் | சிவத்துதிவகை . |
ஆமா | காட்டுப் பசு ; பால்கொடுக்குந் தாய் ; ஆமாம் . |
ஆமாகோளா | காண்க : ஆமரகோளம் . |
ஆமாசயம் | இரைப்பை . |
ஆமாத்தியன் | அமைச்சன் ; படைத்தலைவன் ; மருத்துவன் . |
ஆமாத்திரர் | அமைச்சர் ; மருத்துவர் . |
ஆமாம் | ஒரு சம்மதக் குறிச்சொல் . |
ஆமாம்போடுதல் | எதற்கும் ஒத்துக் கூறுதல் . |
ஆமாறு | வழி . |
ஆமான் | காட்டுப்பசு . |
ஆமான்புகல்வி | ஆமான் ஏறு . |
ஆமானவன் | சிறந்தவன் . |
ஆமிசம் | ஊன் ; கைக்கூலி ; புணர்ச்சி ; போகத்திற்குரிய பொருள் . |
ஆமிடம் | உணவு ; கண்டுமுதல் ; விளைவுமதிப்பு . |
ஆமிநாயம் | காண்க : ஆமநாயம் . |
ஆமிரம் | மாமரம் ; புளிப்பு . |
ஆமிரேசர் | மாமரத்தின்கீழ்க் கோயில் கொண்டுள்ளவர் , ஏகாம்பரநாதர் . |
ஆமிலம் | புளிப்பு ; புளியமரம் . |
ஆமிலிகை | புளிப்பு . |
ஆமிலை | காண்க : புளியாரை . |
ஆமின் | காண்க : அமீன் . |
ஆமுகம் | தொடக்கம் . |
ஆமுகர் | நந்திதேவர் . |
ஆமென் | அப்படியே ஆகுக . |
ஆமேற்பல்லூரி | கோரோசனை . |
ஆமை | கூர்மம் ; ஓர் உயிரினம் ; ஒரு நோய் ; மணம் . |
ஆமைத்தாலி | ஆமை வடிவுள்ள தாலி . |
ஆமைதவழி | ஆமை சஞ்சரித்தலால் ஆகாதென்று விலக்கிய நிலம் . |
ஆமைப்பலகை | ஆமை உரு அமைத்த மணை . |
ஆமைப்பூட்டு | பூட்டுவகை . |
ஆமைமடி | பால் நிரம்பச்சுரக்கும் சிறுமடி . |
ஆமையாழ் | செவ்வழி யாழ்வகை . |
ஆமையோட்டுக்கட்டி | பெரும் புண்கட்டி . |
ஆமையோடு | ஆமையின் முதுகோடு . |
ஆமோசனம் | கட்டுதல் ; ஒளிவீசுதல் ; விடுதலை செய்தல் . |
ஆமோதம் | மகிழ்ச்சி ; மிகுமணம் . |
ஆமோதனம் | எடுத்து மொழிந்ததற்கு உட்படுகை , முன்மொழிந்ததற்கு உட்படுகை . |
ஆமோதித்தல் | உடன்பட்டதைத் தெரிவித்தல் . |
ஆய் | அழகு ; நுண்மை ; சிறுமை ; மென்மை ; வருத்தம் ; இடைச்சாதி ; தாய் ; கடைவள்ளல்களுள் ஒருவன் ; மலம் ; பொன் ; அருவருப்புக்குறிப்பு ; முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி ; ஏவலொருமை விகுதி ; ஆக ; ஒரு விளியுருபு . |
ஆய்க்குடி | இடைச்சேரி . |
ஆய்க்குழல் | புல்லாங்குழல் . |
ஆயக்குழல் | புல்லாங்குழல் . |
ஆய்ச்சல் | வேகம் ; முறை ; பாட்டம் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆயானம் | இயற்கைக் குணம் ; வருதல் . |
ஆயி | தாய் ; ஆயா ; ஒரு சக்தி ; ஒரு மரியாதைச் சொல் . |
ஆயிட்டு | ஆகையால் . |
ஆயிடை | அவ்விடம் ; அக்காலத்து . |
ஆயிரக்கால் மண்டபம் | ஆயிரம் தூண்களுள்ள கோயில் மண்டபம் . |
ஆயிரக்காலி | மரவட்டை ; துடைப்பம் . |
ஆயிரக்கிரணன் | சூரியன் . |
ஆயிரங்கண்ணன் | இந்திரன் . |
ஆயிரங்கண்ணோன் | இந்திரன் . |
ஆயிரங்கண்ணுப் பானை | கலியாணத்தில் பயன்படுத்தும் வண்ணப்பானை . |
ஆயிரங்கதிரோன் | காண்க : ஆயிரக்கிரணன் . |
ஆயிரங்காய்ச்சி | மிகுதியாகக் காய்க்கும் தென்னை , பலா , மாப் போன்ற மரங்கள் ; துடைப்பம் . |
ஆயிரங்காற்சடை | துடைப்பம் . |
ஆயிரஞ்சோதி | சூரியன் . |
ஆயிரநாமன் | ஆயிரம் திருப்பெயர்களையுடையவன் ; சிவன் ; திருமால் . |
ஆயிரம் | ஓர் எண் . |
ஆயிரம்பெயரோன் | காண்க : ஆயிரநாமன் . |
ஆயிரமுகத்தோன் | வீரபத்திரன் . |
ஆயிரவருக்கம் | உடற்கவசம் . |
ஆய்தக்குறுக்கம் | மாத்திரை குறுகிய ஆய்தம் . |
ஆய்தப்புள்ளி | ஆய்தவெழுத்து . |
ஆய்தம் | மூன்று புள்ளி (ஃ) வடிவினதாகிய ஓரெழுத்து , சார்பெழுத்துகளுள் ஒன்று . |
ஆய்தல் | நுணுகுதல் ; வருந்துதல் ; அழகமைதல் ; அசைதல் ; சோதனை செய்தல் ; பிரித்தெடுத்தல் ; ஆலோசித்தல் ; தெரிந்தெடுத்தல் ; கொண்டாடுதல் ; கொய்தல் ; காம்பு களைதல் ; குத்துதல் . |
ஆய்தூவி | சூட்டுமயிர் ; தலைமேலுள்ள மெல்லிய இறகு . |
ஆய்ந்தோர் | அறிஞர் ; புலவர் ; பார்ப்பார் . |
ஆய்ப்பாடி | காண்க : ஆயர்பாடி . |
ஆய்ப்பு | ஒடுங்குகை . |
ஆய்மலர் | தாமரை . |
ஆய்மா | காண்க : ஆவிமா ; சாரப்பருப்பு . |
ஆய்மை | ஆராயுந்தன்மை ; நுண்ணிய பொருள் . |
ஆய்வரல் | ஆராய்தல் ; கூடிவருதல் . |
ஆய்வருதல் | ஆராய்தல் ; கூடிவருதல் . |
ஆய்வாளர் | ஆராய்ச்சியாளர் . |
ஆய்வு | ஆராய்கை ; அகலம் ; வருத்தம் ; நுணுக்கம் . |
ஆய்வை | துயிலிடம் . |
ஆயக்கசுரம் | முறைக்காய்ச்சல் . |
ஆயக்கட்டு | குளப்புரவு ; ஊரின் மொத்த நிலவளவுக் கணக்கு ; பொய்ம்மொழி . |
ஆயக்கட்டுமானியம் | அரசாங்கச் சட்டத்தின் படி (சாசனப்படி) ரொக்கமாக வசூலிக்கும் பணம் . |
ஆயக்கர் | ஊர்ப்பணியாளருள் ஒருவகையார் . |
ஆயக்கல் | காரக்கல் . |
ஆயக்காரன் | சுங்கம் முதலிய வரிவாங்குவோன் . |
ஆயக்காரி | பொதுமக்கள் . |
ஆயக்கால் | வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி . |
ஆயக்கோல் | வாகனத்தைத் தாங்கும் முட்டுக்கால் ; முட்டுக்கட்டை ; சிவிகைதாங்கி . |
ஆயச்சாவடி | சுங்கத்துறை . |
ஆயசம் | இருப்பாயுதம் ; இரும்புச்சட்டை ; இரும்பினாற் செய்யப்பட்டது . |
ஆயசூரி | கடுகு . |
ஆயத்தம் | முன்னேற்பாடு ; அணியம் , சித்தம் ; போருக்குத் தயார் ; கூர்மை ; கோபம் ; தள்ளுகை ; இசைக்கிளையில் ஒன்று . |
ஆயத்தலம் | மறைவிடம் ; காண்க : ஆயத்துறை . |
ஆயத்தார் | தோழியர் கூட்டம் ; |
ஆயத்தி | நாள் ; எல்லை ; அன்பு ; வலி ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை . |
ஆயத்துறை | சுங்கச்சாவடி . |
ஆயதம் | நீளம் ; அகலம் குறைந்து நீளமாயிருக்கும் வடிவம் ; அளவிற்பெருமை . |
ஆயதனம் | ஆலயம் ; இடம் ; வீடு . |
ஆயதி | வருங்காலம் ; நீட்சி ; பெருமை ; பொருந்துகை . |
ஆயந்தி | அண்ணன் மனைவி . |
ஆயந்தீர்த்தல் | வரி செலுத்துதல் . |
ஆயப்பாலை | பாலைப்பண்வகை . |
ஆயம் | கமுக்கம் ; தோழியர் கூட்டம் ; வருத்தம் ; மேகம் ; மல்லரிப்பறை ; 34 அங்குல ஆழமுள்ள குழி ; வருவாய் ; குடியிறை ; கடமை ; சூதுகருவி ; கவற்றிற்றாயம் ; சூதாட்டம் ; பசுத்திரள் ; நீளம் ; மக்கள் தொகுதி ; பொன் . |
ஆயமானம் | உயிர்நிலை ; இரகசியம் . |
ஆயமுற்கரவலன் | குபேரன் . |
ஆயமுற்கரவன் | குபேரன் . |
ஆயமேரை | ஊர்ப்பணியாளர்களுக்குக் கொடுக்கும் தானியப் பகுதி . |
ஆயர்பாடி | இடைச்சேரி . |
ஆயலோட்டல் | பயிர் சேதமாகாதபடி மகளிர் பறவைகளை விரட்டுகை . |
ஆயவன் | அத்தகையவன் . |
ஆயவியயம் | வரவுசெலவு . |
ஆயன் | இடையன் . |
ஆயனம் | ஆண்டு ; நெல்வகை ; கிரணம் . |
ஆயனி | துர்க்கை . |
ஆயா | மரவகை ; பாட்டி ; தாதி . |
ஆயாசம் | களைப்பு ; மனவருத்தம் ; முயற்சி . |
ஆயாமம் | அடக்குகை ; நீளம் ; அகலம் . |
ஆயாள் | தாய் ; பாட்டி ; முதியவள் . |
ஆயான் | தந்தை ; தமையன் . |
ஆர்க்கு | இலைக்காம்பு ; கிளிஞ்சில் வகை ; எருக்கு ; ஒரு மீன் . |
ஆர்க்குவதம் | கொன்றைமரம் . |
ஆர்க்கை | வாரடை ; கட்டுகை ; துரும்பு . |
ஆர்கதி | திப்பிலி . |
ஆர்கலி | கடல் ; மழை ; வெள்ளம் ; திப்பி . |
ஆர்கோதம் | காண்க : சரக்கொன்றை . |
ஆர்ச்சவம் | ஒத்த நோக்கம் . |
ஆர்ச்சனம் | பொருளீட்டுகை ; அருச்சிக்கை . |
ஆர்ச்சனை | பொருளீட்டுகை ; அருச்சிக்கை . |
ஆர்ச்சி | ஆத்தி . |
ஆர்ச்சித்தல் | காண்க : ஆர்ச்சனம் . |
ஆர்ச்சிதம் | சம்பாத்தியம் ; கைப்பற்றப்பட்டது . |
ஆர்த்தபம் | மகளிர் பூப்படைதல் ; மகளிர் தீட்டு . |
ஆர்த்தவம் | மகளிர் பூப்படைதல் ; மகளிர் தீட்டு . |
ஆர்த்தம் | துன்பம் அடைந்தது . |
ஆர்த்தர் | எளியவர் ; நோயுற்றோர் ; பெரியோர் . |
ஆர்த்தல் | ஒலித்தல் ; போர்புரிதல் ; தட்டுதல் ; அலர்தூற்றுதல் ; கட்டுதல் ; பூணுதல் ; மறைத்தல் ; மின்னுதல் . |
ஆர்த்தன் | நோயுற்றோன் ; துன்புறுவோன் ; சான்றோன் . |
ஆர்த்தார்க்கோன் | சோழன் . |
ஆர்த்தி | வேதனை ; வில்லின் நுனி ; ஆர்வம் ; சிவசத்தியுள் ஒன்று . |
ஆர்த்திகை | துன்பம் . |
ஆர்த்தியம் | காட்டுத் தேன் . |
ஆர்த்திரகம் | இஞ்சி . |
ஆர்த்திராதரிசனம் | மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி . |
ஆருத்திராதரிசனம் | மார்கழித் திருவாதிரை நாளில் சிதம்பரத்தில் இறைவனைக் காணும் காட்சி . |
ஆர்த்திரை | திருவாதிரை . |
ஆர்த்துதல் | ஊட்டுதல் ; நிறைவித்தல் ; நுகர்வித்தல் ; கொடுத்தல் . |
ஆர்த்துபம் | பேரரத்தை . |
ஆர்த்துவம் | பேரரத்தை . |
ஆர்தல் | நிறைதல் ; பரவுதல் ; பொருந்துதல் ; தங்குதல் ; உண்ணுதல் ; துய்த்தல் ; ஒத்தல் ; அணிதல் ; பெறுதல் . |
ஆர்ப்பரவம் | ஆரவாரம் ; போர் . |
ஆர்ப்பரித்தல் | ஆரவாரித்தல் . |
ஆர்ப்பரிப்பு | ஆரவாரம் . |
ஆர்ப்பாட்டம் | ஆரவாரம் ; வீண்பேச்சு . |
ஆர்ப்பு | பேரொலி ; சிரிப்பு ; மகிழ்ச்சி ; போர் ; மாத்திரை கடந்த சுருதி ; கட்டு ; தைத்த முள்ளின் ஒடிந்த கூர் . |
ஆயிரவாரத்தாழியன் | திருவடிகளில் ஆயிரம் வரி கொண்ட சக்கரத்தையுடையவன் ; புத்தன் . |
ஆயில் | மதகரிவேம்பு ; செவ்வகில் ; அசோகு ; ஆயிலிய நாள் . |
ஆயிலியம் | ஒன்பதாம் மீன் . |
ஆயிழை | தெரிந்தெடுத்த அணிகலன் ; கன்னியாராசி ; அரிவாள்நுனி . |
ஆயின் | ஆனால் ; ஆராயின் . |
ஆயின்மேனி | மரகதவகை . |
ஆயின்று | ஆயிற்று . |
ஆயினும் | ஆனாலும் ; ஆவது ; உம்மைப் பொருளில் வரும் எண்ணிடைச் சொல் . |
ஆயு | ஆயுள் ; எண்குற்றங்களுள் வாழ்நாளை வரையறுப்பது . |
ஆயுகம் | வாழ்நாள் . |
ஆயுசகன் | வாயு . |
ஆயுசு | வாழ்நாள் . |
ஆயுசுகாரகன் | சனி . |
ஆயுசுமான் | நீண்ட ஆயுளுடையவன் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று . |
ஆயுட்கோள் | சாதகனுடைய ஆயுளைக் கணிப்பவனாகக் கருதப்படும் சனி . |
ஆயுட்டானம் | சன்மலக்கினத்திலிருந்து எட்டாமிடம் . |
ஆயுட்டோமம் | நீண்ட வாணாளின் பொருட்டுச் செய்யும் வேள்வி . |
ஆயுதசாலை | படைக்கலக் கொட்டில் . |
ஆயுதப்பயிற்சி | படைக்கலம் பயில்கை . |
ஆயுதபாணி | கையில் ஆயுதம் கொண்டவன் . |
ஆயுதபூசை | நவராத்திரியின் இறுதிநாளில் ஆயுதங்களுக்குச் செய்யும் பூசை . |
ஆயுதம் | படைக்கலம் ; கருவி ; ஆயத்தம் ; இசைக்கிளையில் ஒன்று . |
ஆயுதிகன் | பதினாயிரம் காலாட் படைக்குத் தலைவன் . |
ஆயுநூல் | காண்க : ஆயுர்(ள்)வேதம் . |
ஆயுர்ப்பாவம் | வாணாளின் போக்கு . |
ஆயுர்வேதம் | மருத்துவ நூல் . |
ஆயுள்வேதம் | மருத்துவ நூல் . |
ஆயுர்வேதாக்கினி | கமலாக்கினி , தீபாக்கினி , காடாக்கினி என்னும் மூன்று தீ . |
ஆயுவின்மை | அருகன் எண்குணத்துள் ஒன்று . |
ஆயுள் | வாழ்நாள் ; அப்பொழுது . |
ஆயுள்வேதர் | ஆயுள்வேதம் வல்லார் . |
ஆயுள்வேதியர் | ஆயுள்வேதம் வல்லார் . |
ஆயெறும்பு | எறும்புவகை . |
ஆயோகம் | நீர்க்கரை ; துறைகளில் மரக்கலங்களைக் கட்டும் பந்தி ; அர்ச்சனை . |
ஆயோதம் | மோர் ; வேட்டம் . |
ஆயோதனம் | மோர் ; வேட்டம் . |
ஆயோர் | அவர்கள் ; ஆனோர் . |
ஆர் | நிறைவு ; பூமி ; கூர்மை ; அழகு ; மலரின் பொருத்துவாய் ; காண்க : ஆத்தி ; திருவாத்தி ; ஆரக்கால் ; தேரின் அகத்தில் செறிகதிர் ; அச்சு மரம் ; செவ்வாய் ; சரக்கொன்றை ; அண்மை ; ஏவல் ; பலர்பால் படர்க்கை வினைமுற்று விகுதி ; மரியாதைப் பன்மை விகுதி ; ஓர் அசை ; அருமையான . |
ஆர்க்கங்கோடன் | காண்க : கொல்லங்கோவை . |
ஆர்க்கம் | இலாபம் ; காண்க : ஆரகம் ; ஆரக்கம் ; சந்தனம் ; பித்தளை . |
லேபிள்கள்:
அகராதி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)