கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 31 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-5

ஒழுக்கமுடைமை 
(5)
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

கருத்து 

பொறாமை உடையவனிடத்தில் செல்வம்
இல்லாததைப் போல ஒழுக்கமில்லாதவனிடத்தில்
உயர்வு இல்லை 

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

பலபொருள் ஒருமொழி-தா

(1)தாலம்-பனை 
    தாலம்-நா 
    தாலம்-பூமி

திருக்குறள் அதிகாரம் - 14-4

ஒழுக்கமுடைமை 


(4)
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.

கருத்து 

நூல்களைக் கற்பவன் கற்றதை மறந்தாலும்
திரும்பவும் கற்றுக்கொள்ளலாம் ;ஆனால்
அவனுடைய ஒழுக்கம் குறைவுபட்டால்
அவனுடைய குடிச் சிறப்பும் கெடும்.

புதன், 29 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 14-3

ஒழுக்கமுடைமை 
(3)
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.


கருத்து 
ஒழுக்கம் உடைமையே உயர்குடிப்பிறப்பின்
தண்மை;ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்த
குடிப்பிறப்பின் தன்மையாகி விடும்.

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

பலபொருள் ஒருமொழி-சே

(1)சேய்-குழந்தை 
     சேய்-மூங்கில் 
     சேய்-தூரம்

பலபொருள் ஒருமொழி-சு

(1)சுருதி- வேதம் 
    சுருதி-ஒலி 
    சுருதி-சுதி 
    சுருதி-மந்திரம் 
    சுருதி-இசை

பலபொருள் ஒருமொழி-சி

(1)சிலை-கற்சிலை
     சிலை-வில் 
     சிலை-மலை

திருக்குறள் அதிகாரம் - 14-2

ஒழுக்கமுடைமை 

(2)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை .


கருத்து


ஒழுக்கத்தை வருந்தியும் ஓம்பிக் காக்க
வேண்டும்;பலவற்றையும் ஆராய்ந்து
ஓம்பித் தெளிந்தாலும் அவ்வோழுக்கமே
துணையாக உள்ளது.

திங்கள், 27 ஆகஸ்ட், 2012

பலபொருள் ஒருமொழி-ச

(1)சரம்-அம்பு 
    சரம்-அசையும்பொருள் 
    சரம்-பூமாலை

திருக்குறள் அதிகாரம் - 14-1

ஒழுக்கமுடைமை 

(1)
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்.


கருத்து 

ஒழுக்கம் எல்லோருக்கும் மேன்மையைக்
கொடுத்தலால்,அந்த ஒழுக்கத்தை உயிரினும்
மேலானதாக கருதவேண்டும்.

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-10

அடக்கமுடைமை 

(10)
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து .


கருத்து 

மனதில் கோபம் தோன்றாமல் காத்து,கல்வி
கற்று,அடக்கமுடையவனாக இருக்க வல்லவனின்
வழியில் அறக்கடவுள் புகுந்து நின்று அவனை
அடையும் சமயத்தை பார்த்திருக்கும்.

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 25 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-9

அடக்கமுடைமை 

(9)
தீயீனாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

கருத்து 
தீயீனாற் சுட்டபுண் உடலில் தழும்பு
இருந்தாலும் உள்ளத்தில் ஆறிவிடும் ;
நாவினால் தீயசொல் கூறிச் சுடும்
புண் என்றும் ஆறாது.

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

பலபொருள் ஒருமொழி-கா

(1)காயம்-உடல் 
    காயம்-பெருங்காயம் 
    காயம்-புண்

திருக்குறள் அதிகாரம் - 13-8

அடக்கமுடைமை 

(8)
ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

கருத்து 

தீய சொற்களால் உண்டாகும் தீமை
ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால்,
அதனால் பிற அறங்களினால் உண்டாகும்
நன்மைகளும் விளையாமல் போகும் .

பலபொருள் ஒருமொழி-க

(1) கலம்-ஆபரணம் 
      கலம்- மரக்கலம் 
      கலம்-மண்பாத்திரம்

(2) கலி-துன்பம் 
      கலி- கடல் 
      கலி-ஒலி 
      கலி-கடையுகம்

(3)கடி-வாசனை 
    கடி-காவல் 
   கடி-கடித்தல்

(4)கடை-சந்தை 
    கடை-கடைசி 
   கடை-கடைதல் 
   கடை-பொருட்கள்விற்குமிடம்

(5)கண்டம்-கழுத்து 
    கண்டம்-ஆபத்து 
   கண்டம்-பெரு நிலப்பரப்பு

(6)கல்-படி 
    கல்-தோன்று 
    கல்-கருங்கல்

(7)கலம்-பாத்திரம் 
    கலம்-கப்பல் 
   கலம்-ஆபரணம்

(8)கவி-பாட்டு 
   கவி-குரங்கு 
   கவி-கவிஞன்

வியாழன், 23 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-7

அடக்கமுடைமை 
(7)
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

கருத்து

 
எவற்றைக் காக்காவிட்டாலும் நாவைக்
காத்தல் வேண்டும்;அதனைக் காக்கா
விட்டால் குற்றமான சொற்களைச்
சொல்லி துன்பம் அடைவர் .

பலபொருள் ஒருமொழி-ஒ

(1)ஓளி-மறை 
    ஓளி-பிரகாசம் 
    ஓளி-புகழ்

(2)ஒலி-சத்தம் 

புதன், 22 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-6

அடக்கமுடைமை 

(6)
ஒருமையுள் ஆமைபோல் ஜந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து .

கருத்து  


ஒரு பிறப்பில்,ஆமைபோல் ஜம்பொறிகளையும்
அடக்க வல்லனாயின்,அது அவனுக்கு ஏழு
பிறப்புகளிலும் பாதுகாவலை உடையதாகும்.

பலபொருள் ஒருமொழி-ஏ

(1)ஏறு-எருது 
    ஏறு-இடி 
    ஏறு-விலங்குகளின் ஆண்

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-5

அடக்கமுடைமை 
(5)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் 
செல்வர்க்கு செல்வந் தகைத்து .

கருத்து   
 
அடங்கி நடத்தல் எல்லோருக்கும் நன்மை
ஆகும்;அவர்களுள்ளும் செல்வருக்கு அது 
ஒரு செல்வமாகிப் பெருமை கொடுக்கிறது . 

திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


திங்கள், 20 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-4

அடக்கமுடைமை 


(4)
நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது .


கருத்து 


தன் ஒழுக்கத்தில் வேறுபடாது நின்று
அடங்கியிருப்பவனுடைய  உயர்வு
மலையை விட மிகப்பெரியதாகும்.

மாதங்கள்

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


வியாழன், 16 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-3

அடக்கமுடைமை  


(3)
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து 
ஆற்றின் அடங்கப் பெறின் .


கருத்து 

அறிய வேண்டியவற்றை அறிந்து நல்வழியில் 
அடங்கி நடந்தால்,அவ்வடக்கம் நல்லோரால் 
மதிக்கப்பட்டுச் சிறப்பைத் தரும் .

புதன், 15 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-2

அடக்கமுடைமை 


(2)
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு .

கருத்து


உயிருக்கு அடக்கத்தினும் மேலான
செல்வம் இல்லை,ஆகையால் அவ்
அடக்கத்தைச் சிறந்த பொருளாகக்
கொண்டு காக்கவேண்டும்.

மரபுத்தொடர்கள்-வா

(1)வாய்காட்டுதல்-எதிரத்துபேசுதல்

(2)வாய்புலம்பல்-பிதற்றுதல்



செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 13-1

அடக்கமுடைமை 

(1)
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.


கருத்து 

அடக்கம் என்னும் பண்பு ஒருவனைத்  
தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாது
இருத்தல் பொறுக்கமுடியாத துன்பத்துள்
செலுத்திவிடும்.

மரபுத்தொடர்கள்-வ

(1)வயிற்றிலடித்தல்- நட்டத்தை உண்டாக்குதல்

திங்கள், 13 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 12-10

நடுவுநிலைமை 


(10)
வாணிகஞ்  செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோற் செயின்.



கருத்து 


பிறர் பொருளையும் தம் பொருள்போல் 
கருதிப் போற்றிச் செய்தல் ,அதுவே 
வாணிகம் செயவாருக்கு உரிய நல்ல 
வாணிப முறையாகும் .

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 12-9

நடுவுநிலைமை 


(9)
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின் .


கருத்து 

உள்ளத்தில் கோணல் இல்லாத தன்மையை
உறுதியாகக் கொண்டால்,சொல்லினும்  
கோணாதிருத்தல் நடுவு நிலைமை ஆகும்.

சனி, 11 ஆகஸ்ட், 2012

திருக்குறள் அதிகாரம் - 12-8

நடுவுநிலைமை 

(8)
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி .


கருத்து

முன்னே தான் சமமாக நின்று பின்பு பொருளைச்
சீர்தூக்கும் தராசுக் கோல் போல் அமைந்து ஒரு
பக்கமாகச் சாயாமல் இருத்தல் சான்றோர்க்கு
அழகு.

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

நீலகேசி-44

451நிறைபொறி யுளவவை யறிதலி னெறிமைய
முறைபொரு ணிகழினு முறைபடு மறிவிலன்
மறைபொரு ளுளவவ னறிவினை மறையல
விறைபொருண் முழுவது மறிதிற மிதுவே.


452பிணிதரு பிறவிய மறுசுழி யறுவதொர்
துணிவிது வெனநம துயர்கெடு முறைமையு
மணிதரு சிவகதி யடைதலு மருளுதல்
பணிதரு பரமன தருள்படு வகையே.


453சொரிவன மலர்மழை துளிகளு நறுவிரை
புரிவன வமரர்கள் புகழ்தகு குணமிவை
விரிவன துதியொலி விளைவது சிவகதி
எரிவன மணியிதெ மிறைவன திடமே.


454அரசரு மமரரு மமர்வனர் வினவலின்
வரைவில பிறர்களு மனநிலை மகிழ்வெய்த
உரைபல வகையினு முளபொரு ளுணரவொர்
முரைசென வதிருமெ முனைவரன் மொழியே.


455வினையிரு ளடுவன விரிகதி ரியல்பொடு
கனையிருள் கடிவன கடுநவை யடுவன
மனையிரு ணெறிபெற மதிகெட வடைவன
வினையமெ யிறையவ னிணையடி யிவையே.


456ஆத்த னிவனென் றடிக ளிடமிசைப்
பூத்தனைத் தூவிப் பொருந்து துதிகளி
னேத்துநர் கண்டா யிருவினை யுங்கெடப்
பாத்தில் சிவகதிப் பான்மைய ரென்றாள்.


457ஏந்த றிறங்க ளிவையே லமைந்தன
போந்த வகையாற் பொருளும் பிழைப்பில
வீந்த விவற்றினின் வேற்றுமை வீட்டிற்கு
மாய்ந்த வகையா லறிவிமற் றென்றான்.


458வித்தென்றும் வெந்தால் முளையல தாயெண்மை
யொத்தினி துண்டா முயிரும் பிறப்பின்றிச்
சித்தி யகத்துச் சிதைவிலெண் டன்மையி
னித்திய மாகி நிலையுள தென்னாய்.


459ஒக்கு மிதுவென வுள்ளங் குளிர்ந்தினி
மொக்கலன் சொல்லுமிம் மோக்கத்தைப் பாழ்செய்த
தக்கில தாகுந் தலைவ ரியல்பென
நக்கன னாய்க்கென்று நன்னுத லென்றான்.


460பண்டே யெனக்கிம் மயக்கம் பயந்தவன்
கண்டார் மயங்குங் கபில புரமென்ப
துண்டாங் கதனகத் தோத்துரைக் கின்றனன்
றண்டா தவனொடு தாக்கெனச் சொல்லி.


461சிறப்பின தென்பதைச் செப்பலுந் தெற்றெனப்
பிறப்பறுத் தின்பெய்தும் பெற்றியின் மிக்க
வறப்புணை யாகிய வாயிழை யாயான்
மறப்பில னென்று வலஞ்செய் தொழிந்தான்.


462அருளே யுடைய னறனே யறிவா
டெருளா தவரைத் தெருட்டல் லதுவே
பொருளா வுடையாள் புலனே நிறைந்தாள்
இருடீர் சுடர்போ லெழுந்தா ளவன்மேல்.

திருக்குறள் அதிகாரம் - 12-7


நடுவுநிலைமை 

(7)
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருத்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.



கருத்து 

விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இன்ன
அளவினையுடையது என்று கூறத்தக்கதன்று ;
விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மரபுத்தொடர்கள்-பே

(1)பேய்க்கதை - பயனற்ற பேச்சு

திருக்குறள் அதிகாரம் - 12-6

நடுவுநிலைமை 


(6)
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுஒரீஇ அல்ல செயின் .


கருத்து  


தன் மனம் நடுவு நிலைமை நீங்கி
நடுவல்லாதவற்றைச் செய்தால்,
அவன் ´நான் கெடப் போகிறேன் ´
என்று அதனால் அறியவேண்டும்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

மரபுத்தொடர்கள்-பு

(1)புண்படுத்துதல் -மனம் நோகப்பேசுதல்

திருக்குறள் அதிகாரம் - 12-5

நடுவுநிலைமை 

(5)
கெடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.


கருத்து 

கெடும் ஆக்கமும் வாழ்வில் இல்லாமல்
இல்லை;ஆகையால்,நெஞ்சில் நடுவு
நிலைமை தவறாமல் இருத்தல்
சான்றோர்க்கு அழகு.

நீலகேசி-43

426பேர்த்தினவண் வார லில்லாப்பிறவியாந் தான மென்னிற்
றீர்த்திவண் வார லின்மைசேர்விடக் குண்மை யாமோ
கூர்த்தலில் வினையி னின்மைகூறுவ னென்றி யாயி
னார்த்துள னவனே யாயினண்ணுமே வினையு மென்றான்.


427பிறப்பதை வீடு மென்னேனவ்விடம் பேர்ப்பின் றென்னே
னுறத்தகு வினைக டாமுமுண்மையா லொட்டு மென்னேன்
மறத்தலில் யோக பாவமாசதா மீட்டு மென்ப
திறப்பவும் வேண்டு கின்றேற்கெய்தல நின்சொ லென்றாள்.


428பிறக்குந்தன் ஞானத் தாலும்பின்னுந்தன் னுண்மை யாலும்
புறப்பொருள் கொண்டு நின்றுபுல்லிய சிந்தை யாலுஞ்
சிறப்புடை வீடி தென்றுசெப்புநீ தீவி னையைத்
துறக்குமா றில்லை நல்லாய்சொல்லுநீ வல்ல தென்றான்.


429நன்றியில் கார ணங்கணாட்டிநீ காட்டி னவ்வு
மொன்றுநா னொட்டல் செல்லேன்யோடுகொடு பாவ நின்றாற்
குன்றினிற் கூர்ங்கை நாட்டாற்கூடுநோ யாதிற் குண்டோ
வொன்றுநீ யுணர மாட்டாயொழிகநின் னுரையு மென்றாள்.


430கருவிதா னொன்று மின்றிக்கடையிலாப் பொருளை யெல்லா
மருவிய ஞானந் தன்னாலறியுமெம் மிறைவ னென்பாய்
கருவிதா னகத்தி னாயகடையிலா ஞான மன்றோ
மருவியார்க் கமிர்த மொப்பாய்மாற்றந்தா விதனுக் கென்றான்.


431வினையுமவ் வினையி னாயவிகலஞா னங்க டாமு
மினையவே கருவி யென்றாலிங்குநின் னுள்ளம் வையாய்
முனைவனாய் மூர்த்தி யல்லான்மூடுமே மாசு மென்பாய்
கனைகட லென்லை காணுங்காக்கையொத் தாங்கொ லென்றாள்.


432கொண்டதன் கரணந் தானுமில்லையேற் கூற்று மில்லை
மண்டினர் வினவு வார்க்குமலைச்சிலம் பனைய னென்றா
லுண்டுதன் கரணந் தானுமுரைக்குநர்க் குறுவ னென்னிற்
பண்டுசெய் நல்வி னையைப்பகவனே யென்று மென்றான்.


433தனுவெனுங் கருவி தன்னாற்றன்னடைந் தார்க டன்னை
வினவின வுணர்ந்து சொல்லும்வினையினுக் கின்ன துண்டோ
சினவினுந் தேர வொன்றுசெப்புவன் செல்க தீயுட்
கனவினு நின்ன னாரைக்காணல னாக வென்றாள்.


434முறையினா லறிய லன்னேன் மூத்தலே யிளமை சாக்கா
டுறையல வொருவன் கண்ணே யுடனவை யாக வொட்டி
னிறைவனா ருணர்வு தானுமின்மைமே லெழலும் வேண்டி
யறைதுநா மன்ன மன்னா யன்னண மாக வென்றான்.


435சீலவான் றெய்வ யாக்கைதிண்ணிதா வெய்தி நின்றார்
காலமூன் றானு முய்த்துக்காட்டலுங் காண்டு மன்றோ
ஞாலமூன் றானு மிக்கஞானவா னான நாதன்
போலுமென் றோர்தல் செல்லாய்போர்த்தனை யகமு மென்றாள்.


436நாளெல்லா மாகி நின்றநன்பொரு டம்மை யெல்லாங்
கோளெல்லாந் தானொ ருங்கேகொள்ளுமே லீர்ங்கு வள்ளைத்
தாளெல்லாந் தானொ ருங்கேதானுநல் லானோர் நல்ல
வாளினா லேறு முண்டேல்வாய்க்குநின் னுரையு மென்றான்.


437நீருநீர் தோறு முவ்வாநலையிற்றே திங்க ளென்று
மூரினூர் தோறு மொவ்வாவொளியிற்றே ஞாயி றென்றும்
யாரின்யார் கேட்ட றீவாரன்னனே யண்ண லென்றார்
தேரனீ சொன்ன தன்னம்சேரல வாக வென்றாள்.


438அளவிலாப் பல்பொ ருள்கட்காகுபண் பாகி நின்ற
வுளவெலாப் பொதுக்கு ணத்தானொருங்குகோ ளீயுமென்னிற்
பிளவெலா மாகு மன்றேபெற்றிதா மொத்த லில்லேற்
கொளவெலா ஞானந் தானுங்கொள்ளுமா றெவன்கொ லென்றான்.


439ஒன்றல்லாப் பலபொ ருளுமொத்தொவ்வாப் பெற்றி யாலே
நின்றுகோட் செய்யு மென்றானீடிய குற்ற மாகா
தென்றலா லின்ன தன்மையிறைவன தறிவு மெய்ம்மை
யின்றெலாங் கேட்டு மோராயேடனீ யென்று சொன்னாள்.


440எல்லையில் பொருள்க டம்மை எல்லையி லறிவி னாலே
யெல்லையின் றறியு மெங்க ளெல்லையி லறிவ னென்பாய்
எல்லையில் பொருள்க டம்மை யெல்லையின் றறியி னின்ற
வெல்லையி லறிவு தானு மெங்ஙன மெய்து மென்றான்.


441துளக்கில்லாப் பலபொ ருளுந்தொக்கதன் றன்மை யெல்லாம்
விளக்குமே ஞாயி றொப்பவென்பது மேலுஞ் சொன்னேற்
களக்கிவர் தன்ன மன்னாயாத்தன தறிவு மென்றென்
றிளக்கிநீ யின்னு ம·தேசொல்லுதி யேழை யென்றாள்.


442ஓதலி லுணர்வு மின்றேலூறவற் குண்டு மாகு
மோதலி லுணர்வு முண்டேலொன்றுமே பலவும் வேண்டா
மோதலி லுணர்பொ ரூடாமுள்ளவும் மில்ல வும்மே
லேதமா மில்பொ ருண்மேனிகழ்ச்சிதா னிறைவற் கென்றான்.


443சென்றவக் குணங்க டாமுஞ்செல்லுமக் குணங்க டாமு
மன்றையக் குணங்க டாமுமப்பொருட் டன்மை யாலே
நின்றதன் ஞானந் தன்னானிருமல னுணரு மென்றாற்
பொன்றின வெதிர்வ வென்றல்பொருள்களுக் கில்லை யென்றாள்.


444பிறவிதா னொன்று மில்லான்பெரியனே யென்று நின்றான்
மறவிதா னில்லை யோனிமன்னுநான் கென்னு மில்லா
னறவியா யுந்த நூலுள் ளாத்தனா மாயி னக்காற்
புறவினிற் புரளுங் கல்லும்புண்ணிய னாக வென்றான்.


445பிறத்தலே தலைமை யாயிற்பிள்ளைக ளல்ல தென்னை
யறக்கெட றான தென்னிலட்டக வித்து வெந்தாம்
புறப்படும் போர்வை யாலேற்புண்டொழு நோய ராகச்
சிறப்புடை யண்ண றன்னைக்கல்லெனச் சொல்லு வாய்க்கே.


446அடைவிலா யோனி யானாயாருமொப் பாரு மின்றிக்
கடையிலா ஞான மெய்திக்கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து
புடையெலாம் போற்றி யேத்தப்பொன்னெயிற் பிண்டி மூன்று
குடையினா னிறைவ னென்றாற்குற்றமிங் கென்னை யென்றாள்.


447கோதியிட் டுள்ள தெல்லாங்குண்டல கேசி யென்பா
ளாதிசா லாவ ணத்துளார்கதர் தம்மை வென்ற
வீதியீ தென்று சொல்லிவீழ்ந்தனை நீயு மென்றா
ணீதியாற் சொல்லி வென்றநீலமா கேசி நல்லாள்.


448பேதைக ளுரைப்பன வேசொல்லிப்பெரிதலப் பாட்டினைநீ
பேதைமற் றிவன்பெரி தெனப்படும்கருத்துடை மிகுதியினாய்
தாதையைத் தலைவனைத் தத்துவதரிசியைத் தவநெறியி
னீதியை யருளிய நிருமலன்றகைநினக் குரைப்ப னென்றாள்.


449பகைபசி பிணியொடு பரிவின பலகெட
முகைமலர் தளிரொடு முறிமரம் வெறிசெய
மிசைநிலம் விளைவெய்த விழைவொடு மகிழ்வன
திசைதொறு மிவைபிற சுகதன செலவே.


450குழுவன பிரிவன குறைவில நிலையின
எழுவன விழுவன விறுதியி லியல்பின
வழுவலில் பொருள்களை மலர்கையின் மணியென
முழுவது முணருமெ முனைவர னறிவே

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நீலகேசி-42



401ஆண்டில்லை யென்பன் னதுவுள்வழி யுண்டு மென்ப
னீண்டின்மை யுண்மை யிவையாக விசைத்து நின்றேன்
வேண்டி யனவே முடிப்பாய்விரி பொன்னெ யிலு
ளீண்டி யிமையோர் தொழுவானெம் மிறையு மென்னாய்.


402கொல்லேற்றின் கோடு குழக்கன்றது வாயி னக்கா
லில்லாகு மென்றி யிவையிங்ஙன முண்மை யின்மை
சொல்லேனு மல்லே னதுசொல்லுவன் யானு மன்னாய்
கொல்லேற தாகப் பொழுதேயுடன் கூறு கென்றான்.


403ஏறாய காலத் தெழினல்லது வத்து பேதங்
கூறாரெ ழாத குழக்கன்றினுக் கின்மை முன்னா
வீறாகி நிற்கும் முதலுண்மையிற் கின்மை யெங்கு
மாறியாது மில்லை கலைக்குண்மையு மற்றுமென்றாள்.


404கன்று முயலுங் கழுதைப்பெயர் பெற்ற னவுங்
குன்றுந் தலையுட் பெறப்பாடெய்தல் கோடு றுப்பா
வென்றும் மவற்றுக் கெழலில்லைநின் பேத மென்றாற்
சென்றுஞ் சிலவிற் சிலவின்மையு மாகு மென்றான்.


405இல்லாத கோட்டை யுளதாக வெடுத்து மென்று
சொல்லார்கள் பேதம் சொலவேண்டுவை யாயி னக்காற்
புல்லாது நில்லாப் பொருடங்களுக் குண்மைக் கின்மை
கல்லாது நீயுங் கழுதைக்கருள் செய்தி யென்றாள்.


406இல்லை வலக்கை யிடக்கைவகை யால தென்றுஞ்
சொல்லின் னதற்கு மதுவேயெனுஞ் சூழ்ச்சி மிக்கா
யொல்லை யிரண்டு முளவாக வுணர்ந்தனை நீ
நல்லை பெரிதும் மெனமொக்கல னக்க னனே.


407இக்கை வகையா லதுதானுள தாயி னக்காற்
றொக்க விரண்டும் முடனாதலிற் றூய்தொ ருபால்
பக்கம் மதுவும் படுபாழினிக் காலு மற்றாய்ச்
செக்கின்கணைபோன்றினிச் சென்றுருள் சேம மென்றாள்.


408கைகால் வகையால் பெறப்பாடிலை காலு மற்றாய்
மெய்தா மொழிய வவைபாறெய்தல் வேண்டு தலாற்
கொய்தார் நறும்பூங் குழலாய்குழ மண்ணர் களாச்
செய்தா யுலகிற் சிறுமானுயர் தம்மை யென்றான்.


409கால்கால் வகையா லுளகைகளுங் கையி னற்றாய்ப்
பாலாய் முடியு மவைபண்டை யியல்பி னாலே
யேலா திவைதா முளவெத்திறத் தானு மென்னி
னாலாவ தான முடிவி னாயொடு நண்டு மொத்தாய்..


410அல்லென் றுரைத்த வுரைதானுமெம் மாக மத்து
ளில்லென்ற வாறென் றிவையிங்ஙனம் வேண்டு கின்றாய்
சொல்லன்று நாயைந் நரிதானென்னச் சொல்லு கின்றா
னில்லென்ற வாறோ நரிதன்னையு மென்ற னனே.


411நாய்கொன் னரிகொல் லெனத்தோன்றுமுணர்வு நண்ணி
யாய்சொல் லிரண்டின் னுணர்ந்தல்லதுவன்மை யென்றாய்
நீசொல் லறியா யறிவார்நெறிநேடு கில்லாய்
பேய்சொல் லுபவே பலசொல்லிப்பிதற்ற லென்றாள்.


412பேரும் உணர்வும் பொருளில்லதற் கில்லை யென்றி
சார்வும் மகல்வுந் தலைப்பெய்தலோ டுள்ள மின்மை
நோ¢ங் கிவையு முணராமையிற் கென்ற னனாய்த்
தேரன் சிறிதே தெரிகோதையை நக்க னனே.


413ஆத்தன் னுரைத்த பொருடன்னையவ் வாக மத்தாற்
சாத்தன் பயின்றா லறியாவிடுந் தன்மை யுண்டோ
வீர்த்திங் குரைத்த பலதம்முளொன் றின்ன தென்னா
யோத்தின் வகையாற் பெயரோடுணர் வின்மைக் கென்றாள்


414ஒன்றி னியற்கை யொருவான்பொருட் கில்லை யென்றே
யென்று முரைத்தி யிரும்பெய்திய வெம்மை யந்நீர்
சென்றும் மறுகித் தீக்குணஞ் சேர்ந்த தற்றேற்
குன்றும் பிறவோ வினிநீண்ட கோளு மென்றான்.


415கொண்ட வுடம்போடுயிர் தானுடன் கூடி நின்றாற்
கண்டு முணர்ந்து மவையாவதென் கல்வி யில்லா
யுண்டங்க ணின்ற வுயிர்க்காக வுரைப்ப தொக்கும்
பிண்டந் நிகழ்ச்சி பிழைப்பாகு நினக்கு மென்றாள்.


416மெச்சி யிடத்தாற் பிறிதின்மை விளம்பு கின்றாய்
பிச்சை முதலாப் பெரிதாவறஞ் செய்த வன்றா
னச்செல் கதியுள் ளமரன்னெனப் பாடு மின்றே
விச்செய்கை யெல்லா மிகழ்வாம்பிற வென்ற னனே.


417ஊனத்தை யின்றி வழங்காவுழல் கின்ற போழ்து
மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும்
வானத்த தாய பொழுதுமன் னுயிர தென்றா
டானத்தி னுண்மை யிதுதத்துவ மாக்கொ ளென்றாள்.


418காலம் பிறிதிற் பொருளில்லெனக் காட்டு கின்றாய்
ஞால மறியத் தவஞ்செய்தவ னல்லு யிர்தா
னேலங்கொள் கோதா யெதிர்காலத்தி னின்மை யாமேற்
சீலங்கள் காத்தல் வருத்தஞ்சிதை வாக வென்றான்.


419ஆற்ற வருந்தித் தவஞ்செய்து மரிய காத்துந்
நோற்றும் பெரிதுந் நுணுகாநின்ற பொழுதி னானும்
மேற்ற முடைய விமையானெனப் பட்ட போழ்துஞ்
சாற்றி னுயிர்தன் பொழுதே யுண்மை தங்கு மென்றாள்.


420நூறா னிரும்பாய் நிகழாமை நொடிதி யாங்கே
பாறான் றயிரா மெனநின்று பயிற்று தியான்
மாறா னுடையா ருரையொக்குநின் மாற்ற மென்னாத்
தேறார் தெருண்டா ரெனச் சொல்லினன் றேர னும்மே.


421தத்தந் நிமித்தந் தலைப்பெய்துதங் காரி யம்மா
யொத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து நின்றேன்
பித்தனி னோப்பப் பிறிதிற்பிறி தாமென் பனோ
வித்தின் வழியா னுரைநீயும்வெள் யானை யென்றாள்.


422கூடா பொருள்கள் பிறிதின்குணத் துண்மை யென்பாய்
பாடாஅலப் புட்பத் தனவாகிய பண்பு நாற்றம்
மோடாவ தெய்திற் றெனவையமுரைக் கின்ற த·தா
னாடாது சொன்னா யதனன்மை யொழிக வென்றான்.


423போதுக்க வாசம் புதுவோட்டைப் பொருந்தினாலும்
மேதக்க நாற்ற மிதுபூவின தென்ப மிக்கார்
தாதுக்க நின்று மவைபோக்குந் ததாக தற்கென்
றேதுக்கள் காட்டி முடித்தாளிணை யில்ல நல்லாள்.


424வீட்டிட மென்று நின்னால்வேண்டவும் பட்ட தன்னை
நாட்டுவ னதுவு நாயிற்கென்றுநன் றென்றி யாயிற்
சூட்டடு நரகந் தானுஞ்சுடர்ந்தநற் சுவர்க்கந் தானும்
பூட்டின முரைத்த வக்காற்போந்ததங் கென்னை யென்றான்.


425கதியின வகைய வாறுங்கந்தபிண் டங்கள் சொன்னான்
பதியின வென்ன நின்றாய்பாக்கனாய் காட்டு தீயால்
விதியினின் விளையட் டார்தம்வீட்டிட மின்ன தென்றாற்
கதுவென்னை யென்னச் சொன்னாலாகம மல்ல தாமோ.
#160;