401 | ஆண்டில்லை யென்பன் னதுவுள்வழி யுண்டு மென்ப னீண்டின்மை யுண்மை யிவையாக விசைத்து நின்றேன் வேண்டி யனவே முடிப்பாய்விரி பொன்னெ யிலு ளீண்டி யிமையோர் தொழுவானெம் மிறையு மென்னாய். |
402 | கொல்லேற்றின் கோடு குழக்கன்றது வாயி னக்கா லில்லாகு மென்றி யிவையிங்ஙன முண்மை யின்மை சொல்லேனு மல்லே னதுசொல்லுவன் யானு மன்னாய் கொல்லேற தாகப் பொழுதேயுடன் கூறு கென்றான். |
403 | ஏறாய காலத் தெழினல்லது வத்து பேதங் கூறாரெ ழாத குழக்கன்றினுக் கின்மை முன்னா வீறாகி நிற்கும் முதலுண்மையிற் கின்மை யெங்கு மாறியாது மில்லை கலைக்குண்மையு மற்றுமென்றாள். |
404 | கன்று முயலுங் கழுதைப்பெயர் பெற்ற னவுங் குன்றுந் தலையுட் பெறப்பாடெய்தல் கோடு றுப்பா வென்றும் மவற்றுக் கெழலில்லைநின் பேத மென்றாற் சென்றுஞ் சிலவிற் சிலவின்மையு மாகு மென்றான். |
405 | இல்லாத கோட்டை யுளதாக வெடுத்து மென்று சொல்லார்கள் பேதம் சொலவேண்டுவை யாயி னக்காற் புல்லாது நில்லாப் பொருடங்களுக் குண்மைக் கின்மை கல்லாது நீயுங் கழுதைக்கருள் செய்தி யென்றாள். |
406 | இல்லை வலக்கை யிடக்கைவகை யால தென்றுஞ் சொல்லின் னதற்கு மதுவேயெனுஞ் சூழ்ச்சி மிக்கா யொல்லை யிரண்டு முளவாக வுணர்ந்தனை நீ நல்லை பெரிதும் மெனமொக்கல னக்க னனே. |
407 | இக்கை வகையா லதுதானுள தாயி னக்காற் றொக்க விரண்டும் முடனாதலிற் றூய்தொ ருபால் பக்கம் மதுவும் படுபாழினிக் காலு மற்றாய்ச் செக்கின்கணைபோன்றினிச் சென்றுருள் சேம மென்றாள். |
408 | கைகால் வகையால் பெறப்பாடிலை காலு மற்றாய் மெய்தா மொழிய வவைபாறெய்தல் வேண்டு தலாற் கொய்தார் நறும்பூங் குழலாய்குழ மண்ணர் களாச் செய்தா யுலகிற் சிறுமானுயர் தம்மை யென்றான். |
409 | கால்கால் வகையா லுளகைகளுங் கையி னற்றாய்ப் பாலாய் முடியு மவைபண்டை யியல்பி னாலே யேலா திவைதா முளவெத்திறத் தானு மென்னி னாலாவ தான முடிவி னாயொடு நண்டு மொத்தாய்.. |
410 | அல்லென் றுரைத்த வுரைதானுமெம் மாக மத்து ளில்லென்ற வாறென் றிவையிங்ஙனம் வேண்டு கின்றாய் சொல்லன்று நாயைந் நரிதானென்னச் சொல்லு கின்றா னில்லென்ற வாறோ நரிதன்னையு மென்ற னனே. |
411 | நாய்கொன் னரிகொல் லெனத்தோன்றுமுணர்வு நண்ணி யாய்சொல் லிரண்டின் னுணர்ந்தல்லதுவன்மை யென்றாய் நீசொல் லறியா யறிவார்நெறிநேடு கில்லாய் பேய்சொல் லுபவே பலசொல்லிப்பிதற்ற லென்றாள். |
412 | பேரும் உணர்வும் பொருளில்லதற் கில்லை யென்றி சார்வும் மகல்வுந் தலைப்பெய்தலோ டுள்ள மின்மை நோ¢ங் கிவையு முணராமையிற் கென்ற னனாய்த் தேரன் சிறிதே தெரிகோதையை நக்க னனே. |
413 | ஆத்தன் னுரைத்த பொருடன்னையவ் வாக மத்தாற் சாத்தன் பயின்றா லறியாவிடுந் தன்மை யுண்டோ வீர்த்திங் குரைத்த பலதம்முளொன் றின்ன தென்னா யோத்தின் வகையாற் பெயரோடுணர் வின்மைக் கென்றாள் |
414 | ஒன்றி னியற்கை யொருவான்பொருட் கில்லை யென்றே யென்று முரைத்தி யிரும்பெய்திய வெம்மை யந்நீர் சென்றும் மறுகித் தீக்குணஞ் சேர்ந்த தற்றேற் குன்றும் பிறவோ வினிநீண்ட கோளு மென்றான். |
415 | கொண்ட வுடம்போடுயிர் தானுடன் கூடி நின்றாற் கண்டு முணர்ந்து மவையாவதென் கல்வி யில்லா யுண்டங்க ணின்ற வுயிர்க்காக வுரைப்ப தொக்கும் பிண்டந் நிகழ்ச்சி பிழைப்பாகு நினக்கு மென்றாள். |
416 | மெச்சி யிடத்தாற் பிறிதின்மை விளம்பு கின்றாய் பிச்சை முதலாப் பெரிதாவறஞ் செய்த வன்றா னச்செல் கதியுள் ளமரன்னெனப் பாடு மின்றே விச்செய்கை யெல்லா மிகழ்வாம்பிற வென்ற னனே. |
417 | ஊனத்தை யின்றி வழங்காவுழல் கின்ற போழ்து மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும் வானத்த தாய பொழுதுமன் னுயிர தென்றா டானத்தி னுண்மை யிதுதத்துவ மாக்கொ ளென்றாள். |
418 | காலம் பிறிதிற் பொருளில்லெனக் காட்டு கின்றாய் ஞால மறியத் தவஞ்செய்தவ னல்லு யிர்தா னேலங்கொள் கோதா யெதிர்காலத்தி னின்மை யாமேற் சீலங்கள் காத்தல் வருத்தஞ்சிதை வாக வென்றான். |
419 | ஆற்ற வருந்தித் தவஞ்செய்து மரிய காத்துந் நோற்றும் பெரிதுந் நுணுகாநின்ற பொழுதி னானும் மேற்ற முடைய விமையானெனப் பட்ட போழ்துஞ் சாற்றி னுயிர்தன் பொழுதே யுண்மை தங்கு மென்றாள். |
420 | நூறா னிரும்பாய் நிகழாமை நொடிதி யாங்கே பாறான் றயிரா மெனநின்று பயிற்று தியான் மாறா னுடையா ருரையொக்குநின் மாற்ற மென்னாத் தேறார் தெருண்டா ரெனச் சொல்லினன் றேர னும்மே. |
421 | தத்தந் நிமித்தந் தலைப்பெய்துதங் காரி யம்மா யொத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து நின்றேன் பித்தனி னோப்பப் பிறிதிற்பிறி தாமென் பனோ வித்தின் வழியா னுரைநீயும்வெள் யானை யென்றாள். |
422 | கூடா பொருள்கள் பிறிதின்குணத் துண்மை யென்பாய் பாடாஅலப் புட்பத் தனவாகிய பண்பு நாற்றம் மோடாவ தெய்திற் றெனவையமுரைக் கின்ற த·தா னாடாது சொன்னா யதனன்மை யொழிக வென்றான். |
423 | போதுக்க வாசம் புதுவோட்டைப் பொருந்தினாலும் மேதக்க நாற்ற மிதுபூவின தென்ப மிக்கார் தாதுக்க நின்று மவைபோக்குந் ததாக தற்கென் றேதுக்கள் காட்டி முடித்தாளிணை யில்ல நல்லாள். |
424 | வீட்டிட மென்று நின்னால்வேண்டவும் பட்ட தன்னை நாட்டுவ னதுவு நாயிற்கென்றுநன் றென்றி யாயிற் சூட்டடு நரகந் தானுஞ்சுடர்ந்தநற் சுவர்க்கந் தானும் பூட்டின முரைத்த வக்காற்போந்ததங் கென்னை யென்றான். |
425 | கதியின வகைய வாறுங்கந்தபிண் டங்கள் சொன்னான் பதியின வென்ன நின்றாய்பாக்கனாய் காட்டு தீயால் விதியினின் விளையட் டார்தம்வீட்டிட மின்ன தென்றாற் கதுவென்னை யென்னச் சொன்னாலாகம மல்ல தாமோ. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.