கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

விடுகதைகள்-5

(5)அட்டைக்கரிப் பெண்ணுக்கு உச்சந்தலை 
மஞ்சள் அது என்ன? 


ஆசாரக்கோவை-16

ஒருவர் புறப்படும்போது செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)

எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும்,
எங்கு உற்றுச் சேறிரோ?' என்னாரே; முன் புக்கு,
எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்;
கொள்வர், குரவர் வலம். 58

வழுக்கியும் - மறந்தும்
என்னார் - என்று கேளார்

ஒருவர் எழுந்து போகும்போது அழைக்க மாட்டார், தும்ம மாட்டார், எங்கே செல்கின்றீர் என்று கேட்க மாட்டார். அவர் எதிர் நின்று பேசமாட்டார். அவருக்கு இருபுறத்திலும் பேசுவார். அவரைச் சுற்றிச் செல்வார்.

சில தீய ஒழுக்கங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'உடம்பு நன்று!' என்று உரையார்; ஊதார், விளக்கும்;
அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார்; அதனைப்
படக் காயார், தம்மேல் குறித்து. 59

நந்த - அவியும்படி
கொள்ளார் - எடுக்க மாட்டார்

பிறரைப் பார்த்து, உமது உடல் நன்றாயிருக்கிறதென்று சொல்லமாட்டார். விளக்கையும், அடுப்பிலுள்ள நெருப்பையும் அணைக்க மாட்டார். அந்நெருப்பிடம் குளிர் காய மாட்டார்.

சான்றோருடன் செல்லும் போது செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

யாதொன்றும், ஏறார், செருப்பு; வெயில் மறையார்; -
ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து. 60

ஆன்ற - மிகுந்த
அவிந்த - அமைதியடைந்த

பெரியாருடன் செல்லும்போது எதன் மேலும் ஏறிச் செல்ல மாட்டார். காலில் செருப்பு அணிய மாட்டார். குடை பிடித்துச் செல்ல மாட்டார்.

நூல்முறை உணர்ந்தவர் துணிவு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வால் முறையான் வந்த நான் மறையாளரை
மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல் -
நூல் முறையாளர் துணிவு. 61

ஒழுகல் - நடத்தல்
துணிவு - கொள்கை

வேதங்களை ஓதும் அந்தணரை, பெரியோரைப் போல நடத்தல் கற்றவர்களின் கொள்கைகளாகும்.

சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு,
ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை
சாரத்தால் சொல்லிய மூன்று. 62

கால்வாய் - காலின் கண்
ஆசாரம் - ஒழுக்கம்

பெரியோர்க்குச் செய்யும் ஒழுக்கம், காலில் தொழுதலும், நிற்றலும், அவரைக் கண்டவுடன் எழுந்திருத்தலும் ஆகும்.

குறுந்தொகை-30


96. குறிஞ்சி

"அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு
யான் எவன் செய்கோ?" என்றி; யான் அது
நகை என உணரேன் ஆயின்,
என் ஆகுவைகொல்?-நன்னுதல்! நீயே,
தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது
அள்ளூர் நன்முல்லை

97. நெய்தல்

யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகிய மன்றத்தஃதே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது
வெண்பூதி
98. முல்லை

"இன்னள் ஆயினள் நன்னுதல்" என்று, அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி-தோழி!-நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்து
கோக்குளமுற்றன்

99. முல்லை

உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே? நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன், "எம்மை நினைத்தும் அறிதிரோ?" என்ற தோழிக்குச் சொல்லியது
ஒளவையார்

100. குறிஞ்சி

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள் அம் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.
பாங்கற்கு உரைத்தது; அல்லகுறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
கபிலர்

101. குறிஞ்சி

விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.
தலைமகட்குப் பாங்காகினார் கேட்பச் சொல்லியது; வலித்த செஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம்
பருஉமோவாய்ப் பதுமன்

திருக்குறள் அதிகாரம் - 7 -3

மக்கட்பேறு

(3)
தம்பொருள் என்பதாம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையாள் வரும்.

கருத்து
தம் பிள்ளைகளைத் தமது செல்வம்
என்று சொல்லுவர் :பிள்ளைகளாகிய
அச்செல்வம் அவரவர் செய்யும்
வினையின் பயனால் வரும்.

மதுரைக்காஞ்சி-19



தனிப் பாடல்கள்

பைங் கண் இளம் பகட்டின் மேலானை, பால் மதி போல்
திங்கள் நெடுங் குடையின் கீழானை, -அங்கு இரந்து
நாம் வேண்ட, நல் நெஞ்சே! நாடுதி போய், நானிலத்தோர்
தாம் வேண்டும் கூடல் தமிழ். 1

சொல் என்னும் பூம் போது தோற்றி, பொருள் என்னும்
நல் இருந் தீம் தாது நாறுதலால், -மல்லிகையின்
வண்டு ஆர் கமழ் நாமம் அன்றே மலையாத
தண் தாரான் கூடல் தமிழ்? 2 




செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்


ஒத்தகருத்துச் சொற்கள் - நௌ

(1)நௌ-மரக்கலம் 
(2)நௌவி-மான்

திங்கள், 30 ஜனவரி, 2012

ஆசாரக்கோவை-15

ஒழுக்கமுடையவர் செய்யாதவை
(இன்னிசை வெண்பா)

தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார் - நெறிப்பட்டவர். 53

கல்லேறு - கல் எறிதல்
வீளை - கனைத்தல்

ஒழுக்கமுடையோர், கல் எறிதல், கனைத்து அழைத்தல், ஒருவனைப் போலவே தாமும் இகழ்ந்து செய்து காட்டுதல், தன் உறுப்புகளை அழித்தல், கோபம், ஒளித்தல் ஆகியவற்றைச் செய்ய மாட்டார்



விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

முறுவல் இனிதுரை, கால், நீர், மணை, பாய்,
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப - தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு. 54

முறுவல் - புன்சிரிப்பு
தலை - தம்மிடத்து

அறிவுடையோர் தம் நண்பர்க்கு, புன்சிரிப்புடன் கால் கழுவ நீர் அளித்து, உட்கார மணை கொடுத்து, உணவளித்தலோடு, படுக்க பாயும், இருக்க இடமும் கொடுத்து உதவுவர்.

அறிஞர் விரும்பாத இடங்கள்
(பஃறொடை வெண்பா)

கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும், -
நிகர் இல் அறிவினார் வேண்டார் - பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை. 55

கறுத்த - கோபித்த
கோள் - கோட்பாட்டை

அறிவுடையோர், பகைவரிடத்திலும், கள் குடித்து ஆடும் இடத்திலும், மனமில்லாத வேசியருடனும், தெருவிலும், நட்பு கொண்டவர் விலகிச் செல்லும் இடத்திலும், பலர் ஒன்று கூடும் தண்ணீர்த் துறையிலும் நிற்க விரும்ப மாட்டார்.

தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)

முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்;
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில். 56

கானமும் - காட்டினிடத்தும்
துளி விழ - மழை பெய்கையில்

முற்றிய புல்லிடமும், காட்டினிடத்தும் சேரமாட்டார்; அவற்றை நெருப்பிலிட்டு அழித்து விடார்; மழையில் ஓடமாட்டார்; காட்டில் தனியாக செல்ல மாட்டார்; வறுமையிலும் தமது ஒழுக்கத்திலிருந்து மாறமாட்டார், அறிவுடையோர்.

நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)

பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்; -
நோய் இன்மை வேண்டுபவர். 57

பாழ்மனையும் - பாழான வீட்டினுள்ளும்
ஊர் இல்வழி - ஊரில்லாத இடத்தில்

நோயற்ற வாழ்வு வாழ விரும்புவோர், பாழ் வீட்டிலும், கோயிலிலும், சுடுகாட்டிலும், ஊரில்லாத இடத்தில் உள்ள மரத்திடமும் பகல் பொழுதில் தூங்கமாட்டார்.

குறுந்தொகை-29

90. குறிஞ்சி

எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி,
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்




91. மருதம்

அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே!
ஓவாது ஈயும் மாரி வண்கை,
கடும்பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்
சில ஆகு, நீ துஞ்சும் நாளே!

பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரைத் தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிரிந்து வந்த வழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறியதூஉம் ஆம்
ஒளவையார்



92. நெய்தல்

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து-
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை,
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின், விரையுமால் செலவே.

காமம் மிக்க கழிபடர் கிழவியால், பொழுது கண்டு சொல்லியது
தாமோதரன்



93. மருதம்

நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய்,
இன்உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே?

வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது
அள்ளூர் நன்முல்லையார்



94. முல்லை

பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;
யானே மருள்வென்?-தோழி!-பானாள்
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?-
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே.

பருவங் கண்டு ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பதுபடத் தலை மகள் சொல்லியது
கதக்கண்ணன்



95. குறிஞ்சி

மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது
கபிலர்

இரட்டைக் கிளவி-கொ

(1)கொழு கொழு 

(2)கொழகொழ

திருக்குறள் அதிகாரம் - 7 -2


மக்கட் பேறு
(2)
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழியிறங்காப்
பண்புடை மக்கட் பெறின் .

கருத்து
பழிப்புக்கு இடமில்லாத நற்பண்புடைய
மக்களைப் பெற்றால்,அவனை ஏழு
பிறப்புகளிலும் துன்பங்கள்சென்றுசேரா

மதுரைக்காஞ்சி-18

பற்றற்ற செயல் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி

களம்தோறும் கள் அரிப்ப,
மரம்தோறும் மை வீழ்ப்ப,
நிண ஊன் சுட்டு உருக்கு அமைய, 755

நெய் கனிந்து வறை ஆர்ப்ப,
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா, வியல் நகரால்,
பல் சாலை முது குடுமியின்,
நல் வேள்வித் துறை போகிய 760



தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்,
நிலம் தரு திருவின் நெடியோன் போல,
வியப்பும், சால்பும், செம்மை சான்றோர்
பலர் வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி, 765

அரிய தந்து குடி அகற்றி,
பெரிய கற்று இசை விளக்கி,
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பல் மீன் நடுவண் திங்கள் போலவும்,
பூத்த சுற்றமொடு பொலிந்து, இனிது விளங்கி, 770

பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்ப்
பெரும் பெயர் மாறன் தலைவனாக,
கடந்து அடு வாய்வாள் இளம் பல் கோசர்,
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப,
பொலம் பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த 775

மறம் மிகு சிறப்பின் குறு நில மன்னர்
அவரும், பிறரும், துவன்றி,
பொற்பு விளங்கு புகழ் அவை நிற் புகழ்ந்து ஏத்த,
இலங்கு இழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
மணம் கமழ் தேறல் மடுப்ப, நாளும் 780

மகிழ்ந்து இனிது உறைமதி, பெரும!
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே!


திங்கள்கிழமை வாழ்த்துக்கள்


ஒத்தகருத்துச் சொற்கள் - நொ

(1)நொடி - ஓசை
(2)நொடிக்கதை - விடுகதை 
(3)நொண்டி - முடம்    

விடுகதைகள்-4

(4)அக்காள் விதைத்த முத்து அள்ளமுடியாத 
முத்து அது என்ன?

விடை - நட்சத்திரம்

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

ஆசாரக்கோவை-14


அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று
ஐவகை நாளும், இகழாது, அறம் செய்க!
பெய்க, விருந்திற்கும் கூழ்! 48


இகழாது - இகழாதே
அறம் செய்க - கொடையறம் செய்க

தன் கல்யாண நாளிலும், தேவர்க்கு சிறப்பான நாளிலும், பிதிருக்களுக்கு சிறப்பு செய்யும் நாளிலும், விழா நாளிலும், வேள்வி செய்யும் நாளிலும், விருந்தினர்க்கு சோறிட்டுக் கொடை அறம் செய்ய வேண்டும்.

நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உடை, நடை, சொற் செலவு, வைதல், இந் நான்கும் -
நிலைமைக்கும், ஆண்மைக்கும், கல்விக்கும் தத்தம்
குடிமைக்கும், தக்க செயல்! 49

உடை - உடுத்தலும்
சொற் செலவு - சொற்களைச் சொல்லுதல்

தங்களுடைய பதவிக்கும், கல்விக்கும், ஆற்றலுக்கும், குடிப்பிறப்புக்கும் ஏற்பவே உடை, நடை, சொற்கள், திட்டுதல் இவை அமையும்.

கேள்வியுடையவர் செயல்
(இன்னிசை வெண்பா)

பழியார்; இழியார்; பலருள் உறங்கார்;
இசையாத நேர்ந்து கரவார்; இசைவு இன்றி,
இல்லாரை எள்ளி, இகந்து உரையார்; - தள்ளியும்,
தாங்க அருங் கேள்வியவர். 50

இசைவு இன்றி - முறையில்லாமல்
தள்ளியும் - தவறியும்

நன்கு கற்றுத் தேர்ந்தவர், பலருள் ஒருவரைத் தூற்றார், படுத்துத் தூங்கார், தமக்குப் பொருந்தாத செயல்களை ஒப்புக் கொண்டு பின்னர் செய்யாது விடமாட்டார், வறியவரை இழிவாகப் பேச மாட்டார்.

தம் உடல் ஒளி விரும்புபவர் செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும்,
தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன்
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று. 51

வீழ்மீனும் - விழுகின்ற எரிநட்சத்திரத்தையும்
முன் ஒளியும் - காலை ஒளியும்

தம் கண்ணின் ஒளியும் புகழும் கெடாமல் இருக்க, மின்னலையும், எரிநட்சத்திரத்தையும், வேசியரது ஒப்பனையையும், காலை ஒளியையும், மாலை ஒளியையும் பார்க்கக் கூடாது.

தளராத உள்ளத்தவர் செயல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

படிறும், பயனிலவும், பட்டி உரையும்,
வசையும், புறனும், உரையாரே - என்றும்
அசையாத உள்ளத்தவர். 52

அசையாத - ஒழுக்கத்தினின்று தவறாத
படிறும் - வஞ்சனை சொல்லையும்

நல்லொழுக்கம் உடையவர், வஞ்சனை சொல்லையும், பயனில்லாத சொல்லையும், பழிச்சொல்லையும், புறங்கூறுதலையும் சொல்ல மாட்டார்.

குறுந்தொகை-28

83. குறிஞ்சி

அரும்பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ, அன்னை-
தம்இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, "வரும்" என்றோளே!

தலைமகன் வரைந்தெய்துதல் உணர்த்திய செவிலியைத் தோழிவாழ்த்தியது
வெண்பூதன்



84. பாலை

பெயர்த்தனென் முயங்க, "யான் வியர்த்தனென்" என்றனள்;
இனி அறிந்தேன், அது தனி ஆகுதலே-
கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
வேங்கையும் காந்தளும் நாறி,
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது
மோசிகீரன்


85. மருதம்

யாரினும் இனியன்; பேர் அன்பினனே-
உள்ளூர்க் குரீஇத் துள்ளுநடைச் சேவல்
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழைஇயர்,
தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின்
நாறா வெண் பூ கொழுதும்
யாணர் ஊரன் பாணன் வாயே.

வாயில் வேண்டிச் சென்ற பாணற்குத் தோழி சொல்லி, வாயில் மறுத்தது
வடம வண்ணக்கன் தாமோதரன்



86. குறிஞ்சி

சிறை பனி உடைந்த சேயரி மழைக்கண்
பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கி,
பிறரும் கேட்குநர் உளர்கொல்?-உறை சிறந்து,
ஊதை தூற்றும் கூதிர் யாமத்து,
ஆன் நுளம்பு உலம்புதொறு உளம்பும்
நா நவில் கொடு மணி நல்கூர் குரலே.

"ஆற்றாள்" எனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி சொல்லியது
வெண்கொற்றன்



87. குறிஞ்சி

"மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள்
கொடியோர்த் தெறூஉம்" என்ப; யாவதும்
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர்;
பசைஇப் பசந்தன்று, நுதலே;
ஞெகிழ ஞெகிழ்ந்தன்று, தட மென் தோளே.

தலைமகள் தெய்வத்திற்குப் பராஅயது
கபிலர்



88. குறிஞ்சி

ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன்,
சிறு கட் பெருங் களிறு வயப் புலி தாக்கித்
தொல் முரண் சொல்லும் துன் அருஞ்சாரல்,
நடு நாள் வருதலும் வரூஉம்;
வடு நாணலமே-தோழி!-நாமே.

இரவுக்குறி நேர்ந்த வாய்பாட்டால் தோழி தலைமகட்குச் சொல்லியது
மதுரைக் கதக்கண்ணன்



89. மருதம்

பாஅடி உரல பகுவாய் வள்ளை
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப;
அழிவது எவன்கொல், இப்பேதை ஊர்க்கே?-
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக்
கருங் கட் தெய்வம் குடவரை எழுதிய
நல் இயல் பாவை அன்ன இம்
மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே.

தலைமகன் சிறைப்புறத்தானகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது; தலைமகற்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லி, வாயில் மறுத்ததூஉம் ஆம்
பரணர்

மதுரைக்காஞ்சி-17

காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல்

திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து,
திண் காழ் ஆரம் நீவி, கதிர் விடும் 715

ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்,
வரிக் கடைப் பிரசம் மூசுவன மொய்ப்ப,
எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந் தெரியல்,
பொலம் செயப் பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தடக் கைத் தொடியொடு சுடர் வர, 720

சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்,
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ,
வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி







வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்

வரு புனல் கல் சிறை கடுப்ப, இடை அறுத்து, 725

ஒன்னார் ஓட்டிய செருப் புகல் மறவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த



சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்

வில்லைக் கவைஇக், கணைதாங்க மார்பின்
மா தாங்கு எறுழ்த் தோள் மறவர்த் தம்மின்
கல் இடித்து இயற்றிய இட்டு வாய்க் கிடங்கின 730

நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின்
கொல் ஏற்றுப் பைந் தோல் சீவாது போர்த்த
மாக் கண் முரசம் ஓவு இல கறங்க,
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்,
பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய, 735

விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந் தும்பை,
நீர் யார்? என்னாது, முறை கருதுபு சூட்டி,
காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி,
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து, 740

வானத்து அன்ன வள நகர் பொற்ப,
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்,
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப் பூந் தெரியல் 745

பெருஞ் செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என





மன்னனது பெருங் கொடை

வரையா வாயில் செறாஅது இருந்து,
பாணர் வருக! பாட்டியர் வருக!
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக! என 750

இருங் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந் தேர் களிற்றொடும் வீசி

திருக்குறள் அதிகாரம் - 7 -1


மக்கட்பேறு
(1)
பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.


கருத்து

அடைய வேண்டியவற்றுள்,அறிய
வேண்டியவற்றை அறியும் நல்ல

மக்களைப் பெறுவதைத் தவிர,
வேறொன்று இருப்பதாக யாம்
அறியவில்லை .  

ஞாயிற்றுக்கிழமை வாழ்த்துக்கள்


ஒத்தகருத்துச் சொற்கள் - நோ

(1)நோக்கம் - பார்வை  
(2)நோஞ்சல் - மெலிவு 
(3)நோய் - துன்பம்
(4)நோய் - வருத்தம்

குறுந்தொகை-27


77. பாலை

அம்ம வாழி, தோழி!-யாவதும்,
தவறு எனின், தவறோ இலவே-வெஞ் சுரத்து
உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை
நெடுநல் யானைக்கு இடு நிழல் ஆகும்
அரிய கானம் சென்றோர்க்கு
எளிய ஆகிய தடமென் தோளே.
பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
மதுரை மருதன் இளநாகனார்

78. குறிஞ்சி

பெருவரை மிசையது நெடு வெள் அருவி
முதுவாய்க் கோடியர் முழவின் ததும்பி,
சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப!-
நோதக்கன்றே-காமம் யாவதும்
நன்று என உணரார்மாட்டும்
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே.
பாங்கன் தலைமகற்குச் சொல்லியது
நக்கீரனார்

79. பாலை

கான யானை தோல் நயந்து உண்ட
பொரிதாள் ஓமை வளி பொரு நெடுஞ் சினை
அலங்கல் உலவை ஏறி, ஒய்யெனப்
புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும்
அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச்
சேர்ந்தனர்கொல்லோ தாமே-யாம் தமக்கு
ஒல்லேம் என்ற தப்பற்குச்
செல்லாது ஏகல் வல்லுவோரே.
பொருள்வயிற் பிரிந்த தலைமகணை நினைந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
குடவாயிற் கீரனக்கன்
80. மருதம்

கூந்தல் ஆம்பல் முழு நெறி அடைச்சி,
பெரும்புனல் வந்த இருந் துறை விரும்பி,
யாம் அஃது அயர்கம் சேறும்; தான் அஃது
அஞ்சுவது உடையள் ஆயின், வெம் போர்
நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி
முனை ஆன் பெரு நிரை போல,
கிளையொடுங் காக்க, தன் கொழுநன் மார்பே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பப் பரத்தை சொல்லியது
ஒளவையார்

81. குறிஞ்சி

இவளே, நின்சொல் கொண்ட என் சொல் தேறி,
பசு நனை ஞாழற் பல் சினை ஒரு சிறைப்
புது நலன் இழந்த புலம்புமார் உடையள்;
உதுக் காண் தெய்ய; உள்ளல் வேண்டும்-
நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக்
கடலும் கானலும் தோன்றும்
மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே.
தோழியிற் கூட்டங் கூடிப் பிரியும் தலைமகற்குத் தோழி சொல்லியது
வடம வண்ணக்கன் பேரிசாத்தன்

82. குறிஞ்சி

வார் உறு வணர் கதுப்பு உளரி, புறம் சேர்பு,
"அழாஅல்" என்று நம் அழுத கண் துடைப்பார்;
யார் ஆகுவர் கொல்?-தோழி!-சாரல்
பெரும் புனக் குறவன் சிறு தினை மறுகால்
கொழுங் கொடி அவரை பூக்கும்
அரும்பனி அற்சிரம் வாராதோரே.
பருவங் கண்டு அழிந்த தலைமகள், "வருவர்" என்று வற்புறுத்தும் தோழிக்குச் சொல்லியது
கடுவன் மள்ளன்

மதுரைக்காஞ்சி-16

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி,
திண் சுவர் நல் இல் கதவம் கரைய,
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற,
சூதர் வாழ்த்த, மாகதர் நுவல, 670

வேதாளிகரொடு, நாழிகை இசைப்ப,
இமிழ் முரசு இரங்க, ஏறு மாறு சிலைப்ப,
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப,
யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய, அணி மயில் அகவ, 675

பிடி புணர் பெருங் களிறு முழங்க, முழு வலிக்
கூட்டு உறை வய மாப் புலியொடு குழும,
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்,
மின்னு நிமிர்ந்தனையர் ஆகி, நறவு மகிழ்ந்து,
மாண் இழை மகளிர், புலந்தனர், பரிந்த 680

பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு,
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன,
அம் மென் குரும்பைக் காய் படுபு, பிறவும்,
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப,
மென் பூஞ் செம்மலொடு நன் கலம் சீப்ப, 685

இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை




மதுரையின் சிறப்பு

மை படு பெருந் தோள் மழவர் ஓட்டி,
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை,
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி,
வேல் கோல் ஆக, ஆள் செல நூறி, 690

காய் சின முன்பின் கடுங் கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின், தந்த ஆயமும்,
நாடுடை நல் எயில் அணங்குடைத் தோட்டி,
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாள் தர வந்த விழுக் கலம், அனைத்தும், 695

கங்கை அம் பேர் யாறு கடல் படர்ந்தாஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு,
புத்தேள் உலகம் கவினிக் காண்வர,
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை


இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை

சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ 700

ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில்,
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன,
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப, மே தகப் பொலிந்து, 705

மயில் ஓரன்ன சாயல், மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர்ப் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர், கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்,
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் 710

தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து,
ஆய் தொடி மகளிர் நறுந் தோள் புணர்ந்து
கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி

திருக்குறள் அதிகாரம் - 6 -10


வாழ்க்கைத் துணைநலம்
(10)
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

கருத்து
மனைவியின் நற்பண்பையே இல்
வாழ்க்கைக்கு மங்கலம் என்று
சொல்லுவர் :நல்ல மக்களைப்
பெறுதல் அம்மங்கலத்துக்கு
அணிகலம் என்றும் சொல்லுவர் 

சனிக்கிழமை வாழ்த்துக்கள்


சனி, 28 ஜனவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - நை

(1)நையாண்டி - கேலிப்பேச்சு
(2)நைவேதனம் - படைத்தல்    

வெள்ளி, 27 ஜனவரி, 2012

குறுந்தொகை-26

70. குறிஞ்சி

ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதற் குறுமகள்
நறுந் தண் நீரள்; ஆர் அணங்கினளே;
இனையள் என்று அவட் புனை அளவு அறியேன்;
சில மெல்லியவே கிளவி;
அணை மெல்லியல் யான் முயங்குங்காலே.

புணர்ந்து நீங்கும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது
ஓரம்போகியார்



71. பாலை

மருந்து எனின் மருந்தே; வைப்பு எனின் வைப்பே-
அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை,
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
கல் கெழு கானவர் நல்குறு மகளே.

பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லிச் செலவழுங்கியது
கருவூர் ஓதஞானி


72. குறிஞ்சி

பூ ஒத்து அலமரும் தகைய; ஏ ஒத்து
எல்லாரும் அறிய நோய் செய்தனவே-
தே மொழித் திரண்ட மென்தோள்,
மா மலைப் பரீஇ வித்திய ஏனல்
குரீஇ ஒப்புவாள், பெரு மழைக் கண்ணே!

தலைமகன் தன் வேறுபாடு கண்டு வினாவிய பாங்கற்கு உரைத்தது
மள்ளனார்



73. குறிஞ்சி

மகிழ் நன் மார்பே வெய்யையால் நீ;
அழியல் வாழி-தோழி!-நன்னன்
நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல,
வன்கட் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே.

பகற்குறி மறுத்து, இரவுக்குறி நேர்ந்து, அதுவும் மறுத்தமைபடத் தலைமகட்குத் தோழி சொல்லியது
பரணர்



74. குறிஞ்சி

விட்ட குதிரை விசைப்பின் அன்ன,
விசும்பு தோய் பசுங் கழைக் குன்ற நாடன்
யாம் தற் படர்ந்தமை அறியான், தானும்
வேனில் ஆனேறு போலச்
சாயினன் என்ப-நம் மாண் நலம் நயந்தே.

தோழி தலைமகன் குறை மறாதவாற்றால் கூறியது
விட்ட குதிரையார்



75. மருதம்

நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?-
ஒன்று தெளிய நசையினம்; மொழிமோ!
வெண் கோட்டு யானை சோணை படியும்!
பொன் மலி பாடலி பெறீஇயர்!-
யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?

தலைமகன் வரவுணர்த்திய பாணற்குத் தலைமகள் கூறியது
படுமரத்து மோசிகீரனார்



76. குறிஞ்சி

காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண்வரல் வாடை தூக்கும்
கடும்பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.

பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது
கிள்ளிமங்கலங்கிழார்

மதுரைக்காஞ்சி-15

இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்

சேரிதொறும்,
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ,
வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி,
பேர் இசை நன்னன் பெறும் பெயர் நன்னாள்,
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு,
முந்தை யாமம் சென்ற பின்றை 620



இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை

பணிலம் கலி அவிந்து அடங்க, காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங் கடை அடைத்து, மட மதர்,
ஒள் இழை, மகளிர் பள்ளி அயர,
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை,
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம் 625

கவவொடு பிடித்த வகை அமை மோதகம்,
தீம் சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,
விழவின் ஆடும் வயிரியர் மடிய,
பாடு ஆன்று அவிந்த பனிக் கடல் புரைய,
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப 630







மூன்றாம் சாம் நிகழ்ச்சிகள்

பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு, ஆய் கோல்
கூற்றக் கொல் தேர், கழுதொடு கொட்ப,
இரும் பிடி மேஎந் தோல் அன்ன இருள் சேர்பு,
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் 635

தொடலை வாளர், தொடுதோல் அடியர்,
குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி,
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்,
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்,
மென் நூல் ஏணிப் பல் மாண் சுற்றினர், 640

நிலன் அகழ் உளியர், கலன் நசைஇக் கொட்கும்,
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி,
வயக் களிறு பார்க்கும் வயப் புலி போல,
துஞ்சாக் கண்ணர், அஞ்சாக் கொள்கையர்,
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர், செறிந்த 645

நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர், ஊக்கருங் கணையினர்,
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்,
அசைவிலர் எழுந்து, நயம் வந்து வழங்கலின், 650

கடவுள் வழங்கும் கையறு கங்குலும்,
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உறக் கழிப்பி



விடியல்காலத்தில் மதுரை மாநகர்

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு, 655

ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு, நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண, காழோர்
கடுங் களிறு கவளம் கைப்ப, நெடுந் தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட, 660

பல் வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்ப,
கள்ளோர் களி நொடை நுவல, இல்லோர்
நயந்த காதலர் கவவுப் பணித் துஞ்சி,
புலர்ந்து விரி விடியல் எய்த, விரும்பி,
கண் பொரா எறிக்கும் மின்னுக் கொடி புரைய, 665

பொருநர் ஆற்றுப்படை-18


தனிப் பாடல்கள்

ஏரியும், ஏற்றத் தினானும், பிறர் நாட்டு
வாரி சுரக்கும் வளன் எல்லாம் - தேரின்,
அரிகாலின் கீழ் கூஉம் அந் நெல்லே சாலும்
கரிகாலன் காவிரி சூழ் நாடு. 1

அரிமா சுமந்த அமளி மேலானைத்
திருமாவளவன் எனத் தேறேன்; -திரு மார்பின்
மான மால் என்றே தொழுதேன்; தொழுத கைப்
போனவா பெய்த வளை! 2

முச் சக்கரமும் அளப்பதற்கு நீட்டிய கால்
இச் சக்கரமே அளந்ததால்-செய்ச் செய்
அரிகால்மேல் தேன் தொடுக்கும் ஆய் புனல் நீர்நாடன்
கரிகாலன் கால் நெருப்பு உற்று. 3

திருக்குறள் அதிகாரம் - 6 -9

வாழ்க்கைத் துணைநலம்
பெற்றாற் பெறின்பெண்டிர் பெருஞ் சிறப்புப்
புத்தொளிர் வாழும் உலகு .

கருத்து
மனைவியர் தம் கணவரை வணங்கி அவர்
அன்பைப்பெறுவாராயின் ௮ம்மனைவியர் 
தேவருலகில் பெருஞ் சிறப்புடையவர்

வெள்ளிக்கிழமை வாழ்த்துக்கள்


ஒத்தகருத்துச் சொற்கள் - நே

(1)நேர்த்தி -  சிறப்பு
(2)நேர்மை - உண்மை
(3)நேரம் -   தருணம் 
    

வியாழன், 26 ஜனவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - நெ

(1)நெருப்பு - தீ 

ஆசாரக்கோவை-13

உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)

உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி,
மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள்,
அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும்
ஒட்டார்-உடன் உறைவின்கண். 43

ஈர் அந்தி - மாலையும் காலையும்
ஒட்டார் - உடன்படார்

நடுப்பகலிலும், மாலையிலும், காலையும், ஆதிரையும், ஓணமும், அட்டமியிலும், பிறந்த நாள் அன்றும், பௌர்ணமியிலும், தம் மனைவியரோடு சேர்ந்திருக்க மாட்டார் நல்லோர்.



நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)

நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்;
கோடி கடையுள் விரியார்; கடைத்தலை,
ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்-
தம் தலைக்கண் நில்லாவிடல்! 44

நாழி - படி
கோடி - புத்தாடை

நாழியை மணைமேல் வைக்கக் கூடாது. மணையைக் கவிழ்த்து வைத்தல் கூடாது. புத்தாடையைத் தலைக்கடியில் வைக்கமாட்டார். பலர் செல்லும் இடத்தில் கட்டிலில் படுக்க மாட்டார். தம்மை அறியாதவனெதிரில் நிற்க மாட்டார்.

பந்தலில் வைக்கத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


துடைப்பம், துகட் காடு, புல் இதழ், செத்தல்
கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு, ஐந்தும்,
பரப்பற்க, பந்தரகத்து! 45

செத்தல் - பழைமையான
கருங்கலம் - கரிச்சட்டி

துடைப்பமும், பூஜிதமும், கரிச்சட்டியும், கிழிந்த கட்டிலும் மணப்பந்தலின் கீழ் பரப்பாதிருக்க வேண்டும்.

வீட்டைப் பேணும் முறைமை
(பஃறொடை வெண்பா)

காட்டுக் களைந்து கலம் கழீஇ, இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து,
இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க-
நல்லது உறல் வேண்டுவார்! 46


நல்லது உறல் - நன்மையடைதலை
இல்லம் - வீடு

நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை துயில் எழுந்து, வீடு பெருக்கி, கலங்களைக் கழுவி நீர் நிறைக்கும் சாலையும், கரகங்களையும் பூ அணிவித்து அடுப்பினுள் தீ உண்டாக்க வேண்டும்.

நூல் ஓதுதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)

அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும்,
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள். 47

அட்டமியும் - எட்டா நாளும்
உவாவும் - அமாவாசையும், பௌர்ணமியும்

அட்டமியும், அமாவாசையும், பௌர்ணமியும், பதினான்காம் நாளும் அரசர்க்குத் துன்பம் வரும் காலமாகும். இந்நாட்கள் பூமி அதிர்ச்சி உள்ள நாட்கள், மேக முழக்கமும் தூய்மை அல்லாத நாட்கள். எனவே அந்தணர்கள் வேதம் ஓதாத நாட்களாகும்.

குறுந்தொகை-25


63. பாலை

"ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல்" எனச்
செய் வினை கைம்மிக எண்ணுதி; அவ் வினைக்கு
அம் மா அரிவையும் வருமோ?
எம்மை உய்த்தியோ? உரைத்திசின்-நெஞ்சே!
பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது
உகாய்க்குடி கிழார்



64. முல்லை

பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்தென,
புன் தலை மன்றம் நோக்கி, மாலை
மடக் கண் குழவி அலம்வந்தன்ன
நோயேம் ஆகுதல் அறிந்தும்,
சேயர்-தோழி!-சேய் நாட்டோ ரே.
பிரிவிடை ஆற்றாமை கண்டு, "வருவர் எனச் சொல்லிய தோழிக்கு கிழத்தி உரைத்தது
கருவூர்க் கதப்பிள்ளை


65. முல்லை

வன்பரல் தெள் அறல் பருகிய இரலை தன்
இன்புறு துணையொடு மறுவந்து உகள,
தான் வந்தன்றே, தளி தரு தண் கார்-
வாராது உறையுநர் வரல் நசைஇ
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே.

பருவங் கண்டு அழிந்த தலைமகன் தோழிக்கு உரைத்தது
கோவூர் கிழார்


66. முல்லை

மடவமன்ற, தடவு நிலைக் கொன்றை-
கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய
பருவம் வாராஅளவை, நெரிதரக்
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த,
வம்ப மாரியைக் கார் என மதித்தே.

பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி, 'பருவம் அன்று' என்று வற்புறீஇயது
கோவர்த்தனார்


67. பாலை

உள்ளார்கொல்லோ-தோழி! -கிள்ளை
வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம்
புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப்
பொலங் கல ஒரு காசு ஏய்க்கும்
நிலம் கரி கள்ளிஅம் காடு இறந்தோரே?

பிரிவிடை ஆற்றாத தலைமகள் தோழிக்கு உரைத்தது
அள்ளுர்நன்முல்லை


68. குறிஞ்சி

பூழ்க் கால் அன்ன செங் கால் உழுந்தின்
ஊழ்ப்படு முது காய் உழையினம் கவரும்
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்
மருந்து பிறிது இல்லை; அவர் மணந்த மார்பே.

பிரிவிடைக் கிழத்தி மெலித்து கூறியது
அள்ளூர் நன்முல்லை


69. குறிஞ்சி

கருங்கண் தாக் கலை பெரும் பிறிது உற்றென,
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி,
ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும்
சாரல் நாட! நடு நாள்
வாரல்; வாழியோ! வருந்துதும் யாமே!

தோழி இரவுக்குறி மறுத்தது
கடுந்தோட் கரவீரன்

மதுரைக்காஞ்சி-14

வரைவின் மகளிரின் பொய் முயக்கம்

நுண் பூண் ஆகம் வடுக் கொள முயங்கி,
மாயப் பொய் பல கூட்டி, கவவுக் கரந்து, 570

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி,
நுண் தாது உண்டு, வறும் பூத் துறக்கும்,
மென் சிறை வண்டினம் மான, புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப, இன் துயில் துறந்து, 575

பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல,
கொழுங் குடிச் செல்வரும் பிறரும் மேஎய,
மணம் புணர்ந்து ஓங்கிய, அணங்குடை நல் இல்,
ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்
ஒண் சுடர் விளக்கத்து, பலர் உடன் துவன்றி, 580

நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான, கண்டோ ர்
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,







வரைவின் மகளிரின் வாழ்க்கை

யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி, குண்டு நீர்ப் 585

பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி, நீர் நனை மேவர,
நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர




ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் 590

மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி, 595

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர



புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்

கணவர் உவப்ப, புதல்வர்ப் பயந்து, 600

பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற,
புலவுப் புனிறு தீர்ந்து, பொலிந்த சுற்றமொடு,
வள மனை மகளிர் குளநீர் அயர



சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மடை கொடுத்தல்

திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி, 605

நுண் நீர் ஆகுளி இரட்ட, பலவுடன்,
ஒண் சுடர் விளக்கம் முந்துற, மடையொடு,
நல் மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
பெருந் தோள் சாலினி மடுப்ப 610





வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும்

ஒரு சார்,
அருங் கடி வேலன் முருகொடு வளைஇ,
அரிக் கூடு இன் இயம் கறங்க, நேர் நிறுத்து,
கார் மலர்க் குறிஞ்சி சூடி, கடம்பின்
சீர் மிகு நெடு வேள் பேணி, தழூஉப் பிணையூஉ,
மன்றுதொறும் நின்ற குரவை 615

பொருநர் ஆற்றுப்படை-17


காவிரி நாட்டு வயல் வளம்

நுரைத் தலைக்குரைப் புனல் வரைப்பு அகம் புகுதொறும், 240

புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய
கூனி, குயத்தின் வாய் நெல் அரிந்து,
சூடு கோடாகப் பிறக்கி, நாள்தொறும்,
குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை
கடுந் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும், 245

சாலி நெல்லின், சிறை கொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆக,
காவிரி புரக்கும் நாடு கிழவோனே.

திருக்குறள் அதிகாரம் - 6 -8


வாழ்க்கைத் துணைநலம் 
(8) 
புகழ்புரிந்தஇல்லிலோர்க்கு இல்லை
இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை . 

கருத்து 
புகழை விரும்பிக்காக்கும் மனைவி 
இல்லாதவருக்கு இகழ்ந்து பேசும் 
பகைவர் முன்னால் ஆண் சிங்கம் 
போல் பெருமிதமாக நடக்கமுடியாது. 

வியாழக்கிழமை வாழ்த்துக்கள்


ஒத்தகருத்துச் சொற்கள் - நூ

(1)நூதனம் -அபூர்வம் 

ஆசாரக்கோவை-12

எண்ணக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)


பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும். 38

குறளை - கோட்சொல்லுதல்
அழுக்காறு - பொறாமை

அறிவுடையார் பொய் பேசுதலும், கோள் சொல்லுதலும், பிறர் பொருளை விரும்புதலும், பொறாமை கொள்ளுதலும் செய்ய மாட்டார். அப்படிச் செய்தால் இம்மையில் வறுமையும், மறுமையில் நரகமும் வாய்க்கப்படும்; தெய்வமும் அழிந்துவிடும்.


தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்! 39

ஊண் கொள்ளார் - உணவு உட்கொள்ளார்
அடுக்களை - அட்டிலின் கண்


பிறர்க்காக அன்றி தனக்காக உலை வையார், உணவு உட்கொள்ளார், எச்சிற்படுத்தார், மனையில் இருக்கும் தெய்வங்களுக்கு ஊட்டினதை அறிந்து பின் தாம் உண்பார்.

சான்றோர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உயர்ந்ததின் மேல் இரார்; - உள் அழிவு செய்யார்,
இறந்து இன்னா செய்தக்கடைத்தும்; - குரவர்,
இளங் கிளைகள் உண்ணும் இடத்து. 40

இளம் ‏கிளைகள் - புதிய சுற்றத்தார்
குரவர் - பெரியோர்

புதிய சுற்றத்தார் தம்மொடு சேர்ந்து உண்ணும் போது பெரியார் உயர்ந்த இடத்தில் அமரமாட்டார், துன்பம் தரும் செயல்களைச் செய்ய மாட்டார், முறை கடந்து இன்னாதவற்றைச் செய்யமாட்டார்.

சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்;
புண்ணிய ஆய தலையோடு உறுப்பு உறுத்த! -
நுண்ணிய நூல் உணர்வினார். 41

காலொடு கால் - தங்காலோடு காலை

ஒருவன் தன் கண்ணிற்கு மருந்தெழுதிய கோல் கொண்டு பிறர் கண்ணிற்கு உபயோகப் படுத்தல் கூடாது. காலொடு கால் தேய்க்கக் கூடாது. புண்ணியப் பொருள்களைத் தலையிலும், பிற உறுப்புகளிலும் ஒற்றிக் கொள்ளக் வேண்டும் என்பர் நுட்பமான அறிவினை உடையவர்கள்.

மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க!' என்பதே -
பேர் அறிவாளர் துணிவு. 42

ஈர் ஆறு நாளும் - பன்னிரண்டு நாள் அளவும்
இகவற்க - அகலாதொழிக

தம் மனைவியர்க்கு பூப்பு நிகழ்ந்தால், நாள் மூன்றும் அவரை நோக்கார், நீராடியபின் பன்னிரண்டு நாளும் அகலாது இருத்தல் நன்மையாகும் என்பர் மிக்க ஆராய்ச்சியாளர்.

குறுந்தொகை-24


56. பாலை

வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என்நெஞ்சு அமர்ந்தோளே!
தலைமகன் கொண்டு தலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி, இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு, கூறியது
சிறைக்குடி ஆந்தையார்

57. நெய்தல்

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு,
உடன் உயிர் போகுகதில்ல - கடன்அறிந்து,
இருவேம் ஆகிய உலகத்து,
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.
காப்பு மிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகன் தோழிக்குச் சொல்லியது
சிறைக்குடி ஆந்தையார்
58. குறிஞ்சி

இடிக்கும் கேளிர்! நும் குறை ஆக
நிறுக்கல் ஆற்றினோ நன்று மன் தில்ல;
ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில்
கைஇல் ஊமன் கண்ணின் காக்கும்
வெண்ணெய் உணங்கல் போலப்
பரந்தன்று, இந் நோய்; நோன்று கொளற்கு அரிதே!
கழற்றெதிர்மறை
வெள்ளிவீதியார்

59. பாலை

பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்
அரலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக்
குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல்
தவ்வென மறப்பரோ-மற்றே; முயலவும்,
சுரம் பல விலங்கிய அரும்பொருள்
நிரம்பா ஆகலின், நீடலோ இன்றே.
பிரிவிடை அழிந்த சிழத்தியைத் தோழி வற்புறுத்தியது
மோசிகீரனார்

60. குறிஞ்சி

குறுந் தாட் கூதளி ஆடிய நெடு வரைப்
பெருந்தேன் கண்ட இருங் கால் முடிவன்,
உட்கைச் சிறு குடை கோலி, கீழ் இருந்து,
சுட்டுபு நக்கியாங்கு, காதலர்
நல்கார் நயவார் ஆயினும்,
பல்கால் காண்டலும், உள்ளத்துக்கு இனிதே.
பிரிவிடை ஆற்றாமையான் தலைமகன் தோழிக்கு உரைத்தது
பரணர்

61. மருதம்

தச்சன் செய்த சிறு மா வையம்,
ஊர்ந்து இன்புறாஅர்ஆயினும், கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல,
உற்று இன்புறேஎம் ஆயினும், நற்றேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம்; செறிந்தன வளையே.
தோழி தலைமகன் வாயில்கட்கு உரைத்தது
நும்பிசேர்கீரன்

62. குறிஞ்சி

கோடல், எதிர் முகைப் பசு வீ முல்லை,
நாறு இதழ்க் குவளையொடு இடையிடுபு விரைஇ,
ஐது தொடை மாண்ட கோதை போல,
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாய்வது; முயங்கற்கும் இனிதே.
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் கூடலுறும் நெஞ்சிற்குச் சொல்லியது
சிறைக்குடி ஆந்தையார்

புதன், 25 ஜனவரி, 2012

இரட்டைக் கிளவி-கு

(1)குறு குறு 

(2)குபு குபு


(3)குசு குசு 


(4)குடுகுடு 


(5)குளுகுளு


(6)கும்கும்



மதுரைக்காஞ்சி-13

உணவு வகைகள்

பலவுடன்,
சேறும் நாற்றமும் பலவின் சுளையும்,
வேறு படக் கவினிய தேம் மாங் கனியும்,
பல் வேறு உருவின் காயும், பழனும்,
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி, 530

மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,
அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக் கடிகையும்,
புகழ் படப் பண்ணிய பேர் ஊன் சோறும்,
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு, பிறவும்,
இன் சோறு தருநர் பல் வயின் நுகர 535



அந்திக் கடையில் எழும் ஓசை மிகுதி

வால் இதை எடுத்த வளி தரு வங்கம்,
பல் வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
ஒல்லென் இமிழ் இசை மான, கல்லென
நனந் தலை வினைஞர் கலம் கொண்டு மறுக,
பெருங் கடல் குட்டத்துப் புலவுத் திரை ஓதம் 540

இருங் கழி மருவிப் பாய, பெரிது எழுந்து,
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின்,
பல் வேறு புள்ளின் இசை எழுந்தற்றே,
அல்அங்காடி அழி தரு கம்பலை.







இரவுக் கால நிலை

ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க, சினம் தணிந்து, 545

சென்ற ஞாயிறு, நன் பகல் கொண்டு,
குடமுதல் குன்றம் சேர, குணமுதல்,
நாள் முதிர் மதியம் தோன்றி, நிலா விரிபு,
பகல் உரு உற்ற இரவு வர, நயந்தோர்
காதல் இன் துணை புணர்மார், ஆய் இதழ்த் 550

தண் நறுங் கழுநீர் துணைப்ப, இழை புனையூஉ,
நல் நெடுங் கூந்தல் நறு விரை குடைய,
நரந்தம் அரைப்ப, நறுஞ் சாந்து மறுக,
மென் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப,
பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் 555

நெடுஞ் சுடர் விளக்கம் கொளீஇ, நெடு நகர்
எல்லை எல்லாம், நோயொடு புகுந்து,
கல்லென் மாலை, நீங்க



குல மகளிர் செயல்

நாணுக் கொள,
ஏழ் புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ்,
தாழ் பெயல் கனை குரல் கடுப்ப, பண்ணுப் பெயர்த்து, 560

வீழ் துணை தழீஇ, வியல் விசும்பு கமழ,




வரைவின் மகளிரின் ஒப்பனைச் சிறப்பு

நீர் திரண்டன்ன கோதை பிறக்க இட்டு,
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி,
போது அவிழ் புது மலர் தெரு உடன் கமழ,
மே தகு தகைய மிகு நலம் எய்தி, 565

பெரும் பல் குவளைச் சுரும்பு படு பல் மலர்,
திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து,
கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து,

பொருநர் ஆற்றுப்படை-16

காவிரியின் வெள்ளச் சிறப்பு

மன்னர் நடுங்கத் தோன்றி, பல் மாண்
எல்லை தருநன் பல் கதிர் பரப்பி,
குல்லை கரியவும், கோடு எரி நைப்பவும்,
அருவி மா மலை நிழத்தவும், மற்று அக் 235


கருவி வானம் கடற்கோள் மறப்பவும்,
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும்
நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்,
துறைதுறைதோறும், பொறை உயர்த்து ஒழுகி,

திருக்குறள் அதிகாரம் - 6 -7

வாழ்க்கைத் துணைநலம்
(7) 
சிறைகாக்குங் காப்புஎவன் செய்யும் மகளிர் 
நிறைகாக்குங் காப்பே தலை. 


கருத்து 
மகளிரை அடைத்து வைத்துக் காக்கும் 
காவல் என்ன பயனைக் கொடுக்கும்? 
அம்மகளிர் நிறை என்னும் பண்பால் 
தம்மைத் தாம்காக்கும் காவலே சிறந்தது 

புதன்கிழமை வாழ்த்துக்கள்


ஒத்தகருத்துச் சொற்கள் - நு

(1)நுட்பம் -  நுண்மை
(2)நுண்மை - கூர்மை
(3)நுண்மை - அறிவுநுட்பம்
(4)நுணல்  .  தவளை

செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஒத்தகருத்துச் சொற்கள் - நீ

(1)நீசபாஷை – இழிமொழி
(2)நீதி - நயன்மை

(3)நீதி -உண்மை 
(4)நீதிக்கட்சி - நயன்மைக்கட்சி

உலக வாழ்த்து

              உலக வாழ்த்து


திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்


கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிங்(கு)


அங்கண் உலகளித்த லான்


ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்


காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு


மேரு வலந்திரித லான்


மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்


நாமநீர் வேலி யுலகிற்கு அவன் அளிபோல்


மேல்நின்று தான்சுரத்த லான்.


                           - இளங்கோவடிகள்.

உலக வாழ்த்து

உலக வாழ்த்து


வாழ்க வாழ்க உலகம் எலாம்
வாழ்க எங்கள் தேசமும்
வாழ்க எங்கள் தமிழகம்
வாழ்க எங்கள் மனை அறம்
வாழ்க மேழிச் செல்வமே
வளர்க நாட்டுக் கைத்தொழில்


வாழ்க எங்கள் வாணிபம்
வாழ்க நல்ல அரசியல்
அன்பு கொண்டு அனைவரும்
அச்சம் இன்றி வாழ்கவே
துன்பம் ஏதும் இன்றியே
துக்கம் யாவும் நீங்கியே


இன்பமான யாவும் எய்தி
இந்த நாட்டில் யாவரும்
தெம்பினோடு தெளிவு பெற்றுத்
தேவர் போற்ற வாழ்குவோம்!


- நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை

விடுகதைகள்-3

(3 )கண்ணீர் விட்டே கடைசிவரை ஒளி 
     தருவான்  அவன் யார் 

விடை- மெழுகுதிரி

ஆசாரக்கோவை-11

மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(குறள் வெண்பா)

பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்;
பகல் பெய்யார், தீயினுள் நீர். 33

இரா - இரவில்
வடக்கு நோக்கார் - வடக்கு நோக்காமலும்

பகல் பொழுதில் தெற்கு நோக்காமலும், இரவில் வடக்கு நோக்காமலும், மலசலங் கழித்தல் நல்லது.



மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(இன்னிசை வெண்பா)

பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின்,
அந்தரத்து அல்லால், உமிழ்வோடு இரு புலனும்,
இந்திர தானம் பெறினும், இகழாரே-
'தந்திரத்து வாழ்தும்!' என்பார். 34

உமிழ்வோடு - உமிழ்நீரையும்

பத்து திசையினையும் மறைத்துக் கொண்டு, அந்தரத்தில் செய்வதாக நினைத்துக் கொண்டு எச்சில் உமிழ்தலும், மலங்கழித்தலும் செய்ய வேண்டும். இந்திர பதவியே கிடைத்தாலும் வெளிப்படையாக செய்யக்கூடாது.

வாய் அலம்ப ஆகாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)

நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்;
வழி நிலை, நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால்
பெய் பூச்சுச் சீராது எனின். 35

நடைவரவு நின்று - நடக்காமல்
பூசார் - வம்பலப்பார்

நீரிடத்தில் நடக்காமல் நின்று வாயலம்புதல் கூடாது. தேங்கியிருக்கும் நீரிலும் வாயலம்பார். கலத்துள் முகந்து பிறர் பெய்ய வாயை அலம்ப முடியாது.

ஒழுக்கமற்றவை
(பஃறொடை வெண்பா)

சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்;
இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்;
படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்;
பலர் இடை ஆடை உதிராரே; - என்றும் கடன் அறி காட்சியவர். 36

மாசுணி - பிறர் உடுத்த அழுக்கு உடை
படை வரினும் - படை வந்ததாயினும்

விளக்குக்கும் ஒருவருக்கும் நடுவே போகமாட்டார். சுவரின் மேல் உமிழார். நோய் வரினும் பிறர் உடுத்த அழுக்கு உடையைப் படுக்கவும் போர்த்தவும் பயன்படுத்தமாட்டார். படை வந்தாலும், தம் ஆடை பிறர்மேல் படும்படி செல்ல மாட்டார். அறிவுடையார் பலர் நடுவில் உடையை உதறமாட்டார்கள் கடமை உடைய பெரியவர்கள்.

நரகத்துக்குச் செலுத்துவன
(நேரிசை வெண்பா)

பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு,
அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார் - திறன் இலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச்
செல்வுழி உய்த்திடுதலான். 37

நிரயத்து - நரகத்துக்கு
அறன் அறிந்தார் - ஒழுக்கம் அறிந்தவர்

ஒழுக்கம் அறிந்தவர் பிறருடைய மனையாளை விரும்புவதும், கள் குடிப்பதும், களவு செய்வதும், சூதாடுவதும், கொலை செய்தலும் ஆகிய தீய செயல்களை மனதாலும் நினையார்.

குறுந்தொகை-23



50. மருதம்

ஐயவி அன்ன சிறு வீ ஞாழல்
செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த்
துறை அணிந்தன்று, அவர் ஊரே; இறை இறந்து
இலங்கு வளை நெகிழ, சாஅய்ப்
புலம்பு அணிந்தன்று, அவர் மணந்த தோளே.

கிழவர்குப் பாங்காயின வாயில்கட்குக் கிழத்தி சொல்லியது
குன்றியனார்




51. நெய்தல்

கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர்
நூல் அறு முத்தின் காலொடு பாறித்
துறைதொறும் பரக்கம் தூ மணற் சேர்ப்பனை
யானும் காதலென்; யாயும் நனி வெய்யள்;
எந்தையும் கொடீஇயர் வேண்டும்;
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே.

வரைவு நீட்டித்தவிடத்து ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி வரைவு மலிவு கூறியது
குன்றியனார்



52. குறிஞ்சி

ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்
சூர் நசைந்தனையை யாய் நடுங்கல் கண்டே,
நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்,
நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை!
பரிநதனென் அல்லெனோ, இறைஇறை யானே?

வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது
பனம்பாரனார்




53. மருதம்

எம் அணங்கினவே - மகிழ்ந! முன்றில்
நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல்,
வேலன் புனைந்த வெறி அயர் களம்தொறும்
செந் நெல் வான் பொரி சிதறி அன்ன,
எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை,
நேர் இறை முன்கை பற்றி,
சூராமகளிரோடு உற்ற சூளே.

வரைவு நீட்டித்த வழித் தோழி தலைமகற்கு உரைத்தது
கோப்பெருஞ்சோழன்




54. குறிஞ்சி

யானே ஈண்டையேனே; என் நலனே,
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக்
கான யானை கை விடு பசுங் கழை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்
கானக நாடனொடு, ஆண்டு, ஒழிந்தன்றே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது
மீனெறி தூண்டிலார்




55. நெய்தல்

மாக் கழி மணி பூக் கூம்ப, தூத் திரைப்
பொங்கு பிசிர்த் துவலையொடு மங்குல் தைஇ,
கையற வந்த தைவரல் ஊதையொடு
இன்னா உறையுட்டு ஆகும்
சில் நாட்டு அம்ம-இச் சிறு நல்ஊரே.
"வரைவோடு புகுதானேல் இவள் இறந்துபடும்" எனத் தோழி, தலைமகன் சிறைப் புறத்தானாகச் சொல்லியது
நெய்தற் கார்க்கியர்


#160;