உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
உச்சிஅம் போழ்தோடு, இடை யாமம், ஈர்-அந்தி,
மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள்,
அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும்
ஒட்டார்-உடன் உறைவின்கண். 43
மிக்க இரு தேவர் நாளோடு, உவாத்திதி நாள்,
அட்டமியும், ஏனைப் பிறந்த நாள், இவ் அனைத்தும்
ஒட்டார்-உடன் உறைவின்கண். 43
ஈர் அந்தி - மாலையும் காலையும்
ஒட்டார் - உடன்படார்
ஒட்டார் - உடன்படார்
நடுப்பகலிலும், மாலையிலும், காலையும், ஆதிரையும், ஓணமும், அட்டமியிலும், பிறந்த நாள் அன்றும், பௌர்ணமியிலும், தம் மனைவியரோடு சேர்ந்திருக்க மாட்டார் நல்லோர்.
நாழி முதலியவற்றை வைக்கும் முறை
(இன்னிசை வெண்பா)
நாழி மணைமேல் இரியார்; மணை கவிழார்;
கோடி கடையுள் விரியார்; கடைத்தலை,
ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்-
தம் தலைக்கண் நில்லாவிடல்! 44
கோடி கடையுள் விரியார்; கடைத்தலை,
ஓராது, கட்டில் படாஅர்; அறியாதார்-
தம் தலைக்கண் நில்லாவிடல்! 44
நாழி - படி
கோடி - புத்தாடை
கோடி - புத்தாடை
நாழியை மணைமேல் வைக்கக் கூடாது. மணையைக் கவிழ்த்து வைத்தல் கூடாது. புத்தாடையைத் தலைக்கடியில் வைக்கமாட்டார். பலர் செல்லும் இடத்தில் கட்டிலில் படுக்க மாட்டார். தம்மை அறியாதவனெதிரில் நிற்க மாட்டார்.
பந்தலில் வைக்கத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
துடைப்பம், துகட் காடு, புல் இதழ், செத்தல்
கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு, ஐந்தும்,
பரப்பற்க, பந்தரகத்து! 45
கருங் கலம், கட்டில் கிழிந்ததனோடு, ஐந்தும்,
பரப்பற்க, பந்தரகத்து! 45
செத்தல் - பழைமையான
கருங்கலம் - கரிச்சட்டி
கருங்கலம் - கரிச்சட்டி
துடைப்பமும், பூஜிதமும், கரிச்சட்டியும், கிழிந்த கட்டிலும் மணப்பந்தலின் கீழ் பரப்பாதிருக்க வேண்டும்.
வீட்டைப் பேணும் முறைமை
(பஃறொடை வெண்பா)
காட்டுக் களைந்து கலம் கழீஇ, இல்லத்தை
ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து,
இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க-
நல்லது உறல் வேண்டுவார்! 46
ஆப்பி நீர் எங்கும் தெளித்து, சிறுகாலை,
நீர்ச் சால், கரகம், நிறைய மலர் அணிந்து,
இல்லம் பொலிய, அடுப்பினுள் தீப் பெய்க-
நல்லது உறல் வேண்டுவார்! 46
நல்லது உறல் - நன்மையடைதலை
இல்லம் - வீடு
இல்லம் - வீடு
நல்லது நடக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகாலை துயில் எழுந்து, வீடு பெருக்கி, கலங்களைக் கழுவி நீர் நிறைக்கும் சாலையும், கரகங்களையும் பூ அணிவித்து அடுப்பினுள் தீ உண்டாக்க வேண்டும்.
நூல் ஓதுதற்கு ஆகாத காலம்
(இன்னிசை வெண்பா)
அட்டமியும், ஏனை உவாவும், பதினான்கும்,
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள். 47
அப் பூமி காப்பார்க்கு உறுகண்ணும், மிக்க
நிலத் துளக்கு, விண் அதிர்ப்பு, வாலாமை, - பார்ப்பார்
இலங்கு நூல் ஓதாத நாள். 47
அட்டமியும் - எட்டா நாளும்
உவாவும் - அமாவாசையும், பௌர்ணமியும்
உவாவும் - அமாவாசையும், பௌர்ணமியும்
அட்டமியும், அமாவாசையும், பௌர்ணமியும், பதினான்காம் நாளும் அரசர்க்குத் துன்பம் வரும் காலமாகும். இந்நாட்கள் பூமி அதிர்ச்சி உள்ள நாட்கள், மேக முழக்கமும் தூய்மை அல்லாத நாட்கள். எனவே அந்தணர்கள் வேதம் ஓதாத நாட்களாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.