301 | மெய்யளவிற் றுயிரென்றுமெய்யகத் தடக்குரைத்தல் பொய்யளவைக் குடங்குடத்திற்புகலருமை போலென்பாய் மெய்யளவ்¢ன் மெய்யுணர்வைமெய்யகத் தடக்குரைத்தி யையனையே யடங்கானென்றதுவாதன் வண்ணக்கால். |
302 | அருவாத லாலடங்குமுணர்வுதா னங்கென்னிற் பெருவாத மங்கில்லைபெற்றியொன் றறியாத திருவாள னுரைவண்ணந்தீட்டொட்டுக் கலப்பியாப் புருவாய வுடம்பினோடுணர்வினுக் குளதாமோ. |
303 | யாப்புண்டா லுழப்பதவ்வுயிரென்றேற் கதுவன்று போய்ப்பிண்டத் துழப்புழப்பப்புலம்புவ தென்செயலென்பா யேப்புண்பட் டான்படநோயேதிலர்க்காய்ச் சோமாகிச் சாப்புண்பட் டேனென்றுசாற்றுவதுன் றத்துவமோ. |
304 | உழப்புழப்பச் செய்கையானுறுதுயருற் றேனென்றல் பிழைப்பதுவாக் கருதாதேபெருவழியு ளிடறுதியா லுழப்பறிவு குறிசெய்கையொருவனவே யெனச்சொன்னார்க் கிழிக்குவதிங் கில்லாமையிதனாலே யறியனென்றாள். |
305 | அருவாயில் யாப்பில்லையன்றாயிற் குறைபடூஉ மிருவாறின் கூட்டமுந்தீதென்ப தெம்மிடமே மருவாதா யுரைத்ததனைமனங்கொள்ளா யதுவன்றிப் பொருவாறொன் றுரைத்தாலுமொருவாறு முணராயால். |
306 | அறிவெழுந் தவலிக்குமென்பதூஉ மதுவெழப் பிறிதொன்று பேதுறுமங்கென்பதூஉம் பெரும்பேதாய் குறிகொண்டா ருரையன்றாற்குற்றமே கொளலுறுவாய் பொறிகொண்டு காற்றினையும்போகாமற் சிமிழாயோ. |
307 | பிறன்சுமவான் றானடவான்பெருவினையு முய்க்கில்லா வறஞ்செய்தா னமருலகிற்செல்லும்வா யரிதென்று புறம்புறம்பே சொல்லியெம்பொருணிகழ்ச்சி யறியாயாற் கறங்குகளி மல்லனவுங்காற்றெறியத் திரியாவோ. |
308 | மகனேயாய்ப் பிறப்பினு மாதுயரங் கேடில்லை யவனாகா னாயினு மறஞ் செய்த லவமாகு மெவனாகு மென்றெம திட்டமே யுரைத்தியா னகைநாணி நீநின்னை நன்பகலே மறைக்கின்றாய். |
309 | வீயுடம்பிட் டுயிர்சென்று வினையுடம்பு முளகாகத் தாயுடம்பி னகத்துடம்பு தான்வைத்த தின்றியே நீயுடம்பு பெற்றவா றுரையென்பாய் நிழல்போலும் டேயுடம்பு பிறிதுடம்பிற் புகல்பேதாய் காணாயோ. |
310 | எப்பொருளு மொன்றொன்றிற்கிடங்கொடுத்த விரும்புண்ணீர் புககிடங்கொண் டடங்குதலேபோலவும் தந்தைதாய் சுக்கிலமுஞ் சோணிதமுந்தழீஇச்சுதையு ணெய்யனைத்தா யொத்துடம்பி னகத்தடங்கியுடன்பெருக மெனவுரைத்தாள். |
311 | செய்வினைதா னிற்பவே பயனெய்து மென்பதூஉ மவ்வினை யறக்கெட்டா லதுவிளையு மென்பதூஉ மிவ்விரண்டும் வேண்டுத லெமக்கில்லை யெடுத்துரைப்பி னைவினையி னிலைதோற்ற நாசந்தா னாட்டுங்கால். |
312 | பைம்பொன்செய் குடமழித்து;பன்மணிசேர் முடிசெய்தாற் செம்பொன்னா னிலையுதலுஞ்சிதைவாக்க மவைபெறலு நம்பான்றிங் கிவைபோலநரர்தேவ ருயிர்களையும் வம்பென்று கருதனீவைகலும்யா முரையாமோ. |
313 | கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும் ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார் பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லின சென்று சேர்தலைச் சித்தம தின்மையால். |
314 | சொன்ன சூனைத் துறந்தவற் றட்டன பின்னை யுண்டல் பிழைப்புடைத் தென்றியா னன்னு தல்லைத் துறந்தவ ளட்டது தன்னை யுண்டுந் தவசியை யல்லையோ |
315 | கொன்ற பாவங் கெடுகெனக் கையிட்டு நின்ற தென்பது நீயுரைப் பாயெனி னன்று துன்னின தாதன்மை யாற்சொன்னாய் சென்றும் வந்துந் தியானம் புகலென்றாள். |
316 | இன்ப துன்ப மிருவினைக் காரிய மென்ப வர்க்கென்னை யேதமுண் டென்றியேற் பின்பு பேணுந் தவத்தினி னாகிய துன்ப வர்க்குந் துதாங்கனத் தொன்றுமே. |
317 | செய்த தீவினை சென்றின்ப மாக்குமென் றி·து ரைப்பவ ரீங்கில்லை யாயினும் பொய்கள் சொல்லிப் புலைமக னேயெம்மை வைதல் காரண மாநின்று வைதியோ. |
318 | இந்திரி யங்களை வென்றற் பொருட்டென வந்து டம்பு வருத்தல் பழுதென்பாய் தந்து ரைத்த தலைமழி யாதிய சிந்த னைக்கிவை செய்வதெ னோசொல்லாய். |
319 | புனைவு வேண்டலர் போக நுகர்விலர் நினைவிற் கேயிடை கோளென நேர்தலா லினைய வும்மல மேறினு மென்செய மனைய தான்மக்கள் யாக்கையின் வண்ணமே. |
320 | பாவந் துய்த்துமென் றோமல்ல துய்ப்பினு மாவ தின்மைக் கரசுரைத் தாயன்றோ வோவ லின்பந் தருமெ னுயிரென்பாய் தேவ னாகித் திரிந்துதான் காட்டிக்காண். |
321 | அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலா மொழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேற் பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ. |
322 | சிந்த னையினுந் தீவினை யாமென்பார்க் கைந்திற் காம மமையுமென் றீரென்பாய் சுந்த மாகச் சுவடறு வீரென வந்தி தோறும் புடைக்க வமையுமோ. |
323 | பெண்ம கள்ளிர் பிறகிட வுண்பவர் கண்ணி னாலில்லுட் கந்தியைக் காணினு முண்ண லம்மெனும் மோத்துடை யார்களைத் திண்ண தாவைது தீவினை கோடியோ. |
324 | பிள்ளை பெண்ணலி யாயினும் மாண்வயிற் றுள்ள தேயென் றொழுக்கங் கொடுத்தியாற் பிள்ளை பெண்ணலி யன்மையை யாதினா லுள்ளங் கொண்டிழ வூசி யுரைப்பதே. |
325 | மோனம் பொய்யஞ்சிக் கொண்டவன் மெய்யுரைக் கூனந் தோன்றி லுரைத்தன னென்றியேற் றானம் யாவர்க்குஞ் செய்வது நன்றனென்பா யீன மென்னோ தெருச்சுமக் கிற்றியோ. |