அமரர்களின் வியப்பு
சீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா வாய வாயிர மாயிர மடுதிற லரிமா ஏயெ னாமுனிங் கழித்தன னிவனெனத் தத்தம் வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார் | 718 |
அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும் பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி யிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே | 719 |
திவிட்டனின் சால்புடைமை
யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ னோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி யேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள் போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன் | 720 |
தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால் வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா னம்பி நாமினி நளிவரைத் தாழ்வார்கண் டல்லா லிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே | 721 |
இதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்
ஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும் வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலரச் வீங்கி மாண்பின வினையன விவையென வினிதின் வாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான் | 722 |
புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய கள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழு வுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர் வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய் | 723 |
காளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற் றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று ளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய் | 724 |
மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு துன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வ இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய் | 725 |
உவரி மாக்கட் னுரையென வொளிர்தரு மயிர அவரை வார்புனத் தருந்திமே யருவிநீர் பருகி இவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையே கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய் | 726 |
வேறு
துள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கலத் துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப் பிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே | 727 |
வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங் கழையும்வே யுங்கலந் திருண்டு காண் டற்கரு முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின திழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே | 728 |
பருவமோ வாமுகிற் படல மூடிக்கிடந் திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழித் தருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தட வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே | 729 |
சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில் வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார் ஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால் சாரலா காதன சாதிசா லப்பல | 730 |
பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந் திரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக் குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப் பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே | 731 |
அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன இவைகள்கண் டய்சில வேழவீட் டம்பல நவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம் | 732 |
குழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும் எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின் கடில்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம் பொழில்கள்வெள்ள ளத்திடைப் புரளநூ றுங்களே | 733 |
ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற் காக்கலா காகளி றாழவா ழும்புறந் தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே | 734 |
இதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பல மதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசை நிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலைக் கதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே | 735 |
வேறு
இருது வேற்றுமை யின்மையாற் சுருதி மேற்றுறக் கத்தினோ டரிது வேற்றுமை யாகவே கருது வேற்றடங் கையினாய் | 736 |
தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை கல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய் மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கு மெல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே | 737 |
திரைத்த சாலிகை நிரைத்த போனிரந் திரைப்ப தேன்களே விரைகொண் மாலையாய் | 738 |
வரைவாய் நிவத்த வடுமா வடுமா விரைவாய் நிவந்து விரியா விரியா புரைவா யசும்பு புலரா புலரா இரவா யிருள்செ யிடமே யிடமே | 739 |
இளையா ரிளையா ருடனாய் முலையின் வளையார் வளையார் மனம்வேண் டுருவம் விளையா விளையாட் டயருந் தொழிறான் றளையார் தளையார் பொழிலின் றடமே | 740 |
அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா விளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும் வளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ இளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம் | 741 |
தமரைத் திடத்திடை மலர்ந்த சாரல்வாய்த் தாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த் தாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம் தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே | 742 |
நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே | 743 |
நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம் தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம் மகமலரன வசோகம் மவைதருவ வசோகம் பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர் | 744 |
அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல் வணங்கிளர் வனதோன்றி வகைசுடர் வனதோன்றி இணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி மணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம் | 745 |
சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க் கேந்தி நின்றன விம்மலை யாரமே வாய்ந்த பூம்புடை யும்மலர்க் கண்ணியு மீந்த சாகைய விம்மலை யாரமே | 746 |
இயங்கு கின்னர ரின்புறு நீரவே தயங்கு கின்றன தானமந் தாரமே பயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும் தயங்கு கின்றன தானமந் தாரமே | 747 |
வேறு
பொன்விரிந் தனைய பூங் கோங்கும் வேங்கையு முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன் வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே | 748 |
நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள் பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ தழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர் குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே | 749 |
மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம் தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப் பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே | 750 |
வேறு
அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம் குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே | 751 |
இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை தணந்தொளி விடாத வெண்டாமரை ததைந் தனையதொன்றே | 752 |
காரிருட் குவளிக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக் கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல் பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற் சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம் | 753 |
வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக் காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண் நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார் | 754 |
மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர் ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம் நாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கி மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே | 755 |
ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து நாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார் காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய் பாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்கப் பட்டார் | 756 |
அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய் விலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம் இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய் நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம் | 757 |
போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோ டாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய் சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய பாய்நிழற் பவழச் செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம் | 758 |
எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய் முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற் செழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம் | 759 |
தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால் வம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாக உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய் | 760 |
பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக் கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ண னுவப்பக் காட்டி மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால் இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார் | 761 |
பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர் மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம் காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டி யோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான் | 762 |
வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளொயிற் றரங்கச் சீயங் கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்து குலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய் | 763 |
இதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்
வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச்
கம்பமா வுலகந் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்
நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்
வம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ 764
ஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கி
வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே
னோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு
வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன் 765
குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா
மன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி
வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா
யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே 766
அரசரின் முதற் கடமை
உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்
வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்கப் பட்ட
அரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி லுண்டோ 767
யாக்கையால் எய்தும் பயன்
கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லா
ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்
குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்
பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா 768
இறவாது நிற்போர் இவர் எனல்
மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயி
லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலா
மென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்
நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார் 769
ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்
ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே 770
வேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்
என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
குன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம்
சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான் 771
இதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர், விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்
ஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகா
ணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென
ஏங்கு நீர்ககடல் வண்ணனுக் கின்னணம்
வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான் 772
முழையு டைந்தழல் காலு முரம்பயற்
கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்
மழையு டைந்துகு நீரென வாய்மடுத்
துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம் 773
மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ
லொக்க வோடி யுறைத்தலி னான்மிசை
உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்
தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே 774
ஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல்
வேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்
பாங்க லார்மனை போலப் பறைந்தரோ
ஓங்கி நின்றுல வுற்றன வோமையே 775
அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ
லுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம் 776
பைத்த லைப்பட நாக மழன்றுதம்
பொய்த்த ளைத்தலை போதரக் கார்செய்வான்
கைத்த லம்முகிற் கின்றன காந்தளென்
றத்த லைச்சிலை மானயர் வெய்துமே 777
விசையி னோடு வெண் டேர்செலக் கண்டுநீர்
தசையி னோடிய நவ்வி யிருங்குழா
மிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய
வசையின் மேன்மகன் போல வருந்துமே 778
துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்
கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்
கடிய நீர்மையர் கானகங் காக்குநி
னடிய ரல்லதல் லாரவ ணில்லையே 779
வேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்
அங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண்
சிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடாத்
திங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார்ந்
திங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான் 780
முல்லை நிலத்தின் மாண்பு
மாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினா
லாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்
காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே
போலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே 781
கொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்
விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்
வண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங்
கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே 782
கைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளை
மைம்மலர்த் தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு
மொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும்
கொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும் 783
தொண்டைவாய் நிறங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும்
வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங்
கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால்
விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே 784
தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடைந்
தெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற்
பண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து
வெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம் 785
தேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்து
கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்
றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற்
கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே 786
வாயிதழ் திறங்கொளக் கனிந்த தொண்டை வந்தொசிந்து
தூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்
பாயிதழ்ப் பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற்
சேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே 787
ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்த
கூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக்
கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந்
தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம் 788
பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந்
தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ
கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக
நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே 789
ஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன்
மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்
றாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து
சாறுகொண்டு மான்கணத் தயங்குநீர சாரெலாம் 790
கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு
நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ்
வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்து
தார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே 791
கரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன்
புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்
பறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியி
னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.