கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 30 நவம்பர், 2011

திருக்குறள் அதிகாரம் - 3 -1


நீத்தார் பெருமை 

(1) 
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து 
வேண்டும் பனுவல் துணிவு.


கருத்து 
ஒழுக்கத்தில் நிலையாக நின்று பற்று 
ஒழித்தவர்களின் பெருமையைச் 
சிறப்பாகக் கூறுவதே நூல்களின்  
முடிவு . 

ஏலாதி-3


இடர் தீர்த்தல், எள்ளாமை, கீழ் இனம் சேராமை,
படர் தீர்த்தல் யார்க்கும், பழிப்பின் நடை தீர்த்தல்,
கண்டவர் காமுறும் சொல், - காணின், கல்வியின்கண்
விண்டவர் நூல் வேண்டாவிடும். 4

சேராமை - இணங்காமை
எள்ளாமை - பிறரை இகழாமை

பிறர்க்கு நேரிட்ட துன்பந் துடைத்தலும், பிறரை இகழாமையும், கீழ்மக்களோடு பழகாமையும், யாவர்க்கும் பசித்துன்பம் போக்குதலும், உலகம் பழிக்கும் நடையினின்று நீங்குதலும், தன்னை எதிர்ப்பட்டவர் விரும்பும் இன்சொல்லும் ஒருவன் தானே கண்டு கொண்டானெனில் கற்றரிந்தோரால் சொல்லப்பட்ட நூல்களைப் பார்த்து அறிய வேண்டிய பொருள் ஒன்றுமில்லாதவன் ஆவான்.

ஏரெழுபது-3


நூல்

1. வேளாண் குலத்திற்கு நிகரில்லை

வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. 10




2. உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு

சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே. 11


3. ஏர்விழாச் சிறப்பு

நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கெளமாட்டார் போர்வேந்த ரானோரே. 12


4. அலப்படைவாள் சிறப்பு

குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்கலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே. 13

5. மேழிச் சிறப்பு

வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரனுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 14

6. ஊற்றாணிச் சிறப்பு

நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரவராலே தொல்லுலகு நிலைபெறுமோ
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே. 15


7. நுகத்தடிச் சிறப்பு

உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்று நுகமன்றோ காராளர் உழுநுகமே. 16

8. நுகத்துளைச் சிறப்பு

வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துணையுளதோ சொல்லீரே. 17


9. நுகத்தாணியின் சிறப்பு

ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே. 18


10. பூட்டு கயிற்றின் சிறப்பு

நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல கடற்புவியில்
நீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிறே. 19


11. தொடைச் சிறப்பு

தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்த புகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே. 20 

உலக நீதி - 13

சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே! 8

உதயண குமார காவியம்-5


உதயணன் மாமனாகிய விக்கிரமன் அந்த தவப் பள்ளிக்கு வருதல்

செல்லும் அக்காலம் தன்னில் செறிந்தவன் புதல்வனான
வெல்களிற்றி யானை வேந்தன் விக்கிரன் தனக்கு மக்கள்
இல்லையென்று எவ்வல் கூர்ந்தே இனிமையின் வந்து நல்ல
சொல்லருண் முனிவன்பாதம் தொழுது நன்கிருந்தான் அன்றே. 21

விக்கிரமன் உதயணன் யூகியைப் பற்றி முனிவரிடம் வினவுதல்

புரவலனில் இனியராம் இப்புதல்வர்கள் யார்கொலென்ன
வரமுனியருளக் கேட்டு மகிழ்ந்து தன் ஆயமெல்லாம்
சிரசணி முடியும் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப்போக்கி
விரவிய தவத்தனாக வேண்டுவது எண்ணம் என்றான். 22

இன்னா நாற்பது-6


கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா;
வள்ளல்கள் இன்மை பரிசிலர்க்கு முன் இன்னா;
வண்மை இலாளர் வனப்பு இன்னா; ஆங்கு இன்னா,
பண் இல் புரவிப் பரிப்பு. 9

புரவி - குதிரை
பரிப்பு - தாங்குதல்
கலன் - குதிரையில் போடப்படும் சேணம்

கள் இல்லாத மூதூரில் கள்ளுண்டு களிப்பார்க்கு மிகவும் துன்பமாகும். வள்ளல்கள் இல்லாதிருத்தல் இரவலர்க்கு மிகவும் துன்பமாகும். ஈகைக் குணமில்லாதவர்களுடைய அழகு துன்பமாகும். அவ்வாறே கலனை இல்லாத புரவி தாங்குதல் துன்பமாகும்.

பக்தி இலக்கியம்

ஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி ஒன்று; கடவுளுக்குமுன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தைப் பரப்ப அந்தப் பாடல்கள் உதவின. அதனால், அரசர்களையும் செல்வர்களையும் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ், கடவுளைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை வளர்ந்தது. அரண்மனையில் நிகழ்ந்துவந்த விழாக்கள் பல, கோயில்களில் கடவுளுக்கு உரிய திருவிழாக்களாக மாறின.

ஆத்திசூடி-7

62. தேசத்தோ டொத்துவாழ்.

63. தையல்சொல் கேளேல்.

64. தொன்மை மறவேல்.

65. தோற்பன தொடரேல்.

66. நன்மை கடைப்பிடி.

67. நாடொப் பனசெய்.

68. நிலையிற் பிரியேல்.

69. நீர்விளை யாடேல்.

70. நுண்மை நுகரேல்.

71. நூல்பல கல்.

ஆசாரக்கோவை-4


முந்தையோர் கண்ட நெறி
இன்னிசை வெண்பா

வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை. 4

வைகறை - விடியற்காலம்
யாமம் - பின்சாமம்

விடியற்காலையில் விழித்தெழுந்து, மறுநாள் செய்ய வேண்டிய அறச்செயல்களையும், வருவாய்க்கான செயல்களையும், சிந்தித்து, தாயையும் தந்தையையும் தொழுது ஒரு செயலைச் செய்ய அறிவுடையோர் சொல்லிய முறையாகும்.


எச்சிலுடன் தீண்டத் தகாதவை
இன்னிசைச் சிந்தியல் வெண்பா

'எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். 5

எச்சிலார் - எச்சிலையுடையாராய்
திட்பத்தால் - யாப்புற

பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலையுடையார் எவரும் தீண்டார்.

எச்சிலுடன் காணக் கூடாதவை
இன்னிசைச் சிந்தியல் வெண்பா

எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து. 6

திங்கள் - மதி
ஞாயிறு - சூரியன்

புலையும், மதியும், நாயும், சூரியனும், மீனும் ஆகியவற்றை எச்சிலையுடையார் கண்ணால் காண மாட்டார்.

எச்சில்கள்
இன்னிசைச் சிந்தியல் வெண்பா

எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. 7

விழைச்சு - எச்சில்

மல மூத்திரங்கள் இயற்றிய இயக்கம் இரண்டொடு, இணை எச்சில், வாயினால் வழங்கிய எச்சில் ஆகிய நான்கினையும் பாதுகாக்க வேண்டும்.

அறநெறிச்சாரம்-6



வருந்தியும் அறம் செய்க

திருத்தப்படுவது அறக்கருமம் தம்மை
வருத்தியு மாண்புடையார் செய்க - பெருக்க
வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஏமன்கீழ்த்
தரவறுத்து மீளாமை கண்டு. 23


அறம் விரைந்து செய்க

முன்னே ஒருவன் முடித்தான்தன் துப்பெல்லாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் - முன்னே
முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து. 24


துஞ்சாத் துயரம் தருவது

குறைக்கருமம் விட்டுரைப் பிற்கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க - பிறப்பிடைக்கோர்
நெஞ்சே மாப்பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரந் தரும். 25


அறம் செய்யாது உறங்குவது ஏன்?

அறம்புரிந்தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்ன? - மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மையால். 26


அறனழித்து வதொன்றில்லை!

பாவம் பெருகப் பழி பெருகத் தன்னோம்பிப்
ஆவதொன்றில்லை அறனழித்துப் - பாவம்
பொறாஅ முறைசெய் பொருவில் ஞமன்கீழ்
அறவுண்ணும் ஆற்றவு நின்று. 27


அறம் செய்ய மறவேல்

முற்செய் வினையின் பயன்துய்த்து உலந்தால்
பிற்செய் வினையின் பின் போகலால் - நற்செய்கை
ஆற்றும் துணையும் அறமறவேல் நன்னெஞ்சே
கூற்றங் குழல் பிரியாமுன். 28


இயல்வது கரவேல்

திரையவித்து நீராடலாகா உரைப்பார்
உரையவித்தொன்றும் சொல் இல்லை - அரைசராய்ச்
செய்தும் அறமெனினும் ஆகாதுளவரையால்
செய்வதற்கே ஆகுந்திரு. 29


மூடனுக்கு நீதி கூறாதே

கல்லா ஒருவனைக் காரணங் காட்டினும்
இல்லை மற்றொன்றும் அறன் உணர்தல் - நல்லாய்
நறுசெய் நிறைய முகப்பினும் மூழை
பெறுமோ சுவையுணருமாறு. 30

அகநானுறு-14


8. தலைமகள் கூற்று

ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த
குரும்பி வல்சிப் பெருங் கை ஏற்றை
தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின்,
பாம்பு மதன் அழியும் பானாட் கங்குலும்,
5 அரிய அல்லமன் இகுளை! 'பெரிய
கேழல் அட்ட பேழ்வாய் ஏற்றை
பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும்
கழை நரல் சிலம்பின்ஆங்கண், வழையொடு
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில்,
10 படு கடுங் களிற்றின் வருத்தம் சொலிய,
பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல்
விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு,
எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது,
மின்னு விடச் சிறிய ஒதுங்கி, மென்மெல,
15 துளி தலைத் தலைஇய மணி ஏர் ஐம்பால்
சிறுபுறம் புதைய வாரி, குரல் பிழியூஉ,
நெறி கெட விலங்கிய, நீயிர், இச் சுரம்,
அறிதலும் அறிதிரோ?' என்னுநர்ப் பெறினே.

தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது
குறிஞ்சி
பெருங்குன்றூர் கிழார்

சிலப்பதிகாரம்-10

உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின;
நறு மலர்க் கோதை! நின் நலம் பாராட்டுநர்
மறு இல் மங்கல அணியே அன்றியும்,
பிறிது அணி அணியப் பெற்றதை எவன்கொல்?
பல் இருங் கூந்தல் சின்மலர் அன்றியும், 65

எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்கொல்?
நானம் நல் அகில் நறும் புகை அன்றியும்,
மான் மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல்?
திரு முலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும்,
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்கொல்? 70

திங்கள் முத்து அரும்பவும், சிறுகு இடை வருந்தவும்
இங்கு இவை அணிந்தனர்; என் உற்றனர்கொல்?
மாசு அறு பொன்னே! வலம்புரி முத்தே!
காசு அறு விரையே! கரும்பே! தேனே!
அரும் பெறல் பாவாய்! ஆர் உயிர் மருந்தே! 75

பெருங்குடி வாணிகன் பெரு மட மகளே!
மலையிடைப் பிறவா மணியே என்கோ?
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ?
யாழிடைப் பிறவா இசையே என்கோ?
தாழ் இருங் கூந்தல் தையால்! நின்னை' என்று 80

உலவாக் கட்டுரை பல பாராட்டித்
தயங்கு இணர்க் கோதை தன்னொடு தருக்கி,
வயங்கு இணர்த் தாரோன் மகிழ்ந்து செல்வுழி நாள்
வார் ஒலி கூந்தலைப் பேர் இயல் கிழத்தி
மறப்பு அரும் கேண்மையோடு அறப் பரிசாரமும், 85

விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும்,
வேறுபடு திருவின் வீறு பெறக் காண,
உரிமைச் சுற்றமோடு ஒரு தனிப் புணர்க்க,
யாண்டு சில கழிந்தன, இற்பெருங் கிழமையின்
காண் தகு சிறப்பின் கண்ணகி தனக்கு என். 90



வெண்பா

தூமப் பணிகள் ஒன்றித் தோய்ந்தால் என, ஒருவார்
காமர் மனைவி எனக் கைகலந்து - நாமம்
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் - மண்மேல்
நிலையாமை கண்டவர் போல், நின்று.

எதிர்கருத்துச் சொற்கள் - சௌ

(1)சௌகரியம் - அசௌகரியம்  
             
(2)சௌபாக்கியம் - அசௌபாக்கியம்


ஏலாதி-2


நூல்

சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்
நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்
அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்
வழிவந்தார்கண்ணே வனப்பு. 1

வள்ளன்மை - ஈகைத்தன்மை
வனப்பு - அழகு

நிறைந்த நவையணிந்த கூந்தலையுடையாய்! திசையெங்கும் பரவிய புகழ், செல்வம், மேன்மையான சொல், வீரத்தில் அசையாத நிலை, கல்வி, வரையாது கொடுத்தல் ஆகிய இவ்வாறும் தொன்மையுடைய குடிப்பிறந்து திருநான்மறை நெறி ஒழுகுவோரது இலக்கணம் ஆகும்.

கொலை புரியான், கொல்லான், புலால் மயங்கான், கூர்த்த
அலைபுரியான், வஞ்சியான், யாதும் நிலை திரியான்,
மண்ணவர்க்கும் அன்றி, - மது மலி பூங் கோதாய்!-
விண்ணவர்க்கும் மேலாய்விடும். 2

கூர்த்த - மிக்க
யாதும் - சிறிதும்

தேன் சிந்தும் பூவையணிந்த கூந்தளையுடையவளே! கொலைத் தொழிலை விரும்பாதவனும், பிற உயிர்களைக் கொல்லாதவனும், புலால் உண்ணாதவனும், மிகுந்து வருந்தும் தொழிலை செய்யாதவனும், பொய் பேசாதவனும், எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து விலகாதவனும் பூமியில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் போற்றப்படுவான்.

தவம் எளிது; தானம் அரிது; தக்கார்க்கேல்,
அவம் அரிது; ஆதல் எளிதால்; அவம் இலா
இன்பம் பிறழின், இயைவு எளிது; மற்று அதன்
துன்பம் துடைத்தல் அரிது. 3

தக்கார்க்கேல் - தகுதியுடைய சான்றோர்களால்
அவம் இலா - தாழ்வில்லாத

யாவருக்கும் தவம் செய்தல் எளிது, கைப்பொருள் வழங்கல் அரிது, பெரியோரின் குற்றத்துக்கு ஆளாதல் எளிது, நன்நெறியில் ஒழுகுதல் அரிது, வீட்டின்பம் தவறுமாயின் பிறவி தொடர்தல் எளிது, முக்தி பெறுதல் அரிது.

சீவக சிந்தாமணி-8

விசயை புலம்புதல்

கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின் காமர்சாலை தளி நிறுமின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கிச் சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீமின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின். 306

மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம் பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றிக் கொளப் பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்
கோடி மூன்றோடு அரைச் செம் பொன் கோமான் நல்கும் என அறைமின். 307

அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடிச் சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கிக்
கரும் கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி
விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன் காண இஃதோஒ பிறக்குமா. 308

வெவ் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வாறு ஆகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே. 309

பற்றா மன்னன் நகர்ப் புறமால் பாயல் பிணம் சூழ் சுடு காடால்
உற்றார் இல்லாத் தமியேனால் ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால்
மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீ வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே. 310

பிறந்த நீயும் பூம் பிண்டிப் பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர்க் கடலை நீந்தும் புணை மற்று ஆகாக்கால்
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தா மணியே! கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. 311



விசயையின் துன்ப நிலையைக் கண்டு அஃறிணைப் பொருள்கள் இரங்குதல்

அந்தோ! விசயை பட்டன கொண்டு அகங்கை புறங்கை ஆனால் போல்
கந்தார் களிற்றுத் தம் கோமான் கழிய மயில் ஓர் மயில் ஊர்ந்து
வந்தாள் போலப் புறம் காட்டுள் வந்தாள் தமியே என மரங்கள்
சிந்தித்து இரங்கி அழுவன போல் பனி சேர் கண்ணீர் சொரிந்தனவே. 312

அடர் பொன் பைம் பூண் அரசு அழிய அரும் பொன் புதல்வன் பெற்று இருந்த
இடர் கொள் நெஞ்சத்து இறைவியும் இருங் கண் ஞாலத்து இருள் பருகிச்
சுடர் போய் மறையத் துளங்கு ஒளிய குழவி மதிபெற்று அகம் குளிர்ந்த
படர் தீர் அந்தி அது ஒத்தாள் பணை செய் கோட்டுப் படா முலையாள். 313



சுடுகாட்டில் தெய்வம் ஒன்று உதவி செய்தல்

தேன் அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள்
யான் எவன் செய்வல் என்றே அவலியா இருந்த போழ்தில்
தான் அமர்ந்து உழையின் நீங்காச் சண்பக மாலை என்னும்
கூனியது உருவம் கொண்டு ஓர் தெய்வதம் குறுகிற்று அன்றே. 314

விம்முறு விழும வெந் நோய் அவண் உறை தெய்வம் சேரக்
கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க
எம் அனை தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம்
செம் மலர்த் திருவின் பாவாய் யான் செய்த பாவம் என்றாள். 315

பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் ஒன்றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டு போம் ஒருவன் இன்னே
காவி அம் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள். 316

சின் மணி மழலை நாவின் கிண்கிணி சிலம்பொடு ஏங்க
பன் மணி விளக்கின் நீழல் நம்பியைப் பள்ளி சேர்த்தி
மின் மணி மிளிரத் தேவி மெல்லவே ஒதுங்கு கின்றாள்
நன் மணி ஈன்று முந்நீர்ச் சலஞ்சலம் புகுவது ஒத்தாள். 317

ஏதிலார் இடர் பல் நூறு செய்யினும் செய்த எல்லாம்
தீது இல ஆக என்று திரு முலைப் பால் மடுத்துக்
காதலான் பெயர் சுமந்த கதிர் மணி ஆழி சேர்த்திக்
கோதை தாழ் குழலினாளைக் கொண்டு போய் மறைய நின்றாள். 318

நல் வினை செய்து இலாதேன் நம்பி நீ தமியை ஆகிக்
கொல் வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மாப்
புல்லிய கொம்பு தான் ஓர் கருவிளை பூத்ததே போல்
ஒல்கி ஓர் கொம்பு பற்றி ஒரு கணால் நோக்கி நின்றாள். 319


கந்துக் கடன் குழந்தையைத் தன் இல்லத்திற்கு எடுத்துச் சென்று வளர்த்தல்

நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடு ஊர்
கோளொடு குளிர் மதி வந்து வீழ்ந்து எனக்
காளக உடையினன் கந்து நாமனும்
வாளொடு கனை இருள் வந்து தோன்றினான். 320


வாள் கடைந்து அழுத்திய கண்ணினார்கள் தம்
தோள் கடைந்து அழுத்திய மார்பன் தூங்கு இருள்
நீள் சுடர் நிழல் மணி கிழிப்ப நோக்கினான்
ஆள் கடிந்து அணங்கிய அணங்கு காட்டுளே. 321

அருப்பு இள முலையவர்க்கு அனங்கன் ஆகிய
மருப்பு இளம் பிறை நுதல் மதர்வை வெம் கதிர்
பரப்புபு கிடந்து எனக் கிடந்த நம்பியை
விருப்பு உள மிகுதியின் விரைவின் எய்தினான். 322

புனை கதிர்த் திருமணிப் பொன் செய் மோதிரம்
வனை மலர்த் தாரினான் மறைத்து வண் கையால்
துனை கதிர் முகந்து என முகப்பத் தும்மினான்
சினை மறைந்து ஒரு குரல் சீவ என்றதே. 323

என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய
அன்பு எழுந்து அரசனுக்கு அவலித்து ஐயனை
நுன் பழம் பகை தவ நூறுவாய் என
இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஏத்தினாள். 324

ஒழுக்கியல் அரும் தவத்து உடம்பு நீங்கினார்
அழிப்பரும் பொன் உடம்பு அடைந்தது ஒப்பவே
வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய மாமணி
விழுத் தகு மகனொடும் விரைவின் ஏகினான். 325

மின் அடு கனை இருள் நீந்தி மேதகு
பொன் உடை வள நகர் பொலியப் புக்கபின்
தன் உடை மதிசுடத் தளரும் தையலுக்கு
இன் உடை அருள் மொழி இனிய செப்பினான். 326

பொருந்திய உலகினுள் புகழ் கண் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசு இல் கற்பினாய்
திருந்திய நின் மகன் தீதின் நீங்கினான்
வருந்தல் நீ எம் மனை வருக என்னவே. 327

கள் அலைத்து இழி தரும் களி கொள் கோதை தன்
உள் அலைத்து எழு தரும் உவகை ஊர்தர
வள்ளலை வல் விரைந்து எய்த நம்பியை
வெள் இலை வேலினான் விரகின் நீட்டினான். 328

சுரிமுக வலம்புரி துவைத்த தூரியம்
விரிமுக விசும்பு உற வாய் விட்டு ஆர்த்தன
எரிமுக நித்திலம் ஏந்திச் சேந்த போல்
கரிமுக முலையினார் காய் பொன் சிந்தினார். 329

அழுகுரல் மயங்கிய அல்லல் ஆவணத்து
எழுகிளை மகிழ்ந்து எமது அரசு வேண்டினான்
கழிபெரும் காதலான் கந்து நாமன் என்று
உழிதரு பெருநிதி உவப்ப நல்கினான். 330

திருமகன் பெற்று எனச் செம் பொன் குன்று எனப்
பெரு நல நிதி தலை திறந்து பீடு உடை
இரு நிலத்து இரவலர்க்கு ஆர்த்தி இன்னணம்
செருநிலம் பயப்பு உறச் செல்வன் செல்லுமே. 331


விசயை துறவு நிலையைப் பூணுதல்

நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம். 332

பொறி அறு பாவையின் பொம் என விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள். 333

பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே
திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே. 334

மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம். 335

அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரிக் கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்றது நண்ணலம் ஆகி. 336

வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள். 337

பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அத்திசை முன்னி
இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள். 338

உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகரக் குழைத்
திருவிலும் இவை தேமொழி மாதரைப்
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே. 339

சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத் திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறிவேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவளக் கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்துச் செல்லுற்றாள். 340

பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே. 341

தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே. 342

எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர்
மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே. 343

நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ
நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள். 344

வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக்
கையினால் அடி தைவரக் கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே. 345

தூவி அம்சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு
ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே. 346

கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே. 347

வாள் உறை நெடுங் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உறப் புல்லுவார் போல் தொக்கு எதிர் கொண்டு புக்குத்
தாள் உறு வருத்தம் ஓம்பித் தவ நெறிப் படுக்கல் உற்று
நாள் உறத் திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார். 348

திருந்து தகரச் செந் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கருங் காழ் அகிலின் நறும் புகையில் கழுமிக் கோதை கண் படுக்கும்
திருந்து நானக் குழல் புலம்பத் தேனும் வண்டும் இசைப் புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள். 349

திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கிப்
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும் அரும்பொன் பூணும் அகற்றினாள். 350

பஞ்சி அனைய வேய் மென் தோள் பகுவாய் மகரம் கான்றிட்ட
துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை எனத் துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணிக் காந்தள்
அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள். 351

பூப் பெய் செம் பொன் கோடிகமும் பொன் ஆர் ஆல வட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழிமின் எனத் துறந்தாள். 352

பிடிக்கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கிப் பிணை அன்னாள்
அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ளத் தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே. 353

பால் உடை அமிர்தம் பைம் பொன் கலத்திடைப் பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேல் அடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன் கை
வால் அடகு அருளிச் செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள். 354


விசயையுடன் வந்த தெய்வம் விடைபெற்றுச் செல்லுதல்

மெல் விரல் மெலியக் கொய்த குள நெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில் விளித்து இரிய ஆமான்
புல்லிய குழவித் திங்கள் பொழி கதிர்க் குப்பை போலும்
நல் எழில் கவரி ஊட்ட நம்பியை நினைக்கும் அன்றே. 355

பெண்மை நாண் வனப்புச் சாயல் பெரு மட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவு கொண்ட அனைய நங்கை
நண்ணிய நுங்கட்கு எல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்து உரைத்து எழுந்தது அன்றே. 356

உறுதி சூழ்ந்து அவண் ஓடலின் ஆய் இடை
மறுவில் வெண் குடை மன்னவன் காதல் அம்
சிறுவன் தன்மையைச் சேர்ந்து அறிந்து இவ்வழிக்
குறுக வம் எனக் கூனியைப் போக்கினாள். 357

நெஞ்சின் ஒத்து இனியாளை என் நீர்மையால்
வஞ்சித்தேன் என வஞ்சி அம் கொம்பு அனாள்
பஞ்சி மெல்லடி பல் கலன் ஆர்ப்பச் சென்று
இஞ்சி மா நகர்த் தன் இடம் எய்தினாள். 358

தானும் தன் உணர்வில் தளர்ந்து ஆற்றவும்
மானின் நோக்கி வரும் வழி நோக்கி நின்று
ஆனியம் பல ஆசையில் செல்லுமே
தேன் இயம்பும் ஓர் தேம் பொழில் பள்ளியே. 359


சீவகன் வளர்தல்

மட்டு அவிழ் கோதை வாள் அன உண்கண் மயில் அன்னாள்
கட்டு அழல் எவ்வம் கைம் மிக நீக்கிக் களிகூர
விட்டு அகல்வு ஆற்றா வேட்கையின் ஓடும் பொழுது இப் பால்
பட்டதை எல்லாம் பல்லவர் கேட்கப் பகர்கு உற்றேன். 360

கூற்றம் அஞ்சும் கொல் நுனை எஃகின் இளையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயர் இட்டார். 361

மேகம் ஈன்ற மின் அனையாள் தன் மிளிர் பைம் பூண்
ஆகம் ஈன்ற அம் முலை இன் பால் அமிர்து ஏந்தப்
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையே போல்
மாகம் ஈன்ற மா மதி அன்னான் வளர்கின்றான். 362

அம் பொன் கொம்பின் ஆயிழை ஐவர் நலன் ஓம்பப்
பைம் பொன் பூமிப் பல் கதிர் முத்தார் சகடமும்
செம் பொன் தேரும் வேழமும் ஊர்ந்து நிதி சிந்தி
நம்பன் செல்லும் நாளினும் நாளும் நலம் மிக்கே. 363

பல் பூம் பொய்கைத் தாமரை போன்றும் பனி வானத்து
எல்லார் கண்ணும் இன்பு உற ஊரும் மதி போன்றும்
கொல்லும் சிங்கக் குட்டியும் போன்று இவ் உலகு ஏத்தச்
செல்லும் மன்னோ சீவகன் தெய்வப் பகை வென்றே. 364

மணியும் முத்தும் மாசு அறு பொன்னும் பவளமும்
அணியும் பெய்யும் மாரியின் ஏற்பார்க்கு அவை நல்கிக்
கணிதம் இல்லாக் கற்பகம் கந்துக் கடன் ஒத்தான்
இணை வேல் உண்கண் சுநந்தையும் இன்பக் கொடி ஒத்தாள். 365

சாதிப் பைம் பொன் தன் ஒளி வௌவித் தகை குன்றா
நீதிச் செல்வம் மேல் மேல் நீந்தி நிறைவு எய்திப்
போதிச் செல்வம் பூண்டவர் ஏத்தும் பொலிவினால்
ஆதி காலத்து அந்தணன் காதல் மகன் ஒத்தான். 366

நனம் தலை உலகில் மிக்க நல் நுதல் மகளிர் தங்கள்
மனம் தளை பரிய நின்ற மதலை மை ஆடுக என்றே
பொன் அம் கொடி இறைஞ்சி நின்று பூமகள் புலம்பி வைக
அனங்கனுக்கு அவலம் செய்யும் அண்ணல் நற்றாய் உரைத்தாள். 367

முழவு எனத் திரண்ட திண் தோள் மூரி வெம் சிலையினானும்
அழல் எனக் கனலும் வாள் கண் அவ் வளைத் தோளி னாளும்
மழலை யாழ் மருட்டும் தீம் சொல் மதலையை மயில் அம் சாயல்
குழை முக ஞானம் என்னும் குமரியைப் புணர்க்கல் உற்றார். 368


சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்

அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப்
பரந்து எலாப் பிரப்பும் வைத்துப் பைம் பொன் செய் தவிசின் உச்சி
இருந்து பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி ஏற்பத்
திருந்து பொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே. 369

நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல்
ஏ முதல் ஆய எல்லாப் படைக் கலத் தொழிலும் முற்றிக்
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர்
பூ மகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலம் ஒத்தான். 370

மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார்
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புறப் பசலை மூழ்கிக்
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத் தோளினாற்குக்
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார். 371

விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார்
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும்
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம்
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார். 372



சீவகன் வளர்தல்

வான் சுவை அமிர்த வெள்ளம் வந்து இவண் தொக்கது என்னத்
தான் சுவைக் கொண்டது எல்லாம் தணப்பு அறக் கொடுத்த பின்றைத்
தேன் சுவைத்து அரற்றும் பைந்தார்ச் சீவக குமரன் என்ற
ஊன் சுவைத்து ஒளிறும் வேலாற்கு உறுதி ஒன்று உரைக்கல் உற்றான். 373

நூல் நெறி வகையின் நோக்கி நுண்ணிதின் நுழைந்து தீமைப்
பால் நெறி பலவும் நீக்கிப் பருதி அம் கடவுள் அன்ன
கோன் நெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நால் நெறி வகையில் நின்ற நல் உயிர்க்கு அமிர்தம் என்றான். 374

அறிவினால் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி இன்ப நிறை கடல் அகத்து நின்றார்
பொறி எனும் பெயர ஐ வாய்ப் பொங்கு அழல் அரவின் கண்ணே
வெறி புலம் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார். 375

கூற்றுவன் கொடியன் ஆகிக் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து
மாற்ற அரும் வலையை வைத்தான் வைத்ததை அறிந்து நாமும்
நோற்று அவன் வலையை நீங்கி நுகர்ச்சியில் உலகம் நோக்கி
ஆற்று உறப் போதல் தேற்றாம் அளியமோ? பெரியமே காண். 376

பேர் அஞர் இடும்பை எல்லாம் பிளந்திடும் பிறப்பு நீக்கும்
ஆர் அமிர்து அரிதில் பெற்றாம் அதன் பயன் கோடல் தேற்றாம்
ஓரும் ஐம் பொறியும் ஓம்பி உள பகல் கழிந்த பின்றைக்
கூர் எரி கவரும் போழ்தில் கூடுமோ குறித்த எல்லாம். 377

தழங்கு குரல் முரசின் சாற்றித் தத்துவம் தழுவல் வேண்டிச்
செழுங் களியாளர் முன்னர் இருள் அறச் செப்பினாலும்
முழங்கு அழல் நரகின் மூழ்கும் முயற்சியர் ஆகி நின்ற
கொழுங் களி உணர்வினாரைக் குணவதம் கொளுத்தல் ஆமோ. 378

பவழவாய்ச் செறுவு தன்னுள் நித்திலம் பயில வித்திக்
குழவிநாறு எழுந்து காளைக் கொழும் கதிர் ஈன்று பின்னாக்
கிழவு தான் விளைக்கும் பைங் கூழ் கேட்டிரேல் பிணி செய் பன்மா
உழவிர்காள்! மேயும் சீல வேலி உய்த்திடுமின் என்றான். 379

சூழ் கதிர் மதியம் அன்ன சுடர் மணிப் பூணினானும்
வீழ் தரு கதியின் நீங்கி விளங்கு பொன் உலகத்து உய்க்கும்
ஊழ் வினை துரத்தலானும் உணர்வு சென்று எறித்தலானும்
ஆழ் கடல் புணையின் அன்ன அறிவரன் சரண் அடைந்தான். 380

காட்சி நல் நிலையில் ஞானக் கதிர் மணிக் கதவு சேர்த்திப்
பூட்சி சால் ஒழுக்கம் என்னும் வயிரத் தாழ் கொளுவிப் பொல்லா
மாட்சியில் கதிகள் எல்லாம் அடைத்த பின் வரம்பு இல் இன்பத்து
ஆட்சியில் உலகம் ஏறத் திறந்தனன் அலர்ந்த தாரான். 381

நல் அறத்து இறைவன் ஆகி நால்வகைச் சரணம் எய்தித்
தொல் அறக் கிழமை பூண்ட தொடு கழல் காலினாற்குப்
புல் அற நெறிக் கண் நின்று பொருள் வயிற் பிழைத்த வாறும்
இல்லறத்து இயல்பும் எல்லாம் இருள் அறக் கூறி இட்டான். 382



அச்சணந்தி அடிகள், சீவகனது பிறப்பின் இரகசியத்தை அவனுக்கு உணர்த்துதல்

எரி முயங்கு இலங்கு வை வேல் இளையவர் குழாத்தின் நீங்கித்
திரு முயங்கு அலங்கல் மார்பின் சீவகன் கொண்டு வேறா
விரி மலர்க் கண்ணி கட்டி விழைதக வேய்ந்த போலும்
தெரி மலர்க் காவு சேர்ந்து பிறப்பினைத் தெருட்டல் உற்றான். 383

பூவையும் கிளியும் மன்னர் ஒற்றென புணர்க்கும் சாதி
யாவையும் இன்மை ஆராய்ந்து அம் தளிர்ப் பிண்டி நீழல்
பூ இயல் தவிசின் உச்சிப் பொலிவினோடு இருந்த போழ்தில்
ஏ இயல் சிலையினானை இப் பொருள் கேண்மோ என்றான். 384

வையகம் உடைய மன்னன் சச்சந்தன் அவற்குத் தேவி
பை விரி பசும்பொன் அல்குல் பைந்தொடி விசையை என்பாள்
செய் கழல் மன்னன் தேர்ந்து தேவியைப் பொறியில் போக்கி
மையல் கொள் நெஞ்சில் கல்லா மந்திரி விழுங்கப் பட்டான். 385

புலம்பொடு தேவி போகிப் புகற்கு அருங் காடு நண்ணி
வலம்புரி உலகம் விற்கும் மா மணி ஈன்றது என்ன
இலங்கு இழை சிறுவன் தன்னைப் பயந்து பூந் தவிசின் உச்சி
நலம் புரி நங்கை வைத்து நல் அறம் காக்க என்றாள். 386

வானத்தின் வழுக்கித் திங்கள் கொழுந்து மீன் குழாங்கள் சூழக்
கானத்தில் கிடந்ததே போல் கடல் அகம் உடைய நம்பி
தானத்து மணியும் தானும் இரட்டுறத் தோன்றி னானே
ஊனத்தில் தீர்ந்த சீர்த்தி உத்திரட்டாதி யானே. 387

அருந் தவன் முந்து கூற அலங்கல் வேல் நாய்கன் சென்று
பொருந்துபு சிறுவன் கொண்டு பொலிவொடு புகன்று போகத்
திருந்திய நம்பி ஆரத் தும்மினன் தெய்வம் வாழ்த்திற்று
அரும் பொனாய் கேண்மோ என்றான் அலை கடல் விருப்பில் கொண்டாள். 388

கரியவன் கன்னற்கு அன்று பிறப்பினைத் தேற்றி ஆங்கு அப்
பெரியவன் யாவன் என்ன நீ எனப் பேசலோடும்
சொரி மலர்த் தாரும் பூணும் ஆரமும் குழையும் சோரத்
திரு மலர்க் கண்ணி சிந்தத் தெருமந்து மயங்கி வீழ்ந்தான். 389

கற்பகம் கலங்கி வீழ்ந்த வண்ணம் போல் காளை வீழச்
சொல் பகர் புலவன் வல்லே தோன்றலைச் சார்ந்து புல்லி
நல் பல குழீஇய தம்மால் நவை அறத் தேற்றத் தேறிக்
கல் புனை திணி திண் தோளான் கவலை நீர்க் கடலுள் பட்டான். 390

இனையை நீ ஆயது எல்லாம் எம்மனோர் செய்த பாவம்
நினையல் நீ நம்பி என்று நெடுங் கண் நீர் துடைத்து நீவிப்
புனை இழை மகளிர் போலப் புலம்பல் நின் பகைவன் நின்றான்
நினைவு எலாம் நீங்குக என்ன நெடும் தகை தேறினானே. 391

மலை பக இடிக்கும் சிங்கம் மடங்கலின் மூழங்கி மாநீர்
அலை கடல் திரையின் சீறி அவன் உயிர் பருகல் உற்றுச்
சிலையொடு பகழி ஏந்திக் கூற்று எனச் சிவந்து தோன்றும்
இலை உடைக் கண்ணியானை இன்னணம் விலக்கினானே. 392

வேண்டுவல் நம்பி யான் ஓர் விழுப் பொருள் என்று சொல்ல
ஆண் தகைக் குரவீர் கொண்மின் யாது நீர் கருதிற்று என்ன
யாண்டு நேர் எல்லை ஆக அவன் திறத்து அழற்சி இன்மை
வேண்டுவல் என்று சொன்னான் வில் வலான் அதனை நேர்ந்தான். 393

வெவ் வினை வெகுண்டு சாரா விழுநிதி அமிர்தம் இன்னீர்
கவ்விய எஃகின் நின்ற கயக்கமில் நிலைமை நோக்கி
அவ்வியம் அகன்று பொங்கும் அழல் படு வெகுளி நீக்கி
இவ் இயல் ஒருவற்கு உற்றது இற்றெனக் கிளக்கல் உற்றான். 394


அச்சணந்தி அடிகள் தன் வரலாறு கூறுதல்

வான் உறை வெள்ளி வெற்பின் வாரணவாசி மன்னன்
ஊன் உறை பருதி வெள் வேல் உலோகமா பாலன் என்பான்
தேன் உறை திருந்து கண்ணிச் சிறுவனுக்கு அரசு நாட்டிப்
பால் நிறக் குருகின் ஆய்ந்து பண்ணவர் படிவம் கொண்டான். 395

வெம் சினம் குறைந்து நீங்க விழுத் தவம் தொடங்கி நோற்கும்
வஞ்சம் இல் கொள்கையாற்குப் பாவம் வந்து அடைந்தது ஆகக்
குஞ்சரம் முழங்கு தீயில் கொள்கையின் மெலிந்து இம் மூதூர்
மஞ்சு தோய் குன்றம் அன்ன மாட வீட்டு அகம் புகுந்தான். 396

உரை விளையாமை மைந்தன் கேட்கிய உவந்து நோக்கி
வரை விளையாடு மார்பன் 'யார் அவன் வாழி' என்ன
'விரை விளையாடும் தாரோய் யான்' என விரும்பித் தீம்பால்
'திரை விளை அமிர்தம் அன்ன கட்டுரை செல்க' என்றான். 397

பூத் தின்று புகன்று சேதாப் புணர் முலை பொழிந்த தீம்பால்
நீத்து அறச் செல்ல வேவித்து அட்ட இன் அமிர்தம் உண்பான்
பாத்தரும் பசும் பொன் தாலம் பரப்பிய பைம் பொன் பூமி
ஏத்த அரும் தவிசின் நம்பி தோழரொடு ஏறினானே. 398

புடை இரு குழையும் மின்னப் பூந்துகில் செறிந்த அல்குல்
நடை அறி மகளிர் ஏந்த நல் அமிர்து உண்ணும் போழ்தின்
இடை கழி நின்ற என்னை நோக்கிப் போந்து ஏறுக என்றான்
கடல் கெழு பருதி அன்ன பொன் கலத்து எனக்கும் இட்டார். 399

கை கவி நறு நெய் பெய்து கன்னல் அம் குடங்கள் கூட்டிப்
பெய் பெய் என்று உரைப்ப யானும் பெருங் கடல் வெள்ளிக் குன்றம்
பெய்து தூர்க்கின்ற வண்ணம் விலாப் புடை பெரிதும் வீங்க
ஐயன் அது அருளினால் யான் அந்தணர் தொழிலன் ஆனேன். 400

சுரும்பு உடை அலங்கல் மாலைச் சுநந்தையும் துணைவன் தானும்
விரும்பினர் எதிர் கொண்டு ஓம்ப வேழ வெந்தீயின் நீங்கி
இருந்தனன் ஏம முந் நீர் எறி சுறவு உயர்த்த தோன்றல்
கரும்பு உடைக் காளை அன்ன காளை நின் வலைப் பட்டு என்றான். 401

நிலம் பொறுக்கலாத செம் பொன் நீள் நிதி நுந்தை இல்லம்
நலம் பொறுக்கலாத பிண்டி நான் முகன் தமர்கட்கு எல்லாம்
உலம் பொறுக்கலாத தோளாய் ஆதலால் ஊடு புக்கேன்
கலம் பொறுக்கலாத சாயல் அவர் உழை நின்னைக் கண்டேன். 402

ஐயனைக் கண்ணில் காண யானைத்தீ அதகம் கண்ட
பை அணல் நாகம் போல வட்க யான் பெரிதும் உட்கித்
தெய்வம் கொல் என்று தேர்வேற்கு அமிர்து உலாய் நிமிர்ந்ததே போல்
மொய் குரல் முரசம் நாணும் தழங்கு குரல் முழங்கக் கேட்டேன். 403

கோட்டு இளந் திங்கள் சூழ்ந்து குலவிய திருவில் போல
மோட்டு ஒளி முத்தம் சூழ்ந்து முருகு கொப்பளிக்கும் தாரோய்
கேட்டு அளப் பரிய சொல்லும் கிளர் ஒளி வனப்பும் நின்னைச்
சேட்டு இளஞ் சிங்கம் அன்னாய் சாதகம் செய்த என்றான். 404 

ஒத்தகருத்துச் சொற்கள் - சே

(1)சேவகன் – இளயன்
(2)சேவகன் – வேலைக்காரன்
(3)சேவை – தொண்டு, 

(4)சேவை – ஊழியம்
(5)சேனாபதி – படைத் தலைவன்
(6)சேஷ்டை - குறும்பு

(7)சேய் -குழந்தை 

செவ்வாய், 29 நவம்பர், 2011

ஏரெழுபது-2


பாயிரம்

1. கணபதி வணக்கம்

கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

2. மூவர் வணக்கம்

நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம். 2

3. நாமகள் வணக்கம்

திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3

4. சோழ நாட்டுச் சிறப்பு

ஈழ மண்டல முதலென உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் தாமெலாம்பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங் கனகமு மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே. 4


5. சோழ மன்னன் சிறப்பு

முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே. 5

6. சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு

மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே. 6


7. வேளாண் குடிச் சிறப்பு

ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே. 7

8. வேளாளர் சிறப்பு

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. 8

9. அருட் சிறப்பு

அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல். 9

பாயிரம் முற்றிற்று.

உலக நீதி - 12

கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியாரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே! 7

உதயண குமார காவியம்-4



மிருகாபதியை பறவை தூக்கிச் செல்லல்

செந்துகின் மூடிக்கொண்டு திருநிலா முற்றந்தன்னில்
அந்தமாய்துயில் கொள்கின்ற ஆயிழை தன்னைக் கண்டே
அந்தரத்தோடுகின்ற அண்ட பேரண்டப்புள் ஒன்று
அந்தசையென்று பற்றியன்று வான் போயிற்று அன்றே. 13

மற்றவடந்தை தானுமாமுனியாகி நிற்கும்
சற்கிரி விபுல மன்னும் சாரலவ் வனத்திற் சென்று
நற்றவனருகில் வைப்ப நற்றுயில் விட்டெழுந்தாள்
பற்றுயிர் உண்ணாப்புள்ளும் பறந்து வான் போயிற்றன்றே. 14


அரசி கருவுயிர்த்தல்

நிறைமதி முக நன் மங்கை நிரம்பிய கெர்ப்பமாதல்
பொறைவயினோய் மீக்கூரப்பொருவில் வான் கோள்கள் எல்லாம்
முறையினல் வழியை நோக்க மொய்ம்பன் அத்தினத்தில் தோன்ற
அறையலை கடலில் சங்க மாணி முத் தீன்ற தொத்தாள். 15

பொருகயற் கண்ணினால் தான்போந்ததை யறிந்தழுங்கித்
திருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக்கண்டு
பெருகிய காதலாலே பெருந்துயர் தீர்த்திருப்ப
மருவு நற்றாதையான மாமுனி கண்டு வந்தான். 16


குழந்தைக்குப் பெயரிடல்

தவமுனி கொண்டு சென்று தாபதப்பள்ளி சேர்த்தி
அவண் இனிது ஓம்பவப்பால் அருக்கனன் உதயகாலத்து
உவமையின்று உதித்தானாம் உதயணன் ஆக என்றார்
இவணமத் தாயும் சேயும் இருடிபாலிருந்தார் அன்றே. 17

உதயணன் பெற்ற பேறுகள்

பிரமசுந்தர யோகிக்குப் பிறந்தவன் யூகியோடும்
இருவரும் வளர்ந்தே இன்பக்கடல் நீந்திக் காணக்
கரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்
புரந்தரன் கொடுத்த யாழும் பொறை முனியருளிற் பெற்றான். 18


உதயணன் கோடபதியின் உதவியால் தெய்வ யானை பெறுதல்

மைவரை மருங்கினின்ற மலையென விலங்குகின்ற
தெய்வ நல்லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்
பையெனக்களிறுங் கேட்டுப் பணிந்தபடி யிறைஞ்சி நின்று
கையது கொடுப்ப ஏறிக் காளையும் பள்ளி சேர்ந்தான். 19

தெய்வ யானை உதயணன் கனவில் கூறுதல்

நன்றிருட் கனவினாக நயமறிந்து இனிது உரைக்கும்
பன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறினாலும்
இன்றை நாள் முதலா நீ நானின்றியே முன் உண்டாலும்
அன்று உன்பானில்லேன் என்றே அக்கரி உரைப்பக் கேட்டான். 20

இன்னா நாற்பது-5

சிறை இல் கரும்பினைக் காத்து ஓம்பல் இன்னா;
உறை சோர் பழங் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா;
முறை இன்றி ஆளும் அரசு இன்னா; இன்னா,
மறை இன்றிச் செய்யும் வினை. 5



ஓம்பல் - பாதுகாத்தல்

வேலியில்லாத கரும்புப் பயிரைப் பாதுகாத்தல் துன்பமாம். மழைத்துளி ஒழுகுதலையுடைய பழைய கூரையையுடைய மனையில் வாழ்தல் துன்பமாம். நீதி இல்லாமல் ஆளுகின்ற அரசரது ஆட்சி துன்பமாகும். வெளிப்படையாகச் செய்யும் வேலை துன்பமாகும்.


அற மனத்தார் கூறும் கடு மொழி இன்னா;
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா;
இடும்பை உடையார் கொடை இன்னா; இன்னா,
கொடும்பாடு உடையார் வாய்ச் சொல். 6


மறம் - வீரம்
கொடை - ஈகை

அறத்தை விரும்பும் நெஞ்சத்தினர் கூறும் கடும் மொழியும் துன்பமாம். வீரத்தன்மையுடையவர்கள் போரில் சோம்பலுடன் இருத்தல் துன்பமாம். வறுமை உடையவரது கொடை தன்மை துன்பமாகும். கொடுமையுடையாரது வாயிற் சொல்லும் துன்பமாகும்.


ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா;
நாற்றம் இலாத மலரின் அழகு இன்னா;
தேற்றம் இலாதான் துணிவு இன்னா; ஆங்கு இன்னா,
மாற்றம் அறியான் உரை. 7


உரை - சொல்
தேற்றம் - தெளிவு

வலியில்லாதவன் கையிற்பிடித்த ஆயுதம் துன்பமாகும். மணமில்லாத மலரின் அழகு துன்பமாகும். தெளிவு இல்லாதவன் செய்யும் வேலை துன்பமாகும். அவ்வாறே சொற்களின் நுட்பத்தை அறியாதவனது சொல்லும் துன்பமாகும்.


பகல் போலும் நெஞ்சத்தார் பண்பு இன்மை இன்னா;
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா;
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா; இன்னா,
நயம் இல் மனத்தவர் நட்பு. 8


நகை - சிரித்தல்
நெஞ்சத்தார் - மனமுடையார்

ஞாயிறு போலும் நெஞ்சத்தை உடையவர்கள் பண்பில்லாமல் இருத்தல் துன்பமாகும். நகுதலையுடைய நட்பினர் அன்பில்லாதிருத்தல் துன்பமாகும். போரிலே புறமுதுகிடுதல் துன்பமாகும். நீதியில்லாத மனத்தினை உடையவர்களது நட்பு துன்பமாகும்.

இனியவை நாற்பது


தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே;
அம் கண் விசும்பின் அகல் நிலாக் காண்பு இனிதே;
பங்கம்இல் செய்கையர் ஆகி, பரிந்து யார்க்கும்
அன்புடையர் ஆதல் இனிது. 9


அகல் நிலா - விரிந்த நிலா
காண்பு - காணுதல்

தம்மை ஒட்டி வாழும் நண்பர்கள் செல்வத்துடன் வாழ்தல் இனிது. அழகிய அகன்ற வானத்தில் விரிந்த நிலாவைக் காணுதல் இனிது. குற்றமில்லாத செய்கை உடையவராய் அன்புடையவராயிருத்தல் இனிது.

கடம் உண்டு வாழாமை காண்டல் இனிதே;
நிறை மாண்பு இல் பெண்டிரை நீக்கல் இனிதே;
மன மாண்பு இலாதவரை அஞ்சி அகறல்
எனை மாண்பும் தான் இனிது நன்கு. 10


நீக்கல் - விலக்குதல்
அஞ்சி - பயம்

கடன் வாங்கி வாழாமல் இருத்தல் இனிது. கற்பில்லாத மனைவியை நீக்கிவிடுதல் இனிது. மனத்தின்கண் பெருமை இல்லாதவரை விட்டு அஞ்சி அகலுதல் எல்லாவற்றையும் விட மிக இனிது.


அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே;
குதர் சென்று கொள்ளாத கூர்மை இனிதே;
உயிர் சென்று தாம் படினும், உண்ணார் கைத்து உண்ணாப்
பெருமைபோல் பீடு உடையது இல். 11


அதர் சென்று - வழி சென்று
குதர் சென்று - தவறான வழி

தவறான வழியிற் சென்று வாழாதிருப்பது இனிது. தவறான வழியிற் பொருள் தேடாமை மிக இனிது. உயிரே சென்றாலும் உண்ணத்தகாதார் இடத்து உணவு உண்ணாதிருத்தல் மிக இனிது.

குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே;
கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே;
மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும்
திருவும், தீர்வு இன்றேல், இனிது. 12


குழவி - குழந்தை
திரு - செல்வம்

குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது
.


மானம் அழிந்தபின், வாழாமை முன் இனிதே;
தானம் அழியாமைத் தான் அடங்கி, வாழ்வு இனிதே;
ஊனம் ஒன்று இன்றி, உயர்ந்த பொருள் உடைமை
மானிடவர்க்கு எல்லாம் இனிது. 13


ஊனம் - குறைபாடு

மானம் அழிந்தபின் வாழாமை மிக இனிது. செல்வம் சிதையாதபடி செல்வத்திற்குள் அடங்கி வாழ்தல் இனிது. குறைபாடு இல்லாத சிறந்த செல்வத்தைப் பெற்று வாழ்வது மிக இனிதாகும்.

மரபுத்தொடர்கள்-உ

(1)உச்சிகுளிர்தல் - மிக மகிழ்தல்

(2)உடும்புப் பிடி - தான் கொண்டதை விடாதுபற்றல்

(3)உப்பில்லா பேச்சு - பயனற்ற பேச்சு


இனியவை நாற்பது


ஊரும் கலி மா உரன் உடைமை முன் இனிதே;
தார் புனை மன்னர் தமக்கு உற்ற வெஞ்சமத்துக்
கார் வரை போல் யானைக் கதம் காண்டல் முன் இனிதே;
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை,
பேதுறார், கேட்டல் இனிது. 8

கலிமா - குதிரை
தார் - மாலை

வீரனுக்கு வலிமையான குதிரை இனிது. மாலையணிந்த அரசர்களுக்கு போர்க்களத்தில் கரிய மலைபோன்ற யானைகள் சினம் கொண்டு போரிடுதலைப் பார்த்தல் இனிது. அன்புடையார் வாய்ச் சொற்கள் கேட்பது இனிது.

இணைமொழிகள் -ஓ

(1)ஒப்பும் உயர்வும் - தகுதி

(2)ஓய்வு ஒழிவு 

(3)ஓட்டமும் நடையும் 

பக்தி இலக்கியம்

சமணத்துறவியாக, துறவிகளின் தலைவராக இருந்து சைவ சமயத்திற்குத் திரும்பியவர் எனக் கூறப்படும் திருநாவுக்கரசர் பாடியுள்ள பின்வரும் பாடலில் இயற்கை தரும் இன்பங்களும் இயற்கையைப் பயன்படுத்திப் பெறும் இன்பங்களும் கலை இன்பங்களும் எல்லாம் இறைவன் தரும் இன்பங்களே என்ற உண்மை விளங்குகிறது.
குருகாம் வயிரமாம் கூறு நாளாம்
கொள்ளும் கிழமையாம் கோளே தானாம்
பருகா அமுதமாம் பாலின் நெய்யாம்
பழத்தின் இரதமாம் பாட்டில் பண்ணாம்
ஒருகால் உமையாளோர் பாக னுமாம்
உள்நின்ற நாவிற்கு உரையா டியாம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும்
கண்ணாம் கருகாவூர் எந்தை தானே.
(திருநாவுக்கரசர் தேவாரம்)

ஆத்திசூடி-6

52. சையெனத் திரியேல்.

53. சொற்சோர்வு படேல்.

54. சோம்பித் திரியேல்.

55. தக்கோ னெனத்திரி.

56. தானமது விரும்பு.

57. திருமாலுக் கடிமைசெய்.

58. தீவினை யகற்று.

59. துன்பத்திற் கிடங்கொடேல்.

60. தூக்கி வினைசெய்.

61. தெய்வ மிகழேல்

ஆசாரக்கோவை-3


தக்கணை முதலியவை மேற்கொள்ளல்
இன்னிசைச் சிந்தியல் வெண்பா

தக்கிணை, வேள்வி, தவம், கல்வி, இந் நான்கும்
முப் பால் ஒழுக்கினால் காத்து உய்க்க! உய்யாக்கால்,
எப் பாலும் ஆகா கெடும். 3

தக்கிணை - காணிக்கை
வேள்வி - யாகம்

ஆசிரியர்க்கு தட்சணை கொடுத்தலும், யாகம் பண்ணுதலும், தவம் செய்தலும், கல்வியும், இந்நான்கினையும் காத்து வாழ வேண்டும். இல்லையென்றால் எந்த உலகத்திலும் பயன் இல்லை.

அறநெறிச்சாரம்-5



தூங்காது அறம் செய்க

மின்னும் இளமை உளதாம் என மகிழ்ந்து
பின்னை அறிவன் என்றால் பேதைமை - தன்னைத்
துணிந்தானும் தூங்கா தறஞ்செய்க கூற்றம்
அணித்தாய் வருதலும் உண்டு. 21


அறமே உயிர்க்கு அரணாகும்

மூப்பொடு தீப்பிணி முன்னுறீஇப் பின்வந்து
கூற்ற வரசன் குறும்பெறியும் - ஆற்ற
அறவரண மாராய்ந் தடையின் அஃதல்லால்
பிறவரணமில்லை உயிர்க்கு. 22

அகநானுறு-13


7. செவிலித்தாய் கூற்று

'முலை முகம்செய்தன; முள் எயிறு இலங்கின;
தலை முடிசான்ற; தண் தழை உடையை;
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்;
மூப்புடை முது பதி தாக்குஅணங்கு உடைய;
5 காப்பும் பூண்டிசின்; கடையும் போகலை;
பேதை அல்லை மேதைஅம் குறுமகள்!
பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை, புறத்து' என,
ஒண் சுடர் நல் இல் அருங் கடி நீவி,
தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை
10 ஏறுடை இனத்த, நாறு உயிர் நவ்வி!
வலை காண் பிணையின் போகி, ஈங்கு ஓர்
தொலைவு இல் வெள் வேல் விடலையொடு, என் மகள்
இச் சுரம் படர்தந்தோளே. ஆயிடை,
அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்தென,
15 பிற்படு பூசலின் வழிவழி ஓடி,
மெய்த் தலைப்படுதல்செல்லேன்; இத் தலை,
நின்னொடு வினவல் கேளாய்! பொன்னொடு
புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி,
ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல்,
20 ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த
துய்த் தலை வெண் காழ் பெறூஉம்
கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே.


மகட்போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று, நவ்விப் பிணாக்கண்டு, சொல்லியது
பாலை
கயமனார்

சிலப்பதிகாரம்-9

தீராக் காதலின் திரு முகம் நோக்கி,
கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை,
'குழவித் திங்கள் இமையவர் ஏத்த
அழகொடு முடித்த அருமைத்து ஆயினும்,
உரிதின் நின்னோடு உடன் பிறப்பு உண்மையின், 40

பெரியோன் தருக திரு நுதல் ஆக என
அடையார் முனை அகத்து அமர் மேம்படுநர்க்குப்
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின்,
உருவிலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க 45

மூவா மருந்தின் முன்னர்த் தோன்றலின்,
தேவர் கோமான் தெய்வக் காவல் -
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என
அறுமுக ஒருவன் ஓர் பெறுமுறை இன்றியும்,
இறுமுறை காணும் இயல்பினின் அன்றே 50

அம் சுடர் நெடு வேல் ஒன்றும் நின் முகத்துச்
செங் கடை மழைக் கண் இரண்டா ஈத்தது?
மா இரும் பீலி, மணி நிற மஞ்ஞை, நின்
சாயற்கு இடைந்து, தண் கான் அடையவும்;
அன்னம், நல் நுதல்! மெல் நடைக்கு அழிந்து, 55

நல் நீர்ப் பண்ணை நனி மலர்ச் செறியவும்;
அளிய தாமே, சிறு பசுங் கிளியே -
குழலும், யாழும், அமிழ்தும் குழைத்த நின்
மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும்,
மட நடை மாது! நின் மலர்க் கையின் நீங்காது 60

எதிர்கருத்துச் சொற்கள் - சோ

(1) சோகாப்பு - இன்பம்

(2) சோம்பல் - சுறுசுறுப்பு


(3) சோரம் - நேர்மை


ஒத்தகருத்துச் சொற்கள் - செ

(1)செல்வாக்கு – சாய்கால்
(2)செய்யுள் - பா 
(3)செய்யுள் -கவிதை 
(4)செய்யுள் -யாப்பு 

சீவக சிந்தாமணி-7

சச்சந்தன் கவலையுறுதல்


தூம்பு உடை நெடுங் கை வேழம் துற்றிய வெள்ளிலே போல் 
தேம்புடை அலங்கல் மார்பில் திருமகன் தமியன் ஆக 
ஓம்படை ஒன்றும் செப்பாள் திருமகள் ஒளித்து நீங்க 
ஆம் புடை தெரிந்து வேந்தற்கு அறிவு எனும் அமைச்சன் சொன்னான். 232 


'எந்திர ஊர்தியைச் செய்க' என அறிவு என்னும் அமைச்சன் கூறல்


காதி வேல் மன்னர் தங்கள் கண் என வைக்கப் பட்ட 
நீதி மேல் சேறல் தேற்றாய் நெறி அலா நெறியைச் சேர்ந்து 
கோது இயல் காமம் என்னும் மதுவினில் குளித்த ஞான்றே 
ஓதிய பொறி அற்றாய் ஓர் அரும் பொறி புனைவி என்றான். 233 


சச்சந்தன் தொழில் திறமிக்க ஒருவனை 'விசைப் பொறி ஒன்றைச் செய்க' என அவனும் செய்தல்


அந்தரத்தார் மயனே என ஐயுறும் 
தந்திரத்தால் தம நூல் கரை கண்டவன் 
வெம் திறலான் பெரும் தச்சனைக் கூவி ஓர் 
எந்திர ஊர்தி இயற்றுமின் என்றான். 234 

பல் கிழியும் பயினும் துகில் நூலொடு 
நல் அரக்கும் மெழுகும் நலம் சான்றன 
அல்லனவும் அமைத்து ஆங்கு எழு நாள் இடைச் 
செல்வது ஓர் மா மயில் செய்தனன் அன்றே. 235

பீலி நல் மாமயிலும் பிறிது ஆக்கிய 
கோல நல் மாமயிலும் கொடு சென்றவன் 
ஞாலம் எல்லாம் உடையான் அடி கைதொழுது 
ஆலும் இம் மஞ்ஞை அறிந்து அருள் என்றான். 236 

நல் நெறி நூல் நயந்தான் நன்று நன்று இது 
கொல் நெறியில் பெரியாய் இது கொள்க என 
மின் நெறி பல்கலம் மேதகப் பெய்தது ஓர் 
பொன் அறை தான் கொடுத்தான் புகழ் வெய்யோன். 237 


மயிலாகிய வானவூர்தியை இயக்க சச்சந்தன் கற்றுத்தர விசயை கற்றுக் கொள்ளுதல்


ஆடு இயல் மா மயில் ஊர்தியை அவ்வழி 
மாடமும் காவும் அடுத்து ஓர் சில் நாள் செலப் 
பாடலின் மேல் மேல் பயப்பயத் தான் துரந்து 
ஓட முறுக்கி உணர்த்த உணர்ந்தாள். 238 

பண் தவழ் விரலின் பாவை பொறிவலம் திரிப்பப் பொங்கி 
விண்தவழ் மேகம் போழ்ந்து விசும்பு இடைப் பறக்கும் வெய்ய 
புண் தவழ் வேல் கண் பாவை பொறி இடம் திரிப்பத் தோகை 
கண்டவர் மருள வீழ்ந்து கால் குவித்து இருக்கும் அன்றே. 239


சச்சந்தனைக் கொல்லக் கட்டியக்காரன் எண்ணிக் கூறுதல்


காதி வேல் வல கட்டியங் காரனும் 
நீதியால் நிலம் கொண்டபின் நீதி நூல் 
ஓதினார் தமை வேறு கொண்டு ஓதினான் 
கோது செய் குணக் கோதினுள் கோது அனான். 240 

மன்னவன் பகை ஆயது ஓர் மாதெய்வம் 
என்னை வந்து இடம் கொண்ட அஃது இராப் பகல் 
துன்னி நின்று செகுத்திடு நீ எனும் 
என்னை யான் செய்வ கூறுமின் என்னவே. 241


தருமதத்தன் அறிவுரை கூறுதல்


அருமை மா மணி நாகம் அழுங்க ஓர் 
உருமு வீழ்ந்து என உட்கினரா அவன் 
கருமம் காழ்த்தமை கண்டவர் தம் உளான் 
தரும தத்தன் என்பான் இது சாற்றினான். 242 

தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக் 
குவளையே அளவுள்ள கொழுங் கணாள் 
அவளையே அமிர்தாக அவ் அண்ணலும் 
உவள் அகம் தனது ஆக ஒடுங்கினான். 243 

விண்ணி னோடு அமிர்தம் விலைச் செல்வது 
பெண்ணின் இன்பம் பெரிது எனத் தாழ்ந்து அவன் 
எண்ணம் இன்றி இறங்கி இவ் வையகம் 
தண் அம் தாமரை யாளொடும் தாழ்ந்ததே. 244

தன்னை ஆக்கிய தார்ப் பொலி வேந்தனைப் 
பின்னை வௌவில் பிறழ்ந்திடும் பூ மகள் 
அன்னவன் வழிச் செல்லின் இம் மண்மிசைப் 
பின்னைத் தன் குலம் பேர்க்குநர் இல்லையே. 245 


திலக நீள் முடித் தேவரும் வேந்தரும் 

உலக மாந்தர்கள் ஒப்ப என்று ஓதுப 
குலவு தார் மன்னர்க்கு யான் இது கூறுவன் 
பலவும் மிக்கனர் தேவரின் பார்த்திவர். 246 

அருளுமேல் அரசு ஆக்குமன் காயுமேல் 
வெருளச் சுட்டிடும் வேந்து எனும் மா தெய்வம் 
மருளி மற்று அவை வாழ்த்தினும் வையினும் 
அருளி ஆக்கல் அழித்தல் அங்கு ஆபவோ. 247 

உறங்கும் ஆயினும் மன்னவன் தன் ஒளி 
கறங்கு தெண் திரை வையகம் காக்குமால் 
இறங்கு கண் இமையார் விழித்தே இருந்து 
அறங்கள் வௌவ அதன் புறம் காக்கலார். 248 

யாவர் ஆயினும் நால்வரைப் பின்னிடின் 
தேவர் என்பது தேறும் இவ் வையகம் 
காவல் மன்னவர் காய்வன சிந்தியார் 
நாவினும் உரையார் நவை அஞ்சுவார். 249

தீண்டினார் தமைத் தீச் சுடும் மன்னர் தீ 
ஈண்டு தம் கிளையொடும் எரித்திடும் 
வேண்டில் இன் அமிர்தும் நஞ்சும் ஆதலான் 
மாண்டது அன்று நின் வாய் மொழித் தெய்வமே. 250 

வேலின் மன்னனை விண் அகம் காட்டி இஞ் 
ஞாலம் ஆள்வது நன்று எனக்கு என்றியேல் 
வாலிது அன்று எனக் கூறினன் வாள் ஞமற்கு 
ஓலை வைத்து அன்ன ஒண் திறல் ஆற்றலான். 251 

குழல் சிகை கோதை சூட்டிக் கொண்டவன் இருப்ப மற்று ஓர் 
நிழல் திகழ் வேலினானை நேடிய நெடும் கணாளும் 
பிழைப்பிலான் புறம் தந்தானும் குரவரைப் பேணல் செய்யா 
இழுக்கினார் இவர்கள் கண்டாய் இடும்பை நோய்க்கு இரைகளாவார். 252

நட்பு இடைக் குய்யம் வைத்தான் பிறர் மனை நலத்தைச் சேர்ந்தான் 
கட்டு அழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும் 
அட்டு உயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான் 
குட்ட நோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய். 253 

பிறை அது வளரத் தானும் வளர்ந்து உடன் பெருகிப் பின் நாள் 
குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வதே போல் 
இறைவனாத் தன்னை ஆக்கி அவன் வழி ஒழுகின் என்றும் 
நிறை மதி இருளைப் போழும் நெடும் புகழ் விளைக்கும் என்றான். 254 

கோள் நிலை திரிந்து நாழி குறைபடப் பகல்கண் மிஞ்சி 
நீள் நிலம் மாரி இன்றி விளைவு அஃகிப் பசியும் நீடிப் 
பூண் முலை மகளிர் பொற்பில் கற்பு அழிந்து அறங்கள் மாறி 
ஆணை இவ் உலகு கேடாம் அரசு கோல் கோடின் என்றான். 255


தருமதத்தன் கூறிய அறிவுரைகளைக் கேட்ட கட்டியங்காரன் மைத்துனன் வெகுண்டு கூறுதல்


தார்ப் பொலி தரும தத்தன் தக்கவாறு உரப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கு இட்டு அன்ன கடி கமழ் குவளப் பந்தார் 
போர்த்த தன் அகலம் எல்லாம் பொள் என வியர்த்துப் பொங்கி 
நீர்க் கடல் மகரப் பேழ்வாய் மதனன் மற்று இதனைச் சொன்னான். 256

தோளினால் வலியர் ஆகித் தொக்கவர் தலைகள் பாற 
வாளினால் பேசல் அல்லால் வாயினால் பேசல் தேற்றேன் 
காள மேகங்கள் சொல்லிக் கருனையால் குழைக்கும் கைகள் 
வாள் அமர் நீந்தும் போழ்தின் வழு வழுத்து ஒழியும் என்றான். 257


கட்டியங்காரன் சினந்து கூறுதல்


நுண் முத்தம் ஏற்றி ஆங்கு மெய் எல்லாம் வியர்த்து நொய்தின் 
வண் முத்தம் நிரை கொள் நெற்றி வார் முரி புருவம் ஆக்கிக் 
கண் எரி தவழ வண்கை மணி நகு கடகம் எற்றா 
வெண் நகை வெகுண்டு நக்குக் கட்டியங் காரன் சொன்னான். 258

என் அலால் பிறர்கள் யாரே இன்னவை பொறுக்கும் நீரார் 
உன்னலால் பிறர்கள் யாரே உற்றவற்கு உறாத சூழ்வார் 
மன்னன் போய்த் துறக்கம் ஆண்டு வானவர்க்கு இறைவன் ஆக 
பொன் எலாம் விளைந்து பூமி பொலிய யான் காப்பல் என்றான். 259


தருமதத்தன் வெறுத்துக் கூறுதல்


விளைக பொலிக அஃதே உரைத்திலம் வெகுள வேண்டா 
களைகம் எழுகம் இன்னே காவலன் கூற்றம் கொல்லும் 
வளை கய மடந்தை கொல்லும் தான் செய்த பிழைப்புக் கொல்லும் 
அளவு அறு நிதியம் கொல்லும் அருள் கொல்லும் அமைக என்றான். 260


கட்டியங்காரன் தன்படைகளைக் கொண்டு அரண்மனையை வளைத்தல்


நிலத் தலைத் திருவனாள் தன் நீப்பரும் காதல் கூர 
முலைத் தலைப் போகம் மூழ்கி முகிழ் நிலா முடிகொள் சென்னி 
வெலற்கு அரும் தானை நீத்த வேந்தனை வெறுமை நோக்கிக் 
குலத்தொடும் கோறல் எண்ணிக் கொடியவன் கடிய சூழ்ந்தான். 261 

கோன் தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்கத் தன் கீழ் 
ஏன்ற நன் மாந்தர்க்கு எல்லாம் இரு நிதி முகந்து நல்கி 
ஊன்றிய நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து 
தோன்றினான் குன்றத்து உச்சிச் சுடர்ப் பழி விளக்கு இட்ட அன்றே. 262

பருமித்த களிறும் மாவும் பரந்தியல் தேரும் பண்ணித் 
திருமிக்க சேனை மூதூர்த் தெருவுதொறும் எங்கும் ஈண்டி 
எரி மொய்த்த வாளும் வில்லும் இலங்கு இலை வேலும் ஏந்திச் 
செரு மிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது அன்றே. 263


கட்டியங்காரன் சூழ்ச்சியை அறிந்த சச்சந்தன் வீராவேசம் கொள்ளுதல்


நீள் நில மன்ன போற்றி! நெடு முடிக் குருசில் போற்றி! 
பூண் அணி மார்ப போற்றி! புண்ணிய வேந்தே போற்றி! 
கோள் நிலைக் குறித்து வந்தான் கட்டியங் காரன் என்று 
சேண் நிலத்து இறைஞ்சிச் சொன்னான் செய்ய கோல் வெய்ய சொல்லான். 264

திண் நிலைக் கதவம் எல்லாம் திருந்து தாழ் உறுக்க வல்லே 
பண்ணுக பசும் பொன் தேரும் படு மதக் களிறும் மாவும் 
கண் அகன் புரிசை காக்கும் காவலர் அடைக என்றான் 
விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான். 265

புலிப் பொறிப் போர்வை நீக்கிப் பொன் அணிந்து இலங்குகின்ற 
ஒலிக் கழல் மன்னர் உட்கும் உருச் சுடர் வாளை நோக்கிக் 
கலிக்கு இறை ஆய நெஞ்சினி கட்டியங் காரன் நம்மேல் 
வலித்தது காண்டும் என்று வாள் எயிறு இலங்க நக்கான். 266


விசயை துன்புறுதல்


நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா 
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்னக் 
கொங்கு அலர் கோதை மாழ்கிக் குழை முகம் புடைத்து வீழ்ந்து 
செங் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள். 267

மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான் 
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்திப் 
புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப் பொம்மல் வெம் முலையினாட்குச் 
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே. 268

சாதலும் பிறத்தல் தானும் தம் வினைப் பயத்தின் ஆகும் 
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய் 
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே 
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளைத் தோளி என்றான். 269 

தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா 
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச் 
செல்லும் அக் கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற 
இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா. 270

வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல் 
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி 
விண்டு கண் அருவி சோர விம் உயிர்த்து இனையை ஆதல் 
ஒண் தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான். 271 

உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார் 
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம் 
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான் 
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளஞ் சிங்கம் அன்னான். 272 


விசயையை சச்சந்தன் ம்அயில் பொறியில் அமர்த்தல்


என்பு நெக்கு உருகி உள்ளம் ஒழுகுபு சோர யாத்த 
அன்பு மிக்கு அவலித்து ஆற்றா ஆர் உயிர்க் கிழத்தி தன்னை 
இன்பம் மிக்கு உடைய கீர்த்தி இறைவனது ஆணை கூறித் 
துன்பம் இல் பறவை ஊர்தி சேர்த்தினன் துணைவி சேர்ந்தாள். 273 


சச்சந்தன் கோபங்கொள்ளல்


நீர் உடைக் குவளையின் நெடுங் கண் நின்ற வெம் பனி 
வார் உடை முலை முகம் நனைப்ப மாதர் சென்ற பின் 
சீர் உடைக் குருசிலும் சிவந்து அழன்று ஓர் தீத் திரள் 
பார் உடைப் பனிக்கடல் சுடுவது ஒத்து உலம்பினான். 274 


சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்


முழை முகத்து இடி அரி வளைத்த அன்ன மள்ளரில் 
குழை முகப் புரிசையுள் குருசில் தான் அகப்பட 
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல் இடை 
மழை முகத்த குஞ்சரம் வாரிஉள் வளைத்தவே. 275 


அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன் 

பயில் கதிர்ப் பருமணிப் பன் மயிர்ச் செய் கேடகம் 
வெயில் எனத் திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர் 
கயில் அணிக் கதிர் நகைக் கடவுள் ஒத்து உலம்பினான். 276

மாரியின் கடுங் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின் 
வீரியக் குரிசிலும் விலக்கி வெம் கணை மழை 
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன்படைப் 
பேர் இயல் பெருங் களிறு பின்னி வந்து அடைந்தவே. 277

சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல் 
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின் 
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என 
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே. 278 

வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை 
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து 
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத் 
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே. 279 

உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது 
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி 
இப்படி இறை மகன் இரும் களிறு நூற 
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி. 280 

நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு 
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக் 
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான். 281 

நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி 
வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி 
மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக் 
கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான். 282 

மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும் 
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச் 
சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும் 
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான். 283 

புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம் 
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல் 
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம 
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே. 284 

ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி 
நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர் 
சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம் 
காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே. 285 

குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து 
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கிக் 
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து 
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான். 286 

நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன் 
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும் 
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள் 
குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான். 287

ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும் 
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப் 
பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப் 
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான். 288 


சச்சந்தன் வீழ்தல்


போழ்ந்து கதிர் நேமியொடு வேல் பொருது அழுந்தத் 
தாழ்ந்து தறுகண் இணைகள் தீ அழல விழியா 
வீழ்ந்து நில மா மகள் தன் வெம் முலை ஞெமுங்க 
ஆழ்ந்து படு வெம் சுடரின் ஆண் தகை அவிந்தான். 289 

தோய்ந்த விசும்பு என்னும் தொல் நாட்டு அகம் தொழுது 
     புலம்பு எய்தி மைந்தர் மாழ்க 
ஏந்து முலையார் இனைந்து இரங்கக் கொடுங் கோல் 
     இருள் பரப்பவே ஏ பாவம் 
ஆய்ந்த குருகுலமாம் ஆழ் கடலின் உள் முளைத்த 
     அறச் செங்கோலாய் கதிரினை 
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி மா 
     நாகமுடன் விழுங்கிற்று அன்றே. 290 

பால் அருவித் திங்கள் தோய் முத்த மாலை பழிப்பின் 
     நெடுங் குடைக் கீழ்ப் பாய் பரிமான் தேர்க் 
கோல் அருவி வெம் சிலையான் கூர் வாளொடு மணிக் 
     கேடகமும் மறமும் ஆற்றி 
வால் அருவி வாமன் அடித் தாமரை மலர் சூடி 
     மந்திர மென் சாந்து பூசி 
வேல் அருவிக் கண்ணினார் மெய்க்காப்பு ஓம்ப வேந்தன் போய் 
     விண்ணோர்க்கு விருந்து ஆயினானே. 291 


சச்சந்தன் உடலை ஈமப்படுகையில் கிடத்தல்


செந் தீக் கருந் துளைய தீம் குழல் யாழ் 
     தேம் தேம் என்னும் மணி முழவமும் 
தந்து ஆங்கு இளையார் மெல் விரல்கள் தீண்டத் 
     தாம் தாம் என்று இரங்கும் தண்ணுமைகளும் 
அம தீம் கிளவியார் ஐஞ்ஞூற்றுவர் அவை துறை 
     போய் ஆடல் அரம்பை அன்னார் 
எந்தாய் வெறு நிலத்துச் சேர்தியோ என்று இனைந்து 
     இரங்கிப் பள்ளி படுத்தார்களே. 292 


சச்சந்தனுக்கு நேர்ந்த கதியை 
நினைத்து அனைவரும் வருந்தி புலம்புதல்


மடை அவிழ்ந்த வெள்ளி இலை வேல் அம்பு பாய மணிச் 
     செப்பகம் கடைகின்றவே போல் 
தொடை அவிழ்ந்த மாலையும் முத்தும் தோய்ந்த துணை முலையின் 
     உள் அரங்கி மூழ்கக் காமன் 
படை அவிழ்ந்த கண் பனிநீர் பாய விம்மாப் 
     பருமுத்த நா மழலைக் கிண் கிணியினார் 
புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத் தோயப் பொழி மழையுள் 
     மின்னுப் போல் புலம்பினாரே. 293 

அரிமான் ஓர் மெல் அணை மேல் மஞ்ஞை சூழக் கிடந்து ஆங்கு 
     வேந்தன் கிடந்தானைத் தான் 
கரிமாலை நெஞ்சினான் கண்டான் கண்டே கைதொழுதான் 
     கண்ணீர் கலுழ்ந்து உகுத்த பின் 
எரிமாலை ஈமத்து இழுதார் குடம் ஏனை நூறும் 
     ஏற்பச் சொரிந்து அலறி எம் 
பெருமானே எம்மை ஒளித்தியோ என்னாப் 
     பெரிய கண்ணீர் சொரிந்து அலறுவார். 294 

கையார் வளைகள் புடைத்து இரங்குவார் கதிர் முலைமேல் 
     ஆரம் பரிந்து அலறுவார் 
நெய்யார் கருங் குழல் மேல் மாலை சிந்தி நிலத்து இடுவார் 
     நின்று திருவில் வீசும் 
மையார் கடிப் பிணையும் வார் குழையும் களைந்திடுவார் 
     கையால் வயிறு அதுக்குவார் 
ஐயாவே என்று அழுவார் வேந்தன் செய்த கொடுமை கொடிது 
     என்பார் கோல் வளையினார். 295 

பானாள் பிறை மருப்பின் பைங்கண் வேழம் பகுவாய் 
     ஓர் பை அணல் மாநாகம் வீழ்ப்பத் 
தேன் ஆர் மலர்ச் சோலைச் செவ்வரையின் மேல் சிறு 
     பிடிகள் போலத் துயர் உழந்து தாம் 
ஆனாது அடியேம் வந்து அவ் உலகினில் நின் அடி 
     அடைதும் என்று அழுது போயினார் எம் 
கோனார் பறிப்ப நலம் பூத்த இக் கொடி 
     இனிப் பூவா பிறர் பறிப்பவே. 296 


அவலங்களுக்கிடையே கட்டியங்காரன் 
மன்னன் ஆதல்


செங் கண் குறு நரி ஓர் சிங்க ஏற்றை செகுத்து ஆங்கு 
     அதன் இடத்தைச் சேர்ந்தால் ஒப்ப 
வெம் கண் களி யானை வேல் வேந்தனை விறல் 
     எரியின் வாய்ப் பெய்து அவன் பெயர்ந்து போய்ப் 
பைங் கண் களிற்றின் மேல் தன் பெயரினால் பறை 
     அறைந்தான் வேல் மாரி பெய்தால் ஒப்ப 
எம் கணவரும் இனைந்து இரங்கினார் இருள் மனத்தான் 
     பூமகளை எய்தினானே. 297


சீவகன் பிறப்பு


களிமுகச் சுரும்பு உண் கோதை கயில் எருத்து அசைந்து சோர 
வளிமுகச் சுடரின் நில்லா மனத்தொடு மயங்கி இப்பால் 
சுளிமுகக் களிறு அனான்தன் சொல் நய நெறியில் போய 
கிளி முகக் கிளவிக்கு உற்றது இற்று எனக் கிளக்கல் உற்றேன். 298

எஃகு என விளங்கும் வாள் கண் எறி கடல் அமிர்தம் அன்னாள் 
அஃகிய மதுகை தன்னால் ஆய் மயில் ஊரும் ஆங்கண் 
வெஃகிய புகழினான் தன் வென்றி வெம் முரசம் ஆர்ப்ப 
எஃகு எறி பிணையின் மாழ்கி இறுகி மெய்ம் மறந்து சோர்ந்தாள். 299 

மோடு உடை நகரின் நீங்கி முது மரம் துவன்றி உள்ளம் 
பீடு உடையவரும் உட்கப் பிணம்பல பிறங்கி எங்கும் 
காடு உடை அளவை எல்லாம் கழுகு இருந்து உறங்கும் நீழல் 
பாடு உடை மயில் அம் தோகை பைபய வீழ்ந்தது அன்றே. 300

மஞ்சு சூழ்வதனை ஒத்துப் பிணப்புகை மலிந்து பேயும்
அஞ்சும் அம் மயானம் தன்னுள் அகில் வயிறு ஆர்ந்த கோதை
பஞ்சிமேல் வீழ்வதே போல் பல் பொறிக் குடுமி நெற்றிக்
குஞ்சி மா மஞ்ஞை வீழ்ந்து கால் குவித்து இருந்தது அன்றே. 301

வார் தரு தடம் கண் நீர் தன் வன முலை நனைப்ப ஏல் பெற்று
ஊர் கடல் அனைய காட்டுள் அச்சம் ஒன்றானும் உள்ளாள்
ஏர் தரு மயில் அம் சாயல் இறைவனுக்கு இரங்கி ஏங்கிச்
சோர் துகில் திருத்தல் தேற்றாள் துணை பிரி மகன்றில் ஒத்தாள். 302

உண்டு என உரையில் கேட்பார் உயிர் உறு பாவம் எல்லாம்
கண்டு இனித் தெளிக என்று காட்டுவாள் போல ஆகி
விண்தொட நிவந்த கோயில் விண்ணவர் மகளின் சென்றாள்
வெண்தலை பயின்ற காட்டுள் விளங்கு இழை தமியள் ஆனாள். 303

இருள் கெட இகலி எங்கும் மணிவிளக்கு எரிய ஏந்தி
அருள் உடை மனத்த வாகி அணங்கு எலாம் வணங்கி நிற்பப்
பொரு கடல் பருதி போலப் பொன் அனான் பிறந்த போழ்தே
மருள் உடை மாதர் உற்ற மம்மர் நோய் மறைந்தது அன்றே. 304

பூங்கழல் குருசில் தந்த புதல்வனைப் புகன்று நோக்கித்
தேம் கமழ் ஓதி திங்கள் வெண் கதிர் பொழிவதே போல்
வீங்கு இள முலைகள் விம்மித் திறந்து பால் பிலிற்ற ஆற்றாள்
வாங்குபு திலகம் சேர்த்தித் திலகனைத் திருந்த வைத்தாள். 305 
#160;