முந்தையோர் கண்ட நெறி
இன்னிசை வெண்பா
வைகறை யாமம் துயில் எழுந்து, தான் செய்யும்
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை. 4
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து, வாய்வதின்
தந்தையும் தாயும் தொழுது எழுக!' என்பதே -
முந்தையோர் கண்ட முறை. 4
வைகறை - விடியற்காலம்
யாமம் - பின்சாமம்
யாமம் - பின்சாமம்
விடியற்காலையில் விழித்தெழுந்து, மறுநாள் செய்ய வேண்டிய அறச்செயல்களையும், வருவாய்க்கான செயல்களையும், சிந்தித்து, தாயையும் தந்தையையும் தொழுது ஒரு செயலைச் செய்ய அறிவுடையோர் சொல்லிய முறையாகும்.
எச்சிலுடன் தீண்டத் தகாதவை
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
'எச்சிலார், தீண்டார் - பசு, பார்ப்பார், தீ, தேவர்,
உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். 5
உச்சந் தலையோடு, இவை' என்ப; யாவரும்
திட்பத்தால் தீண்டாப் பொருள். 5
எச்சிலார் - எச்சிலையுடையாராய்
திட்பத்தால் - யாப்புற
திட்பத்தால் - யாப்புற
பசு, பார்ப்பார், தீ, தேவர், உச்சந்தலை ஆகியவற்றை எச்சிலையுடையார் எவரும் தீண்டார்.
எச்சிலுடன் காணக் கூடாதவை
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
எச்சிலார், நோக்கார் - புலை, திங்கள், நாய், நாயிறு,
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து. 6
அத்தக வீழ்மீனோடு, இவ் ஐந்தும், தெற்றென,
நன்கு அறிவார், நாளும், விரைந்து. 6
திங்கள் - மதி
ஞாயிறு - சூரியன்
ஞாயிறு - சூரியன்
புலையும், மதியும், நாயும், சூரியனும், மீனும் ஆகியவற்றை எச்சிலையுடையார் கண்ணால் காண மாட்டார்.
எச்சில்கள்
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
எச்சில் பலவும் உள; மற்று அவற்றுள்,
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. 7
இயக்கம் இரண்டும், இணைவிழைச்சு, வாயில்-
விழைச்சு, இவை எச்சில், இந் நான்கு. 7
விழைச்சு - எச்சில்
மல மூத்திரங்கள் இயற்றிய இயக்கம் இரண்டொடு, இணை எச்சில், வாயினால் வழங்கிய எச்சில் ஆகிய நான்கினையும் பாதுகாக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.