வருந்தியும் அறம் செய்க
திருத்தப்படுவது அறக்கருமம் தம்மை
வருத்தியு மாண்புடையார் செய்க - பெருக்க
வரவும் பெருங்கூற்றம் வன்கண் ஏமன்கீழ்த்
தரவறுத்து மீளாமை கண்டு. 23
அறம் விரைந்து செய்க
முன்னே ஒருவன் முடித்தான்தன் துப்பெல்லாம்
என்னே ஒருவன் இகழ்ந்திருத்தல் - முன்னே
முடித்த படியறிந்து முன்முன் அறத்தைப்
பிடிக்க பெரிதாய் விரைந்து. 24
துஞ்சாத் துயரம் தருவது
குறைக்கருமம் விட்டுரைப் பிற்கொள்ள உலவா
அறக்கருமம் ஆராய்ந்து செய்க - பிறப்பிடைக்கோர்
நெஞ்சே மாப்பில்லாதான் வாழ்க்கை நிரயத்துத்
துஞ்சாத் துயரந் தரும். 25
அறம் செய்யாது உறங்குவது ஏன்?
அறம்புரிந்தாற்றுவ செய்யாது நாளும்
உறங்குதல் காரணம் என்ன? - மறந்தொருவன்
நாட்டு விடக்கூர்தி அச்சிறுங் காலத்துக்
கூட்டுந் திறமின்மையால். 26
அறனழித்து வதொன்றில்லை!
பாவம் பெருகப் பழி பெருகத் தன்னோம்பிப்
ஆவதொன்றில்லை அறனழித்துப் - பாவம்
பொறாஅ முறைசெய் பொருவில் ஞமன்கீழ்
அறவுண்ணும் ஆற்றவு நின்று. 27
அறம் செய்ய மறவேல்
முற்செய் வினையின் பயன்துய்த்து உலந்தால்
பிற்செய் வினையின் பின் போகலால் - நற்செய்கை
ஆற்றும் துணையும் அறமறவேல் நன்னெஞ்சே
கூற்றங் குழல் பிரியாமுன். 28
இயல்வது கரவேல்
திரையவித்து நீராடலாகா உரைப்பார்
உரையவித்தொன்றும் சொல் இல்லை - அரைசராய்ச்
செய்தும் அறமெனினும் ஆகாதுளவரையால்
செய்வதற்கே ஆகுந்திரு. 29
மூடனுக்கு நீதி கூறாதே
கல்லா ஒருவனைக் காரணங் காட்டினும்
இல்லை மற்றொன்றும் அறன் உணர்தல் - நல்லாய்
நறுசெய் நிறைய முகப்பினும் மூழை
பெறுமோ சுவையுணருமாறு. 30
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.