ஞாயிறு, 30 டிசம்பர், 2012
திருக்குறள் அதிகாரம் - 15-10
பிறனில் விழையாமை
(10)
அறள்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
கருத்து
ஒருவன் செய்யவேண்டிய அறங்களைச்
செய்யாது அறமில்லாதவற்றைச்
செய்தாலும் ,பிறன் மனையாளைச்
விரும்பாமல் வாழ்தல் நல்லது.
(10)
அறள்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.
கருத்து
ஒருவன் செய்யவேண்டிய அறங்களைச்
செய்யாது அறமில்லாதவற்றைச்
செய்தாலும் ,பிறன் மனையாளைச்
விரும்பாமல் வாழ்தல் நல்லது.
லேபிள்கள்:
திருக்குறள் -பிறனில்விழையாமை
சனி, 29 டிசம்பர், 2012
திருக்குறள் அதிகாரம் - 15-9
பிறனில்விழையாமை
(9)
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார் .
கருத்து
கடல் சூழ் உலகில் நன்மைக்கு உரியவர்
யார் என்றால்,பிறன் மனையாளின்
தோளைப் பொருந்தாதவரேயாவர்
(9)
நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறற்குரியாள் தோள்தோயா தார் .
கருத்து
கடல் சூழ் உலகில் நன்மைக்கு உரியவர்
யார் என்றால்,பிறன் மனையாளின்
தோளைப் பொருந்தாதவரேயாவர்
லேபிள்கள்:
திருக்குறள் -பிறனில்விழையாமை
வெள்ளி, 28 டிசம்பர், 2012
திருக்குறள் அதிகாரம் - 15-8
பிறனில் விழையாமை
(8)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
கருத்து
பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத
பேராண்மை, சான்றோருக்கு அறம் மட்டுமன்று,
நிறைந்த ஒழுக்கமுமாகும் .
(8)
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு.
கருத்து
பிறன் மனைவியை விரும்பிப் பார்க்காத
பேராண்மை, சான்றோருக்கு அறம் மட்டுமன்று,
நிறைந்த ஒழுக்கமுமாகும் .
லேபிள்கள்:
திருக்குறள் -பிறனில்விழையாமை
புதன், 26 டிசம்பர், 2012
திருக்குறள் அதிகாரம் - 15-7
பிறனில் விழையாமை
(7)
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
கருத்து
அறத்தின் இயல்போடு கூடி இல்லறம்
நடத்துபவன் என்பான்,பிறனுக்கு
உரிமையானவளின் பெண் இன்பத்தை
விரும்பாதவன்.
(7)
அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.
கருத்து
அறத்தின் இயல்போடு கூடி இல்லறம்
நடத்துபவன் என்பான்,பிறனுக்கு
உரிமையானவளின் பெண் இன்பத்தை
விரும்பாதவன்.
லேபிள்கள்:
திருக்குறள் -பிறனில்விழையாமை
செவ்வாய், 25 டிசம்பர், 2012
திருக்குறள் அதிகாரம் - 15-6
பிறனில் விழையாமை
(6)
பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.
கருத்து
பிறன் மனைவியை விரும்பி அவன்
வீட்டினுள் செல்பவனிடத்தில் பகை,
பாவம்,அச்சம்,நிந்தை ஆகிய நான்கும்
நீங்காமல் இருக்கும்.
லேபிள்கள்:
திருக்குறள் -பிறனில்விழையாமை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)