(1)லோபி - கருமி,
- (2)லோபி - இவறி
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவான் முதற்றே யுலகு
மேலவர் மெய்ப்பொருள் விரிக்கும் வீறுசால் நூலினாற் பெரியவர் நுழைந்த சுற்றமா ஆலுநீ ரன்னமோ டரச வன்னமே போலநின் றுலகினைப் பொதுமை நீக்கினான் | 51 |
கொதிநுனைப் பகழியான் குறிப்பி னல்லதொன் றிதுநமக் கிசைக்கென வெண்ணு மெண்ணிலா நொதுமலர் வெருவுறா நுவற்சி யாளர்பின் அதுவவன் பகுதிக ளமைதி வண்ணமே. | 52 |
மற்றவன் றேவியர் மகர வார்குழைக் கொற்றவர் குலங்களை விளக்கத் தோன்றினார் இற்றதிம் மருங்குலென் றிரங்க வீங்கிய முற்றுறா முலையினார் கலையின் முற்றியார் | 53 |
பஞ்சனுங் கடியினார் பரந்த வல்குலார் செஞ்சுணங் கிளமுலை மருங்கு சிந்தினார் வஞ்சியங் குழைத்தலை மதர்வைக் கொம்புதம் அஞ்சுட ரிணர்க்கொசிந் தனைய வைம்மையார் | 53 |
காமத்தொத் தலர்ந்தவர் கதிர்த்த கற்பினார் தாமத்தொத் தலர்ந்துதாழ்ந் திருண்ட கூந்தலார் தூமத்துச் சுடரொளி துளும்பு தோளினார் வாமத்தின் மயங்கிமை மதர்த்த வாட்கணார். | 55 |
ஆயிர ரவரவர்க் கதிகத் தேவியர் மாயிரு விசும்பினி னிழிந்த மாண்பினார் சேயிருந் தாமரைத் தெய்வ மன்னர் என் றேயுரை யிலாதவ ரிருவ ராயினார் | 56 |
நீங்கரும் பமிழ்த மூட்டித் தேனளாய்ப் பிழிந்த போலும் ஓங்கிருங் கடலந் தானை வேந்தணங் குறுக்கு மின்சொல் வீங்கிருங் குவவுக் கொங்கை மிகாபதி மிக்க தேவி தாங்கருங் கற்பின் றங்கை சசிஎன்பாள் சசியோ டொப்பாள் | 57 |
பூங்குழை மகளிர்க் கெல்லாம் பொன்மலர் மணிக்கொம் பன்ன தேங்குழல் மங்கை மார்கள் திலகமாய்த் திகழ நின்றார் மாங்கொழுந் தசோக மென்றாங் கிரண்டுமே வயந்த காலத் தாங்கெழுந் தவற்றை யெல்லா மணிபெற வலரு மன்றே. | 57 |
பெருமக னுருகும் பெண்மை மாண்பினும் பேணி நாளும் மருவினும் புதிய போலும் மழலையங் கிளவி யாலும் திருமகள் புலமை யாக்குஞ் செல்விஎன் றிவர்கள் போல இருவரு மிறைவ னுள்ளத் தொருவரா யினிய ரானார் | 59 |
மன்னவ னாவி யாவார் மகளிரம் மகளிர் தங்கள் இன்னுயி ராகி நின்றா னிறைமக னிவர்க டங்கட் கென்னைகொ லொருவர் தம்மே லொருவர்க்கிங் குள்ள மோட முன்னவன் புணர்த்த வாறம் மொய்ம்மலர்க் கணையி னானே | 60 |
சொற்பகர்ந் துலகங் காக்குந் தொழில்புறத் தொழிய வாங்கி மற்பக ரகலத் தானை மனத்திடைப் பிணித்து வைத்தார் பொற்பகங் கமழப் பூத்த தேந்துணர் பொறுக்க லாற்றாக் கற்பகக் கொழுந்துங் காம வல்லியங் கொடியு மொப்பார். | 61 |
மங்கைய ரிருவ ராகி மன்னவ னொருவ னாகி அங்கவ ரமர்ந்த தெல்லா மமர்ந்தருள் பெருகி நின்றான் செங்கயல் மதர்த்த வாட்கட் டெய்வமா மகளிர் தோறும் தங்கிய வுருவந் தாங்குஞ் சக்கரன் றகைமை யானான் | 62 |
முற்றுநீர் வளாக மெல்லா முழுதுட னிழற்று மூரி
ஒற்றைவெண் குடையி னீழ லுலகுகண் படுப்ப வோம்பிக் கொற்றவ னெடுங்க ணார்தங் குவிமுலைத் தடத்து மூழ்கி மற்றவற் கரசச் செல்வ மின்னண மமர்ந்த தன்றே. | 63 |
ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண் டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார் வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல் ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார் | 64 |
பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க் கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத் தண்ணிலா வுலகெலாந் தவழந்து வான்கொள வெண்ணிலா சுடரொளி விசயன் றோன்றினான் | 65 |
ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச் சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான் நீரணங் கொளிவளை நிரந்து விம்மின ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார் | 66 |
திசையெலாத் தெளிந்தன தேவர் பொன்னகர் இசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர் நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப் பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே | 67 |
செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்று எய்தினார் குமரராம் பிராய மெய்தலும் மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார் ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே | 68 |
காமரு வலம்புரி கமழு மேனியன் தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன் தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன் பூமரு பொலங்குழை புரளுங் காதினன் | 69 |
வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன் தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன் கோடுயர் குன்றெனக் குலவு தோளினன் பீடுடை நடையினன் பெரிய நம்பியே | 70 |
பூவயம் புதுமலர் புரையு மேனியன் துவிரி தாமரை தொலைத்த கண்ணினன் தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன் மாவிரி திருமறு வணிந்த மார்பினன் | 71 |
சங்கியல் வலம்புரி திகிரி யென்றிவை தங்கிய வங்கைய னடித்தண் போதினன் மங்கல மழகளி றனைய செல்கையன் இங்குமுன் மொழிந்தவற் கிளய நம்பியே | 72 |
திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம் யுரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய் எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார் | 73 |
உவர் விளை கடற்கொடிப் பவள மோட்டிய துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர் அவர்கட மருள்கொலோ வனங்க னாய்மலர் கவர்கணை கடைக்கணித் துருவு காட்டினார். | 74 |
கடலொளி மணிவணன் கனவில் வந்தெம துடலகம் வெருவிதா யுள்ளம் வவ்வினான் விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென மடவர லவர்குழா மயக்க முற்றதே |
101 | என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே. |
102 | மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன் ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள் தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண் |
103 | மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத் தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன் றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண் என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்.. |
104 | நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற் குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன் நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள். |
105 | பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம் நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள் கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே |
106 | என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம ¢சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம் நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ |
107 | காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல் காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன் ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக் நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள். |
108 | தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான் ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும் பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள். |
109 | ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்¢1 கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்¢ . |
110 | தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள் முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே.. |
111 | அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன் உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின் விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத் துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே. |
112 | துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி¢ மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக் கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண் செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான். |
113 | கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால் இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்¢ புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே. துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே |
114 | இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல் வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்¢ தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே ¢ மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான். |
115 | தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ¢ விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் [றாள். வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்¢ |
116 | பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங் கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர் சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ. |
117 | என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக் கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும் சென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே |
118 | மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர் பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன் டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண் றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான். |
120 | எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும் மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத் திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான். |
121 | உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின் திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக் கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான் |
122 | மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள் புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும் பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும் கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான். |
124 | மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை [யின்பச மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள். |
125 | நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும் ¤புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த் மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே. |
126 | புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான். |
127 | மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ¢ பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று. |
128 | விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான் |
129 | கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம் |
130 | ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின் மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற் கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு |
131 | மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள். |
132 | ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந் தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில் தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான். |
133 | என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின் என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய் மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான். |
134 | யானுயிர் வாழ்த லெண்ணி யௌ¤யவர் தம்மைக் கொல் வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின் ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே. |
135 | அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோ£¢கள் கொன்றுயி£¢ கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லா¢ இன்றுயி£¢ கொன்ற பாவத் திடா¢பல விளையு மேலால் நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம். |
136 | என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென் சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் (றே கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள். |
137 | மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக் கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற் றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால் வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான். |
138 | உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான் அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான். |
139 | மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய [செய்தே தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ் ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான். |
140 | மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே. |
141 | என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான். |
142 | ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் [ன். ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா. |
143 | இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித் தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான் அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான் எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள. |
144 | அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும் அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால் அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள். |
145 | ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும் வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான் தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே. |
146 | நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள் ¢சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள். |
147 | நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார் அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்¢ புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித் துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே. |
148 | எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின் மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள் பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார். |
149 | தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண் காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ் சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார் ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம். |
150 | அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கௌ¤யனல்லன் மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான் இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார். |
151 | இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும் நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக் கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள் மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள். |
152 | இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண் வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்¢ புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள். |
153 | வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச் சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான் ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான். |
154 | இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின் இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம இனையது தௌ¤வி லாதா ரிருநில வரசு செய்கை வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். |
78 | இயங்கு வனவு மிருபொறி யையறி வெல்லையவாய் மயங்கியிம் மத்திம நல்லுல கத்தின மற்றிவற்று ணயம்படு நாவின் மூக்கில நந்து முரண்முதலா வயங்கியங் கோடிய வாயிரண்டாய அறிவினவே. |
79 | உண்ணி முகுட்டை எறும்பெறி தேண்முத லாவுடைய வெண்ணில் பல்கோடிய வாயவ் விரண்டொடு மூக்குடைய கண்ணிய மூவறி வாமவை பெற்றாற் கருணமிலா நண்ணிய வண்டொடு தேனீ யனையவு நாலறிவே. |
80 | இறப்பப்பல் காலின வெட்டி னிரண்டிரண் டேயிழிந்த பறப்ப நடப்ப தவழ்வன வூர்வன பற்பலவாச் சிறப்புடை யிந்திய மைந்தென வந்த செவியுடைய மறப்பில் கடலொடு தீவினு மல்கிய பல்விலங்கே. |
81 | வெப்பமுந் தட்பமு மிக்கு விரவிய யோனியவாய்ச் செப்புவ செப்பில் செய்கைக ளாற்றம செய்வினையைத் துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்து முன்றோன்றுவன வொப்பவு மொப்பிலுடம்புடம் பேகொண் டுழல்வனவும். |
82 | நல்லவர் தீயவர் திப்பிய ரொப்பில் குமானுயரோ டல்லவ ருள்ளுறுத் தாடவ ரைவரு ளாதியினார் சொல்லுக தன்மையென் பாயெனிற்சொல்லுவன் பல்வகையாற் புல்லிய போகப் பெருநிலந் தன்னைப் பொருந்தினரே. |
83 | தீமா னுயர்திறந் தேற்றிடிற் றீவின் சிறுநிலத்தார் கோமான் முதலார் குணங்களிற் குன்றிய குற்றத்தராய்த் தாமாம் பெரிய தவந்தலை நிற்பினுந் தன்மைபெறா ராமான் மடப்பிணை யன்னமென் னோக்கி யவரதிறமே. |
84 | திப்பிய ரென்னப் படுபவர் தீர்த்தந் திறப்பவரு மப்பிய புண்ணியத் தாழிய ராழிய ரையவரும் வெப்பிய வான் செலவ் விஞ்சையரெஞ்சலில் வெள்ளியரும் பப்பிய ரேயவர் பான்மை வினவினும் பைந்தொடியே. |
85 | கோலமி னோன்றற் குமானுயர் தம்மையுங் கூறுவன்கேள் வாலமுங் கோடும் வளைபல்லும் பெற்ற வடிவினராய்ச் சீலமுங் காட்சியுந் தீண்டலு ரந்தரத் தீவிலுள்ளார் நீலமும் வேலுங் கயலு நிகர்த்த நெடுங்கண்ணினாய். |
86 | மானுய ரென்னப் படுபவர் தாமா விதையமென்னுங் கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த் தானுய ரின்பந் தவத்தாற் றலைப்படுந் தன்மையினார் வானுயர் தோன்றல் வளர்பிறை யேசிய வாணுதலாய். |
87 | தூமாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பருப்பால் வேமானியரென வைவரித் தேவர் விரித்துரைப்பிற் றீமாண்குமரரோ டீரைவர் முன்னவ ரன்னவர்பின் பூமாண் புனைகுழ லாய்க்கினிச்சொல்லற் பொல்லா துகொல்லாம். |
60 | நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல் மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார் அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால் நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான் |
61 | இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் [கொல் நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தௌ¤வு சென்றாம். |
62 | முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம் மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான். |
63 | கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற் பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும் பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார். |
64 | மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில் என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான். |
65 | அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால் மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல் அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான். |
66 | அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி மன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி என்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான். |
67 | மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப் பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல் அன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான் |
68 | எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார் அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும் மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ் செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே. |
69 | மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும் புலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும் கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும். |
70 | ‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும் ஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா வின்பமதா மென்னா திழித் துவர்மின்‘ |
71 | பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட் சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை |
72 | அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப் பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட திறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான் உறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார். |
73 | வளவயல் வாரியின் மலிந்த பல்பதி அளவறு சனபத மவந்தி யாமதின் விளைபய னமரரும் விரும்பு நீர்மைய துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே. |
74 | கந்தடு களிமத யானை மன்னவன் இந்திர னெனுந்திற லசோக னென்றுளன் சந்திர மதியெனு மடந்தை தன்னுடன் அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள் |
75 | இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே சந்திர மதியொரு தனயற் றந்தனள் எந்துயர் களைபவ னெசோத ரன்னென நந்திய புகழவ னாம மோதினான். |
76 | இளங்களி றுழுவையி னேத மின்றியே வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய் விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால் உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான். |
77 | இளையவ ளெழினல மேந்து கொங்கையின் விளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள கிளையவ ருவகையிற் கெழும வீன்றனள் வளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே. |
78 | மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான் ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன். |
79 | வண்டளிர் புரைதிரு மேனி மாதரார கண்டக லுறவரு கழிய மூப்பிது உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன் வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன். |
80 | இளமையி னியல்பிது வாய வென்னினிவ் வளமையி லிளமையை மனத்து வைப்பதென் கிளைமையு மனையதே கெழுமு நம்முளத தளைமையை விடுவதே தகுவ தாமினி. |
81 | முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம் முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே. |
82 | இனையன நினைவுறீஇ யசோதர னெனுந் தனையனை நிலமகட் டலைவ னாகெனக கனை மணி வனைமுடி கவித்துக் காவலன புனைவளை மதிமதி புலம்பப் போயினான். |
83 | குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந் தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய் வரையுடை வனமது மருவி னானரோ. |
84 | எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக் கொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன் அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த குருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான். |
85 | திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான். |
86 | அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன் புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில் தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான் |
87 | தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால் பாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல் ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான். |
88 | மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான். |
89 | சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக் கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப நலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல் அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள். |
90 | ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித் தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளா£.¢ |
91 | மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற் படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே. |
92 | இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க் மன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன் |
93 | ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச் சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத் தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே. |
94 | பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ் அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம் விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல் மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள். பெண்மையின் புன்மை |
95 | மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும் பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே |
96 | துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி யின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை துன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன் றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள். |
97 | தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங் கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித் ¢துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள். |
98 | அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல் கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும் நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட ¢பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள். |
99 | என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும் நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல் சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள். |
100 | மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற் கேளல னாயி னாமுங் கேளல மாது மாவி நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை வாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள். |