78 | இயங்கு வனவு மிருபொறி யையறி வெல்லையவாய் மயங்கியிம் மத்திம நல்லுல கத்தின மற்றிவற்று ணயம்படு நாவின் மூக்கில நந்து முரண்முதலா வயங்கியங் கோடிய வாயிரண்டாய அறிவினவே. |
79 | உண்ணி முகுட்டை எறும்பெறி தேண்முத லாவுடைய வெண்ணில் பல்கோடிய வாயவ் விரண்டொடு மூக்குடைய கண்ணிய மூவறி வாமவை பெற்றாற் கருணமிலா நண்ணிய வண்டொடு தேனீ யனையவு நாலறிவே. |
80 | இறப்பப்பல் காலின வெட்டி னிரண்டிரண் டேயிழிந்த பறப்ப நடப்ப தவழ்வன வூர்வன பற்பலவாச் சிறப்புடை யிந்திய மைந்தென வந்த செவியுடைய மறப்பில் கடலொடு தீவினு மல்கிய பல்விலங்கே. |
81 | வெப்பமுந் தட்பமு மிக்கு விரவிய யோனியவாய்ச் செப்புவ செப்பில் செய்கைக ளாற்றம செய்வினையைத் துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்து முன்றோன்றுவன வொப்பவு மொப்பிலுடம்புடம் பேகொண் டுழல்வனவும். |
82 | நல்லவர் தீயவர் திப்பிய ரொப்பில் குமானுயரோ டல்லவ ருள்ளுறுத் தாடவ ரைவரு ளாதியினார் சொல்லுக தன்மையென் பாயெனிற்சொல்லுவன் பல்வகையாற் புல்லிய போகப் பெருநிலந் தன்னைப் பொருந்தினரே. |
83 | தீமா னுயர்திறந் தேற்றிடிற் றீவின் சிறுநிலத்தார் கோமான் முதலார் குணங்களிற் குன்றிய குற்றத்தராய்த் தாமாம் பெரிய தவந்தலை நிற்பினுந் தன்மைபெறா ராமான் மடப்பிணை யன்னமென் னோக்கி யவரதிறமே. |
84 | திப்பிய ரென்னப் படுபவர் தீர்த்தந் திறப்பவரு மப்பிய புண்ணியத் தாழிய ராழிய ரையவரும் வெப்பிய வான் செலவ் விஞ்சையரெஞ்சலில் வெள்ளியரும் பப்பிய ரேயவர் பான்மை வினவினும் பைந்தொடியே. |
85 | கோலமி னோன்றற் குமானுயர் தம்மையுங் கூறுவன்கேள் வாலமுங் கோடும் வளைபல்லும் பெற்ற வடிவினராய்ச் சீலமுங் காட்சியுந் தீண்டலு ரந்தரத் தீவிலுள்ளார் நீலமும் வேலுங் கயலு நிகர்த்த நெடுங்கண்ணினாய். |
86 | மானுய ரென்னப் படுபவர் தாமா விதையமென்னுங் கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த் தானுய ரின்பந் தவத்தாற் றலைப்படுந் தன்மையினார் வானுயர் தோன்றல் வளர்பிறை யேசிய வாணுதலாய். |
87 | தூமாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பருப்பால் வேமானியரென வைவரித் தேவர் விரித்துரைப்பிற் றீமாண்குமரரோ டீரைவர் முன்னவ ரன்னவர்பின் பூமாண் புனைகுழ லாய்க்கினிச்சொல்லற் பொல்லா துகொல்லாம். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.