அரசி தன் எண்ணத்திற்குத் தோழி மறுத்துக் கூறாவண்ணம் புகழுதல்.
101 | என்னுயிர்க் கரண நின்னோ டின்னிசை புணர்த்த காளை தன்னின்மற் றொருவ ரில்லை தக்கது துணிக வென்ன என்னுயிர்க் கேத மெய்தி னிதுபழி பெருகு மென்றே துன்னும்வா யவளோ டெண்ணித் தோழியு முன்னி னாளே. |
தோழி, பாகனைக் கண்டு மீளல்.
102 | மழுகிரு ளிரவின் வைகி மாளவ பஞ்ச மத்தேன் ஒழுகிய மிடற்றோர் காளை யுள்ளவன் யாவ னென்றே கழுதுரு வவனை நாடிக் கண்டனள் கண்டு காமத் (டாள் தொழுகிய வுள்ளத் தையற் கொழியுமென் றுவந்து மீண் |
(மூன்று கவிகளால்) தோழி, பாகனின் வடிவு கூறல்
103 | மன்னன்மா தேவி நின்னை வருத்துவான் வகுத்த கீதத் தன்னவ னத்தி பாக னட்டமா பங்க னென்பான் (டேன் றன்னைமெய் தெரியக் கண்டே தளர்ந்துகண் புதைத்து மீண் என்னைநீ முனிதி யென்றிட் டிசைக்கல னவற்கி தென்றாள்.. |
104 | நரம்புகள் விசித்த மெய்ய னடையினில் கழுதை நைந்தே திரங்கிய விரலன் கையன் சிறுமுகன் சினவு சீரிற் குரங்கினை யனைய கூனன் குழிந்துபுக் கழிந்த கண்ணன் நெருங்கலு நிரலு மின்றி நிமிர்ந்துள சிலபல் லென்றாள். |
105 | பூதிகந் தத்தின் மெய்யிற் புண்களுங் கண்கள் கொள்ளா சாதியுந் தக்க தன்றா லவன்வயிற் றளரு முள்ளம் நீதவிர்ந் திட்டு நெஞ்சி னிறையினைச் சிறைசெய் கென்றாள் கோதவிழ்ந் திட்ட வுள்ளக் குணவதி கொம்ப னாளே |
அமிர்தமதி ஊழின்வலியால் தன் மனம் காதலித்ததைத் தோழிக்குக் கூறல்
106 | என்றலு மிவற்றி னாலென் னிறைவளை யவன்க ணார்வம ¢சென்றது சிறந்து முன்னே திருவொடு திறலுந் தேசும ஒன்றிய வழகுங் கல்வி யொளியமை குலத்தோ டெல்லாம் நின்றுசெய் பயனு நல்லார் நெஞ்சமும் பெறுத லன்றோ |
107 | காரியம் முடிந்த பின்னுங் காரண முடிவு காணல் காரிய மன்றி தென்றே கருதிடு கடவுட் காமன் ஆருழை யருளைச் செய்யு மவனமக் கனைய னாக் நேரிழை நினைந்து போகி நீடலை முடியி தென்றாள். |
தோழியின் அச்சம்
108 | தேவிநீ கமலை யாவாய் திருவுளத் தருளப் பட்டான் ஆவிசெல் கின்ற வெந்நோ யருநவை ஞமலி யாகும் பூவின்வார் கணைய னென்னே புணர்த்தவா றிதனையெ நாவினா லுளைந்து கூறி நடுங்குபு நடுங்கி நின்றாள். |
இக் காப்பியத்தின் ஒருநீதியினை ஆசிரியர் தோழியின் வாயிலாகக் கூறுகின்றார்.
109 | ஆடவ ரன்றி மேலா ரருவருத் தணங்க னாருங்¢1 கூடலர் துறந்து நோன்மைக் குணம்புரிந் துயர்தற் காகப பீடுடை யயனார் தந்த பெருமக ளிவளென்றுள்ளே தோடலார் குழலிதோழி துணிந்தனள் பெயர்த்துச் சென்¢ . |
110 | தனிவயி னிகுளை யானே தரப்படு சார னோடு கனிபுரை கிளவி காமங் கலந்தனள் கனிந்து செல்நாள் முனிவினை மன்னன் றன்மேல் முறுகின ளொழுகு முன்போ லினியவ ளல்ல ளென்கொ லெனமனத் தெண்ணி னானே.. |
மன்னனின் பொய்யுறக்க முணராத அரசியின் செயல்
111 | அரசவை விடுத்து மெய்யா லறுசின னொப்ப மன்னன் உரையல னமளி தன்மே லுறங்குதல் புரிந்த போழ்தின் விரைகமழ் குழலி மேவி மெய்த்துயி லேன்று காமத் துறையினள் பெயர்ந்து தோழி குறியிடந் துன்னி னாளே. |
மன்னன், மனைவியின் செயலைக் காணப் பின்தொடர்தல்.
112 | துயிலினை யொருவி மன்னன் சுடர்க்கதிர் வாள்கை யேந்தி¢ மயிலினை வழிச்செல் கின்ற வாளரி யேறு போலக் கயல்விழி யவடன் பின்னே கரந்தன னொதுங்கி யாங்கண் செயலினை யறிது மென்று செறிந்தனன் மறைந்து நின்றான். |
அரசி தாழ்த்துவந்ததற்காகப் பாகன் வெகுளல்
113 | கடையனக் கமலப் பாவை கருங்குழல் பற்றிக் கையால் இடைநிலஞ் செல்ல வீர்த்திட் டிருகையி னாலு மோச்சிப்¢ புடைபல புடைத்துத் தாழ்த்த பொருளிது புகல்க வென்றே. துடியிடை துவள வீழ்த்து நிலத்திடைத் துகைத்திட்டானே |
அரசி மூர்ச்சை யெய்துதல்
114 | இருளினா லடர்க்கப் பட்ட வெழின்மதிக் கடவுள் போல் வெருளியான் மதிப்புண் டையோ விம்மிய மிடற்ற ளாகித்¢ தெருள்கலா ளுரையு மாடாள் சிறிதுபோ தசையக் கண்டே ¢ மருளிதான் மயங்கி மாதர் மலரடி சென்னி வைத்தான். |
அரசி மூர்ச்சை தௌ¤ந்து காலம் கடந்ததற்குக்காரணம் கூறல்
115 | தையலாள் மெல்லத் தேறிச் சாரனை மகிழ்ந்து நோக்கி வெய்யநீ முனிவு செல்லல் மேதினிக் கிறைவன் றன்னோ¢ விடையவா சனத்தி னும்ப ரரசவை யிருந்து கண்டாய் [றாள். வெய்யபா வங்கள்2 செய்தேன் விளம்பலன் விளைந்த தென்¢ |
அரசியின் உறுதிமொழி
116 | பொற்பகங் கழுமி யாவும் புரந்தினி தரந்தை தீர்க்குங் கற்பகங் கரந்து கண்டார் கையகன் றிடுத லுண்டோ எற்பகங் கொண்ட காத லெனக்கினி நின்னின் வேறோர் சொற்பகர்ந் தருளு காளை துணைவரா பவரு முண்டோ. |
மறைந்து நின்ற மன்னனின் செயல்
117 | என்றலு மேனை மன்ன னெரியெழ விழித்துச் சீறிக் கொன்றிவர் தம்மை வாள்வாய்க் கூற்றுண விடுவ லென்றே யொன்றின னுணர்ந்த துள்ளத் துணர்ந்தது கரத்து வாளும் சென்றிடை விலக்கி நின்றோர் தௌ¤ந்துணர் வெழுந்ததன்றே |
118 | மாதரா ரெனைய ரேனும் வதையினுக் குரிய ரல்லர் பேதைதா னிவனும் பெண்ணி னனையனே பிறிது மொன் டேதிலார் மன்னர் சென்னி யிடுதலுக் குரிய வாளிற் (றுண் றீதுசெய் சிறுபுன் சாதி சிதைத்தலுந் திறமன் றென்றான். |
மன்னன் காமத்தாலாகுந் தீங்குகளைக் கருதுதல்.
120 | எண்ணம தலாமை பண்ணு மிற்பிறப் பிடிய நூறும் மண்ணிய புகழை மாய்க்கும் வரும்பழி வளர்க்கும் மானத் திண்மையையுடைக்கு மாண்மை திருவொடுசிதைக்குஞ்சிந்தை கண்ணொடு கலக்கு மற்றிக் கடைப்படுகாம மென்றான். |
இதுவுமது
121 | உருவினொ டழகு மொளியமை குலனும் பேசின் திருமக ளனைய மாத ரிவளையுஞ் சிதையச் சீறிக் கருமலி கிருமி யன்ன கடைமகற் கடிமை செய்த துருமதி மதனன் செய்கை துறப்பதே சிறப்ப தென்றான் |
மண்ணாசையையும் துறக்க எண்ணுதல்
122 | மண்ணியல் மடந்தை தானு மருவினர்க் குரிய ளல்லள் புண்ணிய முடைய நீரார் புணர்ந்திடப் புணர்ந்து நீங்கும் பெண்ணிய லதுவ தன்றோ பெயர்கமற் றிவர்கள் யாமும் கண்ணிய விவர்க் டம்மைக் கடப்பதே கரும மென்றான். |
மன்னன் தன்உள்ளக் கிடக்கையை மறைத்திருத்தல்.
124 | மற்றைநாள் மன்னன் முன்போல் மறைபுறப் படாமை சுற்றமா யவர்கள் சூழத் துணிவில னிருந்த வெல்லை [யின்பச மற்றுமா மன்னன் றேவி வருமுறை மரபின் வந்தே கற்றைவார் குழலி மெல்லக் காவலன் பாலி ருந்தாள். |
இதுவுமது
125 | நகைவிளை யாடன் மேவி நரபதி விரகி னின்றே மிகைவிளை கின்ற நீல மலரினின் வீச லோடும் ¤புகைகமழ் குழலி சோர்ந்து பொய்யினால் மெய்யை வீழ்த் மிகைகமழ் நீரிற் றேற்ற மெல்லிய றேறி னாளே. |
இதுவுமது.
126 | புரைவிரை தோறு நீர்சோர் பொள்ளலிவ் வுருவிற் றாய விருநிற மலரி னாலின் றிவளுயி ரேக லுற்ற தரிதினில் வந்த தின்றென் றவளுட னசதி யாடி விரகினில் விடுத்து மன்னன் வெய்துயிர்த் தனனி ருந்தான். |
சந்திரமதி ஐயுறல்.
127 | மணிமரு ளுருவம் வாடி வதனபங் கயமு மாறா வணிமுடி யரச ரேறே யழகழிந் துளதி தென்கோ¢ பிணியென வெனது நெஞ்சிற் பெருநவை யுறுக்குமைய துணியலெ னுணரச் சொல்வாய் தோன்றனீ யென்று. |
அரசன் அமிர்தமதியின் செய்கையைத் தன் தாய்க்கு உள்ளுறையாகத் தெரிவித்தல்.
128 | விண்ணிடை விளங்குங் காந்தி மிகுகதிர் மதியந் தீர்ந்தே மண்ணிடை மழுங்கச் சென்றோர் மறையிருட் பகுதி சேரக கண்ணிடை யிறைவி கங்குற் கனவினிற் கண்ட துண்டஃ தெண்ணுடை யுள்ளந் தன்னு ளீர்ந்திடு கின்ற தென்றான் |
உண்மையை உணரவியலாத தாய், மகனிடம் அக்கனவு சண்டிகையால் விளைந்ததெனக் கூறல்
129 | கரவினிற் றேவி தீமை கட்டுரைத் திட்ட தென்னா இரவினிற் கனவு தீமைக் கேது வென்றஞ்சல் மைந்த பாவிநற் கிறைவி தேவி பணிந்தனை சிறப்புச் செய்தால விரவிமிக் கிடுத லின்றி விளியுமத் தீமை யெல்லாம் |
130 | ஐப்பசி மதிய முன்ன ரட்டமி பக்கந் தன்னின் மைப்பட லின்றி நின்ற மங்கலக் கிழமை தன்னிற் கைப்பலி கொடுத்துத் தேவி கழலடி பணியிற் காளை மெய்ப்பலி கொண்டு நெஞ்சின் விரும்பின ளுவக்கு |
131 | மண்டமர் தொலைத்த வேலோய் மனத்திது மதித்து நீயே கொண்டுநின் கொற்ற வாளிற் குறுமறி யொன்று கொன்றே சண்டிகை மனந்த ளிர்ப்பத் தகுபலி கொடுப்பத் தையல கண்டநின் கனவின் திட்பந் தடுத்தனள் காக்கு மென்றாள். |
மன்னன் நெறியறிந்து கூறல்
132 | ஆங்கவ ளருளொன் றின்றி யவண்மொழிந் திடுதலோடுந் தேங்கல னரசன் செங்கை செவிமுதல் செறியச் சேர்த்தி ஈங்கருள் செய்த தென்கொ லிதுபுதி தென்று நெஞ்சில் தாங்கல னுருகித் தாய்முன் தகுவன செப்பு கின்றான். |
133 | என்னுயிர் நீத்த தேனும் யானுயிர்க் குறுதி சூழா தென்னுயிர்க் கரண நாடி யானுயிர்க் கிறுதி செய்யின் என்னையிவ் வுலகு காவ லெனக்கினி யிறைவி கூறாய் மன்னுயிர்க் கரண மண்மேல் மன்னவ ரல்லரோ தான். |
134 | யானுயிர் வாழ்த லெண்ணி யௌ¤யவர் தம்மைக் கொல் வானுய ரின்ப மேலால் வருநெறி திரியு மன்றி (லின் ஊனுயி ரின்ப மெண்ணி யெண்ணமற் றொன்று மின்றி மானுயர் வாழ்வுமண்ணின் மரித்திடு மியல்பிற் றன்றே. |
135 | அன்றியு முன்னின்1 முன்ன ரன்னைநின் குலத்து ளோ£¢கள் கொன்றுயி£¢ கன்று முள்ளக் கொடுமைசெய் தொழில ரல்லா¢ இன்றுயி£¢ கொன்ற பாவத் திடா¢பல விளையு மேலால் நன்றியொன் றன்று கண்டாய் நமக்குநீ யருளிற் றெல்லாம். |
மன்னனை மாக்கோழி பலியிடப் பணித்தல்
136 | என்றலு மெனது சொல்லை யிறந்தனை கொடியை யென் சென்றனள் முனிவு சிந்தைத் திருவிலி பிறிது கூறுங் (றே கொன்றுயிர் களைத லஞ்சிற் கோழியை மாவிற் செய்து சென்றனை பலிகொடுத்துத் தேவியை மகிழ்வி யென்றாள். |
137 | மனம்விரி யல்குன் மாய மனத்ததை வகுத்த மாயக் கனவுரை பிறிது தேவி கட்டுரை பிறிதொன் றாயிற் றெனைவினை யுதயஞ் செய்ய விடர்பல விளைந்த வென்பால் வினைகளின் விளைவை யாவர் விலக்குந ரென்று நின்றான். |
138 | உயிர்ப்பொருள் வடிவு கோற லுயிர்க்¢கொலை போலுமென்னும பயிர்ப்புள முடைய னேனும் பற்றறத் துணிவின் மன்னன செயிர்த்தவளுரைத்த செய்கைசெய்வதற் கிசைந்ததென்றான் அயிர்ப்பதென் னறத்தின் றிண்மை யறிவதற்கமைவிலாதான். |
139 | மாவினில் வனைந்த கோழி வடிவுகொண் டவ்வை யாய பாவிதன் னோடு மன்னன் படுகொலைக் கிடம தாய [செய்தே தேவிதன் னிடைச்சென் றெய்திச் சிறப்பொடு வணக்கஞ் ஆவவன் றன்கை வாளா லெறிந்துகொண் டருளி தென்றான். |
மாக்கோழியில் ஒரு தெய்வம் புகுந்து கூவுதல்
140 | மேலியற் றெய்வங் கண்டே விரும்பின தடையப் பட்ட சாலியி னிடியின் கோழி தலையரிந் திட்ட தோடி கோலிய லரசன் முன்னர்க் கூவுபு குலுங்கி வீழ மாலிய லரசன் றன்சை வாள்விடுத் துருகி னானே. |
141 | என்னைகொல் மாவின் செய்கை யிவ்வுயிர் பெற்ற பெற்றி சென்னிவா ளெறிய வோடிச் சிலம்பிய குரலி தென்கொல பின்னிய பிறவி மாலைப் பெருநவை தருதற் கொத்த கொன்னியல் பாவ மென்னைக் கூவுகின் றதுகொ லென்றான். |
142 | ஆதகா தன்னை சொல்லா லறிவிலே னருளில் செய்கை ஆதகா தழிந்த புள்வா யரிகுர லரியு நெஞ்சை ஆதகா தமிர்த முன்னா மதியவள் களவு கொல்லும் [ன். ஆதகாவினைக ளென்னை யடர்த்துநின் றடுங்கொ லென்றா. |
அரசன் துறவு மேற் கொள்ள வீழைதல்
143 | இனையன நினைவு தம்மா லிசோதர னகர மெய்தித் தனையனி லரசு வைத்துத் தவவனம் படர லுற்றான் அனையதை யறிந்து தேவி யவமதித் தெனைலவிடுத்தான் எனநினைந் தேது செய்தா ளெரிநர கத்த வீழ்வாள. |
144 | அரசுநீ துறத்தி யாயி னமைக மற்றெனக்கு மஃதே விரைசெய்தா ரிறைவ வின்றென் வியன்மனை மைந்தனோடும் அரசநீ யமுது கைக்கொண் டருளுதற் குரிமை செய்தால் அரசுதா னவன தாக விடுதுநா மடிக ளென்றாள். |
145 | ஆங்கவ ளகத்து மாட்சி யறிந்தன னரச னேனும் வீங்கிய முலையி னாய்நீ வேண்டிய தமைக வென்றே தாங்கல னவ்வை தன்னோ டவண்மனை தான மர்ந்தான் தீங்கத குறுகிற் றீய நயமுநன் னயம தாமே. |
146 | நஞ்சொடு கலந்த தேனி னறுஞ்சுவை பெரிய வாக எஞ்சலி லட்டு கங்க ளிருவரு மருந்து கென்றே வஞ்சனை வலித்து மாமி தன்னுடன் வரனுக் கீந்தாள் ¢சொடு படாத தானும் பிறரொடு நயந்து கொண்டாள். |
மன்னனும் தாயும் விஷத்தால் மடிந்து விலங்கிற் பிறத்தல்
147 | நஞ்சது பரந்த போழ்தி னடுங்கினர் மயங்கி வீழ்ந்தார் அஞ்சினர் மரணஞ் சிந்தை யடைந்தது முதல தாங்கண்¢ புஞ்சிய வினைக டீய புகுந்தன பொறிகள் பொன்றித் துஞ்சினர் துயரந் துஞ்சா விலங்கிடைத் துன்னி னாரே. |
உழையர் தம் அரசியை இகழ்ந்து வருந்துதல்
148 | எண்களுக் கிசைவி லாத விறைவியா மிவடன் செய்கை கண்களுக் கிசைவ லாத கடையனைக் கருதி நெஞ்சின் மண்களுக் கிறைவ னாய வரனுக்கு மரணஞ் செய்தாள் பெண்களிற் கோத னாளே பெரியபா வத்த ளென்றார். |
விஷத்தால் இறந்ததை அறியாது மாக்கோழியைக் கொன்ற பாபத்தால் மரணம் நேர்ந்ததென்று நகர மாந்தருட் சிலர் தம்முட் கூறிக்கொள்ளல்
149 | தீதகல் கடவுளாகச் செய்ததோர் படிமை யின்கண் காதர முலகி தன்கட் கருதிய முடித்தல் கண்டுஞ் சேதன வடிவு தேவிக் கெறிந்தனர் தெரிவொன் றில்லார் ஆதலால் வந்த தின்றென் றழுங்கினர் சிலர்க ளெல்லாம். |
நகரத்து அறிஞர் கூறுதல்
150 | அறப்பொரு ணுகர்தல் செல்லா னருந்தவர்க் கௌ¤யனல்லன் மறப்பொருள் மயங்கி வையத் தரசியன் மகிழ்ந்து சென்றான் இறப்பவு மிளையர் போகத் திவறின னிறிது யின்கண சிறப்புடை மரண மில்லை செல்கதி யென்கொ லென்றார். |
151 | இனையன வுழையர் தாமு மெழினக ரத்து ளாரும் நினைவன நினைந்து நெஞ்சி னெகிழ்ந்தனர் புலம்பி வாடக் கனைகழ லரசன் றேவி கருதிய ததுமு டித்தாள் மனநனி வலிதின் வாடி மைந்தனை வருக வென்றாள். |
152 | இனையனீ தனியை யாகி யிறைவனிற் பிரிந்த தென்கண் வினையினால் விளைவு கண்டாய் விடுத்திடு மனத்து வெந்நோய்¢ புனைமுடி கவித்துப் பூமி பொதுக்கடிந் தாள்க வென்றே மனநனி மகிழ்ந் திருந்தாள் மறைபதிக் கமுத மாவாள். |
யசோமதி முடிபுனைந்து அரசனாதல்
153 | வாரணி முரச மார்ப்ப மணிபுனை மகுடஞ் சூடி யேரணி யார மார்ப னிசோமதி யிறைமை யெய்திச் சீரணி யடிகள் செல்வத் திருவற மருவல் செல்லான் ஓரணி யார மார்ப ருவகை2 யங் கடலு ளாழ்ந்தான். |
154 | இனையன வினையி னாகு மியல்பிது தெரிதி யாயின் இனையன துணைவ ராகு மிளையரின் விளையு மின்பம இனையது தௌ¤வி லாதா ரிருநில வரசு செய்கை வனைமலர் மகுட மாரி தத்தனே மதியி தென்றான். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.