அரசே! நீ சினந்தாலும் நினக்கு ஓர் உறுதி கூறுவேன் எனல்
நெறியி னீதிக்க னேரிவை யொப்பவு மறிதி நீயவை நிற்க வழன்று நீ செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர் உறுதி யானுரைப் பானுறு கின்றதே | 623 |
அச்சுவக்கண்டனும் அங்ஙனமாயின் அவ்வுறுதி யாது கூறுதி எனல்
என்ற லும்மிணர் வேய்முடி மாலையா னன்று சொல்லுக வென்று நகைமணிக் குன்ற மன்னதிண் டோ ண்மிசைக் குண்டலஞ் சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான் | 624 |
நிமித்திகன் கூறல்
பூமி மேற்புரி சைம்மதிற் போதன நாம நன்னக ராளு நகைமலர்த் தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள் காம வேளனை யாருளர் காண்டியால் | 625 |
இதுவுமது
ஏந்து தோளவ ருள்ளிளை யானமக் காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப் போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ | 626 |
அச்சுவக்கண்டன் நிமித்திகன் கூற்றைத் தடுத்தல்
முத்த நிண்முடி யான்மூன்ன மற்றதற் கொத்த வாறுணர்ந் தீயென வென்செயு மைத்த கைமனத் தன்மணித் தன்னெனக் கைத்த லங்கதிர் வீச மறித்தனன் | 627 |
அச்சுவக்கண்டன் கூறுதல்
மிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந் தொகையை வென்றவென் றோளுள வாப்பிற பகையி னிப்படர்ந் தென்செயு மென்றன னகைகொ ணீண்முடி நச்சர வம்மனான் | 628 |
அச்சுவக்கண்டனின் சினமொழிகள்
மாசி லாலவட் டத்தெழு மாதரும் வீச விண்டொடு மேருத் துளங்குமோ பேசின் மானிடப் பேதைக ளாற்றலா லாசி றோளிவை தாமசை வெய்துமோ | 629 |
இதுவுமது
வேழத் தின்மருப் புத்தடம் வீறுவ வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ வாழித் தானவர் தானையை யட்டவென் பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ | 630 |
வேக மாருதம் வீசவிண் பாற்சிறு மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ வேக மாயவென் சீற்றமஞ் சாதெதி ராக மானுடர் தாமசை கிற்பவோ | 631 |
குலிச மிந்திரன் கொண்டு பணிக்கு மேன் மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற் றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே | 632 |
விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோ ரிச்சை யென்கணுண் டாமெனின் யாவரே யச்ச மின்றி நிற் பாரந் நிமித்த நூல் பொச்ச லாங்கொல் புலந் தெழு நீர்மையாய் | 633 |
புலவர் சொல்வழி போற்றில னென்பதோ ரலகிற் புன்சொலுக் கெஞ்சுவ னல்லதே லுலக மொப்ப வுடன்றெழு மாயினு மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே | 634 |
ஆத லாலாதற் கேற்ற தமைச்சர்க ளோதி யாங்குணர்ந் தீகவென் றொட்டினான் யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோ ரேத முண்டெனு மெண்ணமில் லாதவன் | 635 |
அச்சுவக் கண்டன் அமைச்சர் கூறுதல்
அலங்க லாழியி னானது கூறலுங் கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடம் புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றன ருலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார் | 636 |
எரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங் கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற் றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும் விரியப் பெற்றபின் வென்றிடு கிற்குமே | 637 |
முட்கொணச்சு மரமுளை யாகவே யுட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம் வட்கி நீண்டதற் பின் மழு வுந்தறு கட்கு டாரமுந் தாங்களை கிற்பவோ | 638 |
சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென் றறிய லாவவன் றாலணி மாமலர் வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன் செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே | 639 |
அரிமஞ்சு என்னும் அமைச்சன் கூறுதல்
அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன் செஞ்செ வேபகை யாமெனிற் றேர்ந்துகண் டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம் | 640 |
இதுவுமது
பகைய லாதவ ரைப்பகை யாக்கலும் நகையி றீமனத் தாமரை நண் பெண்ணலு முகையின் வேய்ந்தமென் மொய்ம்மலர்க் கண்ணியாய் மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே | 641 |
அரிமஞ்சு கூறும் சூழ்ச்சி
அறியத் தேறுந் திறத்ததெவ் வாறெனிற் றிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறை முறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர் குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே | 642 |
அச்சுவக்கண்டன் மகிழ்ந்து தூதுவிடுதல்
என்ற லும்மிது நன்றென வேந்தொளி நின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான் சென்று தூதுவர் தாந்திறை கொள்கென வென்றி வேலவன் மேல்விடை யேயினான் | 643 |
அத்தூதர்களின் பண்பு
ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்த ரோட்ட ரும்பொறி யொற்றிய வோலையர் நாட்டி யம்முணர் வாரொரு நால்வர்சேண் மோட்டெ ழின்முகில் சூழ்நெறி முன்னினார் | 644 |
வேறு - தூதர் போதன நகரத்தை எய்துதல்
தீதறு தென்மலை மாதிர முன்னுபு தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளிகை யோதின ரோதி யுலப்பற வோங்கிய போதன மாநகர் புக்கன ரன்றே | 645 |
அந்நகரச் சிறப்பு
செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம் விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே | 646 |
இதுவுமது
முரி முழாவொலி விம்மி முரன்றெழு காரி மிழார்கலி யான் மயி லாலுவ சோரி முழாவிழ விற்றெரு துற்றபின் சீரி மிழாற்பொலி வெய்தினர் சென்றே | 647 |
சூளிகை சூடிய சூல விலைத்தலை மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின் னீளிய நீரரு வித்திரள் வீழ்வன காளைக டாதைந கர்ப்பல கண்டார் | 648 |
கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவு மூடினர் சிந்திய வொண்சுடர் மாலையு மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவு மூடு செலற்கரி தாயிட ருற்றார் | 649 |
மூரிநடைக்களி யானை மதத்தினொ டேரி னடைக்கலி மாதம் விலாழியு மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை வேரி வெறிக்கள மொப்பது கண்டார் | 650 |
தூதர்கள் அரண்மனையை அடைதல்
வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர் விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர் கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர் மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார் | 651 |
கோயின் முகத்தது கோடுயர் சூளிகை வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி வாயின் முகத்து மடுத்திது சொன்னார் | 652 |
தூதர்கள் தம் வருகை அறிவிக்கும்படி வாயிலோனுக் குரைத்தல்
வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலி னோய்தலி லொண்சுட ராழியி னான்றமர் வாய்தலி னின்றனர் வந்தென மன்னன்முன் நீதலை சென்றுரை நீள்கடை காப்போய் | 653 |
பயாபதி தூதர்களை அழைத்துவரப் பணித்தல்
என்றவர் கூற விருங்கடை யானடி னான்றென நாறொளி நீண்முடி யானடி மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும் ஒன்றிய போதக என்ப துரைத்தான் | 654 |
தூதர் பயாபதிக்கு ஓலை கொடுத்தல்
பொன்னவிர் நீள்கடை காவலன் போதக வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி மன்னவன் வார்கழல் வாழ்த்திமடக்கிய சொன்னவி லோலைகை தொழுதன ரீந்தார் | 655 |
அந்த ஓலையைப் படித்தல்
வாசகன் மற்றது வாசினை செய்தபின் மாசக னீள்முடி மன்னவன் முன்னிவை தேசக மூசிய வாழியன் சீர்த்தம ரோசைக ளோலை கொடொப்ப வுரைத்தர் | 656 |
இதுமுதல் 6 செய்யுள்கள் தூதர்கள் கூறும் செய்தி
ஊடக மோடி யெரிந்தொளி முந்தூறு மாடக மாயிர கோடியு மல்லது சூடக முன்கையர் தோடக மெல்லடி நாடக ராயிர நாரியர் தம்மையும் | 657 |
தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதி ரெண்டர னம்பவ ழக்கொடி யீட்டமும் கண்டிரள் முத்தொடு காழகி லந்துகில் பண்டரு நீரன வும்பல் பண்டமும் | 658 |
வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு கண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம் தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமி தொண்சுட ராழியி னானுரை யென்றார் | 659 |
வேறு - பயாபதியின் மனநிலை
வேந்தன்மற் றதனைக் கேட்டே வெற்றுவ னெறிந்த கல்லைக் காந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிரு போலச் சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான் | 660 |
இதுமுதல் 5 செய்யுள்கள் பயாபதியின் சிந்தனை
கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்மில் பொருத்தினாற் பழிக்க லாகாப் புலைமைமிக் குடைய ரேனு மொருத்தனுக் கொருத்தன் கூறக்கேட்டுற்றுச் செய்து வாழத் திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக் கிழவ னென்பான் | 661 |
மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட நிதியினை நுகர்ந்து மென்று நினைத்தினி திருந்த போழ்திற் பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும் விதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார் | 662 |
ஓளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோ ரளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம் தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோரா மளிய மோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண் | 663 |
அன்றுநா முயலப் பட்ட வினைகள்மற் றனைய வானா லின்று நா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணி னல்ல வென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்த ரொன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே | 664 |
பயாபதி தூதர்க்கு முகமன் மொழிதல்
என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி நின்றகே சரரை நோக்கி நிலமன்ன னனைய சொன்னர்க் கொன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டு சென்றுறு மிறவர்க் கெம்வா யின்னுரை தெரிமி னென்றான் | 665 |
பயாபதி தன் மக்களறியாதபடி திறைப்பொருள் செலுத்த நினைத்தல்
ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறி வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற் காளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லவரை யின்னே மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான் | 666 |
இதுமுதல் ஐந்து செய்யுள்கள் ஒருதொடர், பயாபதி திறை நல்குதல்
செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்கு லையநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தென விலங்கி நீண்ட மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான் | 667 |
அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின் மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டல வரங்கி னங்கண் குணிமுழாப் பெயர்த்த பணி குயிற்றுத லிலயங் கொண்ட கணிமுழ மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார் | 668 |
மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண் வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி வஞ்சிநன் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச் செஞ்சுடர் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார் | 669 |
மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற் றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார் பாடலா னரம்பின் தெய்வம் படிவங்கொண் டனைய நீரா ராடலா லரம்பை யொப்ப ரவரிலா யிரரை யீந்தான் | 670 |
காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப் பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக்கோவை யேந்தொழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை யாய்ந்தொழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான் | 671 |
பயாபதி திறை நல்கியதை விசயதிவிட்டர்கள் காண்டல்
அஞ்சுடர் வயிரப் பூணா னருளினான் விடுப்ப வாங்கண் விஞ்சையர் விமானத் தோற்ற மேலருங் கலங்க ளேற்றிச் செஞ்சுடர் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக் கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார் | 672 |
திவிட்டன் அந்நிகழ்ச்சியை வினாதல்
என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ணன் வினவ யாரும் சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர் கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச் சொன்னான் | 673 |
குறளன் கூற்று
அறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பா னிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான் திறைதர வேண்டும் என்று விடுதரச் செருவந் தானை யிறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான் | 674 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.