276 | பெண்பாலார் கண்டக்காற் பேதுறுவ ரெனவுரைப்பாய் திண்பான்மை யவர்க்கழியச்சிதையுநின் றவமாயின் மண்பாலா ரவருள்ளமாண்புளதா யுரையாரா லெண்பாலும் படாதாகியிழுக்குநின் குணமந்தோ. |
277 | இழுக்கினு மிழத்தியாலிடறினு மதுவேயால் விழுக்கலமால் வினைபெரிதால்வினைக்கேடாந் தொழிறருமா லொழுக்கிற்கு முரித்தன்றூணோரிடையூ றுடன்கொடுக்கும் வழுக்கின்றித் தவஞ்செய்யின்மண்டையாற் பயனென்னோ. |
278 | நிறந்தூய்தா நீரினால்வாய்தூய்தாம் பாகாற் பறைந்துபோய் மெல்கோலாற்பல்லெலாந் தூயவாம் புறந்தூய்மை செய்தக்கால்புரிவள்ளந் தூய்தாமே லறந்தூய்மை கணிகையர்க்கேயாற்றவு முளதாமால். |
279 | சவருடைய மனைவாழ்க்கையெனப்போந்து தவம்புரிந்தாய் பவருடைய விறகிறுத்துப்பலகலங்க ளொருப்படுத்துற் றுவரோடு பல்கூறையுடன்புழுக்கி யொலித்திடு நீ துவரடுதி பூவடுதிசோறடலே முனிந்தாயோ. |
280 | வண்ணாரம் துன்னாரம் மச்சிகமே கச்சாரஞ் சண்ணார மெனப்பிறவுந் தவத்துள் நீ கற்றனவா லெண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே பயின்றாயே லுண்ணாயே வயிறார வோர்ப்பொன்று மிலையேகாண். |
281 | சிறந்தாய்க்கீ துரைக்கலாஞ்சிந்தனையை முடிப்பதே துறந்தார்க்குக் கடனாகிற்சோறலாற் பிறவேண்டா லிறந்தார்க்கு மெதிரார்க்குமிவட்காலத் துள்ளார்வான் பிறந்தார்க்கு மிதுவன்றிப்பிறிதொன்று சொல்லாயோ. |
282 | உண்டியா லுடம்புளதாலுடம்பினா லுணர்வாமென் றெண்டிசையும் பரந்திசைப்பவீதுனக்கே தெரியாதோ தண்டியாய்க் கழியாதுதவஞ்செய்த லுறுதியேற் பண்டியாற் போக்குநின்ப·றொடர்ப்பா டெனச்சொன்னாள். |
283 | அருளுடையா ளுரைப்பக்கேட்டாங்காரித் தவனுந்தன் பொருளுடைமைத் தருக்கினும்புன்ஞானக் களிப்பினு மருளுடையார் மதிப்பினுமாற்றந்தான் செயற்பொருட்டா லிருளுடைந்த கூந்தலாளிட்டத்தை யெண்ணுவான். |
284 | தரணென்று நன்றென்றாடன்றன்மை யுருவென்றாள் அரணென்னத் தெளிந்ததுதானாருகத மேமன்னு முரணின்ற துண்மையான்மொக்கலனு முனிந்துரைப்பா னிரணியனைப் போல்வந்திங்கிடர்ப்பட்டா யென்றானே. |
285 | என்னாலும் வெலப்பட்டாரிருவருள ரிங்கவரைச் சொன்னாலு மறிதிநீதுடிகடியு மிடையுடைய கொன்னாணு நெடுவேற்கட்குண்டலமா கேசியு மன்னாளுக் கறமுரைத்தவருக்கமா சந்திரனும். |
286 | என்றாளை முகநோக்கியிதுபெரிதும் பொய்த்தனைநீ யொன்றாத கொள்கையாருலகினுள் யாவரையும் வென்றாள்மள் றிவள்சம்புவிரதியாய்த் திரிந்தெங்கும் நன்றாரம் பிறர்க்கீந்தான்றருமங் கொண்டென்றானாய். |
287 | வேதியரை முதலாகவெலப்பட்டா ரிவரிவரென் றோதியாங் கவையவைதா மிவையிவையென் றுரைப்பக்கேட் டாதிகா லாவணத்துளார்கதரை வென்றதனை நீதியா லுரைத்தியேனின்னையான் வெல்லேனோ. |
288 | எனக்கேட்டாங் கெடுத்துரைப்பானிந்திரர்க டொழப்படுவான் றனக்காய தர்மமுமதர்மமுங் காலமுங் கனப்பாட்டிற் காயமேயுயிருருவே புண்ணியமே நினைக்குங்காற் பாவமேகட்டுவீ டெனநிறுத்தி. |
289 | இப்பொருட்க ணிகழ்ச்சியு மிவையிவையா மெனவிரித்துச் செப்பினா னாதன்றன் சிந்தைக் கெழுந்தவா றப்பொருளு மந்நிகழ்வு மவையவையா வறியாதை வப்பிள வனமுலையார் மணல்விளையாட் டதுவேபோல். |
290 | மொக்கலனு மிதுகூற முல்லைநா றிருங்குழலா ணக்கனளா யிதுகூறு நாதன தியல்பறியா யிக்கிரமத் திந்திர னிருடிகளைத் தேவியரைத் தக்கதாத் தொழுதக்கா லவர்தலைவ ரெனலாமோ. |
291 | எந்தலைவ ரியல்பொடுநூ லின்னணமென் றறியாதாய் சிந்தனைக்க ணாயினுந் தீமையு முரைத்திலையாற் றந்துரைத்த தலைவனூற் றத்துவமா மாகவே முந்துரைத்த பொருணிகழ்வு பிழைப்பின்மை முடியாவோ. |
292 | அத்தியைந் தெனினல்லவறுபொருளு மவையாகா வுத்தியா வெடுத்தோதுமொன்பதனோ டொட்டலவாற் குத்¢ய பல்குறையே யன்றியுமிப் பொருளெல்லாம் பொத்தியுங் காட்டுவாய்பொருளியைவோ பெரிதென்றாள். |
293 | சலம்படவே யுரைத்தனைநீதருமத்திற் செல்லுதுமென் றிலம்படுமே லியக்கில்லையென்பதெம் முரையென்போம் கலஞ்செல்லுங் கடலதனைக்காற்றேபோ லுந்தாதாம் பலம்படு முரைநினக்குப்மாம்புண்ட பாலேபோல். |
294 | அல்லதற்க மப்படியேயாமென்ற லதுகொள்ளாய் செல்லவுஞ் செலுத்தவுநில்லவு நிறுத்தவுஞ் சொல்லியவாய் தேய்க்குறுவாய்சொல்லிக்கொள் வலியதனால் பல்லொடும் படத்தேய்த்தாற்பயம்பெரிதும் படுமன்றோ. |
295 | கடனிலமா காயமேயமையாவோ விவையிரண்டு முடனில்லை யாயினுமூனமிங் கெவனென்பாய் மடனுடையை நீபெரிதுமன்னுயிர்க்கும் புற்கலக்கு மிடனெல்லா வுலகி னெல்லையும் புறப்படுமோ. |
296 | பலசொல்லிக் குறையென்னைப்பஞ்சமா கந்தமே யலகில்லாப் பெரும்பரப்பினாகாய நினக்கில்லை நிலைசெலவிற் கிவை வேண்டாநின்பொருளு மிவையல்லா வுலகெல்லை யுரைப்பான்புக்குணர்வினையே வருத்துதியால். |
297 | காலநீ வேண்டாயாய்க்கணிகமுங் கற்பமும் சாலமும் புனைந்துரைத்தி சமழ்ப்பென்னு மிலையாகிப் பாலமா பண்டிதனே பழநோன்பி யிவனென்பாய் மாலுமிங் குடையையோமயக்குவதொன் றுண்டனையோ. |
298 | இக்கோட்க ளெழனோக்கியிவையிவையோ யாமென்றா லக்கோட்க ளெழனோக்கியவையவையாக் கண்டிருந் தெக்கோளு மில்லென்பாயாண்டெண்ணி யேத்துதியான் மெய்க்கோளா லென்றியான்மிகைதெருட்டுந் திறங்காணேன். |
299 | கருத்தினாற் பெற்றாமோ கண்கூடாக் கண்டோமோ பொருத்தனையென் றுரைக்கின்றாயுறுநோயைத் தீர்ப்பதோர் மருத்துநூ லில்லையான்மயங்கியே சொல்லாது திருத்தியநின் னுணர்வின்மைதெருட்டிக்கா ணெனச் சொன்னாள். |
300 | பொறியுணர்வின் புலமாயபுற்கலமே யுயிரறியு மறிவினா லறியாதேயாமாகா தெனவுரைப்பாய் நெறியென்னை யிந்திரன்றன்நெடுநகரக் கவன்றேவி குறியளோ நெடியளோநூலொழிப்பாய் கூறிக்காண். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.