கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 26 ஜனவரி, 2012

மதுரைக்காஞ்சி-14

வரைவின் மகளிரின் பொய் முயக்கம்

நுண் பூண் ஆகம் வடுக் கொள முயங்கி,
மாயப் பொய் பல கூட்டி, கவவுக் கரந்து, 570

சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி,
நுண் தாது உண்டு, வறும் பூத் துறக்கும்,
மென் சிறை வண்டினம் மான, புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப, இன் துயில் துறந்து, 575

பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல,
கொழுங் குடிச் செல்வரும் பிறரும் மேஎய,
மணம் புணர்ந்து ஓங்கிய, அணங்குடை நல் இல்,
ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர்
ஒண் சுடர் விளக்கத்து, பலர் உடன் துவன்றி, 580

நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மான, கண்டோ ர்
நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர்,







வரைவின் மகளிரின் வாழ்க்கை

யாம நல் யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடி, குண்டு நீர்ப் 585

பனித்துறைக் குவவு மணல் முனைஇ, மென் தளிர்க்
கொழுங் கொம்பு கொழுதி, நீர் நனை மேவர,
நெடுந் தொடர்க் குவளை வடிம்பு உற அடைச்சி,
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயர




ஓணநாள் விழாவில் மறவர் மகிழ்ந்து திரிதல்

கணம் கொள் அவுணர்க் கடந்த பொலந் தார் 590

மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி, 595

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர



புதல்வர்களை ஈன்ற மகளிர் நீராடுதல்

கணவர் உவப்ப, புதல்வர்ப் பயந்து, 600

பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊற,
புலவுப் புனிறு தீர்ந்து, பொலிந்த சுற்றமொடு,
வள மனை மகளிர் குளநீர் அயர



சூல்மகளிர் தேவராட்டியுடன் நின்று தெய்வத்திற்கு மடை கொடுத்தல்

திவவு மெய்ந் நிறுத்துச் செவ்வழி பண்ணி,
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி, 605

நுண் நீர் ஆகுளி இரட்ட, பலவுடன்,
ஒண் சுடர் விளக்கம் முந்துற, மடையொடு,
நல் மா மயிலின் மென்மெல இயலி,
கடுஞ்சூல் மகளிர் பேணி, கைதொழுது,
பெருந் தோள் சாலினி மடுப்ப 610





வேலன் வழிபாடும், குரவைக் கூத்தும்

ஒரு சார்,
அருங் கடி வேலன் முருகொடு வளைஇ,
அரிக் கூடு இன் இயம் கறங்க, நேர் நிறுத்து,
கார் மலர்க் குறிஞ்சி சூடி, கடம்பின்
சீர் மிகு நெடு வேள் பேணி, தழூஉப் பிணையூஉ,
மன்றுதொறும் நின்ற குரவை 615

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;