காலையில் எழுந்து, அரசர்க்கு உரிய கடன் கழித்தல்
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து,
திண் காழ் ஆரம் நீவி, கதிர் விடும் 715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்,
வரிக் கடைப் பிரசம் மூசுவன மொய்ப்ப,
எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந் தெரியல்,
பொலம் செயப் பொலிந்த நலம் பெறு விளக்கம்
வலி கெழு தடக் கைத் தொடியொடு சுடர் வர, 720
சோறு அமைவு உற்ற நீருடைக் கலிங்கம்,
உடை அணி பொலியக் குறைவு இன்று கவைஇ,
வல்லோன் தைஇய வரிப் புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி
வீரர்கள் மன்னனை வாழ்த்துதல்
வரு புனல் கல் சிறை கடுப்ப, இடை அறுத்து, 725
ஒன்னார் ஓட்டிய செருப் புகல் மறவர்
வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த
சிறந்த வீரர் முதலியோரைக் கொணர மன்னன் பணித்தல்
வில்லைக் கவைஇக், கணைதாங்க மார்பின்
மா தாங்கு எறுழ்த் தோள் மறவர்த் தம்மின்
கல் இடித்து இயற்றிய இட்டு வாய்க் கிடங்கின 730
நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின்
கொல் ஏற்றுப் பைந் தோல் சீவாது போர்த்த
மாக் கண் முரசம் ஓவு இல கறங்க,
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்,
பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய, 735
விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந் தும்பை,
நீர் யார்? என்னாது, முறை கருதுபு சூட்டி,
காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கி,
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து, 740
வானத்து அன்ன வள நகர் பொற்ப,
நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்,
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப் பூந் தெரியல் 745
பெருஞ் செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என
மன்னனது பெருங் கொடை
வரையா வாயில் செறாஅது இருந்து,
பாணர் வருக! பாட்டியர் வருக!
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக! என 750
இருங் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந் தேர் களிற்றொடும் வீசி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.