கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 26 ஜனவரி, 2012

ஆசாரக்கோவை-12

எண்ணக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)


பொய், குறளை, வெளவல், அழுக்காறு, இவை நான்கும்
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார்; சிந்திப்பின்,
ஐயம் புகுவித்து, அரு நிரயத்து உய்த்திடும்;
தெய்வமும் செற்றுவிடும். 38

குறளை - கோட்சொல்லுதல்
அழுக்காறு - பொறாமை

அறிவுடையார் பொய் பேசுதலும், கோள் சொல்லுதலும், பிறர் பொருளை விரும்புதலும், பொறாமை கொள்ளுதலும் செய்ய மாட்டார். அப்படிச் செய்தால் இம்மையில் வறுமையும், மறுமையில் நரகமும் வாய்க்கப்படும்; தெய்வமும் அழிந்துவிடும்.


தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க!
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)


தமக்கு என்று உலை ஏற்றார்; தம்பொருட்டு ஊன் கொள்ளார்;
அடுக்களை எச்சில் படாஅர்; மனைப் பலி
ஊட்டினமை கண்டு உண்க, ஊண்! 39

ஊண் கொள்ளார் - உணவு உட்கொள்ளார்
அடுக்களை - அட்டிலின் கண்


பிறர்க்காக அன்றி தனக்காக உலை வையார், உணவு உட்கொள்ளார், எச்சிற்படுத்தார், மனையில் இருக்கும் தெய்வங்களுக்கு ஊட்டினதை அறிந்து பின் தாம் உண்பார்.

சான்றோர் இயல்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

உயர்ந்ததின் மேல் இரார்; - உள் அழிவு செய்யார்,
இறந்து இன்னா செய்தக்கடைத்தும்; - குரவர்,
இளங் கிளைகள் உண்ணும் இடத்து. 40

இளம் ‏கிளைகள் - புதிய சுற்றத்தார்
குரவர் - பெரியோர்

புதிய சுற்றத்தார் தம்மொடு சேர்ந்து உண்ணும் போது பெரியார் உயர்ந்த இடத்தில் அமரமாட்டார், துன்பம் தரும் செயல்களைச் செய்ய மாட்டார், முறை கடந்து இன்னாதவற்றைச் செய்யமாட்டார்.

சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கண் எச்சில் கண் ஊட்டார்; காலொடு கால் தேயார்;
புண்ணிய ஆய தலையோடு உறுப்பு உறுத்த! -
நுண்ணிய நூல் உணர்வினார். 41

காலொடு கால் - தங்காலோடு காலை

ஒருவன் தன் கண்ணிற்கு மருந்தெழுதிய கோல் கொண்டு பிறர் கண்ணிற்கு உபயோகப் படுத்தல் கூடாது. காலொடு கால் தேய்க்கக் கூடாது. புண்ணியப் பொருள்களைத் தலையிலும், பிற உறுப்புகளிலும் ஒற்றிக் கொள்ளக் வேண்டும் என்பர் நுட்பமான அறிவினை உடையவர்கள்.

மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'தீண்டா நாள் முந் நாளும் நோக்கார்; நீர் ஆடியபின்,
ஈர்-ஆறு நாளும் இகவற்க!' என்பதே -
பேர் அறிவாளர் துணிவு. 42

ஈர் ஆறு நாளும் - பன்னிரண்டு நாள் அளவும்
இகவற்க - அகலாதொழிக

தம் மனைவியர்க்கு பூப்பு நிகழ்ந்தால், நாள் மூன்றும் அவரை நோக்கார், நீராடியபின் பன்னிரண்டு நாளும் அகலாது இருத்தல் நன்மையாகும் என்பர் மிக்க ஆராய்ச்சியாளர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;