கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

மதுரைக்காஞ்சி-16

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி,
திண் சுவர் நல் இல் கதவம் கரைய,
உண்டு மகிழ் தட்ட மழலை நாவின்
பழஞ் செருக்காளர் தழங்கு குரல் தோன்ற,
சூதர் வாழ்த்த, மாகதர் நுவல, 670

வேதாளிகரொடு, நாழிகை இசைப்ப,
இமிழ் முரசு இரங்க, ஏறு மாறு சிலைப்ப,
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப,
யானையங்குருகின் சேவலொடு காமர்
அன்னம் கரைய, அணி மயில் அகவ, 675

பிடி புணர் பெருங் களிறு முழங்க, முழு வலிக்
கூட்டு உறை வய மாப் புலியொடு குழும,
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்,
மின்னு நிமிர்ந்தனையர் ஆகி, நறவு மகிழ்ந்து,
மாண் இழை மகளிர், புலந்தனர், பரிந்த 680

பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு,
பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன,
அம் மென் குரும்பைக் காய் படுபு, பிறவும்,
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப,
மென் பூஞ் செம்மலொடு நன் கலம் சீப்ப, 685

இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை




மதுரையின் சிறப்பு

மை படு பெருந் தோள் மழவர் ஓட்டி,
இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை,
பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி,
வேல் கோல் ஆக, ஆள் செல நூறி, 690

காய் சின முன்பின் கடுங் கண் கூளியர்
ஊர் சுடு விளக்கின், தந்த ஆயமும்,
நாடுடை நல் எயில் அணங்குடைத் தோட்டி,
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாள் தர வந்த விழுக் கலம், அனைத்தும், 695

கங்கை அம் பேர் யாறு கடல் படர்ந்தாஅங்கு
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு,
புத்தேள் உலகம் கவினிக் காண்வர,
மிக்குப் புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை


இரவில் மன்னன் துயில் கொள்ளும் நிலை

சினை தலை மணந்த சுரும்பு படு செந் தீ 700

ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில்,
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன,
தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை
நிலம் விளக்குறுப்ப, மே தகப் பொலிந்து, 705

மயில் ஓரன்ன சாயல், மாவின்
தளிர் ஏர் அன்ன மேனி, தளிர்ப் புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர், கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்,
கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் 710

தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து,
ஆய் தொடி மகளிர் நறுந் தோள் புணர்ந்து
கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;