கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

மதுரைக்காஞ்சி-15

இரவின் முதற் சாம நிகழ்ச்சிகள் முடிவு பெறுதல்

சேரிதொறும்,
உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ,
வேறு வேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி,
பேர் இசை நன்னன் பெறும் பெயர் நன்னாள்,
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு,
முந்தை யாமம் சென்ற பின்றை 620



இரண்டாம் சாமத்தில் நகரின் நிலை

பணிலம் கலி அவிந்து அடங்க, காழ் சாய்த்து,
நொடை நவில் நெடுங் கடை அடைத்து, மட மதர்,
ஒள் இழை, மகளிர் பள்ளி அயர,
நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை,
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம் 625

கவவொடு பிடித்த வகை அமை மோதகம்,
தீம் சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க,
விழவின் ஆடும் வயிரியர் மடிய,
பாடு ஆன்று அவிந்த பனிக் கடல் புரைய,
பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்ப 630







மூன்றாம் சாம் நிகழ்ச்சிகள்

பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு, ஆய் கோல்
கூற்றக் கொல் தேர், கழுதொடு கொட்ப,
இரும் பிடி மேஎந் தோல் அன்ன இருள் சேர்பு,
கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் 635

தொடலை வாளர், தொடுதோல் அடியர்,
குறங்கிடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடி,
சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல்,
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்,
மென் நூல் ஏணிப் பல் மாண் சுற்றினர், 640

நிலன் அகழ் உளியர், கலன் நசைஇக் கொட்கும்,
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி,
வயக் களிறு பார்க்கும் வயப் புலி போல,
துஞ்சாக் கண்ணர், அஞ்சாக் கொள்கையர்,
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர், செறிந்த 645

நூல் வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர் காப்பாளர், ஊக்கருங் கணையினர்,
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்,
அசைவிலர் எழுந்து, நயம் வந்து வழங்கலின், 650

கடவுள் வழங்கும் கையறு கங்குலும்,
அச்சம் அறியாது ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகல் உறக் கழிப்பி



விடியல்காலத்தில் மதுரை மாநகர்

போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு, 655

ஓதல் அந்தணர் வேதம் பாட,
சீர் இனிது கொண்டு, நரம்பு இனிது இயக்கி,
யாழோர் மருதம் பண்ண, காழோர்
கடுங் களிறு கவளம் கைப்ப, நெடுந் தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட, 660

பல் வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்ப,
கள்ளோர் களி நொடை நுவல, இல்லோர்
நயந்த காதலர் கவவுப் பணித் துஞ்சி,
புலர்ந்து விரி விடியல் எய்த, விரும்பி,
கண் பொரா எறிக்கும் மின்னுக் கொடி புரைய, 665

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;