ஒழுக்கமுடையவர் செய்யாதவை
(இன்னிசை வெண்பா)
தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே,
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார் - நெறிப்பட்டவர். 53
விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற
உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம்
பயிற்றார் - நெறிப்பட்டவர். 53
கல்லேறு - கல் எறிதல்
வீளை - கனைத்தல்
வீளை - கனைத்தல்
ஒழுக்கமுடையோர், கல் எறிதல், கனைத்து அழைத்தல், ஒருவனைப் போலவே தாமும் இகழ்ந்து செய்து காட்டுதல், தன் உறுப்புகளை அழித்தல், கோபம், ஒளித்தல் ஆகியவற்றைச் செய்ய மாட்டார்
விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை, கால், நீர், மணை, பாய்,
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப - தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு. 54
கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப - தலைச் சென்றார்க்கு
ஊணொடு செய்யும் சிறப்பு. 54
முறுவல் - புன்சிரிப்பு
தலை - தம்மிடத்து
தலை - தம்மிடத்து
அறிவுடையோர் தம் நண்பர்க்கு, புன்சிரிப்புடன் கால் கழுவ நீர் அளித்து, உட்கார மணை கொடுத்து, உணவளித்தலோடு, படுக்க பாயும், இருக்க இடமும் கொடுத்து உதவுவர்.
அறிஞர் விரும்பாத இடங்கள்
(பஃறொடை வெண்பா)
கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும்
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும், -
நிகர் இல் அறிவினார் வேண்டார் - பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை. 55
நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும்,
குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும், -
நிகர் இல் அறிவினார் வேண்டார் - பலர் தொகு
நீர்க்கரையும், நீடு நிலை. 55
கறுத்த - கோபித்த
கோள் - கோட்பாட்டை
கோள் - கோட்பாட்டை
அறிவுடையோர், பகைவரிடத்திலும், கள் குடித்து ஆடும் இடத்திலும், மனமில்லாத வேசியருடனும், தெருவிலும், நட்பு கொண்டவர் விலகிச் செல்லும் இடத்திலும், பலர் ஒன்று கூடும் தண்ணீர்த் துறையிலும் நிற்க விரும்ப மாட்டார்.
தவிர்வன சில
(பஃறொடை வெண்பா)
முளி புல்லும், கானமும், சேரார்; தீக்கு ஊட்டார்;
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில். 56
துளி விழ, கால் பரப்பி ஓடார்; தெளிவு இலாக்
கானம், தமியர், இயங்கார்; துளி அஃகி,
நல்குரவு ஆற்றப் பெருகினும், செய்யாரே,
தொல் வரவின் தீர்ந்த தொழில். 56
கானமும் - காட்டினிடத்தும்
துளி விழ - மழை பெய்கையில்
துளி விழ - மழை பெய்கையில்
முற்றிய புல்லிடமும், காட்டினிடத்தும் சேரமாட்டார்; அவற்றை நெருப்பிலிட்டு அழித்து விடார்; மழையில் ஓடமாட்டார்; காட்டில் தனியாக செல்ல மாட்டார்; வறுமையிலும் தமது ஒழுக்கத்திலிருந்து மாறமாட்டார், அறிவுடையோர்.
நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
(இன்னிசை வெண்பா)
பாழ் மனையும், தேவ குலனும், சுடுகாடும்,
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்; -
நோய் இன்மை வேண்டுபவர். 57
ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும்,
தாமே தமியர் புகாஅர்; பகல் வளரார்; -
நோய் இன்மை வேண்டுபவர். 57
பாழ்மனையும் - பாழான வீட்டினுள்ளும்
ஊர் இல்வழி - ஊரில்லாத இடத்தில்
ஊர் இல்வழி - ஊரில்லாத இடத்தில்
நோயற்ற வாழ்வு வாழ விரும்புவோர், பாழ் வீட்டிலும், கோயிலிலும், சுடுகாட்டிலும், ஊரில்லாத இடத்தில் உள்ள மரத்திடமும் பகல் பொழுதில் தூங்கமாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.