கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 24 ஜனவரி, 2012

ஆசாரக்கோவை-11

மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(குறள் வெண்பா)

பகல் தெற்கு நோக்கார்; இரா வடக்கு நோக்கார்;
பகல் பெய்யார், தீயினுள் நீர். 33

இரா - இரவில்
வடக்கு நோக்கார் - வடக்கு நோக்காமலும்

பகல் பொழுதில் தெற்கு நோக்காமலும், இரவில் வடக்கு நோக்காமலும், மலசலங் கழித்தல் நல்லது.



மலம் சிறுநீர் கழிக்கும் முறை
(இன்னிசை வெண்பா)

பத்துத் திசையும் மனத்தால் மறைத்தபின்,
அந்தரத்து அல்லால், உமிழ்வோடு இரு புலனும்,
இந்திர தானம் பெறினும், இகழாரே-
'தந்திரத்து வாழ்தும்!' என்பார். 34

உமிழ்வோடு - உமிழ்நீரையும்

பத்து திசையினையும் மறைத்துக் கொண்டு, அந்தரத்தில் செய்வதாக நினைத்துக் கொண்டு எச்சில் உமிழ்தலும், மலங்கழித்தலும் செய்ய வேண்டும். இந்திர பதவியே கிடைத்தாலும் வெளிப்படையாக செய்யக்கூடாது.

வாய் அலம்ப ஆகாத இடங்கள்
(இன்னிசை வெண்பா)

நடைவரவு, நீரகத்து நின்று, வாய்பூசார்;
வழி நிலை, நீருள்ளும் பூசார்; மனத்தால்
வரைந்து கொண்டு அல்லது பூசார், கலத்தினால்
பெய் பூச்சுச் சீராது எனின். 35

நடைவரவு நின்று - நடக்காமல்
பூசார் - வம்பலப்பார்

நீரிடத்தில் நடக்காமல் நின்று வாயலம்புதல் கூடாது. தேங்கியிருக்கும் நீரிலும் வாயலம்பார். கலத்துள் முகந்து பிறர் பெய்ய வாயை அலம்ப முடியாது.

ஒழுக்கமற்றவை
(பஃறொடை வெண்பா)

சுடர் இடைப் போகார்; சுவர்மேல் உமியார்;
இடர் எனினும், மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார்;
படை வரினும், ஆடை வளி உரைப்பப் போகார்;
பலர் இடை ஆடை உதிராரே; - என்றும் கடன் அறி காட்சியவர். 36

மாசுணி - பிறர் உடுத்த அழுக்கு உடை
படை வரினும் - படை வந்ததாயினும்

விளக்குக்கும் ஒருவருக்கும் நடுவே போகமாட்டார். சுவரின் மேல் உமிழார். நோய் வரினும் பிறர் உடுத்த அழுக்கு உடையைப் படுக்கவும் போர்த்தவும் பயன்படுத்தமாட்டார். படை வந்தாலும், தம் ஆடை பிறர்மேல் படும்படி செல்ல மாட்டார். அறிவுடையார் பலர் நடுவில் உடையை உதறமாட்டார்கள் கடமை உடைய பெரியவர்கள்.

நரகத்துக்குச் செலுத்துவன
(நேரிசை வெண்பா)

பிறர் மனை, கள், களவு, சூது, கொலையோடு,
அறன் அறிந்தார், இவ் ஐந்தும் நோக்கார் - திறன் இலர் என்று
எள்ளப் படுவதூஉம் அன்றி, நிரயத்துச்
செல்வுழி உய்த்திடுதலான். 37

நிரயத்து - நரகத்துக்கு
அறன் அறிந்தார் - ஒழுக்கம் அறிந்தவர்

ஒழுக்கம் அறிந்தவர் பிறருடைய மனையாளை விரும்புவதும், கள் குடிப்பதும், களவு செய்வதும், சூதாடுவதும், கொலை செய்தலும் ஆகிய தீய செயல்களை மனதாலும் நினையார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;