கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

ஆசாரக்கோவை-16

ஒருவர் புறப்படும்போது செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)

எழுச்சிக்கண், பின் கூவார், தும்மார்; வழுக்கியும்,
எங்கு உற்றுச் சேறிரோ?' என்னாரே; முன் புக்கு,
எதிர் முகமா நின்றும் உரையார்; இரு சார்வும்;
கொள்வர், குரவர் வலம். 58

வழுக்கியும் - மறந்தும்
என்னார் - என்று கேளார்

ஒருவர் எழுந்து போகும்போது அழைக்க மாட்டார், தும்ம மாட்டார், எங்கே செல்கின்றீர் என்று கேட்க மாட்டார். அவர் எதிர் நின்று பேசமாட்டார். அவருக்கு இருபுறத்திலும் பேசுவார். அவரைச் சுற்றிச் செல்வார்.

சில தீய ஒழுக்கங்கள்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

'உடம்பு நன்று!' என்று உரையார்; ஊதார், விளக்கும்;
அடுப்பினுள் தீ நந்தக் கொள்ளார்; அதனைப்
படக் காயார், தம்மேல் குறித்து. 59

நந்த - அவியும்படி
கொள்ளார் - எடுக்க மாட்டார்

பிறரைப் பார்த்து, உமது உடல் நன்றாயிருக்கிறதென்று சொல்லமாட்டார். விளக்கையும், அடுப்பிலுள்ள நெருப்பையும் அணைக்க மாட்டார். அந்நெருப்பிடம் குளிர் காய மாட்டார்.

சான்றோருடன் செல்லும் போது செய்யத் தகாதவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

யாதொன்றும், ஏறார், செருப்பு; வெயில் மறையார்; -
ஆன்ற அவிந்த மூத்த விழுமியார் தம்மோடு அங்கு
ஓர் ஆறு செல்லும் இடத்து. 60

ஆன்ற - மிகுந்த
அவிந்த - அமைதியடைந்த

பெரியாருடன் செல்லும்போது எதன் மேலும் ஏறிச் செல்ல மாட்டார். காலில் செருப்பு அணிய மாட்டார். குடை பிடித்துச் செல்ல மாட்டார்.

நூல்முறை உணர்ந்தவர் துணிவு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வால் முறையான் வந்த நான் மறையாளரை
மேல் முறைப் பால் தம் குரவரைப்போல் ஒழுகல் -
நூல் முறையாளர் துணிவு. 61

ஒழுகல் - நடத்தல்
துணிவு - கொள்கை

வேதங்களை ஓதும் அந்தணரை, பெரியோரைப் போல நடத்தல் கற்றவர்களின் கொள்கைகளாகும்.

சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

கால்வாய்த் தொழுவு, சமயம், எழுந்திருப்பு,
ஆசாரம் என்ப, குரவர்க்கு இவை; இவை
சாரத்தால் சொல்லிய மூன்று. 62

கால்வாய் - காலின் கண்
ஆசாரம் - ஒழுக்கம்

பெரியோர்க்குச் செய்யும் ஒழுக்கம், காலில் தொழுதலும், நிற்றலும், அவரைக் கண்டவுடன் எழுந்திருத்தலும் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;