426 | பேர்த்தினவண் வார லில்லாப்பிறவியாந் தான மென்னிற் றீர்த்திவண் வார லின்மைசேர்விடக் குண்மை யாமோ கூர்த்தலில் வினையி னின்மைகூறுவ னென்றி யாயி னார்த்துள னவனே யாயினண்ணுமே வினையு மென்றான். |
427 | பிறப்பதை வீடு மென்னேனவ்விடம் பேர்ப்பின் றென்னே னுறத்தகு வினைக டாமுமுண்மையா லொட்டு மென்னேன் மறத்தலில் யோக பாவமாசதா மீட்டு மென்ப திறப்பவும் வேண்டு கின்றேற்கெய்தல நின்சொ லென்றாள். |
428 | பிறக்குந்தன் ஞானத் தாலும்பின்னுந்தன் னுண்மை யாலும் புறப்பொருள் கொண்டு நின்றுபுல்லிய சிந்தை யாலுஞ் சிறப்புடை வீடி தென்றுசெப்புநீ தீவி னையைத் துறக்குமா றில்லை நல்லாய்சொல்லுநீ வல்ல தென்றான். |
429 | நன்றியில் கார ணங்கணாட்டிநீ காட்டி னவ்வு மொன்றுநா னொட்டல் செல்லேன்யோடுகொடு பாவ நின்றாற் குன்றினிற் கூர்ங்கை நாட்டாற்கூடுநோ யாதிற் குண்டோ வொன்றுநீ யுணர மாட்டாயொழிகநின் னுரையு மென்றாள். |
430 | கருவிதா னொன்று மின்றிக்கடையிலாப் பொருளை யெல்லா மருவிய ஞானந் தன்னாலறியுமெம் மிறைவ னென்பாய் கருவிதா னகத்தி னாயகடையிலா ஞான மன்றோ மருவியார்க் கமிர்த மொப்பாய்மாற்றந்தா விதனுக் கென்றான். |
431 | வினையுமவ் வினையி னாயவிகலஞா னங்க டாமு மினையவே கருவி யென்றாலிங்குநின் னுள்ளம் வையாய் முனைவனாய் மூர்த்தி யல்லான்மூடுமே மாசு மென்பாய் கனைகட லென்லை காணுங்காக்கையொத் தாங்கொ லென்றாள். |
432 | கொண்டதன் கரணந் தானுமில்லையேற் கூற்று மில்லை மண்டினர் வினவு வார்க்குமலைச்சிலம் பனைய னென்றா லுண்டுதன் கரணந் தானுமுரைக்குநர்க் குறுவ னென்னிற் பண்டுசெய் நல்வி னையைப்பகவனே யென்று மென்றான். |
433 | தனுவெனுங் கருவி தன்னாற்றன்னடைந் தார்க டன்னை வினவின வுணர்ந்து சொல்லும்வினையினுக் கின்ன துண்டோ சினவினுந் தேர வொன்றுசெப்புவன் செல்க தீயுட் கனவினு நின்ன னாரைக்காணல னாக வென்றாள். |
434 | முறையினா லறிய லன்னேன் மூத்தலே யிளமை சாக்கா டுறையல வொருவன் கண்ணே யுடனவை யாக வொட்டி னிறைவனா ருணர்வு தானுமின்மைமே லெழலும் வேண்டி யறைதுநா மன்ன மன்னா யன்னண மாக வென்றான். |
435 | சீலவான் றெய்வ யாக்கைதிண்ணிதா வெய்தி நின்றார் காலமூன் றானு முய்த்துக்காட்டலுங் காண்டு மன்றோ ஞாலமூன் றானு மிக்கஞானவா னான நாதன் போலுமென் றோர்தல் செல்லாய்போர்த்தனை யகமு மென்றாள். |
436 | நாளெல்லா மாகி நின்றநன்பொரு டம்மை யெல்லாங் கோளெல்லாந் தானொ ருங்கேகொள்ளுமே லீர்ங்கு வள்ளைத் தாளெல்லாந் தானொ ருங்கேதானுநல் லானோர் நல்ல வாளினா லேறு முண்டேல்வாய்க்குநின் னுரையு மென்றான். |
437 | நீருநீர் தோறு முவ்வாநலையிற்றே திங்க ளென்று மூரினூர் தோறு மொவ்வாவொளியிற்றே ஞாயி றென்றும் யாரின்யார் கேட்ட றீவாரன்னனே யண்ண லென்றார் தேரனீ சொன்ன தன்னம்சேரல வாக வென்றாள். |
438 | அளவிலாப் பல்பொ ருள்கட்காகுபண் பாகி நின்ற வுளவெலாப் பொதுக்கு ணத்தானொருங்குகோ ளீயுமென்னிற் பிளவெலா மாகு மன்றேபெற்றிதா மொத்த லில்லேற் கொளவெலா ஞானந் தானுங்கொள்ளுமா றெவன்கொ லென்றான். |
439 | ஒன்றல்லாப் பலபொ ருளுமொத்தொவ்வாப் பெற்றி யாலே நின்றுகோட் செய்யு மென்றானீடிய குற்ற மாகா தென்றலா லின்ன தன்மையிறைவன தறிவு மெய்ம்மை யின்றெலாங் கேட்டு மோராயேடனீ யென்று சொன்னாள். |
440 | எல்லையில் பொருள்க டம்மை எல்லையி லறிவி னாலே யெல்லையின் றறியு மெங்க ளெல்லையி லறிவ னென்பாய் எல்லையில் பொருள்க டம்மை யெல்லையின் றறியி னின்ற வெல்லையி லறிவு தானு மெங்ஙன மெய்து மென்றான். |
441 | துளக்கில்லாப் பலபொ ருளுந்தொக்கதன் றன்மை யெல்லாம் விளக்குமே ஞாயி றொப்பவென்பது மேலுஞ் சொன்னேற் களக்கிவர் தன்ன மன்னாயாத்தன தறிவு மென்றென் றிளக்கிநீ யின்னு ம·தேசொல்லுதி யேழை யென்றாள். |
442 | ஓதலி லுணர்வு மின்றேலூறவற் குண்டு மாகு மோதலி லுணர்வு முண்டேலொன்றுமே பலவும் வேண்டா மோதலி லுணர்பொ ரூடாமுள்ளவும் மில்ல வும்மே லேதமா மில்பொ ருண்மேனிகழ்ச்சிதா னிறைவற் கென்றான். |
443 | சென்றவக் குணங்க டாமுஞ்செல்லுமக் குணங்க டாமு மன்றையக் குணங்க டாமுமப்பொருட் டன்மை யாலே நின்றதன் ஞானந் தன்னானிருமல னுணரு மென்றாற் பொன்றின வெதிர்வ வென்றல்பொருள்களுக் கில்லை யென்றாள். |
444 | பிறவிதா னொன்று மில்லான்பெரியனே யென்று நின்றான் மறவிதா னில்லை யோனிமன்னுநான் கென்னு மில்லா னறவியா யுந்த நூலுள் ளாத்தனா மாயி னக்காற் புறவினிற் புரளுங் கல்லும்புண்ணிய னாக வென்றான். |
445 | பிறத்தலே தலைமை யாயிற்பிள்ளைக ளல்ல தென்னை யறக்கெட றான தென்னிலட்டக வித்து வெந்தாம் புறப்படும் போர்வை யாலேற்புண்டொழு நோய ராகச் சிறப்புடை யண்ண றன்னைக்கல்லெனச் சொல்லு வாய்க்கே. |
446 | அடைவிலா யோனி யானாயாருமொப் பாரு மின்றிக் கடையிலா ஞான மெய்திக்கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து புடையெலாம் போற்றி யேத்தப்பொன்னெயிற் பிண்டி மூன்று குடையினா னிறைவ னென்றாற்குற்றமிங் கென்னை யென்றாள். |
447 | கோதியிட் டுள்ள தெல்லாங்குண்டல கேசி யென்பா ளாதிசா லாவ ணத்துளார்கதர் தம்மை வென்ற வீதியீ தென்று சொல்லிவீழ்ந்தனை நீயு மென்றா ணீதியாற் சொல்லி வென்றநீலமா கேசி நல்லாள். |
448 | பேதைக ளுரைப்பன வேசொல்லிப்பெரிதலப் பாட்டினைநீ பேதைமற் றிவன்பெரி தெனப்படும்கருத்துடை மிகுதியினாய் தாதையைத் தலைவனைத் தத்துவதரிசியைத் தவநெறியி னீதியை யருளிய நிருமலன்றகைநினக் குரைப்ப னென்றாள். |
449 | பகைபசி பிணியொடு பரிவின பலகெட முகைமலர் தளிரொடு முறிமரம் வெறிசெய மிசைநிலம் விளைவெய்த விழைவொடு மகிழ்வன திசைதொறு மிவைபிற சுகதன செலவே. |
450 | குழுவன பிரிவன குறைவில நிலையின எழுவன விழுவன விறுதியி லியல்பின வழுவலில் பொருள்களை மலர்கையின் மணியென முழுவது முணருமெ முனைவர னறிவே |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.