451 | நிறைபொறி யுளவவை யறிதலி னெறிமைய முறைபொரு ணிகழினு முறைபடு மறிவிலன் மறைபொரு ளுளவவ னறிவினை மறையல விறைபொருண் முழுவது மறிதிற மிதுவே. |
452 | பிணிதரு பிறவிய மறுசுழி யறுவதொர் துணிவிது வெனநம துயர்கெடு முறைமையு மணிதரு சிவகதி யடைதலு மருளுதல் பணிதரு பரமன தருள்படு வகையே. |
453 | சொரிவன மலர்மழை துளிகளு நறுவிரை புரிவன வமரர்கள் புகழ்தகு குணமிவை விரிவன துதியொலி விளைவது சிவகதி எரிவன மணியிதெ மிறைவன திடமே. |
454 | அரசரு மமரரு மமர்வனர் வினவலின் வரைவில பிறர்களு மனநிலை மகிழ்வெய்த உரைபல வகையினு முளபொரு ளுணரவொர் முரைசென வதிருமெ முனைவரன் மொழியே. |
455 | வினையிரு ளடுவன விரிகதி ரியல்பொடு கனையிருள் கடிவன கடுநவை யடுவன மனையிரு ணெறிபெற மதிகெட வடைவன வினையமெ யிறையவ னிணையடி யிவையே. |
456 | ஆத்த னிவனென் றடிக ளிடமிசைப் பூத்தனைத் தூவிப் பொருந்து துதிகளி னேத்துநர் கண்டா யிருவினை யுங்கெடப் பாத்தில் சிவகதிப் பான்மைய ரென்றாள். |
457 | ஏந்த றிறங்க ளிவையே லமைந்தன போந்த வகையாற் பொருளும் பிழைப்பில வீந்த விவற்றினின் வேற்றுமை வீட்டிற்கு மாய்ந்த வகையா லறிவிமற் றென்றான். |
458 | வித்தென்றும் வெந்தால் முளையல தாயெண்மை யொத்தினி துண்டா முயிரும் பிறப்பின்றிச் சித்தி யகத்துச் சிதைவிலெண் டன்மையி னித்திய மாகி நிலையுள தென்னாய். |
459 | ஒக்கு மிதுவென வுள்ளங் குளிர்ந்தினி மொக்கலன் சொல்லுமிம் மோக்கத்தைப் பாழ்செய்த தக்கில தாகுந் தலைவ ரியல்பென நக்கன னாய்க்கென்று நன்னுத லென்றான். |
460 | பண்டே யெனக்கிம் மயக்கம் பயந்தவன் கண்டார் மயங்குங் கபில புரமென்ப துண்டாங் கதனகத் தோத்துரைக் கின்றனன் றண்டா தவனொடு தாக்கெனச் சொல்லி. |
461 | சிறப்பின தென்பதைச் செப்பலுந் தெற்றெனப் பிறப்பறுத் தின்பெய்தும் பெற்றியின் மிக்க வறப்புணை யாகிய வாயிழை யாயான் மறப்பில னென்று வலஞ்செய் தொழிந்தான். |
462 | அருளே யுடைய னறனே யறிவா டெருளா தவரைத் தெருட்டல் லதுவே பொருளா வுடையாள் புலனே நிறைந்தாள் இருடீர் சுடர்போ லெழுந்தா ளவன்மேல். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.