கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 16 அக்டோபர், 2013

வினாவிடை 5

கீழ்க்காணும் வினாக்களுக்கு ஒருவரியில் விடை தரவும். .

1 உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?

 (விடை) உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து ஒலிப்பது உயிர்மெய் எழுத்து எனப்படும்.

2 உயிர்மெய் எத்தனை வகைப்படும்?

 (விடை) உயிர்மெய் எழுத்துகள் குறில், நெடில் என்று இருவகைப் பெறும்.

3 மெய் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

(விடை) மெய் எழுத்துகள் 18 ஆகும் அவை க்,ங்,ச்,ஞ்,ட்,ண்
த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்
4 குறில் என்றால் என்ன?

 (விடை) குறுகிய ஒலிகளுடைய எழுத்துகள் குறில் எழுத்துகள் எனப் பெறும்.

 5 நெடில் எழுத்துகள் என்றால் என்ன?

 (விடை)
நீண்ட ஒலிகளையுடைய எழுத்துகள் நெடில் எழுத்துகள் எனப்பெறும். 

 6 ஆய்த எழுத்து எவ்வாறு ஒலிக்கப் பெறுகிறது?

 (விடை)
ஆய்த எழுத்து அஃகு ஒலிக்கப் பெறுகிறது.

 7 ஆய்த எழுத்து தனித்து வருமா?

 (விடை)
ஆய்த எழுத்து தனித்து வராது.

 8 உயிர் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

 (விடை) உயிர் எழுத்துகள் 12 ஆகும். அவை அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள.

 9 குற்றியலுகர எழுத்துகள் யாவை?

 (விடை)
கு, சு, டு, து, பு, று ஆகியன குற்றியலுகர எழுத்துகள் ஆகும். 
 10 குற்றியலிகரம் என்றால் என்ன?

 (விடை)
தன் மாத்திரை அளவில் இருந்து குறைந்து ஒலிக்கும் இகரம்
குற்றியலிகரம் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;