திரிசொல் வகைகள்
திரிசொல் இரண்டு வகைப்படும்.
அவை:
1) ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
2) பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பவை ஆகும்.
2) பல பொருள் குறித்த ஒரு திரிசொல் என்பவை ஆகும்.
1. ஒரு பொருள் குறித்த பல திரிசொல்
ஒரே பொருளைத் தரும் பல திரிசொற்கள் தமிழில் உள்ளன. அவை ஒருபொருள் குறித்த பல திரிசொல் எனப்படும்.
(எ.கா) கமலம் கஞ்சம் முண்டகம் முளரி
இவை யாவும் தாமரை என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பல திரிசொற்கள்ஆகும். இவை யாவும் பெயர்ச்சொற்கள். எனவே ஒரு பொருள் குறித்த பலபெயர்த் திரிசொற்கள் ஆகும்.
செப்பினான், உரைத்தான், மொழிந்தான், இயம்பினான்
இவை யாவும் சொன்னான் என்னும் ஒரே பொருளைக் குறிக்கும் பலதிரிசொற்கள் ஆகும். இவை யாவும் வினைச்சொற்கள். எனவே ஒரு பொருள்குறித்த பல வினைத் திரிசொற்கள் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.