இக்காப்பியம் ஐந்து சருக்கங்களைக் கொண்டது. பாடல்கள் 330. சில பதிப்புகளில் 320 பாடல்கள் மட்டுமே காணப்படுகின்றன. அபயருசி என்பான் ஔதய நாட்டு மன்னன் மாரி தத்தனுக்குத் தன் பழம்பிறப்பு வரலாறு உணர்த்திச் சைன நெறிப்படுத்தி நற்கதி பெறச் செய்ததே காப்பியக் கதை.
ஒளதய நாட்டின் தலைநகரான இராசமாபுரத்திலிருந்து நாட்டை ஆண்ட அரசன் மாரிதத்தன். அவன் ‘சண்டமாரிதேவி’க்குப் பலியிட அபயருசி, அபயமதி என்ற இரு சிறுவர்களைக் கொண்டுவரச் செய்தான். அவர்கள் அச்சம் சிறிதுமின்றித் தெய்வத்தை வாழ்த்தியபடி அரசன் முன் சென்றனர். அரசன் வாளை ஓங்கி அவர்களை வெட்டிப் பலியிட முற்பட்டபோது, நகர மக்கள் “அரசன் வாழ்க” என்று அவர்களைச் சொல்லுமாறு பணித்தனர். அபயருசி புன்முறுவலுடன் “இம்மன்னன் பலியிடும் தீய தொழிலை விட்டு விட்டு அருள் கொண்டு வாழ்வானாக” என்று வாழ்த்தினான். அரசன் அவர்களைப் பலியிடுவதை நிறுத்தி, அவர்தம் அஞ்சாமை கண்டு மகிழ்ந்தான். அபயருசி மன்னனுக்குத் தன் பூர்வ வரலாற்றை எடுத்துரைக்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.