ஆய்குரங்கு அஞ்சிறை வண்டினம் போல்க என்று பாயிரம் இன்றிப் பயிற்றி மொழிந்தனள் மேவரும் வான்பொருள் தந்துநின் தோள்நம்பி யாவர் அடைந்தவர்க்கு அவையும் புரைய. |
51 |
வாரி பெருகப் பெருகிய காதலை வாரி சுருங்கச் சுருங்கி விடுதலின் மாரி பெருகப் பெருகி அறஅறும் வார்புனல் ஆற்றின் வகையும் புரைப. |
52 |
எங்ஙனம் ஆகியது இப்பொருள் அப்பொருட்கு அங்ஙனம் ஆகிய அன்பினர் ஆதலின் எங்ஙனம் பட்டனன் பாண்மகன் பாண்மகற்கு அங்ஙனம் ஆகிய யாழும் புரைப. |
53 |
கரணம் பலசெய்து கையுற்று அவர்கட்கு அரணம் எனும் இலர் ஆற்றிற் கலந்து திரணி உபாயத்தில் திண்பொருள் கோடற்கு அரணி ஞெலிகோல் அமைவர ஒப்ப. |
54 |
நாடொறும் நாடொறும் நந்திய காதலை நாடொறும் நாடொறும் நைய ஒழுகலின் நாடொறும் நாடொறும் நந்தி உயர்வுஎய்தி நாடொறும் தேயும் நகைமதி ஒப்ப. |
55 |
வனப்பிலர் ஆயினும் வளமையு ளோரை நினைத்தவர் மேவர நிற்பமைக்கு அவர்தாம் கனைத்துடன் வண்டொடு தேனினம் ஆர்ப்பப் புனத்திடைப் பூத்த பூங்கொடி ஒப்ப. |
56 |
தம்கண் பிறந்த கழிஅன்பி னார்களை வன்கண்மை செய்து வலிய விடுதலின் இன்பொருள் ஏற்றி எழநின்ற வாணிகர்க்கு அங்கண் பரப்பகத்து ஆழ்கலம் ஒப்ப. |
57 |
ஒத்த பொருளால் உறுதிசெய் வார்களை எத்திறத் தானும் வழிபட்டு ஒழுகலின் பைத்தரவு அல்குல்பொன் பாவையின் நல்லவர் பத்தினிப் பெண்டிர் படியும் புரைப. |
58 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.