புடபாவலி மீண்டும் கருவுற்று யசோதரன் என்ற மகனைப் பெறுகிறாள். மக்கள் மூவரும் வளர்கின்றனர். வேட்டைக்குச் சென்ற மன்னன் யசோமதி எதிரில் சுதத்தர் என்ற முனிவரைக் காண்கிறான். அவர் திகம்பரக் கோலத்தில் (ஆடையின்றி) இருக்கிறார். வேட்டையில் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு அந்த முனிவரை முதலில் கண்டதுதான் காரணம் என்று கருதிய யசோமதி, 500 வேட்டை நாய்களை ஏவி அவரைக் கொல்ல முயல்கிறான். அவரது தவ வலிமையால் நாய்கள் அவரை நெருங்க முடியாமல் நிற்கின்றன.
இந்த மறுபிறப்பு, விலங்குப் பிறப்பு வரலாற்றைத் தன்னைக் கொல்ல வந்த யசோமதி அரசனுக்கு சுதத்த முனிவர் கூறி அவனை நல்வழிப்படுத்துகிறார். இந்த வரலாற்றை அபயருசி, அபயமதி மாரிதத்தனுக்குக் கூற, அவன் நல்லுணர்வு பெற்று ஜின தருமத்தைக் கடைப்பிடித்து முக்தி - நற்கதி அடைகிறான். இதுவே கதை.
அன்பார்ந்த மாணவர்களே! இந்தக் கதை உங்களுக்குப் புரிகிறதா? குழப்பமாக இருக்கிறதா? யசோதரன். அவன் தாய் எவ்வாறெல்லாம் விலங்குப் பிறவி எடுத்தனர் எனத் தெளிவாக அறிய முடிகிறதா? இதோ தெளிவுக்காக இங்கே இவர்களில் யார் என்ன பிறவி எடுத்தனர் என்பதைத் தருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.