3. கள் உண்போன் சோர்வு இன்மை பொய்.
கள் உண்போன் - கள்ளைக் குடிப்பவன்
சோர்வு இன்மை - ஒழுக்கங்களில் வழுவாதிருத்தல்
கள் உண்போன் சோர்வு இல்லாமல் இருப்பது அரிது. (கள் உண்பவன் ஒழுக்கத்துடன் இருக்க மாட்டான்.)
4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.
காலம் - முயற்சி செய்தற்குரிய காலத்தை
அறியாதோன் - அறிந்து முயலாதவன்
காலம் அறியாது செய்யும் செயல் வெற்றி பெறுதல் அரிது. (காலமறிந்து செய்யும் செயல் வெற்றியடையும்.)
5. மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய்.
மேல்வரவு - எதிர்காலத்தில் வருதலை
தற்காத்தல் - தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்ளல்
வருவதை அறியாதவன் தற்காப்புடன் வாழ்வது அரிது. (எதிர்காலத்தில் வருவதை அறிபவன் தற்காப்பு உடையவன் ஆவான்.)
6. உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.
உறுவினை - தக்க செயலை
உயர்வு - மேன்மை
சிறந்த செயல்களைச் செய்யாமல் சோம்பலுடன் இருப்பவனுக்குச் சிறப்பில்லை.
7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.
சிறுமை - சிறியனாயிருக்கும்
நோனாதோன் - பொறாதவன்
அடக்கமில்லாமல் இருப்பவர் பெருமையுடன் வாழ்வது அரிது. (பெருமை வேண்டுபவன் அடக்கத்துடன் இருக்க வேண்டும்.)
8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.
நோனாதான் - பொறாதவன்
சிறுமை வேண்டல் - கீழ்மையை விரும்புதல்
பெருமைச் செருக்கில்லாதவன் இழிந்த இயல்புகளை அடைய மாட்டான்.
9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்.
முறை செயல் - அறநெறிப்படி முறை செயல்
பொய் - இல்லை
பொருட்பற்றுடையவன் நடுவு நிலைமையில் இருக்க இயலாது.
10. வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய்.
வாலியன் அல்லாதோன் - உள்ளத்தின் கண் தூயனல்லாதவன்
உள்ளத்தில் தூய்மை இல்லாதவன் தவஞ்செய்தல் இயலாது.
கள் உண்போன் - கள்ளைக் குடிப்பவன்
சோர்வு இன்மை - ஒழுக்கங்களில் வழுவாதிருத்தல்
கள் உண்போன் சோர்வு இல்லாமல் இருப்பது அரிது. (கள் உண்பவன் ஒழுக்கத்துடன் இருக்க மாட்டான்.)
4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.
காலம் - முயற்சி செய்தற்குரிய காலத்தை
அறியாதோன் - அறிந்து முயலாதவன்
காலம் அறியாது செய்யும் செயல் வெற்றி பெறுதல் அரிது. (காலமறிந்து செய்யும் செயல் வெற்றியடையும்.)
5. மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய்.
மேல்வரவு - எதிர்காலத்தில் வருதலை
தற்காத்தல் - தன்னைத்தான் பாதுகாத்துக் கொள்ளல்
வருவதை அறியாதவன் தற்காப்புடன் வாழ்வது அரிது. (எதிர்காலத்தில் வருவதை அறிபவன் தற்காப்பு உடையவன் ஆவான்.)
6. உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.
உறுவினை - தக்க செயலை
உயர்வு - மேன்மை
சிறந்த செயல்களைச் செய்யாமல் சோம்பலுடன் இருப்பவனுக்குச் சிறப்பில்லை.
7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.
சிறுமை - சிறியனாயிருக்கும்
நோனாதோன் - பொறாதவன்
அடக்கமில்லாமல் இருப்பவர் பெருமையுடன் வாழ்வது அரிது. (பெருமை வேண்டுபவன் அடக்கத்துடன் இருக்க வேண்டும்.)
8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.
நோனாதான் - பொறாதவன்
சிறுமை வேண்டல் - கீழ்மையை விரும்புதல்
பெருமைச் செருக்கில்லாதவன் இழிந்த இயல்புகளை அடைய மாட்டான்.
9. பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய்.
முறை செயல் - அறநெறிப்படி முறை செயல்
பொய் - இல்லை
பொருட்பற்றுடையவன் நடுவு நிலைமையில் இருக்க இயலாது.
10. வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய்.
வாலியன் அல்லாதோன் - உள்ளத்தின் கண் தூயனல்லாதவன்
உள்ளத்தில் தூய்மை இல்லாதவன் தவஞ்செய்தல் இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.