செய்யத் தகாதவை
(இன்னிசை வெண்பா)
நீருள் நிழல் புரிந்து நோக்கார்; நிலம் இரா
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை. 13
கீறார்; இரா மரமும் சேரார்; இடர் எனினும்,
நீர் தொடாது, எண்ணெய் உரையார்; உரைத்த பின்,
நீர் தொடார், நோக்கார், புலை. 13
நோக்கார் - பாரார்
இரா - இரவில்
இரா - இரவில்
நீரில் தம் நிழலை விரும்பி பார்க்கமாட்டார். நிலத்தை கீற மாட்டார். இரவில் மரத்தின் கீழ் நிற்கமாட்டார். நோய்பட்டபோதும் நீரைத் தொடாமல் எண்ணெயை உடம்பில் தேய்க்க மாட்டார். எண்ணெய் தேய்த்த பின் தம் உடம்பின் மேல் நீரை தெளித்துக் கொள்ளாது புலையை தம் கண்ணால் பார்க்க மாட்டார்.
நீராடும் முறை
(இன்னிசை வெண்பா)
நீராடும் போழ்தில், நெறிப் பட்டார், எஞ் ஞான்றும்,-
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர். 14
நீந்தார்; உமியார்; திளையார்; விளையாடார்;
காய்ந்தது எனினும், தலை ஒழிந்து ஆடாரே,
ஆய்ந்த அறிவினவர். 14
எஞ் ஞான்றும் - ஒரு நாளும்
திளையார் - அமுங்கியிருக்கமாட்டார்
திளையார் - அமுங்கியிருக்கமாட்டார்
ஆராய்ந்த அறிவுடையார் நீராடும் பொழுது நீந்தமாட்டார், எச்சிலை உமிழ மாட்டார், அமுங்கியிருக்க மாட்டார், விளையாட மாட்டார், எண்ணெய் தேய்த்துக் கொள்ளாமல் கழுத்தளவு அமிழ்ந்து குளிக்க மாட்டார்.
உடலைப் போல் போற்றத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஐம் பூதம், பார்ப்பார், பசு, திங்கள், ஞாயிறு,
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும். 15
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல், தம் மெய்க்கண்
ஐம் பூதம் அன்றே கெடும். 15
இகழ்வானேல் - இகழ்வானாயின்
அன்றேகெடும் - அன்றே கெட்டகன்றுபோம்
அன்றேகெடும் - அன்றே கெட்டகன்றுபோம்
நிலம் முதலிய ஐம்பூதங்களையும், பார்ப்பாரையும், பசுவையும், சந்திரனையும், சூரியனையும் போற்றாதவர், உடம்பில் உள்ள ஐம்பூதத்தையுடைய தெய்வங்கள் அகன்று போய்விடும்.
யாவரும் கூறிய நெறி
(சவலை வெண்பா)
'அரசன், உவாத்தியான், தாய், தந்தை, தம்முன்,
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக!' என்பதே-
யாவரும் கண்ட நெறி. 16
நிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்
தேவரைப் போலத் தொழுது எழுக!' என்பதே-
யாவரும் கண்ட நெறி. 16
தம்முன் - தனக்கு மூத்தோனும்
நெறி - வழி
நெறி - வழி
அரசனும், குருவும், தாயும் தந்தையும், தனக்கு மூத்தோரும், நிகரில்லா உறவினராவார். இவர்களை தேவர்களைப் போல தொழ வேண்டும். இவர்கள் சொல்லிய சொல்லை கடந்து செய்யார், அதனை மறந்து நடக்கமாட்டார், நல்லறிவாளர்.
நல்லறிவாளர் செயல்
(இன்னிசை வெண்பா)
குரவர் உரையிகந்து செய்யார்; விரதம்
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்' என்பதே-
நல் அறிவாளர் துணிவு. 17
குறையுடையார் தீர மறவார்; நிறையுவா
மெல் கோலும் தின்னார்; மரம் குறையார்' என்பதே-
நல் அறிவாளர் துணிவு. 17
இகந்து - கடந்து
தீர - மிக
தீர - மிக
அறிவாளர், குரவர்கள் சொல்லிய சொல்லை மீறி எதனையும் செய்யமாட்டார். குறை விரதத்தை மறக்கமாட்டார். அம்மாவாசை அன்று பல் துடைப்பதும், மரம் வெட்டுதலும் செய்ய மாட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.