கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 29 டிசம்பர், 2011

யசோதர காவியம்-6


அவந்தி நாட்டு உஞ்சயினி நகர அரசன் அசோகன்; அவன் மனைவி, சந்திரமதி. அவர்தம் மகனே யசோதரன்; அவன் அமிர்தமதியை மணந்து யசோமதி என்ற மகனைப் பெற்றான். தன் தலையில் நரைமுடி கண்ட அசோகன் துறவியாகிறான். தொழுநோயாளனான யானைப் பாகன் அட்டபங்கன், மாளவ பஞ்சம் என்ற இசைபாடுகிறான். அந்த இசையில் மயங்கிய யசோதரன் மனைவி அமிர்தமதி அட்டபங்கனுடன் உடலுறவு கொள்கிறாள். இதனை நேரில் கண்ட யசோதரன் துறவு மேற்கொள்ள விழைகிறான். மனைவியின் கூடா ஒழுக்கத்தை மறைத்துத் தீக்கனாக் கண்டதாகத் தன் தாயிடம் கூறுகிறான். தாய் மாரிக்குப் பலியிட வேண்டுகிறாள். உயிர்க்கொலை செய்ய விரும்பாத யசோதரன் மாக்கோழியைப் (மாவால் செய்த கோழி) பலியிடுகிறான். அவனது கெட்ட காலம் அம்மாக் கோழிக்குள் புகுந்திருந்த ஒரு தெய்வம் துடிதுடித்து இறந்துபடுகிறது. இதனால் துன்புற்ற அரசனின் கருத்தறிந்த அவன் மனைவி அமிர்தமதி, அவனையும் அவன் தாய் சந்திரமதியையும் நஞ்சு கலந்த லட்டைக் கொடுத்துக் கொன்றுவிடுகிறாள். பின் இவர்கள் இருவரும் மயிலும் நாயுமாகப் பிறந்து அரசன் யசோமதி அரண்மனையில் வாழ்கின்றனர். அப்போது மயிலாக வாழும் யசோதரன் தன் மனைவியின் கள்ளக் காதலனான யானைப்பாகனின் கண்ணைக் கொத்த, அவன் மயிலைக் கடித்து விடுகிறான். நாய் கடித்ததாக அரசனிடம் பொய் சொல்கிறான். ஆத்திரமடைந்த மன்னன் நாயைக் கொல்ல அது பாம்பாகப் பிறக்கிறது. மயில் இறந்து முள்ளம் பன்றியாய்ப் பிறக்கிறது. முள்ளம் பன்றி பாம்பைக் கடிக்க, அது இறந்து முதலையாய்ப் பிறக்கிறது. முள்ளம் பன்றியைக் கரடி கொல்ல அது மீனாய்ப் பிறக்கிறது. முதலை மீனை விழுங்க விரட்டிய போது காவலரால் பிடிபட்டுக் கொல்லப்படுகிறது. அம்முதலை பெண் ஆடாகப் பிறக்கிறது. மீன் அந்தணரால் கொல்லப்பட்டு அப்பெண் ஆட்டின் குட்டியாகப் பிறக்கின்றது. பின் தாய் ஆடு எருமையாய்ப் பிறந்து அரசனுடைய குதிரையைக் கொன்று விடுகிறது. அரசன் எருமையைக் கொல்ல, எருமை கோழியாகப் பிறக்கிறது. குட்டி ஆட்டையும் அமிர்தமதி கொல்ல - அதுவும் கோழியாகப் பிறக்கிறது. கோழிகளை வளர்த்தவன் ஒரு முனிவனிடம் அறம் கேட்டபோது கோழிகளும் உடனிருந்து கேட்டன. அறவுரை கேட்ட மகிழ்ச்சியில் கோழிகள் கூவ, அங்குத் தூங்கிக் கொண்டிருந்த அரசன் தன் தூக்கத்திற்கு இடையூறாக அமைந்த கோழிகளைக் கொல்ல, அவை முனிவரிடம் அறம் கேட்ட அறப்பயனால், அரசன் தேவி புட்பாவலிக்கு இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கின்றன. அக்குழந்தைகளே அபயருசி, அபயமதியாவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;