கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 28 டிசம்பர், 2011

முதுமொழிக் காஞ்சி-5

3. நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.

நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை
பசித்தலின் - பசித்தலினின்றும்

வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்.

4. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது.

பேண் இல் ஈகை - விருப்பமில்லாத ஈகை
மாற்றலின் - ஈயாமையின்

விருப்பமில்லாமல் கொடுத்தால் அது கொடைத்தன்மை ஆகாது.

5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.

செய்யாமை - செய்யத்தகாத செயல்களை
சிதடியின் - மூடத்தன்மையின்

செய்ய இயலாதவற்றை நான் செய்வேன் என்பது பேதைமையாகும்.

6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.

பொய் வேளாண்மை - போலியான ஈகை
புலைமையின் - கீழ்மையின்

பொய்யாகச் செய்யும் உதவி கீழ்மைத் தன்மையாகும்.

7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.

கொண்டு - ஒருவனை நட்பு கொண்டு
கொடுமையின் - கொடுமை செய்தலினும்

பழைய நண்பனுக்கு உதவி செய்யாமல் இருத்தல் கொடுமையானதாகும்.

8. அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.

அறிவு இலி - அறிவில்லாதவனை
துணைப்பாடு - துணையாகக் கொள்ளுதல்

அறிவில்லாதவனோடு துணைக் கொள்ளுதல் தனித்திருத்தலை ஒக்கும்.

9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.


இழிவு உடை மூப்பு - இழிவினையுடைய கிழத்தனம்
கதத்தின் - சினத்தின்

கிழத்தனமும் சினமும் ஒன்று.

10. தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது.

தான் - தானொருவனே
தனிமையின் - வறுமையின்

பிறருக்கு உதவாமல் தானே இன்பம் அடைந்து கொள்வான்; அவன் செல்வந்தனாயினும் வறியவனே.

5. அல்ல பத்து

ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -

1. நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.

நீர் அறிந்து - கணவனியல்பை அறிந்து
ஒழுகாதாள் - நடவாதவள்

கணவன் குறிப்பறிந்து ஒழுகாதவள் உண்மை மனைவியாகாள்.

2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.

தாரம் மாணாதது - மனை மாட்சிமைப் படாத இல்வாழ்க்கை
வாழ்க்கை அன்று - இல்வாழ்க்கை அன்று

மனை மாட்சிமை இல்லாத இல்லறம் நல்லறமாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;