3. நாண் இல் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை
பசித்தலின் - பசித்தலினின்றும்
வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்.
நாண் இல் வாழ்க்கை - நாணமில்லாது உண்டு உயிர்வாழும் வாழ்க்கை
பசித்தலின் - பசித்தலினின்றும்
வெட்கத்தை விட்டுப் பசி நீங்கினாலும் அது பசி நீங்காததைப் போன்றதாகும்.
4. பேண் இல் ஈகை மாற்றலின் துவ்வாது.
பேண் இல் ஈகை - விருப்பமில்லாத ஈகை
மாற்றலின் - ஈயாமையின்
விருப்பமில்லாமல் கொடுத்தால் அது கொடைத்தன்மை ஆகாது.
5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.
செய்யாமை - செய்யத்தகாத செயல்களை
சிதடியின் - மூடத்தன்மையின்
செய்ய இயலாதவற்றை நான் செய்வேன் என்பது பேதைமையாகும்.
6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.
பொய் வேளாண்மை - போலியான ஈகை
புலைமையின் - கீழ்மையின்
பொய்யாகச் செய்யும் உதவி கீழ்மைத் தன்மையாகும்.
7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.
கொண்டு - ஒருவனை நட்பு கொண்டு
கொடுமையின் - கொடுமை செய்தலினும்
பழைய நண்பனுக்கு உதவி செய்யாமல் இருத்தல் கொடுமையானதாகும்.
8. அறிவு இலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.
அறிவு இலி - அறிவில்லாதவனை
துணைப்பாடு - துணையாகக் கொள்ளுதல்
அறிவில்லாதவனோடு துணைக் கொள்ளுதல் தனித்திருத்தலை ஒக்கும்.
9. இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.
இழிவு உடை மூப்பு - இழிவினையுடைய கிழத்தனம்
கதத்தின் - சினத்தின்
கிழத்தனமும் சினமும் ஒன்று.
10. தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
தான் - தானொருவனே
தனிமையின் - வறுமையின்
பிறருக்கு உதவாமல் தானே இன்பம் அடைந்து கொள்வான்; அவன் செல்வந்தனாயினும் வறியவனே.
5. அல்ல பத்து
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் -
1. நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
நீர் அறிந்து - கணவனியல்பை அறிந்து
ஒழுகாதாள் - நடவாதவள்
கணவன் குறிப்பறிந்து ஒழுகாதவள் உண்மை மனைவியாகாள்.
2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
தாரம் மாணாதது - மனை மாட்சிமைப் படாத இல்வாழ்க்கை
வாழ்க்கை அன்று - இல்வாழ்க்கை அன்று
மனை மாட்சிமை இல்லாத இல்லறம் நல்லறமாகாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.