கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 28 டிசம்பர், 2011

உதயண குமார காவியம், -9

யூகியின் கூற்று


இந்திர லோகம் விட்டிந்திரன் வந்தனன்
அந்தரத் திருந்தியான் அன்பினின் வந்தேன்
இந்திரன் எனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்
தந்திரக் குமக்குத் தானிறை யாமென.
78


புற்றினில் உறையும் பொறிவரி ஐந்தலைப்
பற்றரு நாகம் பற்றி வந்தினிதா
உற்ற இந்நகரத்துள் சிறை வைத்தார்
அற்றதை எங்கும் அறியக் காட்டினர்.
79


மருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்
திரளுறு செனங்கள் திறவதிற் சூழப்
பெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே
அருஞ் சிறைப்பள்ளி அருகினிற் சேர்ந்தான்.
80


யூகி தன் வரவினை உதயணனுக்கு உணர்த்தல்


கிளைத்தலை இருவர் கற்றகிளர் நரப்பிசையுங் கீதம்
தளைச் சிறை மன்னன் கேட்பத்தான் மகிழ்குழலினூத
உளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியாமென மகிழ்ந்து
களைந்தனன் கவலையெல்லாம் காவலர்க்குணர்த்திப் போந்தான்.
81


வீரர்கள் யூகியை அணுகி ஆராய்ந்து போதல்


பலகொடி வாயிற்செல்லப் பார்மன்னன் சேனைவந்து
நலமுறுவடிவு நோக்க நகரத்தின் கோடுபாய்ந்த
கலனணிமார் வடுவ்வைக் கஞ்சுகத்துகிலின் மூடத்
தலைமுதல் அடியீராகத் தரத்தினாற் கண்டுபோந்தார்.
82


யூகி யானைக்கு வெறியூட்டுதல்


பித்தனற் பேயனென்று பெருமகற்கு உரைப்பக் கேட்டு
வெற்றிநற் சேனைமற்றும் வெஞ்சிறை காக்கவென்றான்
மற்றினி யூகிபோந்து மலிகுடிப் பாக்கஞ் சேர்ந்தே
அன்றைநாள் இரவில் யானை அனல் கதம்படுக்கலுற்றான்.
83


வாளொடு கைவிலேந்தி வயந்தகன் தன்னோடு எண்ணித்
தோளன் தோழன் கூடத்தூபத்துக் கேற்ற வத்தும்
வேளையீதென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்
தாளொத்த கொம்மை மீதிற்றரத்தினாலிழிந் தானன்றே.
84


நளகிரியின் செயல்


ஆனை தன்னிலை கண்டெய்தி அகிலிடும் புகையு மூட்டிச்
சேனை மன்னகரழித்துச் சிறைவீடுன் கடனேயென்று
மான நல்யூகி யானை செவியின் மந்திரத்தைச் செப்ப
யானை தன்மதக்கம் பத்திலருந்தனை யுதறித் தன்றே 85


யானை பாகரைக் கொல்லுதல்


நீங்கிட மிதுவென்றெண்ணி நிலைமதிலேறிப் போகத்
தூங்கிருடன் னிலானை சுழன்றலைந் தோடப்பாகர்
பாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன
ஆங்கது பிடுங்கிக் கையால வரைக்கொன்றிட்ட தன்றே.
86


பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயலைக் கானல்


வேழமும் மதங்கொண்டோ ட வேந்தன்கேட்டினிது எழுந்து
வேழ நன் வேட்டங்காண வெம்முலை மாதரோடும்
ஆழிநல் இறைவன் தானும் அணிமிகு மாடமேறிச்
சூழநன் மாதர் நிற்பத்துளக்கின்றி நோக்கினானே.
87


நளகிரியின் தீயச் செயல்கள்


கூடமாளிகை களெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்
மாடமு மதிலுமற்று மறித்தஃ திடித்துச்செல்ல
ஆடவர் கூடியோடு யயில்குந்தந் தண்டமேந்தி
நாடிநற்கையால் தட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார்.
88


கூற்றுருவெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்களாடக்
காற்றென முழக்கி வேழங்கண்ட மாத்தரைத்தன்கையால்
நாற்பத்தெண் பேரைக்கொன்று நடுவுறப் பிளந்திட்டோடி
மாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்ததன்றே.
89


அற்நூற்றின் மீதிலைம்ப தானநற்சேரி தானும்
உறு நூற்றிலேழை மாறவுள்ள நாற்பாடியோடும்
நறுமலர் கந்தம்வீசு நன்குள காவுமற்றும்
பெறுமத யானை கோட்டாற் பெருநகரழித்த தம்மா.
90


உஞ்சை மாந்தர் அலறல்


பாடுநன் மகளிரெல்லாம் பாட்டொழிந் தரற்றியோட
ஆடுநன் மாதர் தாமும் ஆடல் விட்டுலந்துசெல்லக்
கூடுநன் மங்கைமைந்தர் குலைந்தவரேச் செம்பொன்
மாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோடு ஆங்கே.
91


அமைச்சர் அக்களிற்றினை அடக்க உதயணனால் மட்டுமே முடியும் எனல்


மத்துறுகடலின் மிக்கு மறுகிய நகரத்தாரும்
வெற்றிநல் வேந்தனோடு வினவினா ரமைச்சரெண்ணி
இத்தின நகரம் பட்டவிடரது விலக்கனல்ல
வத்தவன் கையதென்ன வகுத்துரை கேட்டமன்னன்.
92


மன்னன் மறுத்துக் கூறுதல்


போரினில் நிற்கலாற்றாம் பொய்யினிற்றந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்ததன்றிப்
பேரிடிக் கரிமுன்விட்டால் பெரும்பழி யாகுமென்று
தாருடை வேந்தன் சொல்லத்தரத்தினால் அமைச்சர் சொல்வார்.
93


அமைச்சர்கள் அது பழியன்று புகழே ஆகுமெனல்


இந்திரனானை தானுமிவன் கையாழிசைக்கு மீறாது
இந்திரன் வேழமுங் கேட்டேழடி செல்லுமற்றிக்
கந்திறு கைம்மாவிக்கோன் கைவீணை கடவாதென்ன
மந்திரித் தவர்சொற்கேட்டு மன்னன் அப்படிசெய்கின்றான்.
94


பிரச்சோதனன் அமைச்சன் சீவகன் என்பவன் உதயணனைக் கண்டு கூறல்


சீவகன் வத்தவற்குச் செவ்விதிற் செப்புகின்றான்
தேவ இந்நகரின் இடுக்கண் தீர்க்கைநின் கடனதாகும்
போவதுன்நேசத் தென்றல் புரவலன் கடனதாகும்
பூவலன் உரைத்தான் என்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான்.
95


உருவுள சிவிகை ஏறி உயர்மன்னன் மனை புகுந்து
திருமயிர் எண்ணெய் இட்டுத் திறத்தினன் நீருமாடி
மருவிறன் பட்டுடுத்து மணிக்கலன் இனிது தாங்கித்
தெருவிடைத் திகழப்புக்கான் திருநகர் மகிழவன்றே.
96


உதயணன் யாழ் இசைத்தலும் களிறு அடங்குதலும்


பருந்து பின் தொடர யானை பறிவைகண் பற்றும்சூழப்
பெருந்தெரு நடுவுட்டோ ன்றப் பீடுடைக்குமரன் தானும்
திருவலித்தடக்கை வீணை சீருடன் பாடலோடும்
மருவலிக்களிறுங் கேட்டு வந்தடி பணிந்ததம்மா.
97


உதயணன் நளகிரியின் மேல் ஏறுதல்


பிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதன் தந்தை பாதம்
பரிந்த நற்காதாலே பணிந்திடுமாறு போல
இருந்துதற் பணிந்த யானை எழின் மருப்படிவைத்தேறிப்
பெருந்தகையேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான்.
98


உதயணன் அக்களிநூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்


வைத்த நன் மணியும் யாழும் வரிக்கயிறதுவு நீட்ட
வெற்றிநல்வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக்கொண்டே
உற்றநல் வீதிதோறும் ஊர்ந்துநற் சாரிவட்டம்
பற்றிதன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான்.
99


பிரச்சோதனன் உதயணனுக்கு பரிசு வழங்குதல்


பிடிப்புப் பொன்விலை மட்டில்லாப் பெருவலியாரந் தன்னை
முடிப்புவி அரசன் ஈய மொய்ம்பனுமணிந்து கொண்டு
கொடிப்புலிமுகத்து வாயிற்கோட்டையுட் கொண்டு வந்தான்
இடிக்குரற் சீயமொப்ப விலங்கிய குமரன்தானே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;