வீபொரு ளானை அகன்று பிறனும் ஓர் மாபொரு ளான்பக்கம் மாண நயத்தலின் மேய்புலம் புல்லற மற்றோர் புலம்புகு மாவும் புரைப மலர் அன்ன கண்ணார். |
59 |
நுண்பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொருள் நன்குடை யானை நயந்தனர் கோடலின் வம்புஇள மென்முலை வாள்நெடுங் கண்ணவர் கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப. |
60 |
முருக்குஅலர் போல்சிவந்து ஒள்ளிய ரேனும் பருக்கொடு இல்லவர் பக்கம் நினையார் அருப்பிள மென்முலை அம்சொல் அவர்தாம் வரிச்சிறை வண்டின் வகையும் புரைப. |
61 |
மக்கள் பயந்து மனையறம் ஆற்றுதல் தக்கது அறிந்தார் தலைமைக் குணம் என்ப பைத்துஅரவு அல்குல் படிற்றுஉரை யாரொடு துய்த்துக் கழிப்பது தோற்றமொன்று இன்றே. |
62 |
நகைநனி தீது துனிநன்றி யார்க்கும் பகைநனி தீது பணிந்தீ யாரோடும் மிகைமிகு பொருள் என்று இறத்தல் இலரே வகைமிகு வானுலகு எய்திவாழ் பவரே. |
63 |
பெண்டிர் மதியார் பெருங்கிளை தான் அது கொண்ட விரகர் குறிப்பினின் அஃகுப வெண்டறை நின்று வெறுக்கை இலராயின் மண்டினர் போவர்தம் மக்களும் ஒட்டார். |
64 |
சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர் நல்லவை யாரும் நன்மதிப் பார் அல்லர் கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ. |
65 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.