உய்த்து ஒன்றி ஏர்தந்துஉழஉழுது ஆற்றவும் வித்தின்றிப் பைங்கூழ் விளைக்குறல் என்ஒக்கும் மெய்த்தவம் இல்லான் பொருளோடு போகங்கட்கு எய்த்து உழந்தேதான் இடர்ப்படு மாறே. |
43 |
செந்நெலங் கரும்பினொடு இகலும் தீஞ்சுவைக் கன்னல் அம் கரும்புதான் கமுகைக் காய்ந்தெழும் இன்னவை காண்கிலன் என்று பூகமும் முன்னிய முகில்களான் முகம்பு தைக்குமே. |
44 |
குலந்தரும் கல்வி கொணர்ந்து முடிக்கும் அலந்த கிளைகள் அழிபசி தீர்க்கும் நிலம்பக வெம்பிய நீள்சுரம் போகிப் புலம்பில் பொருள்தரப் புன்கண்மை உண்டோ . |
45 |
கெட்டேம் இதுஎம் நிலைஎன்று சார்தற்கண் நட்டவர் அல்லார் நனிமிகு பவர்சுற்றம் பெட்டது சொல்லிப் பெரிதுஇகழ்ந்து ஆற்றவும் எட்டவந்து ஓர்இடத்து ஏகிநிற்பவே. |
46 |
தெண்ணீர் பரந்து திசைதொறும் போய்க்கெட்ட எண்ணெய்கொண்டு ஈட்டற்கு இவறுதல் என்ஒக்கும் பெண்மனம் பேதித்து ஒருப்படுப்பென் என்னும் எண்ணில் ஒருவன் இயல்புஎண்ணும் ஆறே. |
47 |
நீள்முகை கையால் கிழித்து மோக்குமாறு மாண்வினைப் பாவை மறைநின்று கேட்குறின் பேணலும் அன்பும் பிறந்துஉழிப் போதுசெய்து ஆணைப்பெண் ஐய அணைக்குறு மாறே. |
48 |
அந்தகன் அந்தகற்கு ஆறு சொலல்ஒக்கும் முந்துசெய் குற்றம் கெடுப்பான் முழுவதும் நன்குஅறிவு இல்லான் அஃதுஅறி யாதவற்கு இன்புறு வீட்டின் நெறிசொல்லு மாறே. |
49 |
யாறொடு யாழ்ஞெலி கோல்நில வார்கொடிப் பாறொடு பத்தினி மாபோல் ஒழுகென்று கூறினள் கூத்தி முதிர்ந்தாள் மகட்குஇவை வேறுஓர் இடத்து வெளிப்படல் நன்றாம். |
50 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.