தமிழ் தாய் வாழ்த்து மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை
நீராரும் கடல்உடுத்த நிலமடந்தைக்கு எழில்ஒழுகும்
சீராரும் வதனம்எனத் திகழ்பரத கண்டம் இதில்
தக்கசிறு பிறைநுதலும் திரித்தநறுந் திலகமுமே
தெக்கணமும் அதில் சிறந்த திரவிடநல் திருநாடும்
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பம்உற
எத்திசையும் புகழ் மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
பல்உயிரும்பலஉலகும்படைத்துஅளித்துடைக்கினும்ஓர்
எல்லைஅறுபரம்பொருள்முன்இருந்தபடிஇருப்பதுபோல்
கன்னடமும்களிதெலுங்குகவின்மலையாளமும்துளுவும்
உன்உதிர்த்துஎழுந்தே ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல்உலகவழக்கு அழிந்துஒழிந்து சிதையாஉன்
சீர்இளமைத்திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துமே !
மனோன்மணியம் பெ.சுந்தரம்பிள்ளை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.